Jump to content

பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11


Recommended Posts

கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார்.

சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. பிரான்ஸை வசப்படுத்தியது. பிரிட்டனை தாக்கியது என்று ஹிட்லரை வெறுக்க பல்வேறு காரணங்கள் சேர்ச்சிலிடம் இருந்தன.

கம்யூனிஸத்தை சேர்ச்சில் எக்காலத்திலும் ஆதரித்ததில்லை. சோவியத் எதிர்ப்பை அவர் எந்த நோடியிலும் கைவிட்டதும் இல்லை. என்றாலும் ஹிட்லரை வீழ்த்துவதற்கு சோவியத்துடன் இணைந்தாகவேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு தயக்கம் இருந்ததில்லை.

ஜேர்மனி, சோவியத் மீது போர்பிரகடனம் செய்த போது சேர்ச்சில் ரேடியோவில் அன்றைய தினமே அறிவித்தார். கம்யூனிஸத்தைப் பற்றி நான் இதுவரை சொல்லி வந்த கருத்துக்கள் எதிலும் மாற்றம் இல்லை. ஆனால், சோவியத் இப்போது தாக்கப்பட்டதைப் பார்க்கும் போது முன்னால் சொன்னவை அனைத்தும் மறைந்துவிட்டன, ஜுலை 12, 1941  அன்று பிரிட்டனும் சோவியத்தும் ஒப்பந்தம் செய்துகொண்டன, போர்க் காலத்தில் நமக்குள் உதவி செய்து கொள்ளலாம் என்பது அடிப்படை சாரம்சம்.

 

பேர்ல் துறைமுக தாக்குதல்

கிழக்கு முனையில் சோவியத்திற்கும் ஜேர்மனிக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், டிசம்பர் 7, 1941 அன்று ஜப்பான், பேர்ல் துறைமுகத்தை (Pearl Habour) தாக்கியது. ஹவாயில் இருந்த இந்த துறைமுகப்பகுதியில் தான் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை அமைத்திருந்தது. இது நாள் வரை ஒதுங்கி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவை பேர்ல் துறைமுகத் தாக்குதல் உலுக்கியெடுத்தது. 

பதினெட்டு மாதங்களுக்கு முன்பே ரூஸ்வெல்ட் அமெரிக்கப்படைகளை பேர்ல் துறைமுகத்தில் குவித்து வைத்திருந்தார். ஜப்பானின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தப் படை உதவும் என்று அமெரிக்கா நம்பியது. ஜப்பான் சீனாவுடன் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அது. போரைச் சமாளிக்க எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்கள் ஜப்பானுக்கு குறைவின்றி தேவைப்பட்டன. இதை உணர்ந்து கொண்ட நேச நாடுகள் ஜப்பானுடனான வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டன. ஜுன் 1941 ல் இந்த வர்த்தக உறவு முடிவுக்கு வந்தது. எண்ணெய் வளமிக்க பிரதேசங்களான கிழக்கிந்திய தீவுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ஜப்பான் வந்து சேர்ந்தது. ஐரோப்பா கொடுக்காவிட்டால் என்ன? எமக்கு வேண்டியதை நாங்கள் பறித்துக்கொள்வோம். ஜப்பான் இப்படித்தான் சிந்திக்கும் என்று அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் எப்படியாவது தடுத்து நிறுத்திவிடலாம் என்று நம்பியது அமெரிக்கா.

டிசம்பர் 7, 1941  காலை எட்டு மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. அமெரிக்க கடற்படையின் நான்கு கப்பல்கள் அழிக்கப்பட்டன. 3 ஆயுதம் தாங்கிய க்ரூஸர் கப்பல்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். தன் மீது தொடுக்கபட்ட மாபெரும் போராகவே அமெரிக்கா இதை எடுத்துக் கொண்டது. எப்படி இதை அமெரிக்கா அனுமதிக்கலாம் என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பின.

large.1024px-Pearl_Harbor_1941_de_svg.png.c6adcb48aa5f60d0d61cc27edf507aab.png

அடுத்த நாள். ஹாங்காங், மலேசியா, ஷங்காய் மூன்றின் மீதும் போர்ப்பிரகடனம் செய்தது ஜப்பான். ஹிட்லரே அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. கூட்டணியில் இருந்த கோலிக்குண்டு அளவுக்கே உள்ள ஜப்பான் எத்தனை ஆர்ப்பாட்டமாகத் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

மறுநாள், அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பான் மீது போர்ப்பிரகடனம் செய்தன. முன்று தினங்கள் கழித்து டிசம்பர் 11ம் திகதி ஹிட்லர் அமெரிக்கா மீது போர்ப்பிரகடனம் செய்தார். அது குறித்து அவர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது தான்.

large.243723347_Perlharborangriffe1941.jpg.202abc6331a4f3f6ebdfe2b542d70d24.jpg

ஒப்பந்த‍த்தின்படி, ஜேர்மனியும் இத்தாலியும் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் எதிராக போரிட தீர்மானித்துவிட்டோம். ஜப்பானுக்கு ஆதரவாக நாங்கள் போர்ப்பிரகடனம் செய்கிறோம். ரூஸ்வெல்டின் கொள்கை உலகைக் கட்டியாள வேண்டும் என்பது தான். இத்தாலி ஜேர்மனி, ஜப்பான் மூன்றையும் எப்படியாவது அடக்கியாளவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புகின்றன. உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று இந்த இரு சர்வாதிகார அரசுகளும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ஜேர்மனி அனுமதிக்காது.

இது ஹிட்லரின் முக்கிய தவறு. ஜப்பானே தாக்க ஆரம்பித்துவிட்டதே நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று ஹிட்லர் சிந்தித்திருக்க‍க்கூடும். சோவியத்துடன் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்து விடுபட இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் போன்ற பலம் மிக்க நாடுகளோடு மோதிய அவர் அமெரிக்காவை நேரிடையாக பகைத்த‍து மிகப்பெரிய தவறு. இதுவரை போரில் நேரடி பங்காளராக இல்லாமல் பார்வையாளராக  பிரிட்டனுக்கு உதவிகள் மட்டும் செய்து வந்த‍ அமெரிக்காவை பிரிட்டன் பக்கம் வலுக்கட்டாமாக தள்ளிய ஹிட்லரின் செயல் தோல்வியை நோக்கிய தனது அடிகளில் ஒன்று என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அமெரிக்காவின் வருகை பிரிட்டனை உற்சாகம் கொள்ளச் செய்தது உண்மை. பிரான்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு தோதான ஒரு கை பிரிட்டனுக்கு கிடைக்கவில்லை. ஜேர்மனியுடனான போரில் கணிசமான இழப்புக்களை பிரிட்டன் சந்தித்திருந்த‍து. இந்நிலையில் அமெரிக்காவோடு கைகோர்த்துக்கொள்வது அற்புதமான வாய்ப்பு. ஜப்பானின் சமீபத்திய அவதாரம் அச்சமூட்டியது. முஸோலினியும் தன்னால் முடிந்தவரை அங்கே , இங்கே என்று மோதிக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று நாடுகளும் ஒரணியில் நிற்பது பிரிட்டனுக்கு அச்சுறுத்தல். அதோடு ஐரோப்பாவுக்கும்.

ஜப்பான் விரைவாக சில வெற்றிகளை குவித்த‍து. பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடந்த இரண்டாவது தினம், பிரிட்டனின் இரு பெரும் கப்பல்களை (Prince of Wales, the Repulse) ஜப்பான் தகர்த்தது. அடுத்த நாள் பர்மாவை நோக்கி முன்னேறியது. டிசம்பர் 26 ம் திகதி ஹாங்காங் ஜப்பானிடம் சரணடைந்தது. ஜனவரி 1942 ல் டச்சு கிழக்கு இந்திய தீவுகளை பாய்ந்து  தாக்கி கையகப்படுத்திக் கொண்டது. அங்கிருந்த எண்ணெய் வளங்களை கைப்பற்றி கொண்டது. பெப்ரவரி 15, 1942 அன்று பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி மலேயா முழுவதையும் ஜப்பான் கைப்பற்றியது. கூடவே சிங்கப்பூரில் இருந்த மிகப்பெரிய கடற்படைத் தளத்தையும் சுற்றிவளைத்து தனதாக்கிக்கொண்டது. ஏப்ரல் 1942 ல் இந்திய எல்லைக்கு அருகே வந்து ஜப்பான் நோட்டம் விட்டபோது பிரிட்டன் உச்சக்கட்ட அதிர்ச்சியை சந்தித்தது. அடுத்து ஆஸ்திரேலியா தான் என்று பேச்சு அடிபட்டது.  

பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு மேலும் வலுவடைந்தது. நிதி உதவியும் ஆயுத உதவியும் மட்டுமே இதுவரை அளித்து வந்த அமெரிக்கா பிரிட்டனுடன் ஒரு தொழில் பார்ட்னராக கைகோர்த்துக் கொண்டது. டிசம்பர் 22, 1941 முதல் ஜனவரி 14 1942 வரை வாஷிங்ரனில் நடைபெற்ற மகாநாட்டின் போது, பொதுவான தலைமைக்குழு (Combined Chiefs of Staff committee) ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். அமெரிக்கா பிரிட்டன் இரண்டும் இணைந்து போரிடுவதற்கான அடித்தளம் இது. எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்படும்? என்னென்ன உபகரணங்கள், மூலப்பொருட்கள் வேண்டியிருக்கும்? தகவல் தொடர்பை எப்படி முறையாக பயன்படுத்திக்கொள்வது? உளவு நிறுவனங்களிடம் இருந்து எப்படி கூட்டாக தகவல்கள் கேட்டறிவது? போக்குவரத்து ஏற்பாடுகளை எப்படிக் கவனிப்பது? போருக்கு தேவைப்படும் அத்தனை விஷயங்கள் பற்றியும் இந்த கமிட்டி முடிவு செய்தது.

முதலில் ஜேர்மனியை கவனிப்பது என்று திட்டமிட்டார்கள். சோவியத் மீது ஜேர்மனி போர் தொடுத்திருக்கும் இந்த சமயத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இனிமேலும் ஜேர்மனியால்(என்றால் அச்சுநாடுகளால்) ஐரோப்பாவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி செய்வோம். ஜேர்மனியை உடனே தாக்குவோம். இது அமெரிக்காவின் நிலைப்பாடு. பிரிட்டன் தயங்கியது. ஜேர்மனியை தாக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் காலம் கனியட்டுமே. நம்மிடம் உள்ள ஆயுதங்கள் போதாது. ஆட்களும் போதாது. நம் பலத்தை அதிகப்படுத்திக்கொள்வோம். பிறகு தாக்குவோம்.

பர்மா, பிலிப்பைன்ஸ், மலேசியா, டச்சு கிழக்கிந்திய தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஜப்பான் ஏப்ரல்1942 ல் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டது. எதிர்ப்பட்ட நேசநாடுகளின் படைகளையும் விட்டுவைக்கவில்லை. தெற்கு சீன கடல், ஜாவா கடல், இந்து மகா சமுத்திரம் ஆகிய கடல் பகுதிகளை ஒட்டி அமைக்கபட்ட பல தளங்களைக் கைப்பற்றினார்கள். நேச நாடுகளின் தளம் அமைந்திருந்த டார்வின்(ஒஸ்ரேலியா) மீது குண்டுகள் வீசப்பட்டன. அட, ஜேர்மனியைப் போலவே நாமும் பெரிய ஆள் தான் என்று ஜப்பான் பெருமிதப்பட்டுக்கொண்டது.

large.198798828_Mussolini1930.jpg.91db44f8fa9daa310e4b5988d1410229.jpgஜேர்மனியும் ஜப்பானும் ஐரோப்பாவை கலக்கிக்கொண்டிருந்த போது, இத்தாலி சாய்வு நாற்காலியில் படுத்துக்கிடந்தது. கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் தாக்கி சிசிலியை கைப்பற்றிவிட்டது நேசப்படை. ஜூலை 9, 1943 ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 17 ல்  முடித்துக்கொண்டார்கள். இத்தாலியப்படை ஜேர்மனியப் படை இரண்டையுமே தாக்கி வெற்றிபெற்றிருந்தது நேசப்படை. கையோடு இத்தாலியை நோக்கி நகரவும் ஆரம்பித்தது.

வானத்தில் இருந்து தினம் தினம் குண்டு மழை, நகரங்கள் அலுவலகங்கள், வீடுகள், வீதிகள் குலுங்கி வெடித்தன, மிச்சமிருந்த தொழிற்சாலைகளும் மூலப்பொருட்களை கொண்டு வர முடியாததால் மூடியே கிடந்தன. கரி இல்லை. எண்ணெய் இல்லை. சாப்பாடு இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. எனதருமை இத்தாலி மக்களே, நாம் பீடு நடை போட்டு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பொறுங்கள். இது போன்ற முஸோலினியின் வழக்கமான பிரச்சாரத்தை மக்கள் உதாசீனம் செய்ய ஆரம்பித்தனர். வாடிகன் ரேடியோவையும் லண்டன் ரேடியோவையும் திருகி உண்மை நிலவரம் அறிந்து கொண்டார்கள். ஆம், இத்தாலி தோற்றுத்தான் போகப்போகிறது.

Link to comment
Share on other sites

  • tulpen changed the title to பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கிறோம், தொடருங்கள்! 

உலகில் தற்போது நடப்பவையெல்லாம் ஏதோ புதிதாக நடப்பதாக நினைபோருக்கு, "இவை ஏற்கனவே நடந்தவை, இப்போது வரலாற்றை அறியாதோரால் மீள அரங்கேறுகின்றன" எனக் காட்ட இது போன்ற தொடர்கள் அவசியம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.