Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!

அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே எதிர்வரும் 13 வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பேருந்துகளில் மக்களை அழைத்து சென்றதன் ஊடாக, பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, 6 பொலிஸ் குழுக்கள் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக மன்னார், கிழக்கு மாகாணத்தில் உறவினர் வீடுகளிலும் மற்றும் கொழும்பில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனைகளை நடத்தியிருந்தது.

எனினும், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகி இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ஒக்டோபர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

http://athavannews.com/ரிஷாட்-பதியுதீனுக்கு-தொட/

இவருக்கு எதிராக இது மட்டுமல்ல, பல  குற்றசாட்டுகள் சடட மா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவைபற்றி விசாரணை வேறாக நடைபெறுகின்றது. விசாரணை செய்பவர்களுக்கு கொரன பிரச்சினையால் அதை தொடர முடியவில்லை. எனவே இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் எதிரான மோசடி வழக்குகள் நிறையவே வர இருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக இவை மறைக்கப்படடாலும் சட்ட மா அதிபர் டப்புலே லிவேரா விடுவதாக இல்லை. எனவே இவர் முறைகேடாக சேர்த்த பெரும் சொத்துக்களுக்கு கணக்கு காட்டியே ஆக வேண்டும். குத்துகாரணம் அடித்து அரசுடன் சேர்வதட்கு முயட்சித்தாலும் சிங்கள தீவிரவாதிகள், மதவாதிகளின் எதிர்ப்பால் எல்லாம் பிழைத்து விட்ட்து. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு: ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் ரிஷாட் பதியுதீனின் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீனின் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையிலேயே ரிஷாட் பதியுதீனின் விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், மனு கோரிக்கையை நிராகரித்ததுடன், எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில்,புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரிஷாட்-பதியுதீனின்-பிணை/

உப்பு திண்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேணும். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னாரில் செய்யாத அடடகசம் இல்லை. நிறைய முஸ்லீம் குடியேற்றங்களை செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

அப்போது அங்குள்ள மேலதிக அரச அதிபராக இருந்த பெண் அதிகாரி ஒத்துழைக்காததால் அங்கிருந்து அனுப்பிவிடடார். மிகவும் நேர்மையான அதிகாரியான திருமதி ஸ்டானி டி மெல் நேற்று முதல் மன்னர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.