Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதுக்குள்ளை ஆரை இழுத்துக்கொண்டு வாறியள்?  😎

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்தும் தூண்டில் போட்டபடி தான்.
போனால் மயிர்
வந்தால் மலை.

 

11 hours ago, உடையார் said:

என்ன செய்ய இப்படியே புலம்பிக்கொண்டு திரிய வேண்டியதுதான், இன்னும் கொஞ்ச நாளில் 

அரசியல் பைத்தியம் - வாழ்க்கை கவிதை

OMG! Angler fällt ins Wasser! - IstDasLustig.de

விளங்க நினைப்பவர்....  தூண்டில் போட்டு பார்த்தவர், 
மீன் சிக்கவில்லை, அவர் தான்... சிக்கி விட்டார். :grin:

"குட்  லக்"  நெக்ஸ்ட் ரைம். 🤣

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தற்போது நடப்பது ‘சதி முயற்சியா’? – மங்கள

 
unnamed.jpg
 69 Views

அமெரிக்காவில் தற்போது அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் ஒரு சதி முயற்சியை போன்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நடந்த வாரம் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தனக்கு சார்பாக  2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக தற்போதைய டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கெனவே அதிபர் பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இதனால், தேர்தலில் தான் தோல்வி அடைந்ததாக அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். இருப்பினும், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரித்து பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,ஆசியாவில் அல்லது ஆபிரிக்க தேர்தலில் தோல்வியுற்ற அதிபர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளில் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்திருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் விடயங்களை ஒரு ‘சதி முயற்சி’ என்றே வர்ணிக்கத் தோன்றுகின்றது.

எனவே இப்போது அமெரிக்காவின் நட்பு நாடுகள் ‘போதும்’ என்பதை ட்ரம்புக்கு வலுவாகவும் சத்தமாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/அமெரிக்காவில்-தற்போது-நட/

 

  • கருத்துக்கள உறவுகள்
ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
 
ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
 

வாஷிங்டன்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நேற்று அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை வென்று உள்ளார். இது அமெரிக்க தேர்தலின் இறுதி தேர்தல் எண்ணிக்கையை பொருத்தவரை ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்கு எண்ணிக்கை 306 ஆகவும்,வட கரோலினாவை வென்ற குடியரசுக் கட்சி டொனால்டடு டிரம்பிற்கு 232 வாக்கு எண்ணிக்கையாகவும் உயர்ந்து உள்ளது.

இந்த முடிவுகளை நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் பிற நெட்வொர்க்குகள் அறிவித்துள்ளன, இரண்டு இறுதி மாநிலங்களும் தேர்தல் தினத்திற்கு ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.

ஜார்ஜியாவில் பைடனின் வெற்றி அவரது வாக்கு எண்ணிக்கையில் 16 யை கூடுதலாக சேர்த்தது,  2016 தேர்தல்களில் டொனால்ட் டிரம்ப் 306 தேர்தல் வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232  வென்று இருந்தார்.

2016 இல் டிரம்ப் வென்ற ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த ஆண்டு பைடனை நோக்கி திரும்பி உள்ளன. 

சி.என்.என் இன் அறிக்கையின்படி, நீண்ட இடைவெளிக்குபிறகு  ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார், 1992 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்று இருந்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/14114431/US-Elections-After-Arizona-Joe-Biden-wins-Georgia.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகள் சூசகமாகத் திருட்டு- மீண்டும் வெற்றிபெறப் போவதாக அறிவித்தார்  ட்ரம்ப் | Athavan News

வாக்குகள் சூசகமாகத் திருட்டு- மீண்டும் வெற்றிபெறப் போவதாக அறிவித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் மூலமே ஜோ பைடன் வென்றதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப் போவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவிர இடதுசாரிகளுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தால் வாக்குகள் எண்ணப்பட்டதாலேயே ஜோ பைடன் வென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் அனைத்தும் தனது வாக்குகளைத் திருடும் போது ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஜோ பைடன் தரப்பினர் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிட, தபால் வாக்குப்பதிவானது கேலிக்கூத்தானது என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

http://athavannews.com/வாக்குகள்-சூசகமாகத்-திரு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.