Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரா.. ரா.. ரா ..ரயாகரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் புலிக்காச்சல் என்கிற தலைப்பில் எனது பதிவினை படித்த ரயாகரனிற்கு இயற்கையாய் இருந்த காச்சல் இரண்டு பாகை கூடியதாலோ என்னவே அவரது தமிழ் அரங்கம் என்கிற தளத்தில் பதில் பதிவில் என்னை ஆட்கொல்லி வைரஸ் என்று திட்டி தீர்த்திருக்கிறார். http://www.tamilcircle.net

பல வருடங்களாகவே இவரிற்கு புலிக்காச்சல் இருந்து வருவது எல்லாரிற்கும் தெரிந்ததுதான் இதில் நானொன்றும் புதிதாய் சொல்லவேண்டியதில்லை ஆனால் இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்தரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார் ஆனால் இவரது பதிவுகளிற்கு நான் பதில் பதிவோ பின்னுட்டமோ இதுவரை இட்டதில்லை காரணம் இவர் ஏறோபிளேன் ஓட்டின கதையை இவரை மாதிரியே புலிக்காச்சல்பிடித்த யாரே ஒரு சிர் சிலர் தான் கேட்பார்கள் என்பதனால் அவற்றில் கவனம் செலுத்தியதில்லை.

ஆனால் அண்மையில் பிரான்சில் நடந்த கலவரங்களின்போது வாகனங்கள் கொழுத்தப்பட்டசெய்தியில் இவரது வீட்டிற்கு அருகிலும் ஒரு வாகனம் கொழுத்தபடவே புலிக்கெதிரான சிந்து எங்கு பாடலாம் என திரிந்த இவரிற்கு சந்து கிடைத்துகிடைத்து விட்டிருந்தது.உடனே புலிகள் தன்னை கொல்ல சதி என்று சுதிபிசகாமல் பாடிவிட்டிருந்தார்.நான் வசிப்பதும் பிரான்ஸ் நாட்டில்தான் அதுமட்டுமல்ல பிரான்சின் பொது தேர்தல்நடந்து முடிந்து கலவரம் நடந்த இரண்டு நாட்களும் நான் பாரிசின் புற நகர் பகுதியான drancy என்கிற இடத்தில் ஒரு நண்பனின் வீட்டில்தான் நின்றிருந்தேன்.அப்போது பரவலாகவே வாகனங்கள் கொழுத்தபட்டதால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய வானத்தை யாரும் கொழுத்திவிட கூடாது என்கிறகவலை வேறு எனக்கு.

இப்படி பொதுவாக நடந்த ஒரு சம்பவத்தை ரயாகரன் உடனே தனக்கு சாதகமாக்கி புலிகள் மீது பழியை போட்டு காவல்துறையினரிடம் முறையீடும் செய்து அதனை செய்தியாக இவரை பேன்றே புலிக்காச்சல் பிடித்தவர்களினால் நடாத்தப்படும் இணைய தளங்களில் செய்தியாகவும் படங்களுடன் வெளியிட்டிருந்தார்.இதனைதான் எனது கட்டுரையில் சுட்டி காட்டியிருந்தேன்.அதேபோல இவரது எழுத்தக்களை மட்டுமே படித்து இவரை பற்றிய ஒரு கற்பனையை வளர்த்து வைத்திருப்பவர்களிற்கும் இவர்யார் ஏன் புலிகள் கைது செய்தார்கள். என்ன நடந்தது என்கிற உண்மையையும் எழுதிவிடுகிறேன்.ஈழத்தில் 1983 கலவரத்தின் பின்னர் யாழ் குடாவில் ஊருக்கொரு விடுதலை இயக்கங்கள் தோன்றியது எல்லோருமே அறிவார்கள்.

இரண்டு மூன்று இளைஞர்கள் சேர்ந்து கையில் ஏதாவது ஒரு ஆயுதமோ கொஞ்ச வெடி மருந்தோ கிடைத்துவிட்டால் போதும் தமிழீழம் அல்லது ஈழம் என்று பெயர் வருகிற மாதிரி ஒரு பெயரையும் தெரிவுசெய்து ஒரு இயக்கம் தொடங்கி விடுவார்கள்.இப்படித்தான் நெல்லியடியை சேர்ந்த விஸ்வானந்ததேவன் என்பவரும் இந்த ரயாகரன் மற்றும் வேறு சிலரையும் இணைத்து மார்க்சிய கொள்கைகளுடன் ஒரு இயக்கத்தை தொடங்கினார்.இவரது இயக்கத்தின் பெயர் தமிழ் தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T). இந்த இயக்கத்தை தொடங்கிய சில காலத்திலேயே விஸ்வானந்ததேவன் காணாமல் போய்விட்டார்.

பின்னர் இவர் இந்தியா செல்கிறபோது கடலில் இலங்கை கடற்படை சுட்டுஇறந்ததாகவும் இவர்களது இயக்கத்தினுள் ஏற்பட்ட உட்பூசலால் ரயாகரனே இவர் இந்தியா செல்கிற விடயத்தை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.ஆனால் இதுவரை என்ன நடந்தது என்கிற உண்மை சரிவர தெரியா விட்டாலும் விஸ்வானந்த தேவன் உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை. பின்னர் இந்த இயக்க தலைமைக்காக ராயாகரனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்த பிரச்சனைகளில் பலர் அதைவிட்டு வெளியேறி போய்விட ராயாகரனும் ஒரு சிலருமே மிஞ்சினார்கள்.பின்னர் 86 களில் யாழ் குடா புலிகளின் கட்டுபாட்டினுள் வந்த பின்னர் அப்போது மிஞ்சியிருந்த இயக்கங்களும் தடை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு அந்த இயக்கங்களால் கொள்ளையடிக்கபட்டிருந்த பொருட்கள் கடத்த பட்ட வானங்கள் என்பனவும் மீட்கபட்டது.அப்படி ஆயுதங்கள் களையபட்டபோது சிலர் ஆயுதங்களுடன் தலைமறைவாகியிருந்தனர் அவர்கள் அந்த ஆயுதங்களை பாவித்து அவ்வப்போது பல குற்ற செயல்களிலும் ஈடுபட்தால் புலிகள் அப்படியானவர்களை தேடி கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

86ம் ஆண்டளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய கொள்ளை மற்றும் யாழ் கற்றன் நசினல் வங்கிகொள்ளை என்பனவற்றை இந்த இயக்கமே செய்தது அதில் ரயா கரனும் பங்கேற்றிருந்தார்.அப்படித்த

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சாத்திரி. நானும் பார்த்தேன். புலிக்காய்ச்சல் என்பது தான் எனது டயக்னோஸிஸ். அது எப்படி இவ்வளவு பயப் பிராந்தியோடு இதுகளுக்குக் குரைக்கவும் முடிகிறது? இதிலிருந்தே தெரிய வேண்டும் புலிகள் எவ்வளவு நாகரீகமான ஜனநாயக வாதிகளென்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.