Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இந்த மயக்கம்

Featured Replies

இயற்கையால் இணைக்கப்பட்ட

நம் உறவு ஒன்றோடு ஒன்று

கலந்திட்ட அழகிய

வாழ்க்கைத் தோட்டம்!

இங்கே வாழும்

நாம் எப்போது சிந்திப்போம்?

ஆண்கள் தப்பா?

பெண்கள் தப்பா?

சந்தேகப்

பட்டிமன்றம் போட்டு

வாதிட்டு வாதிட்டுக்

களைத்துவிட்டோம்

ஆனாலும் தீர்ப்புகள்

மட்டும் மாறி மாறி

வந்து போகின்றது

நாம் இருட்டுக்குள்

வாழ்வதால் வெளிச்சத்தில்

சண்டை போடுகின்றோமோ

எம் அறிவுக்கண்

எப்போதுதான் திறக்கும்?

எமக்குள்

தப்புகள் வரும்போது மட்டும்

நானா? நீயா? என

சண்டை போடும் நாம்

எப்போது இருவருக்கும்

பங்குண்டு என

ஏற்றுக்கொள்வோம்?

வாழ்கை நொந்து கொள்வதற்கு

அல்ல அழகாய் வாழ்வதற்கு

இது இருவரும் சேர்ந்தால்தானே

முடியும் எப்போது

புரியும் எமக்கு?

நாம் இருட்டுக்குள்

வாழ்வதால் வெளிச்சத்தில்

சண்டை போடுகின்றோமோ

எம் அறிவுக்கண்

எப்போதுதான் திறக்கும்?

வாழ்கை நொந்து கொள்வதற்கு

அல்ல அழகாய் வாழ்வதற்கு

இது இருவரும் சேர்ந்தால்தானே

முடியும் எப்போது

புரியும் எமக்கு?

கவி வரிகள் நன்றாக இருக்கு அக்கா

வாழ்கை நொந்து கொள்வதற்கு

அல்ல அழகாய் வாழ்வதற்கு

இது இருவரும் சேர்ந்தால்தானே

முடியும் எப்போது

புரியும் எமக்கு?

மிகவும் அழகிய வரிகள் அக்கா நல்லா இருக்கு கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு கஜந்தி உங்க கவிதை.

இந்த வரிகள் நல்லா இருக்கு.

ஆண்கள் தப்பா?

பெண்கள் தப்பா?

சந்தேகப்

பட்டிமன்றம் போட்டு

வாதிட்டு வாதிட்டுக்

களைத்துவிட்டோம்

ஆனாலும் தீர்ப்புகள்

மட்டும் மாறி மாறி

வந்து போகின்றது

இயற்கையால் இணைக்கப்பட்ட

நம் உறவு ஒன்றோடு ஒன்று

கலந்திட்ட அழகிய

வாழ்க்கைத் தோட்டம்!

இது தான் உண்மை.

பலருக்கு இது புரிவதில்லை

அழகான வரிகள்

வாழ்த்துக்கள்.

நல்ல கரு உள்ளது.

ஆனால் இதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்! நல்ல கருத்துக்கள்,சிந்தனைகள் ஆனால் வசன அமைப்பு கவிதைமாதிரி அமையவில்லை.

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள், உங்களிடம் நல்ல திறமையுள்ளது

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லிசான், வல்வை.. இது புதுக்கவிதை. அதனால் இதற்கு விதிகளில்லை. ஆனால் சிறிது எதுகை மோனை பேணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது புதுக்கவிதையை விளக்குகிறேன்.

லிசான், வல்வை..

இது புதுக்கவிதை..

அதனால் இதற்கு விதிகளில்லை..

ஆனால் சிறிது எதுகை மோனை பேணியிருந்தால்

இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இப்போது புதுக்கவிதையை விளக்குகிறேன்.

அவ்வளவுதான்! :blink: :P :huh: :P

  • தொடங்கியவர்

நல்ல கரு உள்ளது.

ஆனால் இதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

நன்றிகள் என் உறவுகளுக்கு கருத்தைப்பகிர்ந்து கொணட்திற்க

ரசிந்தவர்களுக்கும் நன்றிகள்

லிசான் வல்வைமைந்தன் உங்கள் இருவர் கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்

மன்னிப்புகள் தேவையில்லை கருத்தை யோசித்துக்கொண்டு எதுகை மோனையை

விட்டுவிட்டேன் தரமான கருத்துக்கள் வரும்போதுதான் பிழைகளை திருத்திக்கொள்ள

முடியும் தரமான கருத்துகள் தந்ததிற்கு நன்றி எனி பிழைவராமல்

பார்த்துக்கொள்கின்றேன்

தப்புகள் வரும்போது மட்டும்

நானா? நீயா? என

சண்டை போடும் நாம்

எப்போது இருவருக்கும்

பங்குண்டு என

ஏற்றுக்கொள்வோம்?

அழகான வரிகள் கஜந்தி.

நன்றாக சொல்லி இருக்கீங்க.

வாழ்க்கையில ஆண் பெண் சண்டையை விட்டு..சரியோ, பிழையோ, இன்பமோ,துன்பமோ சரியாக ஏற்றுக்கொண்டு நடந்தால் சந்தோசமாக வாழலாம்.

ஆனால் பலர் சந்தோசமாக வாழல!

  • தொடங்கியவர்

லிசான், வல்வை.. இது புதுக்கவிதை. அதனால் இதற்கு விதிகளில்லை. ஆனால் சிறிது எதுகை மோனை பேணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது புதுக்கவிதையை விளக்குகிறேன்.

லிசான், வல்வை..

இது புதுக்கவிதை..

அதனால் இதற்கு விதிகளில்லை..

ஆனால் சிறிது எதுகை மோனை பேணியிருந்தால்

இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இப்போது புதுக்கவிதையை விளக்குகிறேன்.

அவ்வளவுதான்! :lol: :P :lol: :P

இவ்வளவு அழகாக கவிதையை சொன்ன உறவிற்கு நன்றிகள் நானும் கவிதைகள்

பற்றி ஆராய்ந்து பார்த்தேன் கருத்து சிதையாமல் கொடுக்க உரைநடைக்கவிதை

என்று ஒன்று உள்ளதை பார்த்தேன் என்றாலும் உங்கள் கருத்துக்கள் கவிதையை

ஆராய உதவியதற்கு நன்றிகள்

அழகான வரிகள் கஜந்தி.

நன்றாக சொல்லி இருக்கீங்க.

வாழ்க்கையில ஆண் பெண் சண்டையை விட்டு..சரியோ, பிழையோ, இன்பமோ,துன்பமோ சரியாக ஏற்றுக்கொண்டு நடந்தால் சந்தோசமாக வாழலாம்.

ஆனால் பலர் சந்தோசமாக வாழல!

நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.