Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்குள் இரகசியமாக ஊடுருவியர் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள், கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜூக்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க பொலிசார் முற்பட்ட போது, அந்த நபர் பொலிசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரை மடக்கி பிடித்த மெரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர் மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என்பது விசாரணையில் தெரிவந்தது.

அவர் இலங்கை காவல்துறையை சேர்ந்தவர் என்பதும் கொழும்பில் உள்ள துறைமுக காவல் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து பைபர் படகு ஒன்றில் சர்வதேச கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

எதற்காக இவர் தமிழகத்திற்க்குள் நுழைந்தார் என்பது குறித்து தமிழக கடலோர காவல் குழும போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரனைக்கு பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்.

சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது. எனவே பிடிபட்ட இலங்கை நபர் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ராமேஸ்வரம் வந்தாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து வருகின்றனர்.

https://www.pagetamil.com/144037/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.