Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமானது- செல்வம் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமானது- செல்வம் எம்.பி.

 

 

     by : Litharsan

http://athavannews.com/wp-content/uploads/2020/08/Selvam-Adaikkalanathan-2.jpg

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னியில் எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால், பெண்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனர். இவ்விடயத்தில் பிரதமர், அமைச்சர்களுக்கு ஆணையிட்டு வன்னி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எமது மக்கள் போருக்குப் பின்னர் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மீள்குடியேற்ற விடயங்களில் சொந்த நிலங்களில் அரசாங்க ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக, மகாவலி வலயம் என்பது மிக மோசமாக எமது மக்களைப் பாதிக்கின்றது. பறவைகள் சரணாலயம் எனக் கூறிக்கொண்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை கவனத்திற்கொள்ளவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கும்.

ஒவ்வொரு அபிவிருத்திக் கூட்டத்திலும் வன இலாகாவின் செயற்பாடுகளைக் கண்டித்து கருத்துக்களை முன்வைத்தோம். எனவே, ஒவ்வொரு மாவட்டக் குழுக் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் வந்து கவனஞ்செலுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு ஐயங்கண் குளம் ஆலயத்திற்கு எதிர்வரும் 26ஆம் திகதி மக்களை வர வேண்டாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இது எமது மக்களின் மத உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடாகும். எனவே, இவற்றில் பொலிஸார் தலையிட வேண்டாம்” என அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/வடக்கு-கிழக்கில்-மக்களின/

10 hours ago, nunavilan said:

அவர் கூறுகையில், “பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன், வன்னியைத் தாண்டி வடக்கிற்குச் செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னியில் எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது

நீங்களும் இவ்வளவுகாலமும் இந்த இடங்களை தாண்டி சொகுசுவாகனகளில் போகும்போது என்ன செய்தீர்கள்?. திடீரென இந்த ஆட்சியின் கீழ் மலசல கூடங்கள் ஓடி ஒளிந்துகொண்டனவா?. 

இந்த நிலைமையை அன்று தீர்க்க புலம்பெயர் மக்கள் முதலீடும் நிதி பங்களிப்பும் செய்ய கூடிய நிரந்தர நிதி கடடமைப்பு மற்றும் வீடமைப்பு திட்டம்  உருவாக்க பாடுபடவர்களில் நானும் ஒருவன். நிதிஅமைச்சு, வெளிடாநாடு அமைச்சு, மத்திய வங்கி என்று ஒவொரு தடையையும் தாண்ட நீங்கள் என்ன பங்களிப்பு  செய்தீர்கள் என்றும் மக்களின் பெயரில் என்ன தனிமனித அரசியல் விளையாட்டுக்கள் விளையாடினீர்கள் என்றும்  உங்களுக்கு தெரியும். ஒவொரு விடயத்திலும் புகுந்து குறிகிய அரசியல் நோக்கில் செயல்பட்டதனால் தான் போர் முடிந்து 11 வருடம் கழிந்த பின்னரும் இந்த நிலை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.