Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” -க.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” -க.வி.விக்னேஸ்வரன்

 
1-34-696x387.jpg
 46 Views

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது.  அதற்குப் பின் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது.

அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது  அதற்கு எதிராக தடையுத்தரவுகளை இலங்கை அரசாங்கம் விதித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில்  ‘இலக்கு மின்னிதழ்’ கண்ட நேர்காணலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன், “இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை  அரசின் மனித உரிமை மீறலை, எமக்குச் சாதகமாக எதிர் கொள்ள வேண்டும். இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்த வேண்டும். இவை பற்றி எமது நாட்டின் இராஜதந்திர பிரதிநிதிகளிடம், வெளிநாட்டு அரசாங்கங்கள் கேள்வி கேட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றைக் கொண்டு கண்டிக்கச் செய்ய வேண்டும். அவ்வாறே ஐக்கிய நாடுகளும் எம் நாட்டு அரசாங்கத்தை விமர்சிக்க வைக்க வேண்டும்.

எமக்கு அடக்கு முறைக்கெதிராகப் போராடும் உரிமை உள்ளது. நாம் தனித்துவமான இனம், எமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் கூட்டம், அடக்கு முறைகளை எதிர்க்கும் இந் நாட்டின் ஆதிக் குடி மக்களின் வழி வந்தவர்கள் என்று தானே நாம் உரக்கக் கூறி வருகின்றோம்.” என்று கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/இலங்கையில்-கருத்துச்-சு/

இலங்கையில் கருத்து சுதந்திரம் இல்லை என்று ஒரேயடியாக கூற முடியாது. இவை எல்லாம் சர்வதேசத்தினால் அவதானிக்கப்பட்டு அடடவனைப்படுத்தப்படுகின்றது. இனி வரும் காலங்களில் எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது. ஜனாதிபதி இப்போது அதிகாரங்களை எடுத்துக்கொண்டதால் அப்படியான நிலை பின்னர் வரலாம்.
 
குடியேற்றங்கள் நடப்பது யாவரும் அறிந்ததே. இப்போது வவுனியா தெட்கு போய் வடக்கும் போகும் நிலை வந்துள்ளது.

அணமையில் அரசு ஒரு லட்ச்சம் ஏக்கர் அரச காணி பகிர்ந்தளிக்கப்போவதாகவும் , 45 வயதிட்குட்படுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறி இருந்தது. இக்காணிகள் மன்னர் , வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளை கூடுதலாக உள்ளடக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அவ்வளவு காணிகள் இல்லை.

இருந்தாலும் தமிழர்கள் அதட்காக விண்ணப்பிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு வருகின்றது. இப்போது அதன் முடிவு திகதி இம்மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இன்று காலைதான் எனக்கு கிடைத்தது. நானும் முடியுமானவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

மாற்று இனத்தவர் காணிகளை எடுத்தபின்னர் குய்யோ முய்யோ எண்டு சத்தம்போடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

எதனை அரசியல்வாதிள் மக்களை வழி காட்டுகிறார்கள். செய்யவேண்டியதை சாரையாக செய்யவேண்டும். பிறக்குவந்து மக்கள் காவலர்களாக தங்களை காட்டிக்கொள்வதில் பிரயோசனம் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.