Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகளாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் பிரகீத்தின் பெயர் முதலிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் பிரகீத்தின் பெயர் முதலிடம்

 

Prageeth.jpg

உலகளாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவுகூரப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு (10 Most Urgent) என்ற தலைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அடக்குமுறையை அனுபவித்துவரும் 10 ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அண்மைய தரவுகளின்படி உலகளாவிய ரீதியில் 64 ஊடகவியலாளர்கள் காணாமல்போயுள்ளனர்.

இந்த நிலையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவினால் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி காணாமல்போன இலங்கையைத் தளமாகக்கொண்டு பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

எக்னெலிகொட தொடர்பாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, ‘இலங்கையின் இணைய ஊடக செய்திச்சேவையைச் சேர்ந்த ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட சுமார் பத்தரை வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டிலிருந்து கிளம்பியபோதே அவரது மனைவியும் இரண்டு இளம் பிள்ளைகளும் அவரைக் கடைசியாகப் பார்த்திருக்கின்றார்கள்.

2010 ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமைக்காக அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.

எக்னெலிகொட கடத்தப்பட்டமையுடன் 7 பேர் தொடர்புபட்டிருப்பதாகக் கடந்த வருடம் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அதுகுறித்த விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

எனினும் கடந்த 6 மாத காலத்தில் இந்த வழக்கின் சாட்சிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதுமான அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பு என்பன அதிகரித்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டிருக்கிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 by : Dhackshala

https://athavannews.com/உலகளாவிய-ரீதியில்-காணாமல/

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரகீத் எக்னலிகொட தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்க மிரட்டபட்டேன்- இராணுவ அதிகாரி தகவல்

 
1-38.jpg
 

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் போலியான ஆதாரங்களை வெளியிடுமாறு கோரி தன்னை சிஐடியினர் மிரட்ட முயற்சித்தனர் என இராணுவபுலனாய்வு பிரிவின் அதிகாரி கனிஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர், “காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குமாறு சிஐடியினர் அழுத்தம் கொடுத்தனர்.

பிரேமதிலக என்ற உதவிப்பொலிஸ் அத்தியகட்சகர் துமிந்த சில்வா கோத்தபாய ராஜபக்சவை அதிகம் ஆதரிக்கின்றார். அவர் அதிகம் துள்ளிக்குதிக்கின்றார். நாங்களே அதற்கு அனுமதித்தோம்.

நான் சிஐடியினருக்கு ஆதரவளிக்காவிட்டால் எனக்கும் துமிந்தசில்வாவின் நிலையே ஏற்படும் என பிரேமதிலக தெரிவித்தார்.” என   தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/பிரகீத்-எக்னலிகொட-தொடர்ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.