Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன் 

துன்பமும் துயரமும் நிறைந்த ஒரு மக்களின் வாழ்வை புரிந்துகொள்ளாதவன் ஒரு கலைஞனாக இருக்க முடியுமா என்ற கோள்வி எழுவது நியாயமே. ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தில் வாழும் ஒரு சிறு பான்மை இனத் தாய்மார்கள் தொலைந்துபோன தம் பிள்ளைகளை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஓர் தாயின் அவலத்தை புரிந்து கொள்ளாதவன் மானிடத்தின் மதிப்பை உணராதவனாக ஒரு கலைஞனாக இருக்க முடியுமா.கலைஞன் என்பவன் யார் ஒரு மானிடத்தின் விடுதலையை பேசுபவன் எழுதுபவன் படிப்பவன்.அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பவன்.அந்த மக்களால் வாழ வைக்கப்படுபவன்.ஒரு அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை உருவாக்க கூடியவன்.

ஒரு சமூக வாழ்வின் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வே கலை வாழ்வு.கலாச்சாரம்,அரசியல் ,மதம்,தனி மனிதசுதந்திரம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய காரணிகள்.கலையே அடையாளம் இதுவே அரசியல் கலாச்சரம்.இது ஒரு முழுமையான ஓர் சமுகத்தின் அடையாளம்.சமூக மாற்றத்திற்கான கதவுகளை கலாச்சார மாற்றங்களே திறந்த விடுகின்றன. இந்த அடிப்படையிலே கலைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு கலைஞன் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படமான இலங்கை துடுப்பெடுத்தாட்ட வீரன் முரளிதரன் வாழ்கை வரலாறு படமாக்கப் பட இருப்பதன் பேசு பொருளே இன்று முக்கியமாகப் பேசப்படுகிறது.

தனியாவே இது ஓர் விளையாட்டு வீரனின் கதை என்று  நாம் பேசாமல் போகவும் முடியாது  விளையாட்டை விளையாட்டாகவும் மதத்தை மதமாகவும் அரசியலை அரசியலாகவும் பார்க்கும் உலக நடைமுறையாக இன்று இல்லை. இந்தியாவை மதம் ஆள்கிறது , அதேபோல் இலங்கையை பெளத்த சிங்கள தேசிய வாதம் ஆள்கிறது,பல இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாம் ஆள்கிறது.எல்லாமே இன்று அரசியல் ஆகிவிட்டன.இன வாதம் மதவாதம் இல்லாத நாடுகளே இல்லை என்றாகிவிட்டது.

எந்தக் கலைஞனையும் நாம் இதை தான் எழுது இதைத் தான் நடிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்த முடியாது.அது அவனாகவே உணர்ந்து மனித தர்மம் மனித நீதி அறம் சார்ந்த ஒரு கலைஞனாக இருக்கவேண்டும் என்பதை அவனாகவே உணர வேண்டும்.தனியவே அரசியலும் பணமும் மட்டும் தான் கலை என்று இல்லாமல் தான் சார்ந்த தன் சமூகம் சார்ந்த விடுதலைக்கும் இவன் கலை பயன் பெற வேண்டும்.

அழகிய அற்புதமான புரட்சிக் கவிஞர்களையும் கலைஞர்களையும் பெற்றெடுத்த தேசம் இந்தியா.இந்த வகையில் ரவீந்தரநாத் தாகூர், பாரதி,பாரதிதாசன் தொடங்கி இன்று வரை அழகிய ஓர் விடுதலைக் கனவை பாடியவர்கள் பிறந்த தேசம் இந்திய நாடு .ரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி என்ற அழகிய மானிட விடுதலைக்காக பாடிய கலைப்படைப்பானது இவரின் அர்பணிப்புக்காக நோபல் பரிசை வென்றது.(Where the mind is without fear and the head is held high) எனது மக்கள் எந்தப் பயமும் இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் தந்தையே என்று வேண்டுகிறார் ரவீந்தரநாத் தாகூர் .ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்று சுதந்திர வேட்க்கையை முழங்கி ஒடுக்கப்படுபவன் விடுதலைக்காய் உழைத்தான் பாரதி.அந்த வகையில் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒரு கலைஞனின் குரல் ஒலிக்க வேண்டும்.

தமிழ் நாட்டுக் கலைப் படைப்பாளிகள் எப்போதும் ஈழத்து தமிழருக்காய் குரல் கொடுத்தவர்கள் கொடுத்து வருபவர்கள் என்பதை மறக்க முடியாது.அந்த வகையில் அடிமைகளாக கூலித் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் இன்று கூட அடிமைகள் போல் தான் ஆதிக்க சமூகத்தால் நடாத்தப் படுகிறார்கள்.அரை நூற்றாண்டு கடந்தும் குந்தி இருப்பதற்க்கு கூட இடம் இல்லாதவர்களாக.இரவு பகலாக இரத்தம் சிந்தி உழைத்தும் இன்று கூட ஒரு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் காத்திருக்கிறார்கள்.

இன்று கூட இவர்கள் இரண்டாம் தரப்பு மக்களாகவே நடாத்தப் படுகிறார்கள். இவர்களுக்காக இந்த சமுதாயத்தில் இருந்து வந்த ஆளுமை மிக்க அரசியல் வாதிகளாலோ அல்லது ஆளுமைமிக்க உலகப் புகழ் வாய்ந்த விளையாட்டு வீரனாலோ எதுகுமே செய்ய முடியவில்லை.ஆகவே எந்தப் படைப்பாளியோ அல்லது உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரனோ தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்கு முறை சார்ந்து விடுதலை சார்ந்து பேச வேண்டும்.தான் சார்ந்த இனத்தின் உரிமைகளை ஒடிக்குபவன் பக்கம் நின்று நியாயமும் கற்பிப்பது அறம் சார்ந்ததல்ல அதுவோர் சுயநலன் சார்ந்ததே.இந்த மக்களின் அவலத்தை மலையகக் கவிஞன் ஒருவன் பாடும் போது சொன்னான் இறந்தால் கூட எமக்கோர் கல்லறை வைக்கவே இடமில்லை இங்கு என்று தம் அவல வாழ்வை பாடினான்.எம் ஈழத்து கவிஞன் ஒருவன் மலையகத்தை பார்த்து இப்படிப் பாடுகிறான் மண்சரிகிற மழைக்கால இரவுகள்தோறும் மதுரையில் இருந்து வந்த கண்ணகி இன்னும் அழுகிற ஓலம் கேட்க்குதே தோழா என்றான்.

ஆகவே தமிழ் நாட்டு எமது அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கலைப் படைப்பாளிகள் இந்த மக்களின் அவல நிலையை படமாக்கி உலகுக்கு கூற வேண்டும்.சாதிக்கு எதிராகவும் விடுதலைக்காகவும் தம் படைப்புக்களை தந்த எவ்வளவோ அற்புதமான கலைஞரை கொண்ட தேசம் தமிழ் நாடு. எந்த மக்களால் ஒரு கலைஞன் வளர்க்கப்படுகிறானோ போற்றப்படுகிறானோ அந்த மக்களின் குரலை மதிப்பவனே உண்மையான கலைஞன். நியாயம் சார்ந்தும் நீதி சார்ந்தும் விடுதலை சார்ந்தும் பேசுவார்கள் உழைப்பார்கள் என மீண்டும் நம்புவோம்.


உங்கள் தேனீர் கோப்பையில் 
தெரியுது பார் 
எங்கள் இரத்தமும் வியர்வையும்.

பா.உதயன் ✍️
 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எங்கே அந்த தாய்மார்களின் கண்ணீரின் வலி விளங்கப்போகின்றது, இவர் மலையக மக்களின் விடிவிற்கு என்ன செய்தார்?

இவரொரு சுயநால விளையாட்டுக்காறர், இவ்வளவு கோடிகளை கொட்டுகின்றார்களென்றால் இதன்பின் பெரிய அரசியல் விளையாடுகின்றது,

நன்றி பகிர்வுக்கு, நல்ல படைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பு நன்றி தோழர் ..👍..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2020 at 09:49, உடையார் said:

இவருக்கு எங்கே அந்த தாய்மார்களின் கண்ணீரின் வலி விளங்கப்போகின்றது, இவர் மலையக மக்களின் விடிவிற்கு என்ன செய்தார்?

இவரொரு சுயநால விளையாட்டுக்காறர், இவ்வளவு கோடிகளை கொட்டுகின்றார்களென்றால் இதன்பின் பெரிய அரசியல் விளையாடுகின்றது,

நன்றி பகிர்வுக்கு, நல்ல படைப்பு

 

On 17/10/2020 at 10:02, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு படைப்பு நன்றி தோழர் ..👍..💐

நல்ல கருத்திட்ட உடையாருக்கும்,புரட்சிகர தமிழ் தேசியனுக்கும் ,குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.