Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா? தொடரும் நெருக்கடிக்கு அதிரடி முடிவு வருமா?

Featured Replies

கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா? தொடரும் நெருக்கடிக்கு அதிரடி முடிவு வருமா?

off-the-records.png

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது.

அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின் அணுகுமுறை என்ன? என்பது தொடர்பில் ரெலோவின் உயர் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேச்சாளர் யாரும் இல்லை. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், எம்.ஏ.சுமந்திரன் தான் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவாதாக அறிவித்துவிட்டுத்தான், எஸ்.சிறிதரனுடைய பெயரைப் பேச்சாளர் பதவிக்குப் பிரேரித்தார். அப்போது செல்வம் அடைக்கலநாதனின் பெயரை நாம் பிரேரித்தோம். ஆனால், முரண்பாடு மேலோங்கியதால் தெரிவு இடம்பெறவில்லை. அதனால், பேச்சாளர் பதவி இப்போது வெற்றிடமாகவே உள்ளது. புதிய பேச்சாளர் தெரிவு செய்யப்படும் வரையில் அந்தப் பதவி வெற்றிடமாகவே இருக்கும். அதேபோல கூட்டமைப்புக்கு இப்போது கொரடாவும் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Suma-sri.png

சிறீதரன் – சுமந்திரன்

கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை காலை கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடியது. அதில் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில், அன்று மாலை 7.00 மணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடியது. அதன்போதும் பேச்சாளர் பதவி தொடர்பாக ஆராயப்பட்டது. ஆனால், அங்கும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

அங்கு கருத்து தெரிவித்த ஜனா கருணாகரம் முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். “இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் – கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனை பேச்சாளராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவில் – கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவை பாராளுமன்றக்குழு மாற்றி அமைக்கும் வழமை இருப்பதில்லை. சம்பந்தன் ஐயா தலைவராக இருப்பார் என அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அவரையே பாராளுமன்றக் குழு தலைவராக நியமித்துள்ளோம். அதேபோன்ற நடைமுறைதான் பேச்சாளர் விடயத்திலும் கையாளப்பட்டிருக்க வேண்டும்” எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இந்த நிலையில் பேச்சாளர் பதவி குறித்து ஆராயப்பட்டபோது சிறிதரனின் பெயரை சுமந்திரன் அறிவித்தது தவறு” என்பதைச் சுட்டிக்காட்டிய ரெலோவின் முக்கியஸ்த்தர், “செல்வம்தான் பேச்சாளராக இருக்க வேண்டும் என சம்பந்தன் அறிவித்த போது அதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்” தமிழரசுக் கட்சிக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

செல்வம்தான் பேச்சாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சம்பந்தன் வலியுறுத்தினார். ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் உறுதியாகக் கூறியிருந்தார். அதனைவிட மற்றொரு விடயத்தையும் சம்பந்தன் சொல்லியிருக்கின்றார். “இந்த விடயத்தை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சி நாகரீகம் அல்ல” என உறுதியாகக் கூறியதாகவும் தெரிகின்றது. அந்த நிலையில்தான் பேச்சாளர் தெரிவை காலவரையறையின்றி சம்பந்தன் ஒத்திவைத்திருக்கின்றார். ஆனால், “வாக்களிப்பு என வந்தால் எனது வாக்கை செல்வம் அடைக்கலநாதனுக்கே அளிப்பேன்” என சம்பந்தன் கூறியதாகவும் தெரிவிக்கப்படகின்றது.

sampanthan-010.png

சம்பந்தன்

“கூட்டமைப்பின் அதி உயர் பீடமாக இருப்பது ஒருங்கிணைப்புக் குழுதான். அங்கு எடுக்கப்படும் முடிவைத்தான் பாராளுமன்றக் குழு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் ஒருங்கிணைப்புக் குழுவில்தான் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்” என ரெலோ வலியுறுத்தியிருக்கின்றது.

ஆனால், தமிழரசுக் கட்சியினர் – முக்கியமாக சுமந்திரன், சிறிதரன் தரப்பினர் பேச்சாளர் பதவியை ரெலோவிற்குக் கொடுப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பது கூட்டமைப்புக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில் புதிய தெரிவு இடம்பெறும்வரையில் சுமந்திரன்தான் பேச்சாளராக இருப்பார் என்ற கருத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரெலோவின் உயர் பீட உறுப்பினர் பின்வருமாறு கூறினார்;

“இந்தப் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வைக்காண்பதற்கு இப்போதும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். சுமந்திரன் பதவி விலகுவாத அறிவித்தே சிறிதரனின் பெயரை முன்மொழிந்திருந்தார். அதனால் பேச்சாளர் பதவி இப்போது வெற்றிடமாகவே உள்ளது. தான்தான் பேச்சாளர் என சுமந்திரன் கூறினால், கூட்டமைப்பின் தலைவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழு எடுத்த முடிவுக்கு அமைய செல்வம் அடைக்கலநாதனே கூட்டமைப்பின் பேச்சாளர் என அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படும்” என குறிப்பிட்ட ரெலோ பிரமுகர் குறிப்பிட்டார்.

selvam-adaikalanathan-720.png

செல்வம் அடைக்கலநாதன்

“அதேவேளையில் பாராளுமன்றக்குழுவில் வாக்களிப்பு என்ற நிலை ஏற்பட்டால், செல்வத்துக்கு வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டை சம்பந்தன் உறுதியாகக் கூறிவிட்டார். அதேவேளையில் தேசியப் பட்டியில் மூலமாகத் தெரிவான கலையரசன் வாக்களிப்பில் பங்கேற்ற முடியாது. அதனால், அவ்வாறான நிலை ஏற்பட்டாலும் சுமந்திரன் – சிறிதரன் தரப்புக்கு நெருக்கடிதான் ஏற்படும்” என ரெலோ பிரமுகர் குறிப்பிடுகின்றார்.

அதனால்தான், “2018 இல் பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாமல் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் வலுக்கட்டாயமாக – அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டதைப்போலத்தான் இப்போது சுமந்திரன் – சிறிதரன் தரப்பு பேச்சாளர் பதவியைக் கைப்பற்ற முற்படுகின்றது” எனவும் ரெலோ பிரமுகர் குற்றஞ்சாட்டுகின்றார்.

“பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் சுமந்திரன் – சிறிதரன் தரப்பு விடாப்பிடியாக நின்றால், புளொட் அமைப்புடன் இணைந்து இது தொடர்பில் முடிவு ஒன்றை எடுத்து, கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம்”  எனவும் குறிப்பிடுகின்றார் குறிப்பிட்ட ரெலோ பிரமுகர். இரு தரப்பினருமே விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

கூட்டமைப்புக்குள் பேச்சாளர் பதவியை மையப்படுத்திய இந்தப் பலப்பரீட்சை கடுமையாகியிருக்கின்றது. சம்பந்தனின் முடிவுக்குக் கட்டுப்படும் நிலையில் சுமந்திரன் – சிறீதரன் தரப்பு இல்லை என்பதும் தெரிகின்றது. இதற்கு என்ன முடிவு வரப்போகின்றது?

https://thinakkural.lk/article/78465

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201011-103425.jpg

பேசாமல் தமிழரசு கட்சியின் பெயரை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்டு மாற்ற கூடாது .? அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சாளர் பதவியில் தொடரும் மோதல்-செல்வத்துக்கான வாய்ப்பு எப்படியுள்ளது?

 
1-35-696x464.jpg
 24 Views

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு வரப்போவது சிவஞானம் சிறீதரனாக? அல்லது செல்வம் அடைக்கலநாதனா?

தமிழ் அரசியல் பரப்பில் கடந்தவார ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் காணப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் சென்றுள்ள நிலையிலும், கூட்டமைப்பின் இரண்டு முக்கியமான பதவிகள் இதுவரையில் வெற்றிடமாகத்தான் இருக்கின்றது.

ஒன்று – கூட்டமைப்பின் கொரடா யார் என்பது.

இரண்டு – கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பது.

கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இரா.சம்பந்தன் தெரிவாகியிருக்கின்றார். பேச்சாளர் தெரிவில் கடும் பலப்பரீட்சை உருவாகியிருப்பதால், கொரடா பதவிக்குரியவரையும் தெரிவு செய்யப்பட முடியாத நிலை தொடர்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்கொண்ட படுதோல்விக்கு அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்தான் பிரதான காரணம் என்ற குற்றச்சாட்டு பங்காளிக் கட்சிகளால் மட்டுமன்றி, அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியாலும் முன்வைக்கப்பட்டது.

காணாமல்போனோர் விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்தை ஏற்க முடியாது – சிறீதரன் -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

2015 ஆம் ஆண்டிலிருந்தே பேச்சாளர் பதவி என்பது கூட்டமைப்புக்குள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அதற்கு முன்னர் பேச்சாளராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் 2015 தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த நிலையில்தான் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளராகத் தெரிவாகியிருந்தார். ஆனால், ஒரு பேச்சாளர் என்பதற்கு மேலாக அவரே பெரும்பாலான முடிவுகளை எடுப்பவராக மாற்றடைந்ததுதான் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கும் காரணமாக இருந்தது. கூட்டமைப்பின் தோல்விக்கும் அதுதான் காரணம் என்ற கருத்து பல்வேறு மட்டங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில், பேச்சாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கூட்டமைப்புக்குள் வலுவடைந்திருந்தது.

பூகம்பமாகிய நாடாளுமன்றக்குழு

கடந்த புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – பொதுத் தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்டதால், இந்தத் தெரிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முதலாவது காரணம்.

இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் தலைவர், கொரடா, பேச்சாளர் ஆகிய பதவிகளுக்கு யார் யாரைத் தெரிவு செய்வது என்பதில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. அதன்படி தலைவராக சம்பந்தன், கொரடாவாக சித்தார்த்தன், பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஒருங்கிணைப்புக்குழு எடுத்த அந்த முடிவுக்கு பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை மட்டுமே இருந்தது. புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் தலைவர் பதவிக்கான அங்கீகாரத்தை சம்பந்தனுக்கு பாராளுமன்றக் குழு ஏகமனதாக வழங்கியது. பேச்சாளர் விவகாரம் எடுக்கப்பட்ட போது, தான் அந்தப் பதவியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்த சுமந்திரன், அந்தப் பதவிக்கு சிறிதரனின் பெயரைப் பிரேரித்த போதுததான் பிரச்சினை உருவாகியது.

கடுமையாக எதிர்த்த ரெலோ

இதற்குப் போட்டியாக செல்வம் அடைக்கலநாதனின் பெயர் பரேரிக்கப்பட்டது. “ஒருங்கிணைப்புக் குழுதான் கூட்டமைப்பின் அதி உயர் பீடம், முக்கியமான முடிவுகள் அதில்தான் எடுக்கப்பட வேண்டும். செல்வத்தை பேச்சாளராக நியமிப்பதற்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்கனவே முடிவெடுத்து விட்டது. அந்த முடிவை மாற்ற முடியாது” என்பதில் ரெலோ எம்.பி.க்கள் உறுதியாக நின்றார்கள். சம்பந்தனும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டார்.

இருந்த போதிலும், சுமந்திரனும், சிறிதரனும் தமது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கத் தயாரகவில்லை. இதனால் உருவாகிய வாக்குவாத் கடுமையாகியது. இரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவரத் தயாராகவிருக்கவில்லை. வாக்கெடுப்புக்கு விடலாமா? என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விட்டால், தமது ஆதரவு செல்வத்துக்கு என சம்பந்தனும் சொல்லிவிட்டார். அதேவேளையில், தேசியப்பட்டியல் மூலம் தெரிவான கலையரசன் வாக்களிக்க முடியாது என்பதையும் ரெலோ தரப்பு கூறிவிட்டது.

இந்த நிலையில் சிறிதரனுக்கு ஆதரவாக 4 வாக்குளும், செல்வத்துக்கு 5 வாக்குகளும் கிடைத்திருக்கும். சம்பந்தனும், கலையரசனும் தமக்கு வாக்களிப்பார்கள் என சுமந்திரன் – சிறிதரன் எதிர்பார்த்தார்கள். ஆனால், இதனை வாக்கெடுப்புக்கு விட சம்பந்தன் தயாராகவிருக்கவில்லை. அது கூட்டமைப்பின் மரபல்ல என அவர் கூறியிருக்கின்றார். அதேவேளையில், தொடர்ந்தும் இடம்பெற்ற குழப்பத்தினால் பேச்சாளர் தெரிவை காலவரையறையின்றி ஒத்திவைத்திருக்கின்றார் சம்பந்தன்.

செல்வம் மீது ஏன் பாய்ச்சல்?

பொதுத் தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் சுமந்திரன் மீது செல்வம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுதான் தற்போதைய முரண்பாடுகளுக்குக் காரணம் எனக் கூறப்படுவதை ரெலோ மறுக்கின்றது. கடந்த காலங்களில் ரெலோவைப் பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சி முன்னெடுத்த போது ரெலோ பொறுமையாக இருந்தது.

குறிப்பாக அம்பாறை  மாவட்ட எம்.பி.யாக இருந்த கோடீஸ்வரன் ரெலோவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், அவர் கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இதற்கு எதிராக ரெலோ கடுமையான நிலைப்பாட்டை அறிவித்த போதிலும், பின்னர் மௌனமாகி விட்டது.

இவ்வாறு பல சந்தப்பங்களில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தை ரெலோ ஏற்றுக்கொண்டது. இது ரெலோவுக்குள் கூட முரண்பாடுகளை ஏற்படுத்தியது. முக்கியமாக ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் ரெலோவிலிருந்து பிரிந்துபோக இந்த நிலைமைதான் காரணமாக இருந்தது. இதுபோல ரெலோவுக்குள் எழுக்கூடிய உள்ளக முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமானால், பேச்சாளர் பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நிலை ரெலோவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ரெலோவின் முடிவு என்ன?

பேச்சாளர் பதவியைத் தரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி விடாப்பிடியாக இருந்தால், ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற கேள்வி முக்கியமாக இருக்கின்றது.

“பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் சுமந்திரன் – சிறிதரன் தரப்பு விடாப்பிடியாக நின்றால், புளொட் அமைப்புடன் இணைந்து இது தொடர்பில் முடிவு ஒன்றை எடுத்து, கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம்”  என ரெலோவின் முக்கியஸ்த்தர் ஒருவர் குறிப்பிடுகின்றார். “இது தொடர்பில் ரெலோவின் தலைமைத்துவக் குழு கூடி இறுதி முடிவை எடுக்கும். புளொட் அமைப்புடனும் இது குறித்துப் பேசுவோம். அதனையடுத்து கூட்டமைப்பின் பேச்சாளர் என செல்வம் அடைக்கலநாதனை நாம் அறிவிப்போம்” என ரெலோவின் முக்கியஸ்தர் குறிப்பிடுகின்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கனதியான ஒன்றாக மாற்றமடைந்திருக்கும் நிலையில், அனைவரது கவனமும் இதில் குவிந்திருக்கின்றது. குறிப்பாக, ராஜபக்‌ஷக்களின் அரசாங்கம் பலமான ஒன்றாக – இனவாத அடிப்படையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. ஜெனீவாவில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரப்போகின்றது. இந்தப் பின்னணியில்தான் கூட்டமைப்பின் பேச்சாளருக்குரிய கனதி அதிகமானதாகவே இருக்கின்றது. அதற்கான போட்டி கடுமையாக இருப்பதற்கும் இதுதான் காரணம்!

– அகிலன் –

https://www.ilakku.org/பேச்சாளர்-பதவியில்-தொடரு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.