Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோடி - மகிந்தா சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடி - மகிந்தா சந்திப்பு.

இலங்கை, இந்தியா சம்பந்தமான பல விடயங்களை செப்டெம்பர் 26ம் திகதி காலை 10:30 மணிக்கு, இலங்கை பிரதமர், இந்திய பிரதமருடன் நேரடியாக பேசவுள்ளார்.

இந்த சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது மகிந்தா, வடபகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவார். 

இதுகுறித்து செப்டம்பர் 25ம் திகதி வடபகுதி மீனவர் பிரதிநிதிகளை பிரதமர் மகிந்தா சந்திக்க உள்ளார்.

இவ்வாண்டு ஐநா பொது சபை சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. அதில் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், இலங்கை பிரதமருடனான சந்திப்பு நிகழ்கிறது.

இலங்கைத்தமிழர் குறித்தோ, புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் குறித்தோ பேசுவார்களா என்று அறிவிக்கப்படவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

மோடி - மகிந்தா சந்திப்பு.

இலங்கை, இந்தியா சம்பந்தமான பல விடயங்களை செப்டெம்பர் 26ம் திகதி காலை 10:30 மணிக்கு, இலங்கை பிரதமர், இந்திய பிரதமருடன் நேரடியாக பேசவுள்ளார்.

இந்த சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது மகிந்தா, வடபகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவார். 

இதுகுறித்து செப்டம்பர் 25ம் திகதி வடபகுதி மீனவர் பிரதிநிதிகளை பிரதமர் மகிந்தா சந்திக்க உள்ளார்.

இவ்வாண்டு ஐநா பொது சபை சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. அதில் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், இலங்கை பிரதமருடனான சந்திப்பு நிகழ்கிறது.

இலங்கைத்தமிழர் குறித்தோ, புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் குறித்தோ பேசுவார்களா என்று அறிவிக்கப்படவில்லை. 

இந்தியாவின் பங்கு

 

தாடி மோடி இன்று உரை நிகழ்த்தினார். மேலே முன்னர் என்று வந்திருக்கிறது.... பின்னர் என்று வாசிக்கவும்.

Edited by Nathamuni

பிரதமர் மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனினும் இக் கலந்துரையாடலில் 13ஆவது திருத்தம் பற்றிய விடயம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது.

ஒன்லைன் ஊடாக குறித்த பேச்சை நடத்த இரு நாட்டு பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பபாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதோடு டில்லியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின் கடந்த பெப்ரவரி மாதம் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அதன் தொடராகவே இக் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றியோ அல்லது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாகவோ இதன்போது கலந்துரையாடப்படாது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

 

http://athavannews.com/பிரதமர்-மஹிந்த-மோடி-சந்த/

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸ – நரேந்திர மோடி இணையவழி ஆலோசனை

சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் 26ஆம் திகதி இணையவழியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னரும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் நட்புறவின் பின்னணியிலும் நடக்கும் இந்த மாநாடு, இருதரப்பு உறவுகளுக்கான விரிவான செயற்திட்டத்தை ஆராயும் வாய்ப்பை இரு தலைவர்களுக்கும் வழங்கியிருக்கிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ருவிற்றர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி, இருதரப்பு நட்புறவை விரிவாக ஆய்வு செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா காலத்திற்கு பின்னரான காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

http://www.ilakku.org/மகிந்த-ராஜபக்ஸ-நரேந்தி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.