Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை தவறியது அரசு-தயான் ஜயதிலக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளியுறவுக் கொள்கையில் நடுநிலை தவறியது அரசு-தயான் ஜயதிலக

dayan-jayatilleka.jpg?fit=264%2C300

வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறியது அரசு சுட்டிக்காட்டுகிறார் தயான் ஜயதிலக

கொழும்பு ஒக்.12 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அணிசேராக் கொள் கையிலிருந்து விலகியிருப்பது கவலை அளிப்பதோடு அண் மைய காலத்தில் வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலை தவறிவிட்டது என்று ஐ.நாவுக் கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் பிரபல அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.

உலக வல்லரசுகளான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் வலுத்துள்ள நிலையிலும் பிராந்திய தலைமை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள சூழலிலும்  சீன உயர்மட்டக்குழு ஜனாதிபதி பிரதமருடன் சந்திப்புக்களை நடத்தியிருப்பதானது டில்லிக்கும் வாஷிங்டனுக்கும் மாறுபட்ட தோற்றப்பாட் டையே பிரதிபலிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப் லிஸ் மற்றும் சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் லூ சொங் ஆகியோர் பகிரங்கமாக பரஸ்பர கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். 

அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாகச் சாடி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு தருணத்தில் சீனாவின் உயர் மட்டக்குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினரும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இவ்விதமான நிகழ்வுகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் பூகோள அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“உலகின் வல்லரசு நாடு களான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பனிப் போர் வலுத்துள்ளது.

அரசியல் பொருளாதார விடயங்களில் இருநாடுகளும் பகிரங்கமாகவே பொதுவெளியில் மோத ஆரம் பித்துள்ளன.

அதேபோன்று தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமை நாடாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன

இதனைவிடவும் இலங்கையில் உள்ள அமெரிக்க  சீனத் தூதரகங்களின் அதிகாரிகள் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலைமையில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினர் சர்வதேச விவகாரங் களுக்கான குழுவின் காரியாலய பணிப்பாளருமான யெங் ஜியேஸி தலைமையிலான உயர் மட்டக்குழுவொன்று இலங்கைக்கு வந்து ஜனாதிபதி  பிரதமர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துள்ளது.

தற்போதைய தருணத்தில் இவ்வாறானதொரு உயர்மட்ட அதிகாரி தலைமையிலான சீனக் குழு இலங்கைக்கு வந்திருக்க வேண்டியதில்லை என்று நான் கூற விரும்பவில்லை.

ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் வெளிநாடுகளுடனான இரு தரப்பு உறவுகளைச் சரியாக கையாண்டிருக்குமாயின் எதிர் மறையான பிரதிபலிப்புக் களைப் பெற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக் காது.

அமெரிக்காவுடனும் இந்தி யாவுடனும் சீனா முரண்பட்டுக் கொண்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கா இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பல்வேறு முக்கிய விடயங்களில் செயற்படுகின்றன.

இவ்வாறான நிலையில் சீனக்குழுவின் வருகை அந்த நாடுகளுக்கு சந்தேகத்தை இயல்பாகவே ஏற்படுத்தும் என்பதே யதார்த்தமாகும்.

ஆனாலும் இக்கட்டான நிலைமையொன்று ஏற்பாடா திருக்க வேண்டுமாயின் இலங்கை ஏனைய நாடுகளுட னான உறவை மத்தியஸ்தத்து டன் பேணியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்விதமான நிலைமையொன்று காணப் படாதிருக்கின்றமை தான் கவலை அளிப்பதாக உள்ளது.

ஆகவே இலங்கை அரசாங் கம் இந்தியாவுக்கு எதிரான நடைமுறையொன்றை கடைப் பிடிக்க விரும்புகின்றதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

மேலும் உள்நாட்டில் வல்ல ரசு நாடுகள் இரண்டினதும் தூதுவர்களும் அதிகாரிகளும் பரஸ்பரம் மோதிக்கொள்கின் றார்கள். அதுபற்றி அரசாங்கம் கவனம் கொண்டதாக இல்லை.

இவ்வாறானதொரு சூழலில் சீன உயர்மட்டக்குழு இலங்கை யின் நலன்களுக்காகவே உத்தி யோக பூர்வமான விஜயங்களை மேற்கொண்டாலும் அது டில்லிக்கும் வோஷிங்டனுக்கும் மாறுபட்ட தோற்றப்பாட் டையே பிரதிபலிக்கும்.

இந்த நிலைமைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் வெளியுறவுக் கொள்கையில் நடுவுநிலைமை தவறியமையே அடிப்படைக் காரணமாகின்றது.

வல்லரசு நாடுகளுடனும் பிராந்திய தலைமை நாட்டுடனும் சமாந் தர நடுவுநிலை இரு தரப்பு உறவைப் பேணுவதில் அரசாங்கம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது’’ -என்றார்.

நன்றி ஈழநாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.