Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு.

Featured Replies

சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு.

சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.

-Pathivu-

நீதி மன்ற உத்தரவை காடை சிங்களவர்கள் அனுசரிப்பாளர்களா?

நீதி மன்ற தடை உத்தரவை வாங்கி தமிழன் கொழும்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தமிழீழம் மலரச் செய்வதே அனைவரதும் தலையாய கடமையாகும்.

ஒரு இனம் நீதி மன்ற உத்தரவை இன்னொரு இனத்தின் நீதிபதியிடம் பெற்றுவாழ்வது அந்நாட்டு மக்களாக இருக்க முடியாது.

எங்களைப்போன்ற புலம் பெயர் ஏதிலிகள் தான் அகதி கோரும் நாட்டில் நீதிமன்ற உத்தரவை வாங்கி நாடு கடத்தும் உத்தரவை தவிர்த்திடலாம்

இலங்கையில் நீதித்துறை சரியாக இருந்தால் இப்படியான உத்தரவைப் பிறப்பித்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா ?

அத்துடன் அனுப்பப்பட்டவர்களை திரும்ப அழைத்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

லொட்ஜ்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு.

கொழும்பில் லொட்ஜகளில் தங்கியிருந்த வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் வெளியேற்றப்படுவதற்கு உயர்நீதிமன்றம் இன்று தடையுத்தரவு விதித்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை அவர்களது அடிப்படை மனித உரிமையின் மீறும் செயலென மாற்றுக் கொள்கைகளிற்கான நிலைமை உயர் நீதி மன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த்து மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரச நிமல் காமின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு இன்று தடையுத்தரவு விதித்துள்ளது இவ் விடயம் பாரதூரமானது என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நீதியரசர் நிமல் காமினி தெரிவித்துள்ளார் .

மாற்று கொள்கைக்கான நிலையம் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செயலகம் இம்மனுவில் பொலிஸ் மா அதிபர் இன்று தளபதி முப்படைதளபதிகள் ஆகியோர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே நீதி மன்றங்கள் தான் சுனாமி கட்டமைப்பையும் நிறுத்தியது

வடக்கு கிழக்கையிம் பிரித்து.

ஆகவே இலங்கை நீதிமன்றங்கஈல் தீர்பை பெருது படுத்தா வேண்டாம்

நேற்று இருந்த ஆவேசம் கண்டனங்கள் இன்று இல்லை ஏன்? இலங்கை அரசின் தந்திரம்

அனுப்பியாச்சு அனுப்பி முடியா தீர்ப்பு முலம் இங்கு தமிழ்மக்கள் பாதுகாக்க படுகிறார்கள் என்று.

இனி தமிழர் தரப்பு புகார் செய்ய போக அவர்கள்( சர்வேதேசம்?) மற்றும் ஆர்வளர்கள் சொல்லுவார்கள் நீதிமன்றம் தானே தடை வித்தித்து விட்டது பிறகு என்ன என்று!

ஆகாவே முக்கியம் எதுக்கு கொடுக்கனும் எதுக்கு கொடுக்க கூடாது என்பதை தமிழர் தரப்பு நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

கொழும்பு தமிழர்கள் வெளியேற்றத்துக்கு சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தடை.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து மகிந்த அரசாங்கத்தினால் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று தடை விதித்தது.

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த பெருந்தொகையான தமிழர்களை எதுவித முன்னறிவித்தலுமின்றி நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் வெளியேற்றி தமிழீழப் பிரதேசத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மேற்கொண்ட நடவடிக்கையை ஒத்ததான மகிந்தவின் இச்செயற்பாட்டுக்கு கடும் கண்டனம் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்டது.

மகிந்தவின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாற்றுக் கொள்கைக்காக மையத்தின் இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் வழக்கும் தொடரப்பட்டது.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர், இராணுவ தளபதி, விமானப் படை தளபதி, பாதுகாப்புச் செயலாளர், வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் வத்தளை பிரதேச காவல்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதால் நீதிமன்றம் தலையிடக் காரணம் இருக்கிறது என்றும் வழக்கில் சுட்டப்பப்பட்ட பிரதிவாதிகளை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையாக ஆணைகளை பதிவாளர் அனுப்ப வேண்டும் என்றும் வழக்க விசாரித்த நீதிபதி நிமல் காமினி அமரதுங்க தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் குழுவில் என்.ஈ.திசநாயக்க மற்றும் அண்ட்ரூ சோமவன்ச ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று காவல்துறை மா அதிபரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலதிக தகவல் ஏதும் வெளியிட இயலாது என்றும் நீதிமன்றப் பதிவாளர் கூறியதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீதவான்கள் எல்லாம் டிவி நியூஸ் மற்றும் இன்ரர்நெற் பார்க்காதவங்களா? தமிழருக்கு இத்தனை கட்டுப்பாடு இருக்கெண்டு இவ்வளவு நாளும் தெரியாதாம். குமார் பொன்னம்பலம் யாழ் பயண அனுமதிக்கு எதிராக வழக்குப் போட முனைந்த போது கொல்லப் பட்டார். அப்படியொரு விடயம் இருக்கிறது என உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்து விட்டுத்தான் அவர் தியாகியானார். அவர் இறந்ததும் உயர் நீதிமன்றம் எதுவும் தெரியாத மாதிரி வழக்கைத் தள்ளுபடி செய்தது. வவுனியாவில் இளஞ்செழியன் அவர்கள் தான் பார்க்கிற கேட்கிற செய்திகளைக் கொண்டு தான் சிங்கள ராணுவத்தையும் பொலிசையும் வாங்கு வாங்கெண்டு வாங்குகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அரசின் கபட நாடகம். இப்போதும் இலங்கையில் நீதி மன்றம் சுயாதினமாக இயங்குகின்றது என்று வெளி உலகுக்கு காட்ட அரங்கேறும் நாடகமே இது :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.