Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே தொடங்கியது இன மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்!

தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்!

 

“எஹலப்பொலவின் சேனை ஆங்கிலேயருடன் சேர்ந்து போர்ப்பிரகடனம் செய்தது. நாட்டைச் சீரழிக்கும் தமிழனைக் கைதுசெய்து நாட்டைக் காப்பாற்ற அவர்கள் திடசங்கற்பம் பூண்டனர். அந்த துஸ்ட மன்னன் தீயைக் கண்ட மெழுகாக உருகி பயந்து நடுநடுங்கி மனைவி மற்றும் உறவினர்களுடன் தும்பறையை நோக்கி ஓடினான். துட்டகைமுனு தமிழர்களை அழித்தது போன்ற பெருமையுடன் எஹலப்பொல நகருக்குள் எழுந்தருளினர். தேசத்தை சீரழித்த தமிழன் தும்பறையில் மறைந்திருப்பதை அறிந்த எஹலப்பொல குதிரை மீது ஏறி வீராவேசமாக புறப்பட்டான். அவனுடன் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆயுதம் ஏந்திய மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்தது. அப்படி சென்ற வழியில் காணப்பட்ட தமிழர்கள் அனைவரும் எஹலப்பொலவினால் மலே இனத்தவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். வீரம் மறைந்தவனும் தர்மசீலனுமான எஹலப்பொல யுவராஜன் தனது சேனையுடன் சென்று மறைந்திருந்த அரசனை கைது செய்தான். அவனின் மனைவியரைச் சித்திரவதை செய்தும் காதுகளிலும் கைகளிலும் அணிந்திருந்த நகைகளை பறித்தும் அவர்களின் இடுப்பில் இருந்த ஆடைகளை உரிந்தும் அவர்களை அவமானப்படுத்தி தெல்தோனியாவுக்கு இழுத்துச்சென்றான். அவனுடைய கட்டளைப்படி சில வீரர்கள் ஹங்வல்லவுக்குச் சென்று அரசனின் தாயையும், உறவினர்களையும் இழுத்து வந்தனர். மேலும் மன்னனின் மாமன்மாரான கம்பலைத் தமிழனையும் கண்ணையா என்ற நச்சுத்தமிழனையும் அவர்களின் மனைவியரையும் தலையில் குட்டி இழுத்துவந்து ஆங்கிலத்தளபதி டெய்லியிடம் ஒப்படைத்தனர். இச்செய்கையானது இராவனணை வெற்றி கொண்ட இராமனின் வீரச்செயலுக்கு ஒப்பானது.”

çஎஹலப்பொல தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்டு வெள்ளையரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தை ஒரு மாபெரும் வீரசாதனையாக சித்தரிக்கும் சிங்கள காவியம் ஒன்றின் ஒரு பகுதியாகும். குண்டி அரச வீழ்ச்சியடைந்த பின்பு தேசத்தை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க இறுதி வரை போராடிய மன்னனையும் தமிழர்களையும் எதிரிகளாகவும் தீயவர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரித்த அதேவேளையில் எஹலப்பொல மொல்லிகொட போன்று வெள்ளையருடன் இணைந்து செயற்பட்ட துரோகிகளை வீராதிவீரர்களாகவும் போற்றியது மட்டுமின்றி அவர்களை இராமரைப் போன்ற அவதார புருசர்களாக ஏற்றிப்பாராட்டி பல பாடல்களும் காவியங்களும் படைக்கப்பட்டு கண்டிப்பிரதேசம் எங்கும் உலவ விடப்பட்டனர்.

எஹலப்பொலவை துட்ட கைமுனு போன்றும் இராமனைப் போன்றும் எதிரிகளை வெற்றிகொண்ட வீர நாயகர்களாக சித்தரித்தும் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனையும் அவனது குடும்பத்தினரையும் கைது செய்து கேவலமாக நடத்தியமையையும் போற்றி 97,101 பாடல்கள் பாடப்பட்டதாக அறியமுடிகிறது.

தற்போது எண்கோண மண்டபம் என அழைக்கப்படும் தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனால் அமைக்கப்பட்டது. அது பௌத்தத்தை அவமதிக்கும் செயலெனவும் கொட்டம்பேயில் வீதி அமைத்தமை, நகரில் பூந்தோட்டங்கள் ஏற்படுத்தியமை, நகரைச் சுற்றி மைதானம் உருவாக்கியமை, வேடுவ இனத்தைச் சேர்ந்தவர்களை படைகளில் இணைத்துக் கொண்டமை முதலியன அரசனின் முறைமீறிய காரியங்களாக சித்தரிக்கப்பட்டன.

அதேவேளையில் மன்னன் மக்களின் காணிகளை அபகரித்தான் எனவும் கொவிகம சாதியை சாராத மக்களுக்கு விவசாயம் செய்ய காணிகளை வழங்கினான் எனவும் பல அமைச்சர்கள் பிரதானிகளுக்கு மரண தண்டனை வழங்கினான் எனவும் மக்களைக் கழுவில் ஏற்றி கொன்றான் என்றும் மன்னனை ஒரு கொடுங்கோலனாக அக்காவியங்கள் சித்தரித்தன. கண்டி இராச்சியத்தை வெள்ளையரிடம் காட்டிக்கொடுத்ததை நியாயப்படுத்தும் வகையில் பல பொய்களும் புனைகதைகளும் கொண்ட இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழரசனின் நல்லாட்சிக்கு எதிராக சிங்கள ரதல வம்சத்தின் சதி

ஆனால் கண்டி இராசதானியின் வரலாற்றை ஆராய்ந்த பல வரலாற்று ஆராய்வாளர்கள் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் நேர்மையும் தராள சிந்தையும் கொண்டு நீதி நெறி தவறாத ஆட்சியை நடத்தியும் மக்களின் நல்லாதரவை பெற்றிருந்தான் எனக்குறிப்பிட்டுள்ளனர். அவன் தலதா மாளிகையை புனரமைப்பு செய்தான் எனவும் அதன் பராமரிப்புக்கென ஏராளமான விவசாய நிலங்களை வழங்கினான் எனவும் மகாசங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவிகளை செய்தான் எனவும் பிக்குகளுக்கு தானம் வழங்கினான் எனவும் அவ் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள் பௌத்த மக்களின் ஞானத்தந்தை என போற்றப்படும் அநகாரிக தர்மபால கூட கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் பௌத்த மதத்திற்கும் சிங்கள கலாச்சாரத்துக்கும் ஆற்றிய பணிகள் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார். அவன் நாயக்க வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபோதிலும் ஒரு பௌத்த சிங்கள மன்னனாகவே ஆட்சிசெய்தான் என போற்றியுள்ளார்.

ஆனால் எஹலப்பொல, மொல்லிகொட பிலிமத்தலாவ போன்ற சிங்கள பிரதானிகள் வெள்ளையர் விக்கிரமராஜசிங்கனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என எதிர்பார்த்தனர். மன்னனை மிகப்பெரிய கொடுங்கோலனாக சித்தரிக்க புனையப்பட்ட இன்னுமொரு கதையுமுண்டு. அதாவது எஹலப்பொலவின் துரோகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வெள்ளையரிடம் தப்பி ஓடிவிட்டான் அப்போது மன்னன் எஹலப்பொலவின் மனைவியையும் இரு புதல்வர்களையும் கைது செய்தான் எனவும் புதல்வர்களின் தலைகளை வெட்;டி உரலில் போட்டு தாயைக் கொண்டே உலக்கையால் இடிப்பித்தான் எனவும் பின்பு எஹலப்பொலவின் மனைவியை சங்கிலியால் கட்டி மறுமுனையைக் கல்லில் பிணைத்து கண்டி வாவியில் மூழ்கடித்தான் எனவும் அவள் முக்குளித்து இறப்பதை எண்கோண மண்டபத்தில் நின்று கண்டு களித்தான் எனவும் பாடல்கள் பாடப்பட்டன. இது சிங்கள மக்கள் மத்தியில் நாடகமாகவும் நடிக்கப்பட்டு வந்தது. கண்டி அரசன் கூத்து என்ற பெயரில் இசை நாடகமாக நடிக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு கொலையை தலதா மாளிகையின் மண்டபத்தில் நின்று பார்ப்பதற்கு மகா நாயக்கர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதால் இது வெறும் கட்டுக்கதையென் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நாட்டார் பாடல்கள் கதா என அழைக்கப்படும் கதைப்பாடல்கள் காவியங்கள் கவிதைகள் என்பன மூலம் தமிழர்களுக்கு விரோதமான பொய்ப்பிரசாரங்களை தேசத்துரோகிகளை நியாயப்படுத்திய பல இலக்கியப் படைப்புகள் உருவாக்கி சிங்கள்மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இவற்றில் பிரதானமானவை கிரல சந்தேசய, எஹலப்பொல வர்ணனய ஆகிய இரு முக்கிய காவியங்களாகும்.

அரசர்களுக்கு ஆசிவேண்டி தெய்வேந்திர முனையிலுள்ள வி~;ணு தேவாலயத்திற்கு தூதுவிடுவதாக பாடப்படும் காவியங்களையே சந்தேசய இலக்கியங்கள் என சொல்வதுண்டு. அவ்வகையில் எஹலப்பொலவை மன்னனாக உருவகித்து அவனுக்கு ஆசிவேண்டி எம்பெக்கே என்ற இடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீஸ்கந்த குமர கடவுளுக்கு தூதுவிட்டு பாடப்பட்ட காவியம் தான் கிரல சந்தேசய. இந்நூல் விக்கிரம ஸ்ரீ ராஜசிங்கனை கேவலப்படுத்துவதையும் தமிழர்கள் மீது குரோதத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மன்னன் ராஜசிங்கன் கைதாவதற்கு முன்பே அந்த நூல் எழுதப்பட்டதால் அது எஹலப்பொலவை மன்னனாகச் சித்தரிக்கிறது. ஆனால் கண்டியை வெள்ளையர்கள் கைப்பற்றிய பின் வெள்ளையருக்கு கப்பம் கட்டி அரசாளும் ஒரு மன்னனாக முடியும் என்ற நம்பிக்கை சிதைந்து போனது.

ஆங்கிலப்படைகள் கண்டிக்குள் இறங்கியபோது, எஹலப்பொலவும் அவனது சேனையும் ஆங்கிலேயருடன் இணைந்திருந்தன. இன்னொருபுறம் விக்கிரம ராஜசிங்கனின் தளபதியான மொல்லிகொட தலைமையிலான சிங்களப்படைகள் தங்கள் தளபதியின் கட்டளைக்கு அமைய ஆங்கிலப்படைகளை எதிர்த்துப் போராடாது பின்வாங்கினர். ஒரு தோட்டாகூட செலவின்றி ஆங்கிலப்படைகள் இறங்கிய நிலையில் மன்னன் தப்பியோடி தும்பறையில் தலைமறைவானான்.

ஆனால் கிரல சந்தேசயவில் ஆங்கிலேயரைப்பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால் எஹலப்பொலவின் வீரமும் துணிச்சலும் காரணமாகவே கண்டி அரசன் கைது செய்யப்பட்டான் என குறிப்பிடுகிறது. இந்நூல் விக்கிரம ராஜசிங்கனை பெயர் குறிப்பிடாது மன்னன் என்றும் தமிழன் என்றும் சுட்டுவதன் மூலம் தன் இனக்குரோத முனைப்பை வெளிப்படுத்துகிறது.

இறைமையுள்ள மன்னனாக எஹலப்பொல இருக்கும்போது வெளிநாட்டவன் ஒருவன் கண்டியை ஆட்சிசெய்யமுடியாது எனவும் ஆட்சிசெய்யக்கூடாது எனவும் இந்நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. எவ்வாறு இலங்கையின் வடபகுதியான உத்தரதேசத்திலிருந்து படையெடுத்த எல்லாளனை சோழ இளவரசன் என மகாவம்சம் வெளிநாட்டவனாக சித்தரிக்கிறதோ அவ்வாறே நான்கு தலைமுறைகளாக கண்டியை தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த நாயக்க வம்சத்தை அந்நிய நாட்டவர்களாக கிரல சந்தேசய சித்தரிக்கிறது. அதாவது சிங்கள மக்களுக்குள்ள தாயகப்பற்றை குறுக்கு வழியில் திசைதிருப்பி மேற்கொள்ளப்படும் அதிகாரத்தை கைப்பற்றும் கேவலமான முயற்சியே இது.

சிதைக்கப்பட்ட எஹலப்பொலவின் மன்னனாகும் கனவு

ஆனால் 1815ம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்துடன் எஹலப்பொலவின் மன்னர் கனவு சிதைக்கப்பட்டபோதும் அவன் சலைத்துவிடவில்லை. அதை தனது இளவரசனுக்கான கனவாக எஹலப்பொல மாற்றிக்கொண்டான்.

எஹலப்பொல, கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் அமைச்சர்களில் ஒருவனாக இருந்த காலத்திலேயே கண்டி இராச்சியத்தை ஒரு சிங்களவனே ஆளவேண்டுமென்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். அதை நிறைவேற்றும் வகையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கருத்துப்பரப்பலையும் தளராது மேற்கொண்டு வந்தான். அவற்றை வலுப்படுத்த கண்டியின் இளவரசனாக அவனை சித்தரித்து எழுதப்பட்ட நூல்தான் எஹலப்பொல வர்ணனய இது வரிக்கு வரி கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் தமிழனெனவும் தரமற்றவன் எனவும் வசைபாடுகிறது.

இது கண்டியரசன் தோற்கடிக்கப்பட்டு வெள்ளையர் கண்டியின் மன்னன் பிரித்தானிய மன்னரான 3ம் ஜோர்ச் அவர்களே எனப் பிரகடனம் செய்த பின்பு வெளிவந்தமையால் கிரல சந்தேசயவின் மன்னன் கனவை கைவிட்டு எஹலப்பொலவை யுவராஜனாக சித்தரிக்கிறது. இதன் காரணமாகவே 1815ல் தளபதி வெய்லியை சந்தித்த எஹலப்பொல தன்னை யுவராஜனாக நியமிக்காவிட்டால் தாம் எந்தப்பதவியையும் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தான். ஆனால் பிரித்தானிய மன்னரின் கௌரவத்துக்குரிய பிரஜை என்ற மட்டத்துடன் எஹலப்பொல திருப்தியடைவதை விட வேறு வழி இருக்கவில்லை.

தனது இனத்தையே காட்டிக்கொடுத்த எஹலப்பொலவின் துரோகம்

1816ல் மடுகல்ல இஹாகம ஆகிய சிங்களப்பிரதானிகள் ரத்தினபால, உன்னான்சே தேரர் உள்ளிட்ட சிலர் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மேற்கொண்ட ஒரு சதிப்புரட்சியை எஹலப்பொல காட்டிக்கொடுத்து தன் இனத்தவர்களுக்கே துரோகம் செய்தான். ஆனாலும் ஆங்கிலேயரும் அவனை கப்பம் கட்டி ஆட்சிசெய்யும் ஒரு மன்னனாகவோ அல்லது ஒரு யுவராஜனாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மடுகல்ல இஹாகம போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இரு வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு வழங்கிய கூலிப்படைத் தளபதியான மலே முகாந்தரும் நாடுகடத்தப்பட்டான். ஆங்கிலேயருக்கு திறை செலுத்தி கண்டியை ஆளும் ரதல வம்சத்தினரின் கனவை ஊவா வெல்லசவின் பிரதானியாக ஹஜ்ஜிரி மரக்கார் என்ற முஸ்லீமை நியமித்ததன் மூலம் ஆங்கிலேயர் முற்றாகவே முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இப்படியான நிலையில் 1818ல் உருவான ஊவா வெல்லச கிளர்ச்சி இராணுவச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டதுத மன்னாகும் கனவுடன் துரோகத்தின் மேல் துரோகமாக மேற்கொண்ட எஹலப்பொல கைது செய்யப்பட்டு மொறிசியஸ் தீவில் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்தான். கெப்பட்டிப்பொல மடுகல்ல உட்பட 19 பேர் கண்டி வாவிக்கு அருகாமையில் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டனர். மஹாவம்சத்தில் தொடங்கி இனக்குரோதம் வளர்க்கும் சிங்கள இலக்கியங்கள் எவ்வாறு மஹாவம்சம் எல்லாளனுக்கு எதிரான துட்டகாமினியின் போரை அடிப்படையாக வைத்து தமிழர்களுக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததோ அதே போன்று எஹலப்பொல வர்ணனய, கிரல சந்தேசய உட்பட்ட இலக்கியங்கள் ஆட்சி அதிகார ஆசையால் நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகத்தை மறைத்து தமிழ் மக்களுக்கு எதிரான இனக்குரோதத்தை முதன்மைப்படுத்தி மக்கள் மத்தியில் பரப்பின. எப்படியிருப்பினும் ஐந்தாம் நூற்றாண்டின் மஹாவம்சம் தொடக்கி வைத்த தமிழருக்கெதிரான வெறுப்பையும் இனக்குரோதத்தையும் இந்த இரு நூல்களும் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் புதுப்பித்து மெருகூட்டி இனமோதலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

நா.யோகேந்திரநாதன்

தாய்லாந்து இளவரசனுக்கு முடிசூட்ட தமிழ் அரசனைக் கொல்லச் சதி (வரலாற்றுத் தொடர்)

தாய்லாந்து இளவரசனுக்கு முடிசூட்ட தமிழ் அரசனைக் கொல்லச் சதி (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-05-06 11:19:06 EST

1815ம் ஆண்டு எஹலப்பொல, கெப்பிட்டிப்பொல, மொலிகொட, பிலிமத்தலாவ உள்ளிட்ட சிங்களப் பிரதானிகள் மேற்கொண்ட நயவஞ்சகமான சதி நடவடிக்கைகள் மூலம் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் அரசனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சி வீழ்த்தப்பட்டதுடன் அரசனும் குடும்பத்துடுன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். 1505ம் ஆண்டில் இலங்கையில் போர்த்துக்கீசர் கால்பதித்த காலம் தொட்டு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கலேயர் என ஐரோப்பியர்கள் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை கைப்பற்றித் தமது ஆட்சியை நிலைநிறுத்திய போதும் 1815 வரை அதாவது 225 வருடங்கள் கண்டி இராச்சியம் அடிபணிந்து விடாமல் தலைநிமிர்ந்து சுதந்திர பூமியாக விளங்கியது.

225 வருடங்கள் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரத்தில் நாட்டைக்காக்கும் பணியில் கடைசி 76 வருடங்களிலும் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்களே முன்னின்று அந்நியர் கண்டியை கைப்பற்ற மேற்கொண்ட சகல முயற்சிகளையும் முறியடித்தனர். எனினும் சிங்களப்பிரதானிகள் மேற்கொண்ட சதி மூலம் 1815ல் கண்டி அரசு வீழ்ச்சியடைய இலங்கை முழுமையாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமை நாடாக மாற்றப்பட்டது. ஆங்கில அரசுக்கு கப்பம் செலுத்தி கண்டி அரசை ஆட்சி செய்ய விரும்பிய சிங்களப்பிரதானிகளின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அதன் காரணமாகவே இந்த நாடு 133 ஈண்டுகள் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. மகாவம்சம் காலத்திலிருந்து இன்று வரை வரலாறு முழுவதுமே தமிழ் இனத்துக்கு எதிராகக் கட்டி வளர்க்கப்பட்ட குரோத உணர்வு காரணமாக இந்த நாடு கண்ட, கண்டுகொண்டிருக்கும் பின்னடைவுகள் கொஞ்சநஞ்சமல்ல.

திபேத்திய அரச குமாரனை அரசனாக்கச் சூழ்ச்சி

எவ்வாறு 1815ம் ஆண்டில் சதி மேற்கொள்ளப்பட்டு கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கனின் ஆட்சி துரோகத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதோ அவ்வாறான ஒரு முயற்சி 1780ம் ஆண்டில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சிக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது நாயக்க வம்ச அரசனான கீர்த்தி ஸ்ரீ விஜயராஜ சிங்கனின் மரணத்தை அடுத்து கண்டியின் இரண்டாவது நாயக்க வம்ச அரசனாக கீர்த்தி ஸ்ரீ இராஜராஜசிங்கன் கி.பி 1749ம் ஆண்டு முடிசூடிக்கொண்டான்.

1739ம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த சிங்கள மன்னனான வீர பராக்கிரம சிங்கன் வாரிசின்றி இறந்துவிட்ட நிலையில் கண்டியின் அரசாட்சியை தீர்மானிப்பவர்களாக விளங்கிய ரதல வம்சத்தைச் சேர்ந்த சிங்களப் பிரதானிகள் பொருத்தமான ஒருவனை அரசனாக நியமிக்கும் முயற்சியில் இறங்கினர்.

கண்டி அரசர்கள் தொடர்பாகச் சாதி சமய அடிப்படைகள் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. கண்டி அரசர்கள் சைத்திரீக வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும், சூரிய அல்லது சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் பௌத்த சமயத்தை கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அவ்வகையான ஒரு ஆண்வாரிசு வீர பராக்கிரம சிங்கனுக்கு இல்லாத நிலையில் சிங்களப்பிரதானிகள் மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்ச அரசனின் பட்டத்துராணியின் தம்பியாரை அழைத்து வந்து கண்டியின் அரசனாக முடிசூட்டிக்கொண்டனர்.

முதலில் சேனசம்பந்த விக்கிரமபாகு வம்சத்திடமும், பின்பு விமல தர்ம சூரியன் வம்சத்திடமும் இருந்த கண்டியின் அரசுரிமை 1739ல் விஜய ராஜ சிங்கன் கண்டி அரசனாக முடி சூடப்பட்டதையடு;த்து நாயக்கர் வம்சத்தின் கைகளுக்கு வந்தது எனவெ விஜய ராஜ சிங்கனின் இறப்பை அடுத்து அவனின் சகோதரியின் மகனான ராஜாதஜராஜசிங்கனுக்கு முடி சூடப்பட்டது.

அவனது காலத்தில் கண்டி இராசதானியில் உள்ள விகாரைகள் யாவும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. அது மட்டுமன்றி அவற்றை எவ்வித குறைபாடுகளுமின்றி பராமரிப்பதற்காக விவசாய நிலங்களை நிந்தமாக வழங்கியதுடன் அவற்றை விளைவிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தான். மேலும் அது வரையும் பாளி மொழியிலேயே சிங்கள மக்களின் இலக்கியங்கள் எழுதப்பட்டு வந்தன. இவன் காலத்திலேயே பல சிங்கள இலக்கிய நூல்கள் வெளிவந்தன. குறிப்பாக சந்தேசய என அழைக்கப்படும் அரசனுக்கும், ஆட்சிக்கும் நல்லாசி வேண்டிப் பாடப்பட்ட தூது இலக்கியங்கள் சிங்கள மொழியில் உருவாகின. மேலும் வாய்மொழி வழியாக தகப்பனிலிருந்து மகனுக்கு என ஒரு சில குறிப்பிட்ட குடும்பங்களுக்குள்ளேயே நிலவி வந்த சிங்கள பாரம்பரிய வைத்தியமுறை நூல்களாக ஏட்டு வடிவில் பதிவாக்கப்பட்டன.

அரசனின் முதல் மனைவியின் வேண்டுகோளின் பேரில் தஞ்சைப் பெரிய கோவிலின் வடிவில் கல்படுவ கோவில் அமைக்கப்பட்டது. இது ஒரு விஷ்ணு கோவிலாகவும், பௌத்த விகாரமாகவும் அமைக்கப்பட்டது. இந்து பௌத்த மக்களிடையே நிலவிய நல்லுறவின் அடிப்படையிலேயே “கல்படுவ”, கோவில் என அழைக்கப்படும் இந்த வாழிபாட்டிடம் அமைக்கப்பட்டது.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனும் அவனது தம்பியான ராஜாதி ராஜசிம்மனும் மிகச்சிறுவயதிலேயே கண்டிக்கு வந்துவிட்டதால் அவர்கள் சிங்களம், பாளி ஆகிய இரு மொழிகளும் வல்லவர்களாகவும் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை பினபற்றுபவர்களாகவும் விளங்கிவந்தனர். அதுவரை கண்டி இராச்சியத்தில் எவருமே செய்திராத அளவுக்கு இராஜசிங்க மன்னன் பௌத்த சமய வளர்ச்சிக்கும் பௌத்த கட்டமைப்பின் சிறப்புக்கும் மேன்மைக்கும் பணியாற்றினான். தலதா மாளிகையின் பெருமைக்கும் பெரஹரா விழாவை சிறப்புடன் நடத்தவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தான். இந்த நடவடிக்கைகள் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் அவனுக்கு ஆதரவு பெருகியது. மேலும் புஸ்பராம விகாரத்தை மல்வத்த மஹாபீடமாக்கி உச்ச அந்தஸ்துக்கு உயர்த்தியமை பௌத்த சங்கத்தினர் மத்தியிலும் அவனை போற்றுதலுக்குரிய ஒரு மன்னனாக ஆக்கியது. மன்னன் பௌத்த மதத்திற்கும் கண்டி மக்களுக்கும் செய்த அளப்பரிய சேவைகளை பாராட்டி சில சிங்கள இலக்கிய நூல்களும் அக்கால கவிஞர்களால் பாடப்பட்டன.

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் முடிசூடப்பட்டபோது அவனுக்கு வயது 16 மட்டுமே. அதன் காரணமாக அவன் முடிசூடப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த பின்பே “மதுலஹடுவ” என அழைக்கப்படும் உடைவாள் அவனுக்கு வழங்கப்பட்டது. அவனின் குறைந்த வயது காரணமாக முடிசூடப்பட்ட போது அவனுக்கு அந்த வாள் வழங்கப்படவில்லை. மன்னனின் மூத்த மனைவியின் தந்தையான நரேந்திரப்ப நாயக்கரே அரசனின் பிரதான ஆலோசகராக விளங்கினார்.

மகா அதிகாரம், திசாவ போன்ற பதவிகளை வகித்து வந்த ரதல வம்ச சிங்கள பிரதானிகள் தாங்கள் நினைத்தபடி அரசனை ஆட்டிப்படைக்கமுடியாத நிலையில் நரேந்திரப்பரின் அதிகாரத்தை பறிக்க திட்டமிட்டனர்.

மஹா அதிகாரம் பதவி வகித்த எஹலப்பொல நிலமே நானப்பரின் அதிகாரங்களை பறிக்காவிட்டால் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ளப்போவதாக அரசனை மிரட்டினார். இந்த எஹலப்பொல நிலமே கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் வெள்ளையர் கண்டியை கைப்பற்ற வழிசமைத்துக் கொடுத்த எஹலப்பொலவின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வேறு வழியற்ற நிலையில் ரதல பிரபுக்களுடன் மோத விரும்பாத நிலையில் நானப்ப நாயக்கரை அதிகாரத்திலிருந்து அகற்றியதுடன் அவரது ஆலோசனைகளைப் பெறுவதையும் தவிர்த்துக் கொண்டான். எனினும் மகா அதிகாரமும், பிரதானிகளும் எதிர்பார்த்தது போல் அரசனை ஆட்டிப்படைக்க முடியவில்லை. மன்னன் தானாகவே முடிவெடுத்து செயற்படுமளவிற்கு தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டான். நானப்பர் அகற்றப்பட்ட பின்பு அரசனை ஆட்டிப்படைக்க முடியாத நிலையில் சிங்களப்பிரதானிகள் அரசனையே அகற்றுவதென இரகசிய முடிவெடுத்தனர். எனவே தீபெத்திய மன்னன் “பொறம்கொத்தின்” 2வது மனைவியின் மகனை அழைத்து வந்து முடிசூட்ட திட்மிட்டனர். ஆனால் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு காரணமாகவும் மகா சங்கத்தினர் மத்தியில் நிலவிய மதிப்பு காரணமாகவும் அரசனை நேரடியாக அதிகாரத்திலிருந்து அகற்றுவது சாத்தியப்படவில்லை.

எனவே “உப்பற் சம்பத்தாவ” என்ற பிக்குகள் அபிசேக உற்சவத்துக்கு தாய்லாந்திலிருந்து கப்பலில் பிக்குகளை வரவழைப்பதென்றும் அவர்களுடன் திபெத்திய இளவரசனைப் பிக்கு வேடத்தில் கூட்டி வருவதெனவும் அரசனனை சதி மூலம் கொன்றுவிட்டு அவருக்கு முடிசூடுவதெனவும் இரகசிய முடிவு எடுக்கப்பட்டது.

அவ்வகையில் குழயொன்று வெட்டப்பட்டு அதன்மேல் மறைப்பு போடப்பட்டு அந்த மறைப்பின் மேல் அரசனின் இருக்கை அமைக்கப்பட்டது. அரசனின் ஆசனத்துக்கு கீழ் வெளியே தெரியாதவாறு கூரிய இரும்புக்கம்பிகள் குழிக்குள் நடப்பட்டன. அரசன் மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்டு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். ஆனால் அரசன் ஆசனத்தில் அமராது தன் கையில் கொண்டுவந்த தடியால் குழிக்கு மேல் மறைப்பாக போடப்பட்டிருந்த துணியை அகற்றிவிட்டு குழியை சுட்டிக்காட்டினான். உடனடியாகவே கலகொட திசாவையினால் குழி மூடப்பட்டு அரசன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அரசனின் கட்டளைப்படி சதிகாரர்கள் என அனைவரும் கலகொட திசாவையினால் கைது செய்யப்பட்டனர்.

சமரகொடி திசாவ, மொன்போறால், கடுவலரால், மத்தனப்பொல திசாவ ஆகிய நான்கு ரதல பிரபுக்களும் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டனர். அரசனின் இராஜகுருவாக விளங்கிய சங்கராஜர் ஆகிய சரணந்த தேரர், திப்பட்டுவ சுமங்கல தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிந்தென்ன என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டனர். பின்பு மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக சிறைவைக்கப்பட்ட பிக்குகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சரணங்க தேரருக்கு மீண்டும் சங்கராஜ பதவி வழங்கப்பட்டதுடன் சுமங்கல தேரருக்கு மல்வத்த பீடத்தில் கௌரவ பதவியும் வழங்கப்பட்டது. பிக்கு வேடத்திலிருந்த திபெத்திய இளவரசனும் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டான்.

அதன் பின்பு மகா அதிகாரமாக பதவியேற்ற பிலிமெத்தலாவை அரசனைக் கொல்வதற்கான சதியில் பங்கு கொண்டாரா இல்லையா என்பது தெரியாத நிலையில் அவர் தொடர்பாக அரசன் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான். கலகொடதிசாவையை மன்னன் தனது பாதுகாப்புக்கு பொறுப்பாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் வைத்துக்கொண்டான்.

அவன் தொடர்ந்து ஆட்சிசெய்து 1782ம் ஆண்டு வரை எவ்வித குழப்பங்களும் இடம்பெறவில்லை. அவனின் இறப்பின் பின் அவனது தம்பியான இராஜாதி ராஜசிங்கன் மன்னனாக முடிசூடிக்கொண்டான். அவனது ஆட்சிக்காலத்தில் மகா அதிகாரமாக விளங்கிய பிலிமெத்தலாவ தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொண்ட போது அரசனுக்கும் அவனுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. மக்கள் ஆதரவும் மல்வத்த பீடத்தின் செல்வாக்கும் இருந்த காரணத்தால் அவனால் அரசனை எதுவும் செய்யமுடியவில்லை. எனினும் 1798ல் அரசன் மரணமடைந்த போது அவனது இறப்பின் பின் பிலிமத்தலாவில் சதி இருந்ததாகவே கருதப்பட்டது.

இராஜாதி ராஜசிங்கனின் இறப்பின் பின்பு மன்னனின் மூத்த மனைவியின் சகோதரனான முத்துசாமியே அரசனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழமையான சம்பிரதாயங்கள் மீறப்பட்டு 2வது மனைவியின் சகோதரியின் மகனான கண்ணுச்சாமி அரசனாக்கப்பட்டான். 18 வயதுடைய அவனை அரசனாக்குவதன் மூலம் தானே ஒரு நிழல் அரசனாக அதிகாரத்தை செலுத்த முடியுமென மகா அதிகாரம் பிலிமத்தலாவை நம்பினான். எனவே அவனின் முயற்சியின் காரணமாக கண்ணுசாமி கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்ற சிம்மமசனப் பெயருடன் முடிசூட்டப்பட்டான். அவனே இலங்கையின் கடைசி மன்னனாவான். ரதல பிரபுக்களின் சதி மூலம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றுவிட இலங்கையின் சுதந்திரம் முழுமையாக பறிபோனது.

கண்டி இராச்சிய காலத்தில் மூன்று வம்சங்கள் ஆட்சி செய்தன. அதில் முதலாவது சேன சம்பத்த விக்ரம வம்சமும், அடுத்து விமல தர்ம சூரிய வம்சமும் இறுதியில் நாயக்க வம்சமும் கண்டியை ஆட்சி செய்தன. விமல தர்ம சூரிய வம்சத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் வாரிசின்றி இறந்த பின்பு ரதல பிரபுக்கள் நாயக்க வம்சத்தின் இளவரசனை அழைத்து வந்து அவனிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.

கண்டி இராச்சியம் நாயக்க வம்சத்தால் படையெடுப்பின் மூலமோ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமோ கைப்பற்றப்படவில்லை. மாறாக ரதல பிரபுக்களே மதுரை சென்று விஜயராஜ சிங்கனை அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்டினர். ஆனால் அவர்களால் வலிந்து அழைத்து வரப்பட்ட நாயக்க வம்ச அரசர்களுக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டு அவர்களின் ஆட்சிகளை வீழ்த்த முயன்றதும் வரலாறாக காணப்படுகிறது. பொதுவாக தங்களால் மன்னர்களை ஆட்டிப்படைக்க முடியாத நிலையிலேயே மன்னர்களைக் கொல்லும் முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தகைய முயற்சிகளில் இறுதிக் கைங்கரியமாக கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்த மேற்கொண்ட நயவஞ்சக சூழ்ச்சி மூலம் இலங்கையின் முழுச் சுதந்திரமுமே அந்நியரிடம் பறிகொடுக்கப்பட்து.

மகாவம்ச காலம் தொட்டு இன்று வரை தேவைகளை நிறைவேற்ற தமிழர்களுடன் நட்புக் கொள்வதும் தமது தேவைகள் நிறைவேறியதும் தமிழர்களுக்கு எதிராக திரும்புவதும் வரலாறாக விளங்கி வந்துள்ளது. அதாவது சிங்கள அதிகார பீடங்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீதான குரோத மனப்பான்மை நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருப்பது அன்றிலிருந்து இன்று வரை நிரந்தரமாக நிலைபெற்று விட்டது.

தொடரும்

 

“அதிகார ஆசையில் பறிபோன சுதந்திரம்” - வரலாற்றுத் தொடர் 05

“அதிகார ஆசையில் பறிபோன சுதந்திரம்” - வரலாற்றுத் தொடர் 05

Posted: 2020-05-15 10:22:08 EST

விமலதர்மசூரிய வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரம பாராக்கிரம நரேந்திர சிங்கன் பட்டத்து வாரிசு இல்லாத நிலையில் மரணமடைந்து போக ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய சிங்கள ரதல நிலப் பிரபுக்கள் மதுரையை ஆட்சியை செய்த நாயக்க வம்ச அரசனின் மனைவியின் சகோதரனான விஜய ராஜசிங்கனை அழைத்து வந்து மன்னனாக்கினர்.

எனினும் அவர்கள் எதிர்பார்த்தது போன்று அரசர்களை தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைக்க முடியவில்லை. ஏனெனில் நாயக்க வம்சத்தினர் நீண்ட கால ஆட்சி அனுபவமும் தலைசிறந்த போர் ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்கியமையால் சிங்களப் பிரபுக்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் அதிருப்தி அடைந்திருந்த போதிலும் விஜயராஜசிங்கன் காலத்தில் குழப்பங்களையோ, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளையோ மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அவனையடுத்து ஆட்சிக்கு வந்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் சிங்கள மொழி வளர்ச்சிக்கும், பௌத்த மத மேம்பாட்டுக்கும் அளப்பரிய சேவைகளை செய்து வந்தான். அது வரை பாளி மொழியிலேயே இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட நிலைமையை மாற்றி சிங்கள மொழியிலான சந்தேசய இலக்கிய நூல்கள் உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். இவை அரசனுக்கும் நாட்டுக்கும் நல்லாசி வழங்கி கதிர்காமத்திலிருக்கும் விஸ்ணு தேவனுக்கு தூது விடும் இலக்கியங்களாகும். இவை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தந்தையிலிருந்து மகனுக்கும் மகனிலிருந்து பேரனுக்கும் என வாய்மொழி மூலமாக வழங்கி வந்த சிங்கள மருத்துவ முறைகளை ஏடுகளில் பதிப்பித்ததன் மூலம் அவற்றிற்கு உரிய ஒரு அழியாத அந்தஸ்தை உறுதிப்படுத்தினான். அதேவேளை மல்வத்த பீடத்தை மேம்படுத்தி அதை உயர் அதிகாரம் கொண்ட மத நிறுவனமாக்கி பௌத்த மத வளர்ச்சிக்கு அரிய தொண்டுகளை மேற்கொண்டான். மேலும் பற்பல இடங்களிலும் பல விகாரைகளை அமைத்து அவற்றின் பராமரிப்புக்கு என நிலங்களையும் வழங்கினான். அதனால் மக்கள் மத்தியில் அவனுக்கு ஏற்பட்ட அளப்பரிய செல்வாக்கு காரணமாக ரதல பிரபுக்கள் பொறாமை கொண்டு அவனை ஆட்சிபீடத்திலிருந்து அகற்ற திட்டமிட்டு தாய்லாந்திலிருந்து இளவரசனை வரவழைத்து அவனுக்கு முடிசூட்ட முயன்றனர். அத தோற்கடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிலப்பிரபுக்கள் தண்டிக்கப்பட்டனர். அவனைக் கொல்ல எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அவனின் பின் ஆட்சிக்கு வந்த இராஜாதி ராஜசிங்கனும் குறுகிய காலத்தில் உயிரிழந்தான். அவனது இறப்புக்கு மகா அதிகாரம் பிலிமெத்தலாவையே காரணமென கூறப்படுகிறது. அதையடுத்து கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் பிலிமத்தலாவையால் அரசனாக்கப்பட்டான். 1739ல் நாயக்க வம்ச அரசனான விஜயராஜ சிங்கன் ஆட்சிபீடமேறிய காலத்திலிருந்து 1815ல் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட காலம் வரையில் ரதல பிரபுக்கள் அரசர்களை ஆட்டிப்படைக்க முயல்வதும், அது முடியாத பட்சத்தில் அரசர்களை அகற்ற அல்லது அழிக்க முயல்வதும் வரலாறாக அருந்து வந்துள்ளது. இதுவே இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் காலத்திலும் இடம்பெற்றது.

அந்நாட்களில் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியில் அரசப்பிரதிநிதியாக நோர்த் பதவி வகித்து வந்தான். அவனுக்கு அடுத்து அதிகாரம் கொண்டவனாகவும் பிரதான படைத்தளபதிகளில் ஒருவனாகவும் பதவி வகித்து வந்த டொய்லி, கண்டியில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும், அவற்றின் தோலிவிகளையும் தொடர்ந்து அவதானித்து வந்ததன் மூலம் சிங்கள பிரபுக்களின் பதவி வேட்கையை நன்கு கணக்கிட்டுக் கொண்டான்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவர்கள் இலங்கையின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்த போதும் மத்திய மலைநாட்டை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் கண்டியின் நாயக்க வம்ச அரசர்களுக்கும், கண்டிய பிரபுக்களுக்குமிடையே இருந்த முரண்பாடுகளை சரியாகப் பயன்படுத்த டெய்லி திட்டமிட்டான். இன்னொரு புறம் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த ஏற்றுமதி வர்த்தகத்துடன் மத்திய மலைநாட்டு பிரதானிகள் வியாபார தொடர்புகளைக் கொண்டிருந்தனுர் அவற்றின் மூலம் அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டிவந்தனர். ஆனால் கரையோரங்களில் அமைந்திருந்த துறைமுகங்களில் ஒன்று கூட கண்டியின் வசமிருக்கவில்லை. அவற்றைக் கைப்பற்ற அரசர்கள் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கரையோரப்பிரதேசங்களும் துறைமுகங்களும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. எனவே வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட சிங்கள பிரபுக்களுக்கு ஆங்கிலேயரின் தயவு தேவைப்பட்டது.

மேலும் ஐரோப்பியர் ஆட்சிபுரியும் பிரதேசங்களில் வாழும் பிரபுக்களின் குடும்பங்கள் பண பலமும் செல்வாக்கும் கொண்டவர்களாகவும் ஆங்கிலேயர் போன்று ஆடம்பரமாக வாழ்பவர்களாகவும் காணப்பட்டனர். அவ்வாறான மேலைத்தேச பாணியிலான உயர்மட்ட வாழ்வை தாங்களும் அனுபவிக்கவேண்டுமென சிங்களப் பிரதானிகள் விரும்பினர். இவை அனைத்தையும் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திய டெய்லி தனது உளவாளிகள் மூலமும் கையாட்கள் மூலமும் சிங்களப் பிரபுக்கள் மத்தியிலும் பௌத்த குருமாரிடமும், பேராசைகளை வளர்ப்பதில் வெற்றிபெற்றான். அவன் தனது திட்டங்களை நிறைவேற்ற பிலிமெத்தலாவையே பொருத்தமானவனாக இனங்கண்டுகொண்டான்.

பிலிமெத்தலாவையினதும் சில ரதல பிரபுக்களினதும் பதவி ஆசையை சரியாக கணக்கிட்ட தளபதி டெய்லி தன உளவுப்பிரிவினர் மூலம் பிலிமெத்தலாவையினதும் வேறு சில பிரபுக்களினதும் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களின் உதவியுடன் 1812ல் ஒரு பெரும் படையெடுப்பை மேற்கொண்டான். ஆனால் இப்படையெடுப்பு கண்டியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் பிலிமெத்தலாவையும் சம்பந்தப்பட்ட ஏனைய பிரபுக்களும் கைது செய்யப்பட்டனர். எனினும் மன்னன் பிலிமெத்தலாவையை மன்னித்துவிட்டான். அரசனின் மன்னிப்பின் மூலம் உயிர்தப்பிய பிலிமெத்தலாவ மீண்டும் ஹான்ஜா என்ற முகாந்திரம் மூலம் மன்னனைக் கொல்லச் சதி செய்தான். சதி அம்பலப்படவே பிலிமெத்தலாவ கைது செய்யப்பட்டான்.

அவனுக்கும் அவனுடன் சேர்ந்த 20 சிங்களப்பிரதானிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து எகலப்பொலவுக்கு மகா அதிகாரம் பதவி வழங்கப்பட்டது.

எனினும் கூட எகலப்பொல, கெப்பிட்டிப்பொல போன்ற ரதல பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து கண்டி அரசைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கினர்.

01.10.1814 அன்று ஆளுனர் பிறவுண்லியால் கண்டி அரசின் மீது போர்ப்பிரகடனம் மேற்கொள்ளப்படுகிறது. 7 படைணயிகள் கண்டியை நோக்கி 7 முனைகளில் முன்னேறுகின்றன. 10.02.1815 அன்று கண்டியின் ஒரு பகுதிக்குள் புகுந்துகொண்ட வில்லியம் என்ற ஆங்கிலப் படைத்தளபதியின் தலைமையிலான படையினரால் கண்டியின் புனித தாது கைப்பற்றபடுகிறது. 12.02.1815 அன்று பெய்லி தலைமையிலான படையணியும், துரோகி எகலப்பொல தலைமையிலான படையணியும் ஒன்றிணைந்து கண்டி நகருக்குள் இறங்குகின்றது. கண்டி நகரின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த தளபதி மொல்லிகொட ஆங்கிலப்படைகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது அவர்களுடன் இணைந்து கொள்கிறான். ஒரு தோட்டா கூட செலவின்றி கண்டியின் மையப்பகுதி ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைகிறது.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் தனது குடும்பத்தினருடன் நகரை விட்டுத் தப்பியோடி ஆம்பறையிலுள்ள ஒரு கிராம அதிகாரியின் வீட்டில் தங்கி இருக்கிறான். புpன்பு அவன் எகலப்பொலவின் படையினரால் நயவஞ்சகமான முறையில் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு பெண்கள் தகாத முறையில் அவமானப்படுத்தப்பட்டு ஆளுனர் பெய்லியிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுகின்றனர். இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் கைது செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள வேலூர் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைகிறான்.

அதன் காரணமாக இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிங்கள ரதல பிரபுக்களின் ஒத்துழைப்புடன் பிரித்தானியாவின் அடிமை நாடுகளில் ஒன்றாக மாற்றப்படுகிறது.

சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்ற நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஓரு தமிழ் மன்னனின் ஆட்சியை வீழ்த்தி ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் ஓரு நாடாக கண்டியை தாங்கள் வெள்ளையரின் பிரதிநிதியாக ஆட்சிசெய்யலாம் என்ற சிங்களப் பிரதானிகளின் கனவு நிறைவேறாதது மட்டுமின்றி கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையை அடிமை நாடாக்கும் சாசனம் ஒப்பமிடப்பட்டுது.

மகாவம்சம் மூட்டிய தமிழர் விரோத சிந்தனை சிங்கள மேல்மட்ட பிரபுத்துவ சக்திகளால் வளர்த்தெடுக்கப்பட்டு, மெருகுபடுத்தப்பட்டு இலங்கையை அடிமை நாடாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமளவுக்கு ஓர் மனநிலையை நியாயப்படுத்ததுமளவுக்கு நிலைநிறுத்தப்பட்டது. அக்காலத்திலிருந்து இப்போது வரை அரச அதிகாரத்தை கைப்பற்றும் மூலதனமாக தமிழ் மக்களுக்கு எதிராக இனக்குரோதம் கையெடுக்கப்படுவதே இலங்கையின் வரலாறாக மாறிவிட்டதை எவராலும் புரிந்து கொள்ளமுடியும்.

நா.யோகேந்திரநாதன்

 

தமிழர்களின் உரிமைகளைப் பறித்த “கண்டி ஒப்பந்தம்” - (வரலாற்றுத் தொடர்)

தமிழர்களின் உரிமைகளைப் பறித்த “கண்டி ஒப்பந்தம்” - (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-05-22 11:12:20 EST

“கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கனின் தான்தோன்றித்தனமானதும், மூர்க்கத்தனமானதுமான செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமான எதேச்சதிகாரம் காரணமாக அரச பதவிக்கும் பட்டங்களுக்கும் உரித்தான சகல வாய்ப்புகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன.”

இது கண்டி ஒப்பந்தத்தின் முதலாவது பந்தியில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாகும்,

“மன்னன் இராஜசிங்கனும் அவனின் உறவினர்களும், அவனது தந்தை வழி தாய்வழி என இரு வழிகளிலும் உறவு பூண்டவர்களும், திருமணங்கள், மறுமணங்கள் மூலம் மன்னனின் உறவினர்களானவர்களும் கண்டி ராச்சியத்தைவிட்டு வெளியேற வேண்டும்.”

இது இரண்டாவது பந்தி மூலம் விடுவிக்கப்பட்ட ஆணையாகும்.

“தமிழினத்தவர்களுக்குக் கண்டி இராச்சியத்தில் இருந்து வரும் சகல உரிமைகளும் இல்லாதொழிப்பதற்கும் அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரிட்டிஸ் அரசின் அனுமதியின்றி இப்பிராந்தியத்துக்குள் பிரவேசிப்பதற்கு இவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் ‘மார்ஷல்லோ” எனப்படும் இராணுவச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரித்தானியப் படைகள் கண்டியில் உள்நுழைந்தபோது வெளியேற்றப்பட்ட சகல ஆண்களுக்கும் இது பொருந்தும்.”

இது ஒப்பந்தத்தின் மூன்றாவது பந்தி வலியறுத்தும் விடயமாகும்.

இங்கிலாந்தை தலைமையாகக் கொண்ட பிரித்தானிய அரசின் கிரீடத்துக்கு கண்டி இராச்சியத்தின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் நிர்வாகப் பொறுப்புகள் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுனரைச் சாரும் பிரிட்டிஸ் அரசால் நியமிக்கப்படும் மாவட்ட பிரதேச நிர்வாகிகள் தமது கடமைகளை அரச சேவையாக மேற்கொள்ளவேண்டும்.

இது அடுத்த பந்தியாகும்.

மேலும் அந்த ஒப்பந்தம் மூலம் இந்த நாட்டின் சம்பிரதாய அரசியலையும், பிற கலாச்சார விழுமியங்களையும் பாதுகாக்கும் கடமைகளும் பிரித்தானிய அரசுக்கே உரித்தாக்கப்பட்டது.

இலங்கைக்கான பிரித்தானிய ஆளுனர் பிறன்றிக்குக்கும், கண்டிய சிங்கள பிரதானிகளான ரதல் பிரபுக்களுக்குமிடையே 1815ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். இதில் பிரித்தானியாவின் தரப்பில் ஆளுனர் பிரவுன்றிக்கும், இலங்கையின் பேரில் “ரதல” பிரபுக்களும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர். ஆளுனர் பிரவுன்றிக்கின் சந்திப்பை அடுத்து மல்வத்த, அஸ்கிரிய பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.

இக்கண்டி ஒப்பந்தம் இருதரப்பினருக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் எனக்கூறப்பட்டபோதிலும் அடிப்படையில் சிங்களத்தலைவர்கள் மனமுவந்து கையெழுத்திட்ட ஒரு அடிமை சாசனம் என்பதே உண்மையாகும்.

ஆங்கில ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் பலமுறை படையெடுப்புகள் முதற்கொண்டு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டபோதும் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை மன்னனாகக் கொண்டு சுதந்திர தேசமாக நிமிர்ந்து நின்ற கண்டி இராசதானியை அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. எஹலப்பொல, மொலிகொட, பிலிமத்தலாவ, ஹெப்பட்டிப்பொல போன்ற “ரதல” வம்ச நிலப்பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சிகள் காரணமாக 235 ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட கண்டி அரசின் சுயாதிபத்தியம் வெள்ளையரிடம் பறிகொடுக்கப்பட்டது. இதில் கடைசி 76 ஆண்டுகளையும் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த தமிழர்களே ஆட்சி செய்ததுடன் ஐரோப்பியர்களிடம் அடிபணிந்து போகாத சுதந்திரப் பிரதேசமாக கண்டியை பாதுகாத்தனர். ஆனால் எஹலப்பொல ஆங்கிலேயருடன் இணைந்து கண்டிப்படையெடுப்பின்போது ஆங்கிலேய படையினரின் ஒரு துணைப்படையாகச் செயற்பட்டான்.

எஹலப்பொலவும், சில கண்டிய ரதல பிரபுக்களும் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தோற்கடிக்கப்பட்ட பின்பு தாங்கள் எஹலப்பொலவை மன்னனாகக் கொண்டு கண்டியை வெள்ளையருக்கு கப்பம் கொடுக்கும் ஒரு அரசாக தாங்கள் ஆட்சிபுரிய முடியுமென்று கனவு கண்டனர். ஆனால் 02.03.1818 ஆளுனர் பிறெலியினால் பிரகடனப்படத்தப்ட்ட கண்டி ஒப்பந்தத்தின் மூலம் அவர்களின் கனவு முறியடிக்கப்பட்டது. எஹலப்பொலவின் மன்னனாகும் ஆசையில் மண் விழுந்தது. எனினும் தான் ஆங்கிலேயரின் ராஜப் பிரதிநிதியாக அதிகாரம் செலுத்தலாம் என நம்பினான். அவ்வகையிலேயே 18.03.1815ல் எஹலப்பொல, பிலிமெத்தலாவ கலகொட திசாவ உட்பட பல கண்டிய பிரபுக்கள் கையெழுத்திட்டு கண்டி ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1505 தொட்டு 1815 வரை 310 ஆண்டுகளில் கண்டி கோட்டை இராசதானியின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலும் சரி, 1590ன் பின்பு 225 ஆண்டுகள் தனி இராசிசயமாக இருந்தபோதிலும் சரி போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என எந்த அந்நிய சக்திகளாலும் கண்டியைக் கைப்பற்றமுடியவில்லை. ஆனால் ஒரு தமிழனின் ஆட்சி வீழ வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கண்டிய சிங்களப் பிரதானிகள் ஆங்கிலேயருடன் இணைந்து கண்டி அரசை வீழ்த்தினர். அதனடிப்படையிலேயே சிங்கள ‘ரதல’ பிரபுக்களுக்கும், பிரித்தானிய அரசின் ஆளுனர் பிறவுன்ற்றெக்குக்குமிடையே கண்டி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வொப்பந்தத்தின் 1ம் பந்தி தொடக்கம் 5ம் பந்தி வரையிலான பந்திகள் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனதும், அவனின் உறவினர்களினதும் கண்டியில் குடியிருக்கும் உரிமை உட்படச் சகல உரிமைகளும் மட்டுமன்றி தமிழ் மக்களினதும் அத்தைகைய உரிமைகளும் பறிக்கப்படுவதை வலியுறுத்துகின்றன.

மேலும் ஐந்து பந்திகளின் மூலமும் தமிழ் மக்களின் உரிமைப் பறிப்பு உறுதி செய்யப்பட்ட பின்பே இந்த ஒப்பந்தம் பௌத்த மதம் பற்றியும் சிங்கள கலாசாரம் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுவும் பௌத்த மதத்தையும் சிங்கள கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆங்கில அரசிடமே ஒப்படைக்கப்டுகிறது.

எனவே இந்தக் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் கண்டியின் சிங்கள தமிழ் மக்கள் ஆங்கில ஆட்சியின் கீழ் நேரடியாகவே கொண்டுவரப்பட்டனர். அத்துடன் முழு இலங்கையும் பிரித்தானியர் வசமானது.

கண்டியின் ‘மகுல்மடுவ’ என்ற அரச மண்டபத்திலேயே இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பொதுமக்கள் ஆங்கிலேயரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அவர்கள் பெரும் இராணுவ மரியாதையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வை புறக்கணித்தனர்.

ஆங்கிலேயர் கண்டி நகரைக் கைப்பற்றியதும் 02.03.1815 அன்று சிங்கக் கொடியை இறக்கிவிட்டு பிரித்தானிய யூனியன் ஜாக் கொடியை ஏற்றினர். வாரியப்பொல சுமங்கலதேரர் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் யூனியன் ஜாக் கொடியை இழுத்து இறக்கிக் கிழித்தெறிந்தனர். சுமங்கல தேரர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். இவர் மாட்சிமை தாங்கிய மன்னருக்கு எதிராகக் கலகம் விளைவித்தவர்களுக்கு ஆதரவளித்தமை, தலதா மாளிகையின் புனிதச் சின்னங்களை எடுத்துச்சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலடைக்கப்பட்டார். யாழ்ப்பாணச் சிறையிலடைக்கப்பட்ட இவர் பின்பு இவரது முதுமை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் ஆளுனர் பிறவுன்றிக்கை எச்சரிக்கையடைய வைத்தது. அதுமட்டுமின்றி பொத்த மதகுருமாரை சாந்தப்படுத்தி வைக்கவேண்டிய அவசியம் பற்றி பிலிமெத்தலாவ, பிறவுன்றிக்குக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ஏற்கனவே ஆங்கிலேயருடன் இரகசிய உறவை பேணிவந்த பிலிமெத்தலாவ ஆங்கிலப்படைத்தளபதியின் உளவாளி மூலமாக தளபதி டெய்லிக்கு கண்டியின் இராசதானியைக் கைப்பற்றி அதன் ஆட்சியுரிமை நிலைநிறுத்த வேண்டுமானால் அதற்கான வழி நான்கு தேவாலயங்களையும் வழிபட்டுத் தெய்வாசி பெறவேண்டுமெனவும் பசுவதை, மாட்டிறைச்சிப்பாவனை மூலம் தெய்வ நிந்தனைக் குற்றமிழைத்தமைக்காக நோய்வாய்ப்படுதலும், அடிமைப்படுத்தலும் ஏற்படுமெனவும் எச்சரித்திருந்தான். 1803ல் பெருமெடுப்பில் கண்டியைக் கைப்பற்ற வந்த ஆங்கிலப்படைகள் தோல்வியடைந்தமைக்கும,; கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனிடம் அடிபணிய வேண்டி வந்தமைக்கும் மேற்கூறப்பட்ட தெய்வகுற்றங்களே காரணமெனவும் தெரிவித்திருந்தார். எனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்று மாலை ஒப்பந்தம் தொடர்பாக மதகுருமாரிடம் ஏற்பட்ட அதிருப்தியைக் களையும் முகமாக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மதகுருமார் அமரும் ஆசனங்களுக்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டதுடன் ஆளுனரின் வலது புறத்தில் மல்வத்தை பீடாதிபதியும் இடதுபுறத்தில் அஸ்கிரிய பீடாதிபதியும் அமர வைக்கப்பட்டனர்.

அதில் ஆளுனர் பிறவுன்றிக், விகாரைகளின் புனிதத்தையும், மேன்மையையும் பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு உயரிய மரியாதை வழங்கப்படுமெனவும் உறுதியளித்தான். அது மட்டுமின்றி 1815 மாhச் 19ம் நாள் பிறவுண்றிக் தனது அலுவலகமாக பாவித்து வந்த தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபத்தை பௌத்த குருமாரிடம் கையளித்தான். மல்வத்தை பீடாதிபதி ஆளுனரைப் பாராட்டியதுடன் இனி பௌத்தம் இந்த மண்ணில் தழைக்கும் என பிரகடனம் செய்தார்.

இவ்வாறு போர் மூலமாகத் தோற்கடிக்கப்பட முடியாத ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை சிங்கள பிரபுத்துவ பிரதானிகள் சதி மூலம் தோற்கடித்து, பிரித்தானிய ஆட்சியின் அடிமை நாடாக இலங்கையை மாற்றினார்.

இங்கு நாம் அவதானிக்ககூடிய முக்கிய விடயமென்னவெனில் எந்த பிலிமத்தலாவ தனது அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் கீhத்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைச் சிம்மாசனம் ஏற்றினாரோ அவரே மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததும், அது தோற்கடிக்கப்பட்ட பின்பு மன்னனைக் கொல்லச் சதி செய்தும், இறுதியில் மன்னனால் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்ந்து திபேத்திய இளவரசனுக்கு முடிசூட்ட எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்ட பின்பு அதில் சம்பந்தப்பட்ட ரதல பிரபுக்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1782ல் அவனின் இறப்பையடுத்து அவனின் தம்பி ராஜாதிராஜசிங்கன் சிம்மாசனமேறினான். அவனது ஆட்சியில் மகா அதிகாரம் பிலிமெத்தலாவ தொடர்ந்தும் அரசனுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார். 1798ல் அரசன் இறந்தபோது அவனின் இறப்புக்கு பிலிமெத்தலாவையே காரணமென கருதப்பட்டது.

சிங்கள நில பிரபுக்கள் சிலரை ஆட்டிப்படைக்கும் நோக்குடன் அரசர்களாக்குவதும் அது சாத்தியமாகாத நிலையில் அவர்களுக்கு எதிராகச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அந்நிய நாட்டவரை நாயக்க மன்னர்களுக்கு பதிலாக ஆட்சியேற்ற முயல்வதும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுவந்தன.

இறுதியில் 1815ல் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னனின் ஆட்சியை வீழ்த்தி ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியத்தை ஒப்படைத்ததன் மூலம் இலங்கையின் சுதந்திரமே பறிக்கப்பட்டது.

கண்டி ஒப்பந்தம் என்பது சிங்கள நில பிரபுக்களுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை என கூறப்பட்ட போதிலும் அடிப்படையில் அது ஆங்கிலேயருக்கு இலங்கையை அடிமை நாடாக விற்றமைக்கான ஒரு அடிமை சாசனமாகும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

http://aruvi.com/display_tag.php?t_id=articles_tamil_categories&c_id=13

ஒரு தலைப்பட்சமான தேசத்துரோகமும் தேச பக்தியும் (வரலாற்றுத் தொடர்)

ஒரு தலைப்பட்சமான தேசத்துரோகமும் தேச பக்தியும் (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-06-11 08:01:57 EST

“தாயகத்தின் விடுதலையை ஈட்டிக் கொண்டு அதன் மூலம் எமது இறைமையைப் பாதுகாத்துக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு போராடுவதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டோம் எனினும் என்னால் அம்முயற்சி முழுமையான வெற்றி பெறப்பாடுபட இயலாமற் போய்விட்டது. நான் தோற்றுப் போய்விட்டேன். இன்னும் சில விநாடிகளில் நான் மரணமடைந்து விடுவேன். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவனாகவே நான் மடியப் போகிறேன். தாய் நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையை சரியாகச் செய்யாத ஒருவனுக்கு மரியாதை மிகுந்த நல்லடக்கம் கிட்டக்கூடாது. எனவே நான் இறந்த பிறகு எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி காகங்களுக்கும், நாய்களுக்கும் போட்டு விடுங்கள்”

ஊவா வெல்லசக் கிளர்ச்சியின் இறுதிக்கட்டத்தின் போது ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்த மாத்தளைப் பிரதேசத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்ற மடுகல்ல திசாவையுடன் இணைந்து தயாராகிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சில சிங்களப்பிரதானிகளின் காட்டிக்கொடுப்பில் உடும்பறை மரபெத்த பகுதியில் அமைந்திருந்த கற்குகைகளில் வைத்துக் கைது செய்யப்பட்ட விடுதலை வீரன் எல்லோபொலதனவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரையின் உணர்வு பூர்வமான வரிகள் இவை.

ஊவா வெல்லச கிளர்ச்சிக்குத் தலைமையேற்று பின்னாட்களில் ஆங்கிலேயருடன் நடத்திய கெப்பிட்டிப்பொல அவனின் மைத்துனரான எஹலப்பொல ஆகியோர் 1815ம் ஆண்டு காலப்பகுதியில் இணைணந்து படை நடத்தி கண்டியின் தமிழ் மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சியைக் கவிழ்த்து முழு இலங்கையின் சுதந்திரத்தையும் ஆங்கிலேயரை எதிர்த்து கண்டி அரசனுக்கு விசுவாசமாகச் செயற்பட்டவர்களில் மடுகல்ல, எகலப்பொல ஆகியோர் முக்கியமானவாகள் இலங்கையை அடிமை நாடாக்கிய அடிமை சாசனமான கண்டி ஒப்பந்தத்திலும் இவர்கள் கையொப்பம் இடவில்லை.

உடதும்பறையில் வைத்து கைது செய்யப்பட்ட எல்லேபொலவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் கண்டிய மரபின்படி சிரச்சேதம் செய்யும்படி கேட்கிறான்.

மரணம் நெருங்கிவிட்ட நிலையிலும் தன் தாய் நாட்டின் மீதம் அதன் விடுதலை மீது தான் கொண்ட வேட்கையை வீரத்துடனும், நெஞ்சுறுதியுடன் வெளிப்படுத்தினான் எல்லேபொல.

அதேவேளை நுவரகலவியாவில் உள்ள காவரல்ல கிராமத்தில் வைத்து கெப்பட்டிப்பொல கைது செய்யப்பட்டபொது 300 வீரர்களுடன் தப்பிச் சென்ற மடுகல்ல, எலஹர குன்றுகளுக்கு அப்பாற்பட்ட காடு ஒன்றில் வைத்து தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டான். ஏற்கனவே கீர்த்தி ஸ்ரீ விக்கரமராஜசிங்கன் மறைந்திருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்த எக்னொலிக்கொட என்ற துரோகியே பிட்டாவ மாத்தையா என்ற பேரில் உலவிய மடுகலவைக் காட்டிக் கொடுத்தான். மடுகல்லவும் கெப்பிட்டிப்பொல சிரச்சேதம் செய்து கொல்லப்பட்ட அன்று அதே இடத்தில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டான்.

பிலிமெத்தலாவ, கெப்பிட்டிப்பொல, எல்லாபொல, மடுகல்ல இஹாகம தேரர், வாரியப்பொல தேரர் உட்பட இருநூற்றுக்கு மேற்பட்டோh ஆங்கில ஆட்சியாளர்களால் 1818ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டதுடன் சிலருக்கு மரணதண்டனையும் காலவரையற்ற சிறையும் வழங்கப்பட்டன. சிலர் நாடுகடத்தப்பட்டனர். மேலும் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

1815ம் ஆண்டில் கண்டி ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும், அவனது உறவினர்களும் தேசத்துரோகிகளாக்கப்பட்டதுடன் கண்டி இராச்சியத்துக்குள் நுழையும் அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி நுழைந்தால் கண்டவுடன் சுடும் அதிகாரம் பாவிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு 180 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆங்கலேயர் நாட்டையிவிட்டு போய் 68 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையின் னடைசி அரசனும் அந்த விடுதலை வீரர்களும் 2016 வரை தேசத்துரோகிகளாகவே சட்டப்படி கணிக்கப்பட்டனர்.

தாய் நாட்டைப்பற்றியும் தமது மதத்தைப் பற்றியுமான மேன்மையான கருத்துகளை ஏனைய இனங்களை ஒடுக்கும் ஆயுதங்களாக பாவிக்கும் எந்த ஒரு சிங்களத் தேசியவாதியும் இலங்கை சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையினில் கடைசிக் கண்டி மன்னனையும் விடுதலை வீரர்களையும் தேசத்துரோகிககளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. அதற்காக அவர்கள் வெட்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

எனினும் 2016ம் ஆண்டில் சில உணமையான தேசிய சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கெப்பிட்டிப்பொல உட்பட தேசத்துரோகிகளாக ஆங்கிலேயரால் பிரகடனப்படுத்தப்பட்ட 19 பேர் தொடர்பான 1818ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேசத்துரோகிககளாக பிரகடனப்படுத்தப்பட்டமையை இரத்துச்செய்து அவர்களை தேசிய வீரர்களாக அறிவித்தார். அதன் மூலம் கெப்பிட்டிப்பொலவும் மற்றும் 11பேரும் தேசத்துரோகக் குற்றச்சாடடிலிருந்து விடுவிக்கப்பட்டு தேசிய வீரர்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

நிச்சயமாக 19பேருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தேசிய வீரர்கள் தகுதி வழங்கப்பட்டமையை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் இதில் உள்ளீர்க்கப்பட்டவர்களையும் தவிர்க்கப்பட்டவர்களையும் நோக்கும் போது இப்பிரகடனத்தின் நியாயமின்மை தென்படத்தான் செய்கிறது. இங்கு இனவாதமும், இன ஒதுக்கலும் மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

1815ல் கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்க்க எகலப்பொல, கெப்பிட்டிப்பொல ஆகியோர் ஆங்கிலப் படைகளுடன் இணைந்து படை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படையெடுப்பின் வெற்றியுடன் இலங்கையின் சுதந்திரம் முற்றாகவே பறிபோனது. அதாவது இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்டதில் எகலப்பொல, கெப்பிட்டிப்பொல ஆகியோர் பங்காளிகளாக செற்பட்டனர் என்பதை மறுத்துவிட முடியாது. 1816ல் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஊவாவில் கிளர்ச்சி ஆரம்பமான போது அதை அடக்க கெப்பிட்டிப்பொல தலைமையிலான படை ஆங்கிலேயரால் அனுப்பப்பட்டது. ஆனால் ஊவா வெல்லசப் பிரதேசத்தில் நிலவிய நிலைமைகள் கெப்பிட்டிப்பொலவை கிளர்ச்சியில் இணைந்து கொள்ள வைத்தது. அதுவரை ஆங்கிலேயரின் விசுவாசியாக செயற்பட்டு உவா பகுதியின் திசாவையாக பணியாற்றிய கெப்பிட்டிப்பொல 1816 நடுப்பகுதியில் புரட்சியின்பால் ஈர்க்கப்பட்டதுடன் அதற்கு தலைமை தாங்குமளவுக்கு தீவிரமாக செயற்பட்டான். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கெப்பிட்டிப்பொல ஆங்கிலெயரின் விசுவாசியாகச் செயற்பட்ட போதிலும் பின்னாட்களில் புரட்சியை வழிநடத்தியவன் என்ற முறையில் தேசிய வீரனாக அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறைகூற முடியாது.

போர்த்துக்கேயா, ஒல்லாந்தர், ஆங்கிலேயரென அந்நியப் படையெடுப்பாளர்கள் இலங்கையின் கரையொரங்களைக் கைப்பற்றிய போதும் கண்டிய இராச்சியத்;தை அவர்கள் எவரையுமே கைப்பற்ற விடாது பாதுகாத்த பெருமை கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும், அவனுடைய முன்னோர்களான நாயக்க வம்ச அரசர்களுக்குமே உரியதாகும். அதிலும் கீhத்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் காலத்தில் கண்டியைக் கைப்பற்ற 1803, 1812 ஆகிய காலப்பகுதிகளில் மேற்கொண்ட ஆங்கிலேயரின் படையெடுப்புகள் முறியடிக்கப்பட்டனர். ஆங்கிலப் படைகள் கெரில்லாப் போர் முறை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆனால் 1815ல் எகலப்பொல, கெப்பிட்டிப்பொல உட்பட சில சிங்களப்பிரபுக்களின் ஒத்துழைப்புடன் கண்டி கைப்பற்றப்பட்டதுடன் மன்னன் கைது செய்யப்பட்டு வெலூர் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்தான்.

இலங்கையின் சுதந்திரம் இறைமை என்பன பற்றிப் பேசும்போது அவற்றிற்காக அhப்பணிப்புடன் போராடியவர்களில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டிய கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் 2016ம் ஆண்டில் ஐனாபதி மைத்திரி பால சிறிசேனவின் பிரகடனத்தில் மன்னன் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நீக்கப்படவுமில்லை, அவர் தேசிய வீரராக பிரகடனப்படுத்தப்படவுமில்லை.

மடுகல்ல, எல்லேப்பொல ஆகியோர் 1815ல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய போது அதைத் தீவிரமாக எதிர்த்தது மட்டுமன்றி கண்டி கைப்பற்றப்படுவதற்கு ஆதரவளித்த பிலிமத்தலாவ, எகலப்பொல ஆகியோருடன் முரண்பட்டவர்கள். 1816 – 1818 ஊவா வெல்லசக் கிளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டு படை நடத்தி ஆங்கில ஆட்சியாளர்களைத் திணரடித்தவர்கள். இருவரும் சில சிங்களப்பிரதானிகளால் காட்டிக்கொடுக்கபட்டு கைது செய்யப்பட்டு இறுதியில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். எல்லேப்பொல விடுதலையைப் பெறாமல் தான் மரணமடைவதால் தான் ஒரு குற்றவாளியென்றும், குற்றவாளியான தனக்கு முறையான நல்லடக்கம் வழங்கப்படக்கூடாதெனவும் தனது மரணத் தறுவாயில் கேட்டுக்கொண்டான். அவ்வளவு தூரம் அவன் தனது நாட்டின் இறைமையை தன் உயிரைவிட நேசித்தான்.

ஆனால் மடுகல்ல, எப்பாப்பொல ஆகிய ஒப்பற்ற விடுதலை வீரர்களின் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோகக் குற்றச்சாட்டு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறீ சேனநாயக்காவால் நீக்கப்படவோ, அவர்கள் தேசிய வீரர்களாய் பிரகடனப்படுத்தப்படவோ இல்லை. அது தொடர்பாக எந்தவொரு சிங்களத் தேசியவாதியும் குறல் கொடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் தமிழரின் ஆட்சியைக் கவிழ்க்க நாட்டின் சுதந்திரத்தை விற்றவர்கள் பின்னாட்களில் கிளர்ச்சியில் இறங்கியமையால் அவர்கள் தேசபக்தர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

ஆனால் இறுதிவரை கணடி அரசின் சுதந்திரத்தை பாதுகாக்க போரிட்ட கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தமிழன் என்பதாலும், மடுகல்ல, எப்பாப்பொல்ல ஆகியோர் ஏனைய சிங்களப் பிரபுக்கள் ஆங்கிலேயரின் அடி வருடிகளாக மாறிய போது தமிழரசனின் பக்கம் நின்று கண்டியின் சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடினார்கள் என்பதற்காகவே இந்த இருதரப்பினரும் தேசத்துரோகக் குற்றம் நீக்கப்பட்டு தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மன்னன் தோற்கடிக்கப்பட்டு இலங்கையின் சுதந்திரம் சிங்களப் பிரபுக்களால் விற்கப்பட்டமைக்கு இனக்குரோதம் எவ்வாறு காரணமாக அமைந்ததோ அவ்வாறே அவரின் மீதும் மடுகல்ல, எப்பாப்பொல ஆகியோர்மீதும் சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டு அவர்கள் தேசிய வீரர்களாக பிரககடனப்படுத்தப்படாமைக்கு அடிப்படைக்காரணம் இனக் குரோதமே என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

பாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்)

பாவத்தைக் கழுவப் பலியான வீரர்கள் - (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-06-15 12:16:37 EST

மகாநாயக்க தேரரால் கி.பி 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மூலம் விதைக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான இனக்குரோத சிந்தனைகள் பௌத்த பிக்குகளாலும், அடுத்தடுத்து தோன்றிய பாளி சிங்கள இலக்கியங்களாலும், கர்ண பரம்பரைக் கதைகளாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளாத்தெடுத்தன் பலன் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனப் பல அந்நிய நாட்டவர்களாலும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மாறி மாறிக் கைப்பற்றப்பட்ட பின்பும் கூட 300 ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திர பூமியாக விளங்கிய கண்டி இராச்சியம் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய பேரரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு தமிழனாக இருந்த போதும், அவன் தலதா மாளிகையை அபிவிருத்தி செய்தும் விகாரைகளை அமைத்தும் அவற்றைப் பராமரிக்க நிலங்களை ஒதுக்கி பௌத்த மதத்துக்கும் பல சிங்கள இலக்கிய, வைத்திய நூல்களை உருவாக்க ஆதரவு வழங்கியும் சிங்கள மொழிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கினான். மல்வத்த அஸ்கிரிய பீடங்களுக்கு உயர் அந்தஸ்து வழங்கியது மட்டுமின்றி அவனின் அரசியலில் ஆலோசகராகவும் ஒரு சங்க நாயக்கரையே நியமித்திருந்தான். அவன் உண்மையான ஒரு சிங்கள பௌத்த மன்னனாகக் கண்டியை ஆட்சி செய்தபோதும் சிங்கள ரதல பிரபுக்களின் இன விரோதக் கொள்கை காரணமாக ஆங்கிலேயருக்குச் சகல விதமான உதவிகளையும் வழங்கி 1803 இலும் 1812 இலும் வீழ்த்தப்படமுடியாத விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்தினர். கண்டி ஒப்பந்தம் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானிய பேரரசின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டது. தாங்கள் ஆங்கில ஆட்சிக்கு கப்பம் செலுத்தும் ஒரு சிற்றரரசாகக் கண்டியை ஆளலாமென்ற சிங்களப் பிரபுக்களின் கனவு முற்றாகவே சிதைக்கப்பட்டது. தாம் ஏமாற்றப்பட்டதையும், தங்கள் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டமையும் உணர்ந்த போது தான் கண்டி மன்னனுக்கும் இலங்கை மக்களின் இறைமைக்கும் தாங்கள் செய்த துரோகத்தின் பாரதூரத்தன்மையின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

எனவே தாங்கள் புரிந்த பாவத்தைத் தாங்களே கழுவ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நயவஞ்சகமான முறையில் கண்டியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து அவர்களே அதை அந்நியர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதன் காரணமாக 1810ல் இஹாகம என்ற பிக்குவின் அபார முயற்சியால் வில்பாவ எனத் தன்னை அரசன் என்று கூறிக்கொண்ட ஒருவனின் ஒத்துழைப்புடன் ஆங்கில ஆட்சியதிகாரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. 1816-1817 காலப்பகுதியில் எழுச்சி பெற்ற ஊவா வெல்லச கிளர்ச்சியும் சில சிங்களப்பிரபுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய கெப்பிட்டிப்பொல, மடுகல்ல, எல்லப்பொல போன்ற விடுதலை வீரர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதுடன், பல விடுதலைப்போராளிகள் தூக்கிலிடப்பட்டனர். பிலிமத்தலாவ, எஹலப்பொல, இஹாகம தேரர் உட்பட பலர் மொரிஷியஸ் தீவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

அத்துடன் ஊவா வெல்லச கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்கள் தாம் செய்த பாவத்தை தாமே கழுவ மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

இப்பெரும் தோல்வியையடுத்து போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக்கொடுத்த பிரபுக்கள் மட்டுமின்றி, வேறுபல சிங்கள நிலபிரபுக்களும் ஆங்கில ஆட்சியின் அரசு பதவிகளைப் பெற்று தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கி இன மக்களை ஒடுக்கவதில் ஆங்கிலேயருக்குத் துணையாகச் செயற்பட்டனர். இன்னொருபுறம் கரையோரப் பகுதியிலுள்ள சில பிரபுக்கள் கிறீஸ்தவ மதத்துக்கு மாறியதுடன், ஆங்கிலக் கல்வியையும் கற்று கறுத்த நிற வெள்ளையர்களாகத் தங்களை மாற்றிக் கனவான்கள் மட்ட வாழ்வை அனுபவித்தனர். ஆனால் மீண்டும் கண்டியை விடுவித்து தாங்கள் செய்த பாவத்தைக் கழுவ வேண்டுமென்ற துடிப்பு மட்டும் இன்னும் ஒருபகுதினரிடம் வலுக்குன்றாமலிருந்தது.

எனவே 1817-1818 ஊவா வெல்லச கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்பும் 1820 தொடக்கம் 1848 வரை சிறிதும் பெரிதுமாகப் பல கிளர்ச்சிகள் ஆங்கில ஆட்சிக்கெதிராக இடம்பெற்றன. அத்தனை போராட்டங்களும் ஏராளமான உயிர்ப்பலிகள் மூலமும், கொடிய தண்டனைகள் மூலமும் ஒடுக்கப்பட்டன. அனைத்துப் போராட்டங்களிலும் பௌத்த பிக்குகள் காத்தரமான பங்கை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர்; இன்னும் சிலர் சிறைசெய்யப்பட்டனர்.

ஹேவஹெற்றவில் பிறந்த குமாரசாமி என்பவன் தனது பெயரை விமலதர்ம நரேந்திர சிம்மன் என மாற்றிக்கொண்டு பிலிமத்தலாவ, மடுகல்ல் உட்பட ஏழு கொறளைகளின் மக்கள் முன்னிலையில் சிறி மஹாபோதியின் கீழ் வெற்றியின் தங்கவாளைப் பெற்றதாகவும், தான் 1817-1818 கிளர்ச்சியின் போது அரசனாக முடிசூட்டப்பட்ட வில்பாவவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தான். இவன் பிந்தனவில் உள்ள வேடர் மத்தியில் தன்னை அரசனாகப் பிரகடனம் செய்ததுடன் 7000 வேடர்களை அம்பு வில்லுகளால் ஆயுத பாணியாக்கினான். வேடர்கள் படையுடன் சென்று தான் கண்டியை கைப்பற்றப்போவதாக அறிவித்த போதும் அவன் பிந்தனவுக்கு அருகிலுள்ள வெல்லச பிரதேசத்துக்கு நகர்ந்தான். ஆங்கில ஆட்சியினர் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். கனகொடதிசாவ என்ற சிங்கள நிலப்பிரபுவால் காட்டிக்கொடுக்கப்பட்டு கிளர்ச்சித் தலைவன் கைது செய்யப்பட்டான். 12.01.1820ல் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் பின்பு அது ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு அவன் மொறிஷியஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான். இன்னொருபுரம் 1818 கிளர்ச்சியின் போது வில்பாவேயினால் திசாவையாக நியமிக்கப்பட்ட கொப்பேக்கவெ என்பவன் ஒரு பௌத்த பிக்கு, இராணுவத்திலிருந்து வெளியேறிய மூன்று மலே படையினர் ஆகியோரின் துணையோடு மாத்தளை, தமன்கடுவ ஆகிய பகுதிகளின் அரச பிரதானிகளுடன் இணைத்து சில கிளர்ச்சிகளை மேற்கொண்டான். இவர்கள் திருகோணமலை வீதியிலுள்ள ஒரு தபால் நிலையத்தை எரியூட்டியபோது ஒரு தபால் பணியாளர் கொல்லப்பட்டார் அந்தச் சம்பவத்தையடுத்து கண்டியிலும் திருகோணமலையிலுமிருந்து புறப்பட்ட ஆங்கிலப் படையினர் கொப்பேகடுவவை கைது செய்தனர்.

ஆங்கில அரசின் தாணிய வரி அறவிடுபவர்கள் நெல் வயல் குத்தகைக்காக ஆங்கில அரச பணியாளர்கள் போன்றோர் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட துன்புறுத்தல்களை பொறுக்கமாட்டாத மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இப்போராட்டங்களை மாத்தளையைச் சேர்ந்த கஹாவத்த உன்னான்சே தேரர் என்ற ஒரு பிக்கு வேறு இரு பிக்குகளுடன் இணைந்து கொஸ்வித்த ரட்டேறால என்ற சிங்களப்பிரதானியின் தலைமையில் மக்களை வழிநடத்தினர். இத 1823 மே மாதம் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. எனினும் ஆங்கிலப்படையணிகள் அனுப்பப்பட்டு அவை ஒடுக்கப்பட்டதுடன் கிளர்ச்சியாளர்கள் யாவரும் கைது செய்யப்பட்டனர். 1823 ஓகஸ்ட் 5ம் திகதி கஹாவத்த உன்னான்சே தேரருக்கும் கொஸ்வந்தரட்ட றாலாவுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 12பேர் மொறிஷியஸ் தீவக்கு நாடுகடத்தப்படுகின்றனர்.

1824இல் கலேகள்ள வன்னிசேகர முதலி என்பவன் தலைமையில் இடம்பெற்ற கிளாச்சியில் நெற்காணிக் குத்தகைக்காரர்களைக் கைது செய்தல், வரி அறவிடுவோரைத் தண்டித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் தலைவர்கள் இறங்கினர். எனினும் இவர்களின் கிளர்ச்சியம் ஒடுக்கப்பட்டு 50பேர் கைது செய்யப்பட்டு 12பேர் தண்டிக்கப்பட்டனர். அதில் தலைமை தாங்கிய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாறே 1830 இல் ஆரம்பித்த கிளர்ச்சி 1834 இல் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி 1840 இல் இடம்பெற்ற போராட்டங்கள் என அனைத்தும் ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்ட சிங்களப்பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஆங்கில ஆட்சியாளர்களால் முறியடிக்கப்பட்டன.

1943 இல் மேற்கொள்ளப்படவிருந்த பெரிய அளவிலான கிளர்ச்சி ஒன்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஊவா, மாத்தளை ஹரிஸ்பத்துவ, கம்பளை ஆகிய நான்கு கோறளைகளைச் சேர்ந்த 10,000 மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு அப்பிரதேசத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவது எனவும் பதுளையிலுள்ள ஆங்கிலப் படைத்தளங்களை தாக்கி அழிப்பது எனவும் இன்னொரு படையணி இரண்டாகப் பிரிந்து கொழும்பைக் கைப்பற்றுவது எனவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துவிடவே கலகொட திசாவவும் சில கிராமத்தலைவர்களும் எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்ட நிலையில் திட்டங்கள் தாமதமடைகின்றன. அதேவேளையில் பெந்தோட்ட உன்னான்சேயும் கைது செய்யப்படுகின்றனர். புரட்சி ஆரம்பிக்கப்படும் முன்னரே நசுக்கப்பட்டு உன்னான்சே தேரருக்கு பதினான்கு வருடங்கள் சிறைத் தண்டனையும் கலகொட திசாவவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகின்றன.

1815ம் ஆண்டில் தமிழ் மன்னனை ஆட்சியிலிருந்து அகற்ற ஆங்கிலப்படையினருக்கு உதவிய சிங்கள ரதல பிரபுக்கள் கண்டிய ஒப்பந்தம் மூலம் கண்டிய அரசை ஆங்கிலேயர் வசமாக்கினர். அந்தப் பாவத்தைக் கழுவ 1815 தொட்டு 1848 வரை இடம்பெற்ற சதி நடவடிக்கைகள் கிளர்ச்சிகள் என்பனவற்றில் ஏராளமான வீடுதலைவிரர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டனர். ஆனால் அந்தப் பாவம் 1948 வரை அதாவது இலங்கை சுதந்திரம் பெறும் வரை கழுவப்படவேயில்லை.

இப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த சிங்களப்பிரதானிகள், மக்கள் ஆகியோரின் தியாகங்கள் என்றும் போற்றப்படவேண்டியவை. ஆனாலும் 2016ல் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் சிலரின் மீதான தேசத்துரோகக் குற்றச்சாட்ட நீக்கப்பட்டு தேசிய வீரர்களாக பிரகடனம் செய்யப்பட்டமை கூட இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமையானது இன்னும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் ஒவ்வொரு முனையிலும் கூர்மைப்பட்டிருப்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும் அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 10 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-06-24 01:56:26 EST

‘என்னைப்போல் ஆறுபேர் தலைமை தாங்க இருந்திருப்பார்களேயானால் கண்டிய மகாணங்களில் ஒரு வெள்ளையனும் உயிர் தப்பி இருக்கமாட்டான்.’ 1848ம் ஆண்டு ஆங்கில ஆட்சியைக் கலக்கிய ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி அரிய சாதனைகளை நிலைநாட்டிய விடுதலை வீரன் வீரபுறங் அப்பு மரணதண்டனை தீர்மானிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அஞ்சா நெஞ்சுடன் முழங்கிய வார்த்தைகள்.

அக் கிளர்ச்சியின் போது மக்கள் பலபல ஆயிரங்களாக ஏழுகோறளைகளிலும், மாத்தளை பிரதேசத்திலும் கிளர்ந்தெழுந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று அவர்களை வழிநடத்தி வெற்றி வரை இட்டுச்செல்ல பகுதித் தலைவர்கள் இருக்கவில்லை. அதன் காரணமாக வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா போன்ற ஒரு சில தலைவர்களே மத்திய மலை நாடெங்கும் ஓடித்திரிந்து புரட்சியை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

1816 தொடக்கம் 1840 வரை இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிகள் அனைத்தும் கண்டிய பெரும் பிரபுக்களின் தலைமையிலேயே இடம்பெற்றன. தமிழன் என்ற ஒரே காரணத்துக்காகக் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியை வீழ்த்த ஆங்கிலேயருக்கு சகல உதவிகளையும் வழங்கிப் பின் கண்டி ஒப்பந்தந்தம் மூலம் கண்டியின் ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த அதே பிரபுக்களே தாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் கிளர்ச்சியில் இறங்கினர்.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியில் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பல விடுதலை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அதேவேளையில் பிரபுக்களின் ஒரு பகுதியினர் ஆங்கிலேயருடன் இணைந்து போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர். ஆங்கில ஆட்சியின் அதிகாரிகளாகவும், அவர்களிடம் வசதிகளையும், சன்மானங்களையும் பெற்று செல்வந்தர்களாக வாழ ஆரம்பித்தனர். ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரம் நிலைபெற ஆரம்பித்த பின்பு மன்னர்களை ஆட்சியாளர்களாகவும், பிரபுக்களை அதிகாரமட்டங்களுமாகக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு மெல்ல மெல்ல உடைய ஆரம்பிக்க அதன் பெறுபேறாக உருவாக்கக்கூடிய புதிய வர்க்கங்களும் உருவாகின. பெருந்தோட்டத் தொழில், கோப்பிப் பயிர்ச்செய்கை, சாராயத் தவறணை முறை, ஏற்றுமதி இறக்குமதி, துறைமுகம், போக்குவரத்து வசதிகள் என்பன காரணமாகப் புதிய உள்@ர் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளர்கள் எனப் புதிய வர்க்கங்கள் உருவான நிலையில் சமூகக் கட்டமைப்பும் புதிய பரிணாமத்தை நோக்கி மாற்றமடைந்தது.

1845-1846ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இலங்கைப் கொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதைய பிரதான ஏற்றுமதியான கோப்பியின் விலை பத்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்த போது ஆங்கில அரசு அதை ஈடு செய்ய மக்கள் மீது பல்வேறு விதமான வரிகளை விதிக்க ஆரம்பித்தனர்.

காணி வரி, துவக்கு, நாய், மாட்டு வண்டி, குதிரை வண்டி, தோணிகள், கடைகள் என்பவற்றுக்கு வரி விதிக்கப்பட்டதுடன் தென்னை, கமுகு பொன்ற மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டன. எல்லாவற்றையும் விட பிக்குமார் தவிர்ந்த ஏனைய 18-55 வயதுக்கு இடைப்பட்டோர் 3 சிலிங் வரி கட்ட வேண்டும் அல்லது ஆறு நாட்கள் இலவசமாக வீதிகளில் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபோது மக்களின் எதிர்ப்புப் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்தது. அதே போன்று கடை வரி, முத்திரை வரி, வீதிச்சட்டம் என்பவற்றால் நகர்ப்புற தொழிலாளர்களும் சாதாரண மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

வரிகளுக்கு எதிரான போராட்டங்கள் 1948 மே மாதமே கண்டியிலும் பதுளைப் பகுதியிலும் பெரும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. கண்டியில் துவக்கு வரிக்கு எதிரன பொராட்டம் ஏராளமான மக்களால் கண்டிக் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்றது. இவ்வாறே பதுளையில் துவக்கு வரி கட்ட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்த பெருந்தொகையானோர் தங்கள் துவக்குகளை முறித்தெறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கேகாலையிலும் துவக்கு வரி காணி வரி தலை வரி என்பவற்றுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெற்றன. வரிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் ஆர்ப்பாட்டங்களைப் பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இராணுவம் வரவழைக்கப்பட்டுக் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யூலை மாதத்திற்கு முன்பு நடந்த போராட்டங்கள் மீது ஆங்கிலேயர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள், மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் என்பன காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்புகள் கொங்கொலகொடபண்டா, புராங் அப்பு, டிங்கிரி லாலா ஆகியோரின் தலைமையிலான ஒழுங்குபடுத்தப்பட்ட புரட்சிகர நடவடிக்கைகளாக எழுச்சி பெற்றன.

முன்னைய கிளர்ச்சிகளுக்கு தலைமையேற்ற பிரபுக்கள் போன்று போராட்டங்களை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் மட்டுப்படுத்தாமல் புரட்சித்தலைவர்கள் மத்திய மலைநாடெங்கும் சுற்றித்திரிந்து தங்கள் ஆதரவை திரட்டியதுடன் கொழும்பு நகர்ப்புற மக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் காரணமாக சிங்களவர் மட்டுமின்றி கொழும்புத் துறைமுகம் மற்றும் நகர சுத்தி தொழிலாளர்கள் ஆகிய தமிழர்கள் முஸ்லீம் சிறு வியாபாரிகள் போன்ற சக்திகளும் போராட்டங்களில் அணி திரண்டன.

அரசன் ஒருவனைத் தலைமையாகக் கொண்டு செயற்படும் மக்களின் பாரம்பரிய நம்பிக்கை காரணமாக கொங்கொலகொடபண்டா தம்புள்ளவில் வைத்து மன்னனாக முடி சூட்டப்பட்டான்.

யூலை 27ல் மத்திய மலை நாட்டுக்கும் திருகோணமலைக்குமான தபால் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாத்தளை, நுவரகெலிய, தம்மன்கடுவ, ஏழு கோறளைகள் மற்றும் ஹரிஸ்பத்துவ ஆகிய பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். எங்கும் ஆயுதம் தரித்த மக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. யூலை 28ம் நாள் மாத்தளையை நோக்கி முன்னேறிய கிளர்ச்சியாளர்கள் அரச கட்டிடங்கள், சிறைக்கூடம், நீதிபதியின் இல்லம், ஓய்வு விடுதி, கோப்பிக் களஞ்சிய சாலைகள், பப்பிரிஸ் தேவாலயம் என்பனவற்றைத் தாக்கி தமது கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வந்தனர். சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தோட்ட பங்களாக்கள் தாக்கப்பட்டு களஞ்சியங்கள் உடைக்கப்பட்டன.

புரட்சியாளர்களின் தாக்குதலில் அரச நிர்வாகம் முற்றாகவே நிலைகுழைந்த நிலையில் ஆங்கில அரசால் கண்டியில் கண்டவுடன் சுடும் சட்டமான மார்ஷல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது. எனினும் மக்களின் போராட்ட அலை ஓயவில்லை. பற்பல பகுதிகளை நோக்கி போராட்டங்கள் வரிவடைகின்றன. ஏழு கோரளைகளுக்கும் கிளர்ச்சி பரவிவிட்ட நிலையில் 4000 பேருக்கு மேற்பட்டோர் திரண்டு குருநாகல் கச்சேரியைத் தாக்கி அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி எரியூட்டுகின்றனர். சகல சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படுகின்றனர். சகல அரச கட்டிடங்களும் அந்நிய அதிகாரிகளின் இல்லங்களும் தாக்கி அழிக்கப்படுகின்றன. யூலை 31ம் திகதி குருநாகல் பிரதேசத்திலும் மார்ஷல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது.

அதேவெளை வரி அறவீடுகளுக்கெதிரான சிறிய சிறிய குழப்பங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. வரி அறவீடுகளுக்கு எதிராக பிரித்தானிய மக்கள் சபைக்கு முறைப்பாடொன்று அனுப்பப்படவுள்ளதாகவும் அதில் கையெழுத்து வைப்பதற்கு அனைவரையும் யூலை 26ம் திகதி காலை ஏழு மணிக்கு புறக்கோட்டையில் கூடும்படி சிங்களத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு பகுதிகளிலும் வரிகளுக்கு எதிராக சிறு சிறு பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அன்று காலை பெருந்தொகையான மக்கள் சுலோகங்களைக் கோசமிட்டவாறு களனிப்பாலத்தைக் கடந்து கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றனர். போகும் பாதையெங்கும் மக்கள் மேலும்மேலும் அணி திரளவே கூட்டம் புறக்கோடடையை அடைந்த போது பிரமாண்டமாக மாறியிருந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கியோரை பொலிசார் கைது செய்ய முயன்றபோது பெரும் கலகம் வெடித்தது. பொலிஸ் மேலதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் பல பொலிசார் மக்களால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டனர். கொழும்புக் கோட்டையிலும் பெரும் வன்முறைகள் மூழவிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே வரிகளுக்கெதிராக பிரசாரம் செய்து வந்த எலியட் என்ற ஆங்கிலேயரின் தலையீட்டால் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டு அது தவிர்க்கப்படுகிறது.

வீரபுறங் அப்பு, கொங்கொலகொடபண்டா ஆகியோர் கண்டி, ஊவா, கொழும்பு என பல பகுதிகளுக்கும் மின்னல் வேகப் பயணங்களை மேற்கொண்டு அவ்வப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களைத் தீவிரப்படுத்தி ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒருமுகப்படுத்தினர்.

அதே காலப்பகுதியில் மரவரி, தலைவரி என்பனவற்றை எதிர்த்து யாழ்ப்பாணத்திலும் வன்னியில் கமுகஞ்சோலைப் போராட்டம் என்ற பெயரில் மரவரியை எதிர்த்தும் போராட்டங்கள் இடம்பெற்றன. கமுகஞ் சண்டை பற்றிய நாட்டார் பாடல்கள் இன்னும் வன்னியில் நிலவி வருகின்றன.

எனினும் ஆங்கில அரசு தன் முழுப்பலத்தையும் பாவித்ததுடன் இந்தியாவிலிருந்து படையணிகளை இறக்கி கண்டவுடன் சுடும் மார்ஷல் லோ சட்டத்தின் மூலம் மக்கள் மீதான கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டது. வீதி வீதியாக பிணங்கள் குவிந்து கிடக்குமளவுக்கு கிளர்ச்சி படுகொடூரமான முறையில் அடக்கப்பட்டது.

ஒடுக்குமுறையும் பலிவாங்களும் மேலோங்கியிருந்த நிலையில் இராணுவ நீதிமன்ற விசாரணை மூலம் விசாரணைகய் மேற்கொள்ளப்பட்டு ஏராளமானோர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

வீரபுரங்அப்பு, கடஹப்பொல, உன்னான்சே தேரர் ஆகியோர் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுட்டுக்கொல்லப்படுகின்றனர். கொங்கொலகொடபண்டா மலாக்கா என்ற இடத்துக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே மரணமடைகிறான்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டதாகவும் அதன் காரணமாக ஆங்கிலப்படைகள் எச்சரிக்கையடைந்துவிட்டதாகவும் பிரிட்டிஸ் படை முன்னேறும் போது அவை 20,000 பேர் தாக்கியழிப்பது என்ற திட்டம் நிறைவேற முடியாமல் போனதாலுமே கிளர்ச்சி தோல்வியடைந்ததாக விசாரணையின் போது சில கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எப்படியிருந்த போதிலும் ஏற்கனவே இடம்பெற்று தோற்கடிக்கபட்ட கிளர்ச்சிகள் யாவும் சிங்கள நிலப்பிரபுக்களால் தங்களின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டவையாகும். ஆனால் 1848ல் இடம்பெற்ற இப்போராட்டம் அவற்றைவிட முற்றிலும் வித்தியாசமானதாகும். இதற்குத் தலைமை தாங்கிய வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோர் சாதாரண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இயல்பான புரட்சிகர குணாம்சங்கள் கொண்டவர்களாகவும் இருந்தனர். அது மட்டுமின்றி இப்போராட்டம் ஒரு மக்கள் கிளர்ச்சியாக எழுச்சி பெற்றது மட்டுமின்றி இதில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் எனப் பல்வேறு தரப்பினரும் இணைந்திருந்தனர். அவ்வகையில் ஏனைய கிளர்ச்சிகளை விட இது ஆங்கில ஆட்சியை தூக்கியெறியும் நோக்கம் கொண்ட புரட்சிகரமானதும் முற்போக்குமானதுமான மக்கள் எழுச்சியாகவே விளங்கியது.

முன்னைய கிளர்ச்சிகளுக்கு தலைமையேற்றவர்கள் தமிழர்களுக்கு எதிராக ஆங்கிலேயருடன் இணைந்து செயற்பட்டு பின்பு தங்களுக்கு அதிகாரம் கிடைக்காத நிலையில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவாகள். ஆனால் 1848 புரட்சியில் இனக்குரோதம் இருக்கவில்லை அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இலட்சியத்தின் கீழ் ஒன்றுதிரண்டிருந்தனர். ஆனால் 1883ல் வெடித்த அடுத்த கிளர்ச்சி மீண்டும் இனவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 1848ல் தோன்றிய மாற்றம் முற்றாகவே சிதைக்கப்பட்டுவிட்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 11 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-07-02 09:22:09 EST

“நேர்மையின் இளவரசன் விரைவில் எழுவான் அவன் கடவுளால் பாதுகாக்கப்படுவான். அவன் பௌத்தத்தை அதன் தூய உண்மை நிலைக்கு மீட்டெடுப்பான். அவனின் வருகையில் அனைத்து அந்நியரும் பதவிமோகிகளும் மறைந்து போய்விடுவர். இந்த இளவரசன் திருகோணமலைக்கு வருவான் என்பதுடன் சுமண சூத்திரியவில் கூறப்பட்டபடி வீரபோக என்ற இளவரசனின் ஆட்சி முதல் 40 வருடங்கள் தமிழர் படையெடுப்பால் இருள் சூழ்ந்திருக்கும் பின்னர் இந்தியாவிலிருந்து பலம்மிக்க படையுடன் வரும் தியசேன என்ற அரசன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கை இழந்த புராதனப் பெருமையை மீட்டுத்தருவான்.” இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தின் புத்துருவாக்கம் என்றதொரு ஆய்வை மேற்கொண்ட சிற்சிறி மலல்லகொட என்பவர் மேற்படி விடயங்களை எடுத்துக்காட்டி தர்மராஜபொத்த அதாவது நீதியான அரசனின் புத்தகம் என்ற நூலில் குறிப்பிடப்படும் பிரதான விடயமெனவும், விரைவில் ஒரு அரசனின் வருகையால் இலங்கையில் பொற்காலம் மீட்கப்படும் என்ற செய்தியை அவற்றின் மூலம் பரந்துபட்ட பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்.

வீரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான பெரும் புரட்சியின் இனமத பேதமின்றி சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் என அனைத்து சமூகத்தினரும் தேசிய அடிப்படையில் ஒன்று திரண்டு பங்கு கொண்டனர். கண்டிய, ஊவா பிரதேச விவசாயிகள், வேடுவ மக்கள், நகர்ப்புறத் தொழிலாளிகள், முஸ்லீம் சிறு வர்த்தகர்கள், வளர்ச்சியடைந்துவரும் புதிய சிங்கள முதலாளித்துவ சக்திகள் என அந்நிய ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

1810 தொட்டு 1843 வரை இடம்பெற்ற அத்தனை போராட்டங்களும் சிங்கள நிலப்பிரபுத்துவ சக்திகளின் தலைமையில் மீண்டும் சிங்கள பௌத்த மன்னராட்சி முறையைக் கொண்டு வரவே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1848 புரட்சி தலைமை தாங்கியோரே சாதாரண குடிமக்களேயாகும்.

கொங்கொலகொட பண்டா பெலியகொட பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தபோதும் உடநுவரவில் வசித்து வந்தவன் எனவும் வகும்புற என்ற சாதாரண சாதியைச் சேர்ந்தவன் என்றும் முதலில் வண்டியோட்டியாகவும், பின்பு ஆயுள்வேத வைத்தியனாகவும் தொழில் பார்த்தவன் என்பதும் ஆங்கிலேயரின் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது.

வண்டியோட்டிகள் தொலைதூரப்பயணங்களின் போது அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாலும் நகாப்புறங்களில் பொலிசாரின் தொல்லைகள் காரணமாகவும் இயல்பாகவே போர்க்குணம் மிக்கவர்களாக விளங்கினர்.

வீரபுறங் அப்பு மொரட்டுவவைப் பூர்வீகமாகக் கொண்டவனாகும், இவன் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவன். அவன் அலெக்ஸாண்டர் பொர்னான்டோ என்ற சாராய குத்தகைக்காரருக்கு உதவியாளனாகவே கண்டிக்கு போனான். அக்காலப்பகுதியிலேயே புறங் அப்பு ஒரு கண்டிய பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அவன் கொள்ளைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இரு முறை சிறைசெய்யப்பட்ட போதிலும் அவன் இருமுறையும் தப்பிவிட்ட காரணத்தால் அவன் ஆங்கில அரசால் தேடப்படும் நபராகப் பிரகடனப்படுத்தப்பட்டான்.

கொவிகம சாதியைச் சேராதவர்களை தமக்குச் சமமாகவோ, தம்மை விட மேலானவர்களாகவோ கண்டியவர்கள் ஏற்பதில்லை. ஆனால் விரபுறங் அப்பு, கொங்கொலகொட பண்டா ஆகியோரின் வீரமும், விடுதலைப் போராட்டத்துக்குள் காட்டிய தீவிரமும் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வைத்தன. அதுமட்டுமின்றி போராட்டமும் மக்கள் போராட்டமாக விரிவடைந்துவிட்டமையால் சமானியர்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஏற்கனவே இடம்பெற்ற புரட்சிகளில் 1858 புரட்சி மிகப் பிரமாண்டமானதும் மக்கள் மயப்பட்டதாகவும் இருந்தபோதிலும் ஆங்கிலேயர் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்தும், இந்தியாவிலிருந்து பெரும் படையணிகளை வரவழைத்து அந்த மக்கள் புரட்சியைத் தோற்கடித்தனர்.

எனினும் இப்போராட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டங்களுக்கான சில வழிமுறைகள் முளைவிட்டமையை அவதானிக்கமுடியும். குறிப்பாக நகரப்புறங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களாக ஆரம்பித்த போராட்டங்கள் வன்முறைக்கலகங்களாக வெடித்தமையை குறிப்பிட முடியும்.

மன்னராட்சியை மீண்டும் கொண்டு வரும் பௌத்த சிங்கள நிலப்பிரபுத்துவ முனைப்பு வரலாற்றுச் சக்கரத்தை பின்பக்கமாகச் சுற்ற முயன்ற வேளையில் 1948ம் ஆண்டு புரட்சி இன மத பேதங்களை கடந்ததாக அமைந்ததுடன் முற்போக்கான அம்சங்களைக் கொண்டும் விளங்கியது.

இதை விரும்பாத, மீண்டும் பௌத்த சிங்கள மன்னராட்சிக் கனவுகளில் மிதந்த சிங்கள நிலப்பிரபுத்துவ சக்திகளின் தத்துவார்த்த பிரதிநிதியாக சிற் சிறி மலல்லகொடவினால் முன்வைக்கப்பட்ட வீரபோக இளவரசன் கதையும் அவன் ஆட்சிக்கு தமிழர்கள் இடையூறு விளைவிப்பார்கள் என்ற போலித்தீர்க்கதரிசனப் பாணியில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க போக்கை வளர்ப்பதற்கு பிரயோகிக்கப்பட்டன. அதாவது வீரபோக இளவரசன் கதையும் தியசேனனின் படையெடுப்பு பற்றிய கற்பனையும் மீண்டும் இனங்களுக்கிடையேயான அவநம்பிக்கையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான பசப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றன.

இன்னொரு புறம் மிசனரிமார் மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகளும் அதற்குப்பின்னால் இருந்த ஆங்கில அரசின் அனுசரணையும் பௌத்த சமயத்துக்கு ஆபத்து வந்துவிட்டதென்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க ஆரம்பித்தன. எனவே பௌத்த சிங்கள மேலாதிக்கப் போக்கை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்ட சிங்கள பிரபுத்துவ சக்திகள் மதமாற்றத்தை வைத்து மேலும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கினார்.

1836ம் ஆண்டு கிறீஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் கொழும்பில் ஒல்லாந்தரால் ஒரு சிங்கள அச்சகம் நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர் வசம் வந்த பின்பு அந்த அச்சகம் முழமையாகவே கிறீஸ்தவ மிசனரிமாரின் கைகளுக்கு வந்தது. இங்கு கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் நூல்கள், பிரசுரங்கள் என்பன அச்சிடப்பட்டு நாடு முழுக்க விநியோகிக்கப் பட்டதுடன் இதன் மூலம் பௌத்த மத எதிர்ப்புப் பிரசாரமும் முடுக்கிவிடப்பட்டது.

கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயம் 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டு 1779ல் ஒல்லாந்தரால் இத்தேவாலயத்துக்கு பத்து ஏக்கர் காணி வழங்கப்பட்டது. மிசனரிமார்கள் இவ்வாலயத்தை மையமாகக் கொண்டு பௌத்த மக்களை கிறீஸ்தவர்களாக மாற்றும் நடவடிக்கையையும், பௌத்த மதத்திற்கு எதிரான பிரசாரங்களையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அது பௌத்த தரப்பினர் மத்தியிலும் கசப்பையும் குரோதத்தையும் வளர்க்க ஆரம்பித்தது.

இன்னொருபுறம் கொட்டாஞ்சேனை தீபத்துமாறாய விகாரையை மையமாகக் கொண்டு பௌத்த பிக்குகள், சிங்களப் புத்தி ஜீவிகள், அரச பணியாளர்கள், சிங்கள சிறுவர்த்தகர்கள் எனப் பல தரப்பினரும் பௌத்த மதத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தவும் அணிதிரண்டனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் 1848 புரட்சி இன மத எல்லைகளைக் கடந்து ஆங்கில ஆட்சிக்கெதிரான ஒரு தேசிய ஐக்கியத்தை உருவாக்கியது. அந்த ஒரு முற்போக்கான நிலையை மிசனரிமாரின் மதப்பரப்பல் நடவடிக்கையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சகதிகளின் மதமாற்றத்திற்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களும் சீர்குலைக்க ஆரம்பித்தன.

எனினும் தீபத்துமாறாய விகாரதிபதி குணாநந்த தேரர், கிக்கடுவ சுமங்கல தேரர் ஆகியோர் ஆரம்பத்தில் கௌரவமான முறையில் மதமாற்றத்துக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1885ல் கொழும்பில் ஒரு சிங்கள அச்சகமும் 1862ல் காலியில் ஒரு அச்சகமும் நிறுவப்பட்டு அவை மதமாற்றத்திற்கு எதிரான பிரசுரங்களையும் நூல்களையும் வெளியட்டதுடன் பௌத்த மதத்தின் மேன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தன.

இவ்வாறு இருதரப்பினரும் தீவிரப்பிரசாரங்களில் ஈடுபட்ட காலத்தில் மிரிக்கட்டுவத்த குணாநந்த தேரர் மிசனரிகளை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

1873ல் பாணந்துறை விவாதம் எனப்பிரசித்தி பெற்ற ஒரு சொற்போர் குணாநந்த தேரர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பௌத்தர்கள் சார்பில் கிக்கடுவ சுமங்கல தேரர் பங்கு கொண்டு அதிசயிக்கத் தக்க விதத்தில் விவாதத்தை முன்கொண்டு சென்று மிசனரிமாரின் கருத்துகளை முறியடித்தார். மிசனரிமாரும் வலுவான கருத்துகளை வாதிட்டபோதும் இறுதியில் பௌத்த தரப்பினரே வெற்றி பெற்றனர்.

இவ்வாறு கொழும்பு காலி போன்ற இடங்களில் மிசனரிமாரின் மதமாற்றத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சி ஏற்பட்ட அதேவேளை வடக்கில் ஆறுமுக நாவலர் தலைமையில் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வந்தன.

நாவலர் இந்து சமய மேலான்மைகளை விளக்கியும் மதமாற்றத்தின் தேசிய நலன்களுக்கு விரோதமான நோக்கங்களையும் விளக்கி மேற்கொண்ட பிரசாரங்களை தமிழ் மக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அதேவேளையில் மிசனரிகள் ஒரு அச்சகத்தை நிறுவி பிரசுரங்களையும் ‘மோர்னிங் ஸ்டார்’ என்ற பத்திரிகையும் வெளியிட்டு தீவிர மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாவலரும் ஒரு அச்சகத்தை நிறுவி இந்து சாதனமென்ற பத்திரிகையையும் பிரசுரங்களையும் வெளியிட்டார். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இயங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த இந்து ஆங்கிலக் கல்லூரிகளையும், பாடசாலைகளையும் சிறப்புற இயங்க வைத்தார்.

அதேபோன்று இந்தியாவிலிருந்து மிசனரிமாரால் கொண்டு வரப்பட்ட பிரபல மதப்பிரசாரகரான அருளப்ப முதலியருடன் விவாதம் நடத்தி அவரை முறியடித்து இந்து மதத்தின் மேன்மையை ஆறுமுக நாவலர் நிலைநாட்டினர்.

பாணந்துறையில் பௌத்த குருமார் பெற்ற வெற்றியும் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் பெற்ற வெற்றியும் மதமாற்றத்திற்கு எதிரானதும் ஒரு தேசிய எழுச்சிக்கானதுமான ஒரு சாதனையாக அன்று விளங்கியது.

இந்தியாவில் பிரமஞான சங்கம் என்றவொரு அமைப்பை உருவாக்கி இந்து, பௌத்த மதங்களிலுள்ள மூடத்தனங்களை விமர்சித்து பகுத்தறிவு ரீPதியான வியாக்கியானம் கொடுத்து இந்த இரு மதங்களின் மேன்மைக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் அமெரிக்க ஆங்கிலேயரான ஒல்கொட் என்பவர். பாணந்துறை விவாதத்தில் பௌத்த குருமார் பெற்ற வெற்றி அவரைக் கவர்ந்து விடவே அவர் இலங்கை வந்து காலியிலுள்ள விஜயராம விகாரையில் தன்னை ஒரு பௌத்தனாக இணைத்துக்கொண்டார்.

ஒல்கொட்டின் வருகையின் பின்பு மதமாற்றத்திற்கு எதிரான போராட்டம் முனைப்புப் பெற்றது மட்டுமன்றி பௌத்த மதத்தை புனருத்தாரணம் செய்து பௌத்த மதக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது.

வடக்கில் நாவலர் இந்து ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி கல்வியின் மூலம் மிசனரிகள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததைப் போன்று ஒல்கொட்டும் தென்னிலங்கையில் பன்னிரண்டு பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் 400ற்கும் மேற்பட்ட பௌத்த பாடசாலைகளையும் நிறுவினார். இவற்றில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, காலி மகிந்த கல்லூரி, கண்டி தர்மராஜ கல்லூரி குருநாகல் மயிலதேவ கல்லூரி என்பன முக்கியமானவையாகும்.

வடக்கிலும், தென்பகுதியிலும் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் தமிழர்களினதும், சிங்களவரினதும் தேசிய விழுமியங்களை பாதுகாக்கும் முறையிலும் மதத்தின் மூலமான ஆங்கில ஆட்சியதிகாரத்துக்கெதிரான முயற்சியாகவும் இடம்பெற்ற போதிலும் அவை ஒன்றிணைந்து ஒரு பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டமாக வெடிக்கவேண்டிய தனித்தனி போராட்டங்கள் ஒன்றிணையாமை ஒரு பின்னடைவாகும். அதற்குப் பிரதான காரணம் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிரான குரோத மனப்பான்மை சிங்களப் பௌத்த மதவாதிகளால் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டமையும் சிற்சிறி மலல்லகொட போன்றோர் தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற கருத்தை தொடர்ந்து ஊட்டிவந்தமையுமே ஆகும்.

இதன் காரணமாகவே சிங்கள பௌத்த தேசியத்தை அழித்துவிட ஆங்கில அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிரான போராட்டமாக பரிணாமம் பெறாமல் மதம் மாறிய மக்களுக்கெதிரான போராட்டமாகக் குறுக்கப்பட்டன.

இதுவே 1883ல் கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கருக்கு எதிரான மதக்கலவரமாக வெடித்தது. இதில் பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு சிங்களவர் கொல்லப்பட்டார். பொலிசார் உட்பட 30பேர் படுகாயமடைந்தனர்.

1848ல் இனமத பேதங்களைக் கடந்து அந்நிய ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெரும் புரட்சி சிங்கள இனவாத சக்திகளால் திசைதிருப்பப்பட்டு 1883ல் மதக்கலவரமாக குறுக்கப்பட்டு மக்களுக்கிடையேயான போராட்டமாக மாறி அதன் புரட்சிகரத்தன்மையை இழந்துவிட்டது.

அதன் காரணமாக 1883ல் வெடித்த கொட்டாஞ்சேனை கலவரம் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான மதவெறிக் கலவரமாக மட்டுமின்றி எதிர்காலத்தில் இனமத மோதல்கள் உருவாவதற்கும் இன ஒடுக்குமுறைகள் வலுப்பெருவதற்கும் பலமான அத்திவாரமாகவும் அமைந்துவிட்டது.

நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இனமோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இனமோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-07-12 10:12:48 EST

1816ல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த சதிப்புரட்சி, 1817 – 1818 காலகட்டத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லசக் கிளர்ச்சி என ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சிகள் மீண்டும் கண்டிய நிலப்பிரபுத்துவ மன்னராட்சியைக் கொண்டுவருவதற்கான போராட்டங்களாகவே அமைந்திருந்தன. அதையடுத்து இடம்பெற்ற போராட்டங்களும் ஆங்கில ஆட்சிக்கெதிராக எழுச்சி பெற்றபோதிலும் அதே நோக்கத்தையே கொண்டிருந்தன. ஆனால் 1848ல் இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் இலங்கையின் சுயாட்சியை நோக்கியதாக அமைந்திருந்ததுடன் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டமாக மகிமை பெற்றிருந்தது.

அந்நிய ஆக்கிரமிப்பின் மிகவும் சூட்சுமமான ஆயுதமான மதமாற்றம் எமது பாரம்பரிய மொழி மதம், கலாச்சாரம் என்பவற்றைச் சிதைக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருந்த காரணத்தால் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டமும் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் இனமதவாத சக்திகளால் மதமாற்றத்திற்கொதிரான நியாயமான போராட்டம் மதம் மாறியவர்களுக்கு எதிரான போராட்டமாக மாறி கொட்டாஞ்சேனைக் கலவரம் என அழைக்கப்படும் பேரழிவுக்கு வழிகோலியது. அதுமட்டுமின்றி இன்று வரை கோலோச்சும் இனமத விரோத உணர்வுகளின் அடித்தளமாகவும் விளங்கியது.

வட இலங்கையில் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆறுமுக நாவலர் தலைமையில் சொற்பொழிவுகள், விவாதங்கள், பிரசுரங்களை வெளியிடுதல் பத்திரிகை வெளியிடுதல், இந்து ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுதல் போன்ற வழிமுறைகள் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தென்னிலங்கையிலும் குணாநந்த தேரர் தலைமையில் மதமாற்றத்துக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஒல்கொட்டின் வருகையின் பின் பௌத்த ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுவது பௌத்த மதத்தின் மேன்மையை விளக்கி நூல்களை வெளியிடுவது போன்ற வழிகளில் விரிவுபடுத்தப்பட்டு வடக்கைப் போன்றே தெற்கிலும் காத்திரமாக அமைந்திருந்தன.

எனினும் ஆங்கில ஆட்சியாளர்களினதும் கிறீஸ்தவ மத நிறுவனங்களினதும் மேலாதிக்கப் போக்கு காரணமாக சிங்கள இனமத வெறியர்கள் மதம்மாற்றப்பட்டோருக்கு எதிரான உணர்வுகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு உருவாகியது.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இடம்பெற்ற சர்வதேச மதமகாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இந்துமத தத்துவங்களின் மேன்மை பற்றிய உரை, இந்தியாவில் ராம் மோகன் ராய் என்பவரால் பிரம்மோசமாயம் என்ற ஆன்மீக அமைப்பு நிறுவப்பட்டு இந்து மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பனவற்றால் கவரப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியும், வழக்கறிஞரும், ஊடகவியலாளருமான கேணல் ஒல்கொட் இந்து பௌத்த மதங்கள் பற்றிய அக்கறை கொள்ள ஆரம்பித்தார். அவர் இந்தியா வந்து 1875ல் பிரமஞான சங்கமென்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அவர் பாலி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று இந்து பௌத்த நூல்களை அவற்றின் மூல மொழிகளிலேயே கற்று ஆய்வு செய்து அம்மதங்களின் மறுமலர்ச்சிக்கு வழிகோரினார். இதன் தலைமையகம் 1878ல் இந்தியாவிலுள்ள அடையார் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.

மிசனரிகளுக்கும் பௌத்த பிக்ககளுக்குமிடையே இடம்பெற்ற பாணந்துறை விவாதத்தின் போது பிக்குகளால் முன்வைக்கப்பட்ட ஆணித்தரமான கருத்துகளால் கவரப்பட்ட ஒல்கொட் 1880ல் கொழும்புக்கு வந்து தீபத்துறாமய விகாரையில் குணாநந்த தேரரை சந்திக்கிறார். 1880 மே மாதத்தில் அவரொரு பௌத்தராக மதம்மாறிக் கொண்டார். அத்துடன் இலங்கையின் பிரம்மஞான சங்கத்தின் கிளையை நிறுவி பௌத்த மத மறைக்கல்வியை ஊக்குவித்ததுடன் நூல்களை வெளியிட்டு பௌத்தத்தின் மேன்மையை மேற்குலகுக்கும் பரப்பினார். 15 பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் 400 பௌத்த பாடசாலைகளையும் நிறுவி கல்வி மூலம் மதமாற்றும் மிசனரிமாரின் தந்துரோபாயத்தை முறியடித்தார்.

பிரம்மஞான சங்கத்தின் தலைமையில் ஒல்கொட் அவர்களின் முயற்சியால் மதமாற்றத்துக்க எதிரான காத்திரமான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள பௌத்த மதவெறியர்களால் கிறீஸ்தவர்களுக்க எதிரான வன்முறைகள் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டன. மது ஒழிப்பு மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான பிரசாரங்கள் மூலம் கிறீஸ்தவ மதத்திற்கு மதமாறியவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

1883ல் தீபத்துறாமய விகாரையில் புதிதாக நிறுவப்பட்ட பத்தர் சிலைக்கு கண்வைக்கும்; விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த மித்தட்டுவ குணாநந்த தேரர் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

ஏற்கனவே 1872ல் கொச்சிக்கடையிலிடம்பெற்ற பெரஹர ஊர்வலத்தின் மீதும் 1880ல் மாதம்பிட்டியில் இடம்பெற்ற பெரஹர மீதும் சில விசமிகளால் கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டும் முகத்துவாரத்தில் ஊர்வலத்தைச் செல்லவிடாது பாதை தடுக்கப்பட்டும் முறுகல் நிலை நிலவியது. இந்நிலையில் பொலிசார் கண்வைக்கம் விழா ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்த போதிலும் ஆங்கில சுகாதார அதிகாரி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதெனக் கூறி அனுமதியை ரத்துச் செய்தார். எனினும் மார்ச் 31ம் திகதி நள்ளிரவு ஆராதனை முடிவுற்ற பின் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பெரிய வெள்ளி குருத்தோலை ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்தர்களின் பெரஹரவை நடத்த அனுமதிக்க வேண்டாமென மிசனரிகளின் திருத்தூதர் மாசிலாமணி என்பவர் பொலிசாரிடம் வலியுறுத்தினார். எனவே பெரிய வெள்ளியன்று இடம்பெறவிருந்த ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. ஆனால் 20.03.1883 ஞாயிறு இரவு 12 மணி பூசை முடிவடைந்த பின் பெரஹரவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதே வேளையில் பெரஹரவை உயிhத்த ஞாயிறன்று நடத்த குணாநந்த தேரருக்கு மகாராணியால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் ஊhவலத்தில் ஒரு குரங்கு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் கொண்டுவருவதாகவும் அது தேவமாதாவை அவமதிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவதாகவும் கத்Nதூலிக்க மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்படுகின்றன. இன்னொருபுறம் பெரஹர ஊர்வலத்தை தாக்க கத்தோலிக்கர்கள் ஆயுத பாணிகளாக காத்திருப்பதாகவும் ஊர்வலத்தினர் மத்தியில் வாந்தி பரப்பப்படுகிறது. எனவே ஊர்வலத்தில் வந்த பெண்கள் சிறுவர்கள் நீக்கப்பட்டு கொட்டன்கள், கத்திகளால் ஆயுத பாணிகளாக்கப்பட்டவர்களுடன் ஊhவலம் தொடர்கிறது.

பொரலையிலிருந்தும் கொல்லு;பிட்டியிலிருந்தும் புறப்பட்ட பௌத்தர்களின் இரு ஊர்வலங்களும் மருதானையில் ஒன்றிணைகின்றன. 1000ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தை குழப்ப மருதானையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைகின்றன. ஊர்வலம் ஆட்டபாட்டங்களுடன் கொட்டாஞ்சேனை நோக்கி ஆரவாரத்துடன் நகர்கிறது.

ஊர்வலம் கொட்டாஞ்சேனை லூசியா மாதா கோவிலை அண்மித்த போது மதா கோவில் மணி யாரோ ஒருவரால் ஒலிக்கப்படுகிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் அது தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி மாதா கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள்மேல் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். கத்தோலிக்கர்களும் எதிர்த்தாக்குதலுக்கு தயாராக இருந்த நிலையில் பெரும் கலகம் மூள்கிறது.

இக்கலவரத்தில் ஜூன்நைதே என்ற சிங்கள பௌத்தர் கொல்லப்படுகிறார். மேலும் பன்னிரண்டு பௌத்தர்கள் ஒரு பொலிசார் உட்பட முப்பது பேர் படுகாயமடைகின்றனர்.

அதே நேரத்தில் தீபத்துறாமய விகாரையை எறியூட்டவும் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்தர்கள் மேல் தாக்குதல்களை மேற்கொள்ளவும் நீர்கொழும்பிலிருந்து 3000 கத்தோலிக்கர்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் வாந்தி பரவுகிறது.

எனவே பௌத்த சிங்கள இனவெறியர்கள் கத்தோலிக்கர்களை தேடித்தேடி வேட்டையாட ஆரம்பிக்கின்றனர். மேலும் கலவரம் பலாங்கொடை கண்டி ஆகிய பகுதிகளுக்கும் பரவி கத்தோலிக்கர்கள் தேடித்தேடி தாக்கப்படுகின்றனர். நாட்டிலுள்ள பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. கத்தோலிக்கர்கள் பெருமழிவுகளை சந்தித்த பின்பே ஆங்கில ஆட்சியாளர்கள் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களின் பின்பே கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

கொட்டாஞ்சேனையில் வசித்தவர்கள் துறைமுகத் தொழிலாளர்களாக விளங்கியவர்களும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் மூட்டை தூக்குபவர்களாக பணியாற்றியவர்களுமான கத்தோலிக்கர்கள், நீர்கொழும்பில் வசிக்கும் கத்தோலிக்கர்கள் என அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொட்டாஞ்சேனைக் கலவரம் ஒரு மதக்கலவரமாக அமைந்திருந்த போதிலும் அதற்குள் தமிழர்களுக்கு எதிரான இனக்குரோதம் இழையோடியிருப்பதை அவதானிக்க முடியும். 1848ல் உருவான பெரும் புரட்சி இனமத பேதங்களை புறந்தள்ளி மக்கள் புரட்சியாக ஆங்கில ஆட்சிக்கெதிராக உருவெடுத்தபோதிலும் காலங்காலமாக சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்ட இனமத குரோத உணர்வு காரணமாக அப்போது உருவாக்கப்பட்ட அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான இனமத ஐக்கியம் சிதைக்கப்பட்டு 1883ல் மதம்மாறி மக்களுக்கெதிரான போராட்டமாக மாற்றப்பட்டது.

1883ல் விதைக்கப்பட்ட இனமதகுரோத உணர்வுகள் இன்றும் நிலைத்து நின்று வலுப்பெற்று தேசிய இனங்களுக்கான ஐக்கியம் உருவாக முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமையை உருவாக்கியுள்ளது. 1883ல் கத்தோலிக்கருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவன்முறைகள் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளாக மாறி மீண்டுமொரு பெரும் ரத்தக்களரியை உருவாக்கியது.

அப்போது விதைக்கப்பட்ட இன மத மேலாதிக்க வெறி காரணமாக 1958, 1977, 1983, 1988 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் ஏராளமான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் வாகனங்கள் என்பன எறியூட்டப்பட்டு பேரழிவு ஏற்படுத்தப்பட்டது.

இன்றுவரை இனமத மேலாதிக்கமே சிங்கள அரசியலில் மூலதனமாக விளங்கி வரும் துர்ப்பாக்கியமான நிலைமை இலங்கையின் மீதான சாபக்கேடாக விளங்கி வருகிறது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-07-22 00:14:11 EST

“உலகை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் மிசனரிமாரை நாடுநாடாக பைபிளைக் கையில் கொடுத்து அனுப்பும் போது கூடவே மதுப் போத்தல்களையும், துப்பாக்கி ரவைகளையும் அனுப்பி வைக்கின்றனர். மனிதர்களின் சிந்தனையை மழுங்கடிக்க மதுவும், கொன்று குவிக்க ரவைகளும் பயன்படுத்தப்படுவதன் மூலம் ஆக்கிரமிப்பு உறுதிப்பட்டது”.

ஒல்கொட் அவர்களுடன் இணைந்து பௌத்த மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பணியாற்றிய ஏ.ஈ.புல்லன்ஸ் அவர்கள் 25.03.1899 அன்று கொழும்பில் நடத்திய, “நான் ஏன் பௌத்தனானேன்”, என்ற பிரசித்திபெற்ற உரையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயமாகும். உலகை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய சக்திகள் உள்@ர் மக்களின் பாரம்பரிய தேசிய உணர்வுகளை மழுங்கடித்து அவர்களிடம் அடிமை மனப்பான்மையை உருவாக்க மதத்தையும், ஆயுத வன்முறைகளையும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அவர் அவ்வுரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் 1865ல் பிறந்த கிறிஸ்தவப் பறங்கியரான இவர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோதே பொதுவுடமை, ஜனநாயகம், தாராளவாதம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டார். அவர் 1887ல் நாடு திரும்பிய பின்பு 1888ல் தன்னை ஒரு பௌத்தனாக மதம் மாற்றிக் கொண்டார். அதன் காரணமாக அவர் கல்வி கற்ற சென்ற். தோமஸ் கல்லூரி, கல்லூரியின் கௌரவ மனிதர்கள் பட்டியலிலிருந்து அவரை நீக்கியது.

இவர் ஒரு பௌத்தனாக மாறியது மட்டுமின்றி தொழிலாளர்களின் உரிமைகள், பெண் விடுதலை போன்ற முற்போக்கான விடயங்களிலும் தீவிர அக்கறை காட்டினார். இவர் 1888ல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து மிஷனரிகளின் மதமாற்று முயற்சிகளுக்கெதிரான கருத்துப் போரை முன்னெடுத்தார். 1889ல் புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட பௌத்த ஆங்கிலப் பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்கிறார். இதுவே பின் நாட்களில் மருதானை ஆனந்தாக் கல்லூரியானது.

1890ல் மருதானையில் அப்பாடசாலை ஆனந்தாக் கல்லூரியாகத் திறக்கப்பட்ட போது அதில் கேர்ணல் ஒல்கொட், ஏ.ஈ.புல்ஜென்ஸ், சேர்.பொன் இராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிங்கள பௌத்த மறுமலர்ச்சியில் இனமத பேதமின்றி அனைவரும் பங்கு கொண்டமையின் வெளிப்பாடாகவே அதைப் பார்க்க முடியும். இதையடுத்து புல்ஜென்ஸ் 1890ல் பௌத்த பாடசாலைகளின் முகாமையாளராக நியமிக்கப்படுகிறார்.

1892ல் கிறீஸ்தவ பாடசாலைகளுக்கு ¼ மைல் தூரத்துக்குள்ளே அமைந்துள்ள ஏனைய பாடசாலைகளுக்கான அரச உதவிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாகப் பௌத்த பாடசாலைகள் பாதிக்கப்பட்டன. இத்திட்டத்துக்கெதிராகப் புல்ஜென்ஸ் கடுமையான போராட்டங்களை நடத்தி அத்திட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.

கேர்ணல் ஒல்கொட் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளில் ஏ.ஈ.புல்ஜென்ஸ் இணைந்து சொற்பொழிவுகள், ஊடகம் என்பவற்றின் மூலம் கடுமையாக உழைத்தார்.அது மட்டுமின்றி ஒல்கொட்டால் நிறுவப்பட்ட பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் நாடுபரந்தளவில் அமைக்கப்பட்ட பௌத்த பாடசாலைகளையும் திறம்பட நிர்வாகித்து மிஷனரிகள் கல்வியைப் பயன்படுத்தி மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகளை முறியடித்தார்.

1880ல் ஒல்கொட் பௌத்த அறக்கட்டளையை நிறுவிய போது லெட் பீற்றர் என்ற கிறீஸ்தவ பாதிரியார் ஒல்கொட் புல்ஜென்ஸ் ஆகியோரின் வேலை முறைகளால் கவரப்பட்டு அவர்களுடன் தானும் ஒருவராக இணைந்து கொள்கிறார். 1883ல் பிரம்மஞான சங்கத்தில் உறுப்பினராக மாறிய லெட் பீற்றர் மதமாற்றத்திற்கு எதிராகவும் பௌத்த மத மறுமலர்ச்சிக்காகவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்.

கேர்ணல் ஒல்கொட், ஏ.ஈ.புல்ஜென்ஸ், லெட் பிட்டர் ஆகியோர் ஆக்கபூர்வமான முறையில் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் தேசிய இன மத பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், புனரமைக்கவுமான பாதையாகவும் வெற்றிகரமாகக் கையாண்டு வந்த வேளையில் சில பௌத்த சிங்கள இனவெறியர்களால் அது கத்தோலிக்க மக்களுக்கு எதிரான போராட்டமாகத் திசைதிருப்பப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் தீபத்துறாமய விகாராதிபதி குணானந்த தேரர் ஹிக்கடுவ சுமங்கல தேரர் ஆகியோர் ஆறுமுக நாவலரின் பாதையில் சொற்பொழிவுகள், விவாதங்கள், பிரசுரங்கள் என்பன மூலம் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயமான வழியில் முன்னெடுத்த போதிலும் அது பின்னாட்களில் இன வெறியர்களால் வன்முறைமயப்படுத்தப்பட்டது அதற்கு சிற்சிறி மலல்லகொட போன்றவர்களின் “நீதிக்கான அரசனின் புத்தகம்”, என்ற நூல் பற்றிய பிரசுரங்களும், பௌத்த அரசனின் வருகை பற்றி ஏற்படுத்தப்பட்ட கற்பனைக் கனவுகளுமே காரணமாய் அமைந்தன.

இதுவே 1883ன் கத்தோலிக்க மக்களுக்கெதிரான கொட்டாஞ்சேனைக் கலவரமாக வெடித்தது. இக்கலவரம் காரணமாக நாடு முழுவதும் பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் கொட்டாஞ்சேனை, பலாங்கொட, நீர்கொழும்பு, கண்டி போன்ற பல பிரதேசங்களில் கத்தோலிக்க மக்கள் மீது தாக்குதல்கள் பெருமளவு கட்டவிழ்த்துவிடப்பட்டன. எனினும் ஆங்கில அரசு இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி கலவரத்தை அடக்கியது.

ஒல்கொட் குழுவினர் இத்தகைய வன்முறைகளுடன் உடன்படாத போதிலும் கூட கொட்டாஞ்சேனைக் கலவரம் காரணமாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களைப் பெருமுயற்சியால் காப்பாற்றுகின்றனர். ஒல்கொட் ஆங்கில ஆட்சியாளர்களுடன் கடுமையான வாதங்களை மேற்கொண்டு சிங்கள பௌத்த தரப்பினரை நியாயப்படுத்தினார்.

1883ல் இடம்பெற்ற கொட்டாஞ்சேனைக் கலவரமும் பிரம்மஞான சங்கத்தினரின் நடவடிக்கைகளும் கத்தோலிக்கராகப் பிறந்த டெவிட் என்ற பெயருடன் கல்கிசை சென்ற் தொமஸ் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த தொன் டேவிட்டை கவர்கின்றது. அதன் காரணமாக அவர் 1884ல் கல்வியை இடைநிறுத்தி சென்ற் தோமஸ் கல்லூரியிலிருந்து வெளியேறி பிரம்மஞான சங்கத்தில் இணைந்து கொள்கிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு ஒல்கொட், புல்ஜென்ஸ் லெட் பீட்டர் ஆகியோரின் ஆங்கில உரைகள், கட்டுரைகள் என்பனவற்றைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் பணி வழங்கப்படுகிறது. 1886-1890 வரை லெட் பீட்டர் ஆனந்தாக் கல்லூரியின் அதிபராகப் பதவி வகித்தார். அக்காலப்பகுதியில் ஆனந்தாக் கல்லூரி சிங்கள பௌத்த பேரெழுச்சியின் மையமாகத் திகழ்ந்தது.

சோமபால பிரேமச்சந்திர பெரேரா என்ற கிறீஸ்தவர் ஒருவர் பௌத்தராக மதம்மாறியதுடன் பிரம்மஞான சங்கத்தால் நடத்தப்பட்ட சரசவசந்தேசய என்ற சிங்களப் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வந்தார். அத்துடன் பிரம்மஞான சங்கத்தின் பணிகளில் இணைந்து சேவை செய்தும் வந்தார். 1890ல் அப்பத்திரிகையின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட பெரேரா அதன் முகப்பு வாசகமாக ‘பௌத்தர்களின் குரல்’ என்ற சுலோகத்தை பொறித்தார். அதன் பின்பு அவர் அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்ட பின்பு பத்திரிகை பௌத்த மறுமலர்ச்சி என்ற கட்டத்தைத் தாண்டி மற்றைய இனங்கள் மீதான வெறுப்பை உருவாக்கும் கருவியாக மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.

அப்படியான ஒரு போக்கு ஏற்பட அநகாரிக தர்மபாலாவால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களே காரணமென கருதப்பட்டது. எனினும் இத்தகைய போக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள் பெரேராவை பத்திரிகையை விட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளியது.

1908ல் எச்.எல்.பெரேரா, டீ.பி.ஜெயதிலகவுடன் இணைந்து தினமின என்ற பத்திரிகை ஆரம்பிக்கிறார். இது சிங்கள பௌத்த பிரசாரம் என்ற போர்வையில் ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்பையும் குரோதத்தையும் உருவாக்கும் பணியில் இறங்கியது.

இவ்வாறு சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் திசை வலிந்து மாற்றப்பட்ட நிலையில் ஒல்கொட் வெறுப்புற்று நாட்டைவிட்டு வெளியேறுகிறார். அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை. அதேபோன்று 1990ல் சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் மூலவர்களில் ஒருவரான லெட் பீட்டர் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அது நிரூபிக்கப்படாத பட்சத்திலும் லெட் பீட்டரும் விரக்தியடைந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்நிலையில் அநகாரிக தர்மபாலவின் கை ஓங்குகிறது. பெரேரா நோய் வாய்ப்பட்டு பத்திரிகையை இயக்க முடியாத நிலையில் அதை டீ.ஆர்.விஜயவர்த்தன விலைக்கு வாங்கி நடத்த ஆரம்பிக்கிறார். அதுவே வளர்ச்சியடைந்து தற்சமயம் லேக் கவுஸ் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் பெரேராவின் சிஷ்யரான பியர்தாச சிறிசேன என்பவரால் பௌத்த சிங்கள என்ற பத்திரிகை வெளியிடப்படுகிறது. இது பச்சையாக இனவாத வெறியூட்டும்படி வெளியிடப்படுகிறது. ஏனைய இனங்களின் இன, மத, கலாச்சாரப்பற்றுள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி சிங்களவர்கள் அவை தொடர்பாக அக்கறையற்றவர்கள் எனக் குத்திக்காட்டி ஏனைய இனத்தவர்கள் மீது வன்முறைகளைத் தூண்டும் வகையில் அப்பத்திரிகை அநகாரிக தர்மபாலாவின் கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

மது, மாட்டிறைச்சி என்பவற்றிற்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் மாட்டிறைச்சி உண்பவர்களைக் கேவலமானவர்கள் எனப்பிரசாரம் செய்ததன் மூலம் கிறீஸ்தவர்கள் மீதும் முஸ்லீம்கள் மீதும் வெறுப்பூட்டும் வகையில் இப்பத்திரிகை கருத்துகளை வெளியிட்டு வந்தது. அதேநேரத்தில் கள்ளுத்தவறணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு சாராய வியாபாரிகள் ஆதரவு வழங்கினார்கள் என்பதிலிருந்து இவர்களின் மது ஒழிப்பின் உள்நோக்கத்தை அறிய முடிகிறது.

தேசிய மொழி மதம் கலாச்சாரம் எனபவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் இனமத வெறி இயக்கமாகத் திசைதிருப்பப்பட்டதுடன் அதை ஆரம்பித்த மூலவர்களும் தூக்கியெறியப்பட்டனர்.

இதன் பலன் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரமாக வெடித்து முஸ்லீம்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது மட்டுமன்றி சிங்களவர்களையும் மரண தண்டனை முதற்கொண்டு பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

எப்படி 1883ல் மதமாற்றத்துக்கு எதிரான நியாயமான போராட்டம் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான கலவரமாக மாற்றப்பட்டதோ அவ்வாறே 1915ல் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் வன்முறைக் கலவரமாக மாற்றப்பட்டது. மகாவம்சம் எழுதப்பட்ட கி.பி 5ம் நூற்றாண்டிலிருந்து எந்தவொரு முற்போக்கான விடயங்களும் இனமத வெறியாக மாற்றப்பட்டு பேரழிவாக உருவாக்கப்பட்டமையை வரலாறு முழுக்கக் காணமுடியும். அதன் காரணமாக இன்று வரை இனமதவெறியே சிங்கள அரசியல்வாதிகளின் அரசியல் மூலதனமாக கையாளப்பட்டு வருவதை அவதானிக்க முடியும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-07-29 15:12:30 EST

“மகாவம்சத்தின்படி காலம் காலமாக தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகவே விளங்கிவந்துள்ளனர். அதேபோன்றே முஸ்லீம்களும் பொருளாதார அடிப்படையிலான ஆக்கிரமிப்பாளர்களே. இந்தியர்களும் அவ்வாறானவர்களே. அதேவேளையில் ஆங்கிலேயர் படுமோசமான எதிரிகள்”

ஆங்கில ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வேகமாகவும் வலிமையுடனும் மிஷனரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த மதமாற்று நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் பௌத்த சிங்கள மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் திசைமாற்றி தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிரான இயக்கமாக மாற்றிய கைங்கரியம் அநகாரிக தர்மபால தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இவை ‘பௌத்த சிங்களய’ என்ற பத்திரிகை மூலம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்த அநகாரிக தர்மபாலவவின் வாசகங்களாகும்.

தங்கள் புனிதமான பௌத்த சிங்கள மறுமலர்ச்சி இயக்கம் இனக்குரோத நடவடிக்கைகளாக மாற்றப்பட்ட நிலையில் ஒல்கொட், புல்ஜென்ஸ், லெட்பீட்டர் முதலியோர் விரக்தியுற்று நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பவேவில்லை.

1906ல் ‘பௌத்த சிங்களய’ பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பின்பு ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அப்பத்திரிகை மூலம் மாட்டிறைச்சி உண்பவர்கள் இழிவானவர்களென அநகாரிக தர்மபால மேற்கொண்ட பிரசாரத்தை ஒல்கொட் ஏற்றுக்கொள்ளவில்லை. கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான இத்தகைய பிரசாரங்களை உடன் நிறுத்தும்படி வலியுறுத்தினார். மேலும் புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்பட்ட புத்தகாய இந்துமதபீட தலைவரான சங்கராச்சாரியாரின் கட்டுப்பாட்டிலேயே அப்போது இருந்து வந்தது. அங்கு செல்லும் இந்து மக்களும் புத்தரை இந்து மதக் கடவுள்களுக்கு சமமாக வணங்கி வந்தனர். இந்த நிலையில் 1891ல் புத்தகாயவை பௌத்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அநகாரிக தர்மபாலாவால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்து பௌத்த மத தத்துவங்களை முதன்மைப்படுத்தி இனமத ஐக்கியத்தை உருவாக்கவும், மதங்களுக்கிடையேயான சமரச உணர்வை மேம்படுத்தவும் பிரம்மஞான சங்கத்தை கட்டிவளர்த்த ஒல்கொட் இவ்விரு விடயங்களிலும் அநகாரிக தர்மபாலாவுடன் முரண்பட்டார். அதைக்காரணம் காட்டி ஒல்கொட் துரோகி என மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறே பௌத்த ஆங்கிலப் பாடசாலைகளை திறம்பட நிர்வகித்து அவற்றை பௌத்த கலாச்சார மையங்களாக நிலைப்படுத்திய லெட்பீட்டர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இருவரும் விரக்தியுற்று வெளியேறிய நிலையில் அநகாரிக தர்மபால தன்னை ஒரு சிங்கள மக்களின் வீர நாயகனாக தோற்றப்படுத்தும் வகையில் தமிழர்களையும் முஸ்லீமு;களையும் கேவலமானவர்களெனவும், இழிந்தவர்களெனவும் திட்டுவது மட்டுமின்றி அவர்கள் தமது மத கலாச்சார நடவடிக்கைகளை பின்பற்றுவதைச் சுட்;டிக்காட்டி அவர்கள் இனப்பற்றுமிக்கவர்களெனவும் சிங்களவர்கள் சோம்பேறிகளாக பின்னடைந்தவர்களெனவும் தனது இனத்தையே திட்டி உசுப்பேற்றி வந்தார். அவ்வகையில் ஏனைய இனங்கள் மீது பொறாமையூட்டி அதன் மூலம் வெறுப்பை வளர்ப்பதில் தீவிரம் காட்டினார். இவர் ‘பௌத்த சிங்களய’ பத்திரிகையில் “பிரித்தானியர்களுக்கு ஜேர்மனியர்கள் எப்படியோ சிங்களவர்களுக்கு முஸ்லீம்களும் அப்படியே. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் முஸ்லீம்கள் இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் அந்நியர்களே. பௌத்த சமயம் இல்லாவிட்டால் சிங்களவர்களுக்கு மரணம் மட்டுமே எஞ்சியிருக்கும். முஸ்லீமு;களுக்கு எதிராக முழுத்தேசமுமே எழுச்சி பெற்றுவிட்டது”இ எனப்பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார். மேலும் சிங்கள ஜாதிய என்ற பத்திரிகை மூலம் அவர் முஸ்லீம்களுடனும் கொச்சியர்களுடன் வர்த்தகம் உட்பட சகல கொடுக்கல் வாங்கல்களையும் சிங்களவர்கள் நிறுத்தவேண்டுமேன அறைகூவல் விடுத்தார்.

ஏற்கனவே வடஇந்தியாவிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வர்த்தக நோக்கத்துடன் இங்கு வந்து குடியேறிய முஸ்லீம்களுடனும், 8ம் நூற்றாண்டில் கடல் வணிகம் மூலமாக இங்கு குடியேறிய முஸ்லீம்களுடனும் கரையோர சிங்கள வர்த்தகர்களால் போட்டிபோட முடியவில்லை. அதேபோன்று ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைத்த காரணத்தால் தங்கள் நிலங்களை இழந்த கண்டிய பிரபுக்களுடன் நகர்ப்புற வர்த்தகங்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எனவே அவர்கள் அநகாரிக தர்மபாலவின் முஸ்லீம் எதிர்ப்பு பிரசாரங்களுக்கு பலவிதங்களிலும் ஆதரவு வழங்கி வந்தனர்.

இன்னொருபுறம் ஆப்கானிய வடஇந்திய முஸ்லீம்கள் மேற்கொண்டு வந்த வட்டித்தொழில் காரணமாக அவர்கள் மீது வெறுப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாக ஏற்படுத்த முடிந்தது. அவ்வகையில் 1886ல் இடம்பெற்ற சிங்கள முஸ்லீம் கலவரமும், 1890ல் இடம்பெற்ற களுத்துறை அரச மரக் கலவரமும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தபோதிலும் உரிய நேரத்தில் ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தால் அவை நாடுமுழுக்கப் பரவவில்லை. எனினும் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய போன்ற பத்திரிகைகள் மூலமாகவும் மாட்டுவண்டி ஒன்றில் மாட்டிறைச்சி உண்பதற்கெதிராக, மதுப்பாவனைக்கு எதிராகவும் சுலோகங்கள் தாங்கி நாடெங்கும் ஊர்வலம் சென்றதன் மூலமும் முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் எதிரான பிரசாரங்கள் சிங்கள மக்களை வெறுப்பூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1ம் உலக யுத்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் முஸ்லீம் வியாபாரிகள் பொருட்களை அதிக விலையில் விற்று மேற்கொண்ட கருப்புச்சந்தை வியாபாரம் காரணமாகவும் முஸ்லீம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு மேலும் வலுவடைந்தது. இன்னொருபுறம் முஸ்லீம் வட்டிக்காரர்கள், வட்டிப்பணத்துக்காக சிங்களவர்களின் காணிகளை அபகரித்ததாகவும், சிங்களப் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.

கண்டி கம்பளை ஆகிய பகுதிகளில் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் அமைந்த பிரதேசங்களில் பல பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டன. மகாபராக்கிரமபாகுவால் அமைக்கப்பட்ட 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வறக்காகொட விகாரையின் பெரஹரா செல்லும் பாதையிலும் இரு பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டன. வறக்காகொடவிலிருந்து கம்பளை கங்காதிக்க விகாரை வரையிலான பெரஹர செல்லும் பாதையில் இரு பள்ளி வாசல்களும் ஒரு தேவாலயமும் அமைந்திருந்தன. அதன்படி பள்ளிவாசல், தேவாலயம் என்பன அமைந்துள்ள பகுதிகளில் பெரஹரா செல்லும்போது இருபுறங்களிலும் 100 யார் தூரத்துக்கு அமைதிகாக்க வேண்டும் என உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1907 தொடக்கம் 1911 வரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 1912ல் உடன்படிக்கை ரத்துச் செய்யும்படி தலதா மாளிகையின் நிலாமை வழக்குத் தொடுத்தார். நீதி மன்றம் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து அமைதி காக்கும் தூரத்தை 100 இலிருந்து 50 ஆகக்குறைத்து தீர்ப்பளித்தார். அதற்கு இருதரப்பினரும் உடன்படவில்லை.

1915ம் ஆண்டு மே மாதம் ஊர்வலம் பள்ளிவாசலின் முன்பு அமைதி பேணாது சென்ற போது பள்ளிவாசலில் இருந்து கல்லெறி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரம்பித்த மோதல்கள் மெல்ல மெல்ல வரிவடைந்து நாடெங்கும் பெரும் கலவரமாக வெடித்தது.

கண்டிக் கலவரம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கலவரம் நாடுமுழுவதும் பரவி 38 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 3000 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், குடியிருப்புகள் என்பன அழிக்கப்படுகின்றன. ஆங்கில அரசு, இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்து பல சிங்களத் தலைவர்களை கைது செய்கிறது. சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அநகாரிக தர்மபால வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்.

சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இனங்களுக்கு எதிரான கலவரமாக 1883ல் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அது 1815ல் முஸ்லீம்களுக்கு எதிரான இனவழிப்பு கலவரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று நிலவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் ஏனைய இனங்கள் மீதான மேலாதிக்கம் செலுத்தும் இனவெறிப் போக்கும் அத்தகைய கலவரங்கள் மூலம் கருக்கொண்டு தற்சமயம் விஸ்வரூபம் எடுத்துள்ளதென்பதை அவதானிக்கமுடியும்.

Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரைTags: இலங்கை

எங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 15 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-08-09 13:56:29 EST

“என்னைச் சந்திப்பதற்கு அழைத்துவிட்டு என்னை இங்கு காத்திருக்க வைத்துவிட்டு நீ வயிறு புடைக்க தின்றுவிட்டு தூங்கிவிட்டாய். எனது பல மணி நேரத்தை வீணாக்கி விட்டாய.; நீ கவர்னராக மட்டுமல்ல ஒரு பல சரக்கு கடையை நடத்தக் கூடத் தகுதியில்லாதவன் உன்னோடு பேசத் தயாராக இல்லை.”

அப்போது இலங்கையின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக இருந்த கவர்னர் அநகாரிக தர்மபாலவைச் சந்திப்பதற்காக அழைத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தை விட மூன்று மணித்தியாலங்கள் பிந்தி சந்திக்க சமூகங்கொடுத்த போது அவரிடம் தர்மபால மேற்கண்டவாறு சீறி விழுந்துவிட்டு கவர்னருடன் பேசாமலே வெளியேறிவட்டார்.

இச்சம்பவம் பௌத்த சிங்களய, சிங்கள யாதிக போன்ற பத்திரிகைகளாலும் சிங்கள இனவாதிகளாலும் பிரபலப்படுத்தப்பட்டு சிங்கள இனத்தின் துணிவுமிக்க வீரநாயகனாக சிங்கள மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் பரப்பப்பட்டது. மேலும் 1893ல் அமெரிக்காவின் சிக்காகோவில் இடம்பெற்ற சர்வமதப் பாராளுமன்றத்தில் தேரவாத பௌத்தத்தின் சார்பில் அநகாரிக தர்மபால உரையாற்றினார். சுவாமி விவேகானந்தரின் உலகப் புகழ் பெற்ற இந்து சமயம் பற்றிய உரையும் அம்மகாநாட்டிலேயே இடம்பெற்றது. விவேகானந்தரின் உரையைப் போன்றே அநகாரிக தர்மபாலவின் உரையும் அங்கு வந்திருந்த பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டது. அது மட்டுமின்றி சுவாமி விவேகானந்தருடன் உறவைப் பேணிவர அவருக்கு இம்மாநாடு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.

இந்த இரு விடயங்களினடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில் அநகாரிக தர்மபாலா பற்றிய ஒரு பிரமாண்டமான விம்பம் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே புத்தரின் பஞ்ச சீலக் கொள்கைகளை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு மாட்டிறைச்சி உண்பவர்களுக்கெதிராகவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் முஸ்லீம், கத்தோலிக்க மக்கள் மீது சிங்கள் மக்கள் மத்தியில் கீழ்த்தரமான அபிப்பிராயங்களைப் பரப்பியதன் மூலம் அவர் தன்னை ஒரு பௌத்த மதத்தின் தூய்மையான அர்ப்பணிப்புள்ள தலைமை நாயகனாக காட்டிக்கொண்டார். ஒட்டுமொத்தமாக புத்தர் உயிர்க்கொலைகளையே பாவமாக போதித்தாரே ஒழிய மாட்டிறைச்சி உண்பதை மட்டுமல்ல. ஆனால் அநகாரிக தர்மபால புத்தரின் போதனைகளை ஏனைய இனங்களை கீழ்மைப்படுத்தும் வகையில் பாவிக்கும் நோக்கத்துடன் திரிபு படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார்.

இப்படியாக கவர்னருடன் இடம்பெற்ற சம்பவம் சிக்காக்கோ மாநாட்டு உரை ஏனைய இனங்களைக் கீழ்மைப்படுத்தல் போன்றவை மூலம் இவரொரு அவதார புருசராக கற்பிதம் செய்யப்பட்டார். அதன் காரணமாகவே பௌத்த சிங்கள மறுமலர்ச்சியின் மூலவர்களான ஒல்கொட், புல்ஜென்ஸ், லெட் பீட்டர் போன்றவர்களை ஓரங்கட்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமையை இவரால் ஏற்படுத்த முடிந்தது. எனவே இவரின் தலைமையில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் சிங்கள பௌத்த பேரினவாத ஏனைய இனங்கள் மீதான மேலாதிக்க இயக்கமாக உருமாற்றம் பெற்றது. அநகாரிக தர்மபாலவின் சித்தாந்தம் மூலம் தேசபக்தியென்பது சிங்கள தேசபக்தியாக சுதேசியமென்பது ஏனைய இனங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது போன்ற உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. இதுNவு 1915ல் முஸ்லீம்களுக்கெதிரான பேரழிவுக் கலவரத்தின் முக்கிய தத்துவார்த்த வழிகாட்டலாக விளங்கியது.

முஸ்லீம்களுக்கு கடல் வணிகம் தொடர்பாக ஏனைய வர்த்தக நடவடிக்கை தொடர்பாகவும் பாரம்பரிய அனுபவங்கள் இருந்தமை காரணமாகவும் ஆங்கிலேயருடன் இணைந்து ஏற்றுமதி இறக்கும்தி வர்த்தகத்திலும் கொழும்பு, கண்டி கம்பளை போன்ற நகரங்களின் மொத்த வியாபார நடவடிக்கைகளிலும் செல்வாக்கு செலுத்திவந்தனர். கரையோரச் சிங்கள வர்த்தகர்களாலும் கண்டிய நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் வர்த்தகத்தில் முஸ்லீம்களுடன் போடடியிடமுடியவில்லை.

எனவே அநகாரிக தர்மபாலவின் முஸ்லிம்களுக்கெதிரான பிரசாரங்களும் அவற்றினடிப்படையில் முஸ்லீம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சில வன்முறை நடவடிக்கைகளும் இவ்வர்த்தகர்களின் தேவையினடிப்படையில் விரிவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. இப்படியாக முஸ்லீமகளுக்கெதிரான உணர்வுகள் சூடேற்றப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் வறக்காப்பொல சம்பவம் இடம்பெற்றது. ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்துகொண்டு இருந்தபோது அமைதி பேணப்படாத நிலையில் பெரஹரா மீது பள்ளிவாசலிலிருந்து கல்லெறி மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையில் ஊர்வலத்தில் வந்தவர்கள் பள்ளிவாசலுக்குள் புகுந்து அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன் பள்ளிவாசலையும் சேதப்படுத்தினர். எனினும் ஊர்வலம் திட்டமிட்டபடி கங்காதிக்க விகாரையைச் சென்றடைந்து நிறைவுபெற்றது.

1915 மே 4ம் நாள் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையேயான மோதல்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. கம்பளையில் புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டது. இவற்றின் காரணமாக கண்டி கொழும்பு, கம்பளை, குருநாகல் பதுளை போன்ற பல பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. எந்தநேரம் எது நடக்குமென்று சொல்லமுடியாதளவுக்கு முறுகல் நிலை வலுவடைந்து கொண்டு வந்தது. அதேவேளையில் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய போன்ற பத்திரிகைகள் முஸ்லீம்களுக்கு எதிரான துNவுசப் பிரசாரங்களை தீவிரப்படுத்தினர். இன்னொருபுறம் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டன.

இவற்றில் முக்கியமானது வெசாக் தினத்தன்று தலதா மாளிகையில் பெரஹராவும் முஸ்லீம்களால் தாக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவிலிருந்தும் கொழும்பிலிருந்தும் ஆயுத தாரிகளாக முஸ்லீம்கள் கண்டியை நோக்கி தாக்குதல்களை நடத்த வருவதாகவும் எங்கும் வாந்திகள் பரப்பப்பட்டன. இன்னொருபுறம் தலதாமாளிகையை பாதுகாக்க ஏராளமான சிங்களவர்கள் ஆயுத தாரிகளாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டனர்.

நிலமை மோசமாவதை அவதானித்த பொலிசார் கடுகன்னாவையில் புகையிரதத்தை மறித்து அதில் பயணம் செய்த முஸ்லீம்களை இறக்கி கொழும்புக்கு திருப்பியனுப்பினர். இச்செய்தி கண்டிக்கு பரவிய நிலையில் சிங்களவர்களின் வன்முறைக் கும்பலொன்று புகையிரதப் பாதைவழியே கடுகன்னாவை நோக்கிப் புறப்பட்டது. அக்குழு கடுகன்னாவையை நெருங்கியபோது முஸ்லீம் கடையொன்றின் கூரையிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு அரசாங்க எழுதுவினைஞர் கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரம் வெடிக்கிறது. கண்டி கடுகன்னாவை மாத்தறை பேராதனை என கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முஸ்லீம்களின் கடைகள் கொள்ளையிடப்பட்டதுடன் எரியூட்டப்படுகின்றன. முஸ்லிம்களின் வீடகள் உட்பட சொத்துகள் அழிக்கப்படுகின்றன. ஒரு சிங்களவர் உட்பட ஏழுபேர் கொல்லப்படுகின்றனர்.

அதே வேளையில் தலதா மாளிகையிலிருந்து புறப்பட்ட பெரஹரா, சல்காது என்ற சிங்கள வர்த்தகரின் வீட்டை நெருங்கியபோது அருகிலிருந்த பள்ளிவாசலிலிருந்து போத்தல்கள் கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வழமையாக ஒவ்வொரு வருடமும் அவரின் வீட்டின் முன் பெரஹரா நின்று அவர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்வதுண்டு. அப்போது பள்ளிவாசல் முன்பாக வரும்போது ஆட்டபாட்டங்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படும். அன்று அமைதி பேணப்படாத நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஊர்வலத்தில் வந்தவர்களும் தயாராக வந்த காரண்தினால் இருதரப்பினருக்குமிடையே பெரும் மோதல் வெடித்தது. இம்மோதல் எங்கும் பரவி கண்டியில் மட்டும் 21 பேர் கைது செய்யப்படுகின்றனர்.

அதனையடுத்து கலவரம் கம்பளை, குருணாகல், பதுளை, கொழும்பு என முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பரவுகின்றது. ஏற்கனNவு அநகாரிக தர்மபால பேரினவாத சக்திகளால் ஊட்டப்பட்ட முஸ்லீம்களுக்கெதிரான வெறுப்புணர்வு கொழுந்துவிட்டெரிய ஆரம்பிக்கிறது. முஸ்லீம்கள் தேடித் தேடி வேட்டையாடப்படுகின்றனர்.

கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்திலும் மோதல்கள் பரவவே நிலையம் இழுத்து மூடப்படுகிறது. அந்த நிலையில் பயணிக்க வந்த சிங்களவர்கள் வீதிகளில் இறங்கி கண்ணில் தென்பட்ட முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் உணவகங்கள் என்பன அடித்து நொருக்கப்படுகின்றன.

நாடு பூராகவும் பரவிய இக்கலவரம் காரணமாக முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வு கொண்டவர்கள் ஒரு புறமும் கொள்ளையர்கள் ஒரு புறமுமாக வன்முறைகள் பெருமளவில் பெருகுகின்றன. இவ்வன்முறைகளின் போது 49 முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். 189 முஸ்லீம்கள் படுகாயமடைகின்றனர். 4 முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குற்படுத்தப்படுகின்றனர். முஸ்லீம்களின் 4075 வர்த்தக நிலையங்களும் 250 வீடுகளும் எரித்தும்; அடித்து நொருக்கியும் தாக்கியழிக்கப்படுகின்றன.

இவ்வாறான பேரழிவுகள் இடம்பெற ஆரம்பித்து உச்ச கட்டத்தை அடைந்தபோது ஆங்கில அரசு இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறது. கொழும்பு நகருக்குள் இந்திய பஞ்சாப் படையினர் இறக்கப்படுகின்றனர். கண்டவுடன் சுடும் அதிகாரம் கொண்ட மார்சல் லோ பிரகடனப்படுத்தப்படுகிறது. கலவரங்கள் 3 வாரங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்பும் மார்சல் லோ 100 நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது.

இக்கலவரம் காரணமாக சிங்களவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் 300 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர். 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றன. பெத்திரீஸ் என்ற பிரபல வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். ஏனையோர் தூக்கிலிடப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி பௌத்த மறுமலர்ச்சி என்ற பெயரில் ஏனைய இனங்கள் மீது வெறுப்பை ஊட்டியவர்கள், மது ஒழிப்பில் தீவிரங்காட்டியவர்கள் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய பத்திரிகைகளுடன் தொடர்புபட்ட சிங்களத் தலைவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு சிறையிடப்படுகின்றனர்.

இவர்களுடன் எவ்.ஆர்.சேனாநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.பி.ஜெயதிலக்க, வலிசிங்க, பிரேமச்சந்திரா, ஆதர லீ டயஸ், பியதாச சிறீசேன, அநகாரிக தர்மபாலவின் சகோதரர்கள் இருவர் எனப் பலர் சிறைசெய்யப்படுகின்றனர். அநகாரிக தர்மபால வீட்டுக்காவலில் வைக்கப்படுகின்றார். ஒருவாறு கண்டிக்கலவரம் என அழைக்கப்படும் முஸ்லீமகளுக்கெதிரான வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. எனினும் அநகாரிக தர்மபாலவால் ஊட்டப்பட்ட சிங்களப் பௌத்த மேலாதிக்க போக்கும் ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வும் இன்றுவரை தொடர்ந்து சிங்களவர் மத்தியில் மக்கள் மயப்படுத்தப்பட்டு இலங்கையின் அமைதியைச் சிதைத்து வருவதுடன் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு கலவரங்களுக்கும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளுக்கும் மூலமாக அமைந்துள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

தொடரும் அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்கியது இன மோதல் - 16 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 16 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-08-15 02:25:11 EST

“எங்கள் மாட்சிமை தங்கிய அரசருக்கு என்ன நடந்துவிட்டது? இந்த சட்டசபைக்கு என்ன நடந்துவிட்டது? எங்களைக் காப்பாற்ற உலகில் எவருமில்லையா? இதுவரை சட்டசபைக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் கண்டு மிகவும் மனவேதனையடைகிறேன். செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவிக்குமிவர்களுக்கான ஏதாவது பரிகாரம் காணவேண்டுமென உணர்ந்து கொண்டேன். இராணுவச் சட்டத்தை பயன்படுத்திச் சொல்லமுடியாத அளவு நடந்த சட்டவிரோத அநியாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” 1915ம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனவொடுக்குமுறை வன்முறைகளின் போது ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் உயிர்க்கொலைகள் தொடர்பாகப் பல சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட போதும் பல சிங்களவர்கள் மரண தண்டனை உட்பட பல்வேறு தண்டனைகளுக்குட்படுத்தப்பட்ட போதும் அன்றைய சட்டசபையில் முழு இலங்கையர்களினதும் பிரதிநிதியாகப் பதவி வகித்த சேர் பொன் இராமநாதன் இலங்கைச் சட்ட சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகுமிது.

1915ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான இனவன்முறைகள் இடம்பெற்று பேரழிவுகள் ஏற்பட்ட போது, இராணுவச்சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் மீது கைதுகள் தண்டனைகள் உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது சேர். பொன் இராமநாதன் உடல் நலமின்மை காரணமாக இந்தியாவின் கோடைக்கானலிலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்படியான நிலையில் அவரது சிங்கள நண்பர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை இராமநாதனுக்கு விளக்கி அவரை உடனடியாக இலங்கைக்கு வரும்படி தந்தி அனுப்பினர். அவர் அவசர அவசரமாக இலங்கை வந்து பார்த்தபோது இங்கு நிலவிய சூழல் அவரை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. இராணுவச் சட்டத்தின் கீழான துப்பாக்கிச் சூடுகள், கைதுகள் என்பன மத்தியில் வீதிகள் உட்பட நகரமே வெறிச்சோடிப் போயிருந்தது. சிங்களத் தலைவர்கள் பலர் சிறைசெய்யப்பட்டிருந்தனர். எங்கும் ஒரு அச்சம் கலந்த பயங்கர சூழல் நிலவியது.

இராமநாதன் உடனடியாவே சிறையிலுள்ள சிங்களத் தலைவர்களை சந்தித்ததுடன் தேசாதிபதி, சம்பபந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை சந்தித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். இம்முயற்சிகளின் போது இவர் துப்பாக்கி காட்டப்பட்டு மிரட்டப்பட்ட போதிலும் இவர் அச்சமின்றி தீவிரமாகச் செயற்பட்டார்.

அன்றைய சட்டசபையில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே உறுப்பினராக பொன் இராமநாதன் பதவி வகித்ததால் அவர் தான் ஒரு தமிழர் என்பதை விட இலங்கையர் என்ற வகையில் செயற்படுவதில் பொறுப்புடன் நடந்துகொண்டார்.

1879ம் ஆண்டு அவர் தனது 28ம் வயதில் சட்டசபையின் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினராக ஆங்கில ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார். 1911ம் ஆண்டு இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் இவர் முழு இலங்கையர்களுக்குமான ஒரே பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்ஸ் பெர்னான்டோ என்பவர் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த சிங்களவர் ஆவார். சிங்கள ‘கொவிகம’ சமூகத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினர் ‘கரவ’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமது பிரதிநிதியாக ஏற்கத் தயாராக இல்லை. அதைவிட உயர் சாதி வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொன். இராமநாதனுக்கே தங்கள் ஆதரவை வழங்குவது பொருத்தமானதென முடிவுசெய்திருந்தனர்.

அதுமட்டுமின்றி பொன். இராமநாதன் பல சந்தர்ப்பங்களில் தனது அதிகாரங்களை உயர்ந்த பட்சமாகப் பாவித்து சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் பலவிதமான சேவைகளை ஏற்கனவே செய்து வந்திருந்தார். 1883ல் இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கெதிரான கலவரத்தை அடுத்து 1885ல் வெசாக் தினத்தை அரசாங்க விடுமுறையாக்க வேண்டுமென்று சட்ட சபையில் பிரேரணையை கொண்டு வந்ததுடன் அதை நிறைவேற்றுவதில் தீவிரமான பங்கு வகித்தார். 1886ல் ஒல்கொட்டுடன் இணைந்து பௌத்த அறக்கட்டளையை நிறுவியதுடன் அதற்கு அன்பளிப்பாக 15,000 ரூபா வழங்கியதுடன் அதன் இணைப் பொருளாலர்களில் ஒருவராக செயற்பட்டார். இந்த அறக்கட்டளை பௌத்த ஆங்கிலப்பாடசாலைகளான நாளந்த, ஆனந்தா, விசாக, மகிந்த உட்பட பல கல்லூரிகளை நிறுவுவதிலும் நாடெங்கும் 400 இற்குமேற்பட்ட பௌத்த பாடசாலைகளை நிறுவுவதிலும் அக்கறையுடன் செயற்பட்டது. மேலும் பௌத்த சிங்கள மறுமலர்ச்சியில் காத்திரமான பங்கை வகித்த பிரம்மஞான சங்கத்தை உருவாக்குவதில் இராமநாதன் ஒல்கொட்டுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். பிரம்ம ஞானசங்கத்தின் பிரச்சாரக் கூட்டங்களின் போது சிங்களவர் சிங்களத்தில் பேசுவதை பெருமையாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்திவந்தார். இன்னொருபுறம் அவர் சைவ வேளாள உயர் குடியைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் ஆறுமுக நாவலரின் கொள்கைகளை பினபற்றியவர் என்ற வகையிலும் அநகாரிக தர்மபாலவின் மது ஒழிப்பு, மாட்டிறைச்சி எதிர்ப்பு போன்ற பிரசாரங்களுக்கு வலுவான ஆதரவுகளை வழங்கிவந்தார். இவ் வெதிர்ப்பு நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் எதிரான இனவாத நோக்கம் கொண்டது என்பதை அப்போது இராமநாதன் புரிந்து கொள்ளவில்லை போல் தோன்றுகிறது. அவர் தமிழ் மொழி வளர்ச்சி தமிழ் மக்களின் கல்வி இந்து சமயப் பாதுகாப்பு என்பன தொடர்பாக ஆறுமுக நாவலரின் பாதையில் அக்கறை காட்டிய போதிலும் அரசியல் ரீதியாக அவர் தானொரு இலங்கையர் என்பதையே முதன்மைப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்கையிலே 1815ல் இராணுவச் சட்டம் காரணமாக சிறை செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிப்பதை தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்;. ஆனால் இக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தொடர்பாக கவனம் செலுத்தத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இராணுவச் சட்டத்தின் கீழ் எவ்.ஆர்.சேனாநாயக்க, டீ.எஸ். சேனாநாயக்க, டீ.பி.ஜெயத்திலக்க, டபிள்யு.டீ.இ.சில்வா, டீ.ஆர்.விஜயவர்த்தன, டாக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டி.டி.சில்வா, எச்.அமர சூரிய, எ.எச்.மொலமூரே, மார்ட்டின் பெரேரா, பத்தரமுல்ல தேரர் அநகாரிக தர்ம பாலவின் சகோதரர்களான எட்மன் ஹேவவிதாரன, சி.ஏ.ஹேவவிதாரன உட்பட பல சிங்களப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மரண தண்டனை அல்லது நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்ற நிலையே அப்போது நிலவியது.

இலங்கையின் தேசாதிபதியிடமோ ஏனைய உயர்மட்ட அதிகாரிகளிடமோ கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெற முடியாதென்பதை புரிந்து கொண்ட இராமநாதன் லண்டன் சென்று பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் பேசுவதென முடிவெடுத்தார்.

1915ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் நாள் கொழும்பிலிருந்து கடற்கப்பல் மூலம் லண்டன் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார் அது முதலாவது உலக யுத்தம் நடந்த காலப்பகுதியாதலால் ஜேர்மனிய நீர்மூழ்கிகளால் கப்பல் தாக்கப்படும் ஆபத்தான நிலை நிலவிய போதும் உடல் நலம் குன்றிய நிலையையும் பொருட்படுத்தாது சிறைசெய்யப்பட்டவர்களை மீட்பதற்காக அவர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.

இராமநாதன் இங்கிலாந்தில் குடியேற்றச்செயலாளர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து பல ஆதாரங்களை முன்வைத்து விவாதிட்டார். இராமநாதனின் ஆதாரங்களுடன் கூடிய ஆணித்தரமான விவாதம் லண்டன் அதிகாரிகள் மத்தியில் இலங்கையில் கவர்னர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் நீதி தவறி நடந்துள்ளனர் என நம்பவைத்தது.

தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட பெருமையுடன் பொன். இராமநாதன் 17.02.1916 அன்று அதாவது நான்கு மாதங்களின் பின்பு கொழும்பை வந்தடைந்தார். அவருக்கு சிங்களத் தலைவர்களால் பெரும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் துறைமுகத்தில் கூடியிருந்தனர். அவரைத் துறைமுகத்திலிருந்து வீடு வரை கொண்டு செல்ல தேர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் சில சிங்கள இளைஞர்கள் உற்சாக மிகுதியால் மாட்டுவண்டியில் கொண்டு செல்லப்பட வேண்டிய தேரை தங்கள் தோளில் சுமந்து கௌரவித்தனர்.

இராமநாதனின் இங்கிலாந்து விஜயம் காரணமாகவும் அங்கு அவர் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகள் காரணமாகவும் கலவரம் தொடர்பான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பல சிங்களத்தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி அக்காலத்தில் பதவி வகித்த தேசாதிபதி இராணுவத் தளபதியாகியோர். லண்டனுக்குத் திருப்பியழைக்கப்பட்டனர். இலங்கையின் வரலாற்றில் ஒரு தேசாதிபதியை குற்றச்சாட்டின் பேரில் திருப்பியழைக்கபட்ட சாதனையை நிலைநாட்டியவர் பொன். இராமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன். இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவித்தாரே ஒழிய இனவன்முறைகள் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவோ கொலை கொள்ளை போன்ற கொடிய குற்றங்களிலீடுபட்ட சிங்களவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவோ முயற்சிக்கவில்லை என்பது அவர் மீது சுமத்தப்படும் ஒரு முக்கிய குற்றச்சாட்டாகும். அவர் இலங்கையர்களை காப்பாற்றுவது என்ற நோக்கத்தில் சிங்களவர்கள் பக்கம் நின்று பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை அலட்சியம் செய்துவிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஆனால் 1915 இனக்கலவரத்தின் தத்ததுவார்த்த தலைவராகவும் வழிகாட்டடியாகவும் விளங்கிய அநகாரிக தர்மபால முஸ்லீம்களைப் போலவே தமிழர்களையும் இலக்குவைத்து தனது இனக் குரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு சிங்களவரை தூண்டிவிட்டார் என்பதை இராமநாதன் கணக்கிலெடுக்கத் தவறிவட்டார்.

“சிங்கள பௌத்தர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்; மற்றையவர்களெல்லாம் அந்நியர்கள்; வந்தேறு குடிகள்; அரசியல் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் அனைவரும் சிங்கள பௌத்தர்களாக மாற்றப்பட வேண்டும். துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் தமிழர்களால் மட்டுமே துன்புறுத்தப்பட்டு வந்தது. இப்போது ஐரோப்பியர்களாலும், ஹம்பயாக்களாலும், போராக்களாலும், மரக்கலக் காரர்களாலும் சிங்களவர் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த அந்நியர்கள் சிங்களவர்கள் மூடர்கள் என்பதை உணர்ந்துள்ளனர். தமிழர்களுக்குத் தென்னிந்தியா உண்டு, முஸ்லீம்களுக்கு தென்னிந்தியா கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்கள் உண்டு, சிங்களவர் இத்தீவை விட்டால் வேறெங்கு போக முடியும்”

இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமின்றி தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள மக்கள் மத்தியில் அநகாரிக தர்மபால குழுவினரால் இனக்குரோத வெறி வளர்க்கப்பட்ட போதிலும் கூட இராமநாதன் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து ஆங்கில அதிகாரிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கூட சிங்களத் தலைவர்களை காப்பாற்றியுள்ளார் என்பதை கவனத்திலெடுக்காமல் விடமுடியாது. அதற்காக அன்று அவரைத் தேரில் வைத்து தூக்கிய சிங்களவர்கள் பின்பு அவருக்குத் துரோகமிழைத்து அவரைக் கொழும்பு அரசியலிலிருந்து ஓரங்கட்டினர் என்பது சிங்களத் தலைவர்களின் அடிமனதில் உறைந்திருக்கும் இனமேலாதிக்க சிந்தனையை தெட்டத்தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது.

1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டபோது இராமநாதனின் தமையனார் ஆகிய பொன் அருணாச்சலம் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அப்போது 1921ல் நடைபெற இருந்த தேர்தலில் கொழும்பில் தமிழர்களுக்கு ஒரு ஆசனம் வழங்கப்படுமென உடன்பாடு எட்டப்பட்டு அதில் ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் சிங்களத் தலைவர்கள் சார்பில் கையொப்பமிட்டனர். ஆனால் தேர்தலின் போது அந்த உடன்பாடு மீறப்பட்ட நிலையில் பொன்னம்பலம் சகோதரர்கள் இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழர்களுக்கென தமிழர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினர். அது வரை தானொரு இலங்கையராக பொன் இராமநாதன் வகித்து வந்த பாத்திரத்தை களைந்து விட்டு தமிழராக நிலைபெறும் வகையில் சிங்களத் தலைவர்கள் நிலைமைகளை உருவாக்கினர். எந்தச் சிங்களத் தலைவர்களுக்காக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு லண்டன் சென்று வாதாடி சிங்களத் தலைவர்களை காப்பாற்றினாரோ அவர்களே இராமநாதனைத் தூக்கியெறிந்ததன் மூலம் தங்கள் இனவாத நிலைப்பாட்டை தெளிவாகவே வெளிப்படுத்தினர்.

அன்று தமிழ் முஸ்லீம் மக்களுக்கெதிராக அநகாரிக தர்மபாலவால் ஊட்டப்பட்ட இனவாத சிந்தனையின் வடிவமே இந்த துரோக நடவடிக்கையாகும். அது இன்று வரை சிங்கள அரசியலில் மேலாதிக்கம் வகித்து வருவதையும் சகல இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் மூல வேராக அதுவே நிலை பெற்றுள்ளதையும் வரலாறு தொடர்ந்து உணர்த்திவருகிறது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தொடங்கியது இன மோதல் - 17 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 17 (வரலாற்றுத் தொடர்)

Posted: 2020-08-24 11:00:20 EST

'1915ம் ஆண்டுக் கலவரத்தின் போது பௌத்தர்களான சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. அவர்கள் விடுவிக்கப்படாமலுமிருந்தார்கள். அவர்களில் பேதிரிஸ் உட்பட சிலர் நீதிமன்ற விசாரணையின்றிச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கையில் முதலாவது பிரதமராகப் பின்பு பதவியேற்ற டி.எஸ்.செனநாயக்கா கூடக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர் இயற்கைக் கடன்களை கழிக்கவோ, ஆடைகள் மாற்றவோ அனுமதிக்கப்படவில்லை. எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவரோ, நாடோ எமக்கு உதவிக்கு வரவில்லை. பத்திரிகைகள் மௌனித்திருந்தன. எமக்காகச் சட்டசபையிலும் அதற்கு வெளியேயும் ஒலித்த ஒரே குரல் சேர்.பொன்.இராமநாதனுடையது. அவரது இரண்டாவது கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு சட்ட சபை உறுப்பினர் என்ற வகையில் சுக்கோனியர்கள், நோர்மன்கள், கிரேக்கர்கள், றோமானியர்கள் ஆகியோருக்கு என்ன நடந்ததோ அவற்றையே மேற்கோள் காட்டி சிங்கள இனத்தை தனியொருவராக நின்று இராமநாதன் காப்பாற்றினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் காலையின் உதயத்திலும் நாம் அவரை நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்'.

இது முன்னாள் ஜனாதிபதியும் ஆசியாவின் ஒப்பற்ற இராஜதந்திரி எனப் போற்றப்படுபவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1991 நவம்பர் 30ம் நாள் 'இராமநாதனின் வாழ்வும் பணியும்' என்ற தலைப்பில் வெள்ளவத்தை விவேகானந்தா மண்டபத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

தற்போது காலையிலும் மாலையிலும் இராமநாதன் மக்களைக் காப்பாற்றிய மகோன்னதத்தை நினைவு கூர்வதில்லை என்பது மட்டுமல்ல 1958, 1977, 1983, 1988 ஆகிய காலப்பகுதிகளில் காலையிலும் மாலையிலும் மட்டுமின்றி இரவு பகல் பாராது சிங்களவர் தமிழர்களைக் கொன்றுகுவித்ததும் சொத்துகளைக் கொள்ளையடித்ததும் குடியிருப்புகளையும், வர்த்தக நிலையங்களையும் எரியூட்டியதும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதும் எனப் பல வழிகளிலும் தங்கள் விசித்திரமான நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். சிங்களவர்களைக் காப்பாற்றியமைக்காக காலையிலும் மாலையிலும் நன்றியுணர்வுடன் இராமநாதனை நினைவு கூர வேண்டுமென கூறிய அதே ஜே.ஆர்.ஜெயவர்த்தன, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் எனச் சவால் விட்டு தமிழினத்தின் மீதான இனவழிப்புக்கு ஆணைவழங்கினார். 1983 இல் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த போது அவரது தலைமையில் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த சிலரின் அனுசரணையுடன் நாடு பரந்த இனவழிப்புக் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறைக்குள்ளேயே தமிழ்க் கைதிகள் அரச பாதுகாப்பில் வைத்தே கொல்லப்பட்டதும் நாம் காலையிலும் மாலையிலும் மட்டுமல்ல ஒவ்வொரு விநாடியும் நினைவு கூரவேண்டிய துரோகங்களாகும். காப்பாற்றிய கரங்களையே வெட்டியெறியும் வீரம் சிங்களத் தலைவர்களுக்கு பேரினவாதம், தவமெதுவும் செய்யாமலே உவந்தளித்த அற்புதமான வரமாகும்.

இராமநாதன் அவர்கள் தானொரு இந்து தமிழன் என்ற உணர்வை எப்போதுமே தானொரு இலங்கையன் என்ற உணர்வுக்கு கீழப்படுத்தியே பார்த்து வந்துள்ளார். தான் தமிழராய் மட்டுமின்றி சிங்களவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு இலங்கையராகவே விளங்கினார். ஆனால் சிங்களத் தலைவர்களோ சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இலங்கையர்கள் எனவும் ஏனையோர் தங்களுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளை கவனத்திலெடுக்காமல் சிங்களவர்களை 1915ல் காப்பாற்றிய இராமநாதனுக்கு தங்கள் நன்றியுணர்வை 1921ல் அவரைப் புறமொதுக்கியதன் மூலம் வெளிக்காட்டினர்.

சிங்களத் தலைவர்களை விடுவிக்க லண்டன் சென்று வாதாடி அதில் வெற்றி பெற்று வந்தபோது துறைமுகத்திலிருந்து அவரைத் வீடு வரை தேரிலேற்றி சுமந்தவர்கள் 1921ல் கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு வழங்கப்படுமென மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை உதறிவிட்டு இராமநாதனை இலங்கை அரசியலிலிருந்து தூக்கி யாழ்ப்பாண அரசியலுக்குள் வீசியெறிந்தார்கள். அந்த நடவடிக்கையின் மூலம் இராமநாதன் இலங்கையின் பிரதிநிதி அல்ல அவர் தமிழர்களுக்கு மட்டுமே பிரதிநிதி என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்துவிட்டனர்.

அநகாரிக தர்மபாலாவின் மதுவிலக்கு மாட்டிறைச்சி உண்பதற்கான எதிர்ப்பு ஆகிய நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளில் பல சிங்களத் தலைவர்கள் தீவிரமாகப் பங்குகொண்டனர். இப்போராட்டமானது ஆங்கில ஆட்சிக்கு எதிரான ஒரு கலவரமாகவே ஆங்கில அரச தரப்பினரால் பார்க்கப்பட்டது. எனவே முஸ்லீம்களை இலக்கு வைத்து அவர்களின் வர்த்தக ஆதிக்கத்தை கைப்பற்றும் நோக்குடன் இந்த இனவழிப்புக் கலவரம் கொடூரமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டபோதிலும் இதனால் ஏற்றபட்ட இரத்தக்களரியும் அமைதியின்மையும் காரணமாக இது ஆங்கில ஆட்சிக்கு எதிரான கலவரமாகவே பார்க்கப்பட்டது. அதன் காரணமாக கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. அநகாரிக தர்மபால உடனடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் ஆறு ஆண்டுகள் கல்கத்தாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்படியான நிலையிலேயே மரண தண்டனை அல்லது நீண்ட கால சிறை போன்ற கடும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படவிருந்த சிங்களத் தலைவர்களை இங்குள்ள சட்டசபையில் மட்டுமின்றி இங்கிலாந்து வரை சென்று உரிய அதிகாரிகளுடன் வாதாடி விடுவித்தார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முகமாக நியமிக்கப்பட்ட டொனமூர் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளின் போது இராமநாதனின் தமையனார் ஆகிய சேர்.பொன்.அருணாசலம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட வேண்டுமென ஆணித்தரமாக வாதிட்டார்.

இக்காலப்பகுதியில் 1919ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சேர்.பொன்னம்பலம் அருணாசலம் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது தமிழர்கள் தரப்புக்கும் சிங்களத் தலைவர்களுக்குமிடையே மேல் மகாணத்தில் தமிழர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டுமென உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ், எஸ்.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் கையொப்பமிட்டனர்.

எனவே இவ்வுடன்படிக்கையை அடுத்து டொனமூர் ஆணைக்குழுவினர் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் கட்டாயப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை அவசியமற்றதெனக் கூறி நிராகரித்துவிட்டனர்.

ஆனால் 1921ல் சட்டசபைத் தேர்தல் இடம்பெற்றபோது சிங்களத் தலைவர்கள் இந்த உடன்படிக்கையைத் தூக்கியெறிந்து விட்டு தமிழர் ஒருவருக்கு மேல் மாகாணத்தில் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்துவிட்டனர். இத்தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் சட்டசபையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு சரிசமனான ஆசனங்களே இருந்தன. ஆனால் புதிய அரசியல் சீர் திருத்தத்துக்கு அமைய இடம்பெற்ற தேர்தலில் சிங்களவர்களுக்கு 13 ஆசனங்களும் தமிழர்களுக்கு 3 ஆசனங்களும் கிடைத்தன. மேல் மகாணத்தில் தமிழர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு ஆசனமும் மறுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சேர்.பொன்.அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிலிருந்தும் தான் வகித்த தலைமைப் பதவியிலிருந்தும் வெளியேறி 1921ல் தமிழர் மகாசபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர்.

தென்னிலங்கையில் சேர்.பொன்.இராமநாதன் ஏமாற்றப்பட்டது இதுதான் முதற் தடவையல்ல. ஏற்கனவே ஒல்கொட், புல்ஜென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளை நிறுவுவதற்கான நிதியத்துக்கு இராமநாதன் 15,000 ரூபா அன்பளிப்பாக வழங்கியதுடன் அந்த நிதியத்தின் இணைப்பொருளாளராகவும் செயற்பட்டார். அத்துடன் பௌத்த மத மறுமலர்ச்சிக்கு பங்காற்றவென அமைக்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தில் தானும் பங்கு கொண்டு ஒல்கொட்டுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். அதே வேளையில் இந்நிதியத்தின் மூலம் கொழும்பு, காலி, குருணாகல் ஆகிய பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளும், பாடசாலைகளும் நிறுவப்பட்டனவே ஒழிய இந்து ஆங்கிலப்பாடசாலைகள் நிறுவுவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. எனவே இராமநாதன் தான் வழங்கிய நிதியில் ரூபா ஐயாயிரத்தை மீளப் பெற்று கொழும்பு இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகிய இந்து ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவினார். ஏற்கனவே யாழ்ப்பாண இந்துக் கல்லூரி உட்பட வட பகுதி முழுவதுமே இந்து ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டு அவை சிறப்பான முறையில் ஆறுமுக நாவலரால் மிசனரிகள் நடத்திய கல்லூரிகளுக்கு நிகராக இந்துப்பாடசாலைகளாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்படியாக அவர் 1885ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களத்தரப்பினரால் ஏமாற்றப்பட்ட போதிலும் 1915ல் முஸ்லீம்கள் மீதான இனவழிப்புக் கலவரத்தில் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிக்க கடுமையாகப் பாடுபட்டார். அதே வேளையில் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு மாட்டிறைச்சி உண்பதற்கு எதிர்ப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அநகாரிக தர்மபாலவின் இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கினார்.

யாழ்ப்பாண மேட்டுக்குடி இந்து வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இராமநாதன் மாட்டிறைச்சி உண்பதையும் மது அருந்துவதையும் பாவமாகவே கருதும் ஒருவராக விளங்கினார். நாவலரின் போதனைகளும் இக்கொள்கைகளை வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அநகாரிக தர்மபாலவின் இயக்கத்துக்கு இராமநாதன் ஆதரவு வழங்கியதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. ஆனால் அநகாரிக தர்மபால இந்த இயக்கம் முஸ்லீம்களையும் கத்தோலிக்கர்களையும். இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டது என்பதை இராமநாதன் உணர்ந்து கொள்ளவில்லை போலுள்ளது.

ஏற்கனவே நகர்ப்புற கரையோர வர்த்தகத்தில் மேலாதிக்கம் வகித்து வந்த முஸ்லீம்களின் பலத்தை முறியடித்து அதை சிங்கள வர்த்தகர்கள் கைப்பற்றுவதற்கான ஒரு புறச் சூழலை உருவாக்குவதற்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு சிங்கள பௌத்த மேலாதிக்க இனவெறி சித்தாந்தத்தை மூலமாக் கொண்டு இவ்வியக்கம் முன்னெடுக்கப்பட்டது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கவில்லை.

1921ல் அநகாரிக தர்மபால கல்கத்தாவில் தடுப்பிலிருந்து விடுபட்டு பௌத்த துறவியாக மாறி அங்கேயே பௌத்த காயாவில் தங்கிவிட்டபோதிலும் அவரின் சிங்கள பௌத்த மேலாதிக்கவெறி சிங்களத் தலைவர்களிடம் அழுத்தமாகப் பதிந்து விட்டது. அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு இன்று மிக உயர்ந்த பட்சமாகக் கூர்மைப்படுத்தப்பட்ட வடிவத்தில் ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குமுறையாக இன்றும் கூட நிலைபெற்றிருப்பதைக் காணமுடியும். எனவே தேரிலேற்றி தாங்கள் தோளில் சுமந்த இராமநாதனையே சிங்களத் தலைவர்கள் இலங்கை அரசியலிலிருந்து அகற்றி யாழ்;ப்பாண அரசியலுக்குள் வீசிய காரணத்தினால் சேர்.பொன். அருணாசலத்தால் கொழும்பு மைய அரசியலை விட்டு நீங்கி யாழ்ப்பாண மகாஜன சபையை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் முஸ்லீம்கள் மீது ஊட்டி வளர்க்கப்பட்ட இனக்குரோத உணர்வு காலத்துக்கு காலம் வலுப்படுத்தப்பட்டு அநகாரிக தர்மபாலவால் சிங்கள பௌத்த இனமேலாதிக்க சித்தாந்தமாக உருவாக்கப்பட்டது. அதன்படி இலங்கை சிங்களவர்களுக்கே மட்டும் சொந்தமான நாடு எனவும் ஏனைய இனங்கள் அவர்களுக்கு கீழ்ப்பட்டே இங்கு வாழவேண்டுமென்ற எண்ணம் சிங்கள மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை தொடரும் இனமோதல்களின் அடிப்படையில் இங்குதான் கருக்கொண்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.