Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை- சீன தூதரகம் கடும் சீற்றம்

Featured Replies

சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை- சீன தூதரகம் கடும் சீற்றம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

china-embassy-1.jpg
இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள் ,அவற்றிற்கு தங்களின்தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாட்டுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும்பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுரகம் சீனவுடனான உறவுகள் குறித்து இலங்கைமக்களும் அரசாங்கமும் தங்களின் சுயாதீனமான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Alaina-B.-Teplitz-300x175.jpg
சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரைவழங்குவதற்குஅமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ள சீன தூதரகம் இப்படியான வெளிப்படையான மேலாதிக்க ஆதிக்கஅதிகாரஅரசியலை சீன மக்களோ அல்லதுஇலங்கையர்களோ சகித்துக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு போதனைசெய்யும் ஆனால் நடைமுறையில் அதனை பின்பற்றாத பழக்கத்திலிருந்து விடுபடுமாறு அமெரிக்காவிற்கு ஆலோசனைவழங்குகின்றோம்எனவும் சீனா தெரிவித்துள்ளது.
உலகின் மறுபக்கத்தில் உள்ள ஆணவம் பிடித்த நண்பர்களுக்கான எங்களின் நான்குஆலோசனைகள் இவை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படுகின்ற அதேவேளை கொவிட் 19க்கு எதிரான ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை நிந்தனை செய்யவேண்டாம்.
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிமுறைகளைமீறியபடி சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலன் என நடிக்கவேண்டாம்.
சர்ச்சைக்குரிய எம்.சி.சி உடன்படிக்கை குறித்த விடயங்களைமறைத்தபடி வெளிப்படைதன்மை குறித்த பதாகையை உயர்த்தி பிடிக்கவேண்டாம்.
வெளிநாடுகளில் குண்டுவீச்சுகளை மேற்கொண்டவாறு வெளிநாட்டு இராணுவ தளங்களை ஆக்கிரமித்தவாறு, தன்னிச்சையாக தடைகளை விதித்தவாறு ஏனையவர்களின் சாதாரண உறவுகளை இறைமைக்குஆபத்து என விமர்சிக்கவேண்டாம் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அபத்தமான போலியான இந்த செயற்பாடுகள் ஏற்கனவே மிகமோசமான நிலையில் உள்ள அமெரிக்காவின் சர்வதேச உறவுகளை மேலும் பாதிக்கும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/77277

  • கருத்துக்கள உறவுகள்

அலைனா பி. டெப்பிளிட்ஸின் கருத்துக்கு சீன தூதரகம் கண்டனம்

சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள் ,அவற்றிற்கு தங்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாட்டுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

“எம்.சி.சி உடன்படிக்கை இவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டமை வெட்கக்கேடான விடயம்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே, அரசியல் நோக்கமற்று, தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதுரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

Alaina-B.-Teplitz.jpg

இறைமையுள்ள நாடொன்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம், மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள  சீன தூதுரகம், சீனவுடனான உறவுகள் குறித்து இலங்கை மக்களும் அரசாங்கமும் தங்களின் சுயாதீனமான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரை வழங்குவதற்கு அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ள சீன தூதரகம் இப்படியான வெளிப்படையான மேலாதிக்க ஆதிக்க அதிகார அரசியலை சீன மக்களோ அல்லது இலங்கையர்களோ சகித்துக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு போதனைசெய்யும் ஆனால் நடைமுறையில் அதனை பின்பற்றாத பழக்கத்திலிருந்து விடுபடுமாறு அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்குகின்றோம் எனவும் சீன தூதரகம்  தெரிவித்துள்ளது

 

https://www.ilakku.org/china-accuses-us-ambassador-of-violating-diplomatic-protocols/

  • கருத்துக்கள உறவுகள்

கடன் குடுத்தவன் கத்திறான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.