Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007, 18:51 ஈழம்] [ப.தயாளினி]

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு.

அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன்.

வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எங்கும் வசிக்க உரிமை உண்டு என்பதை தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 376 பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இத்தகைய நடவடிக்கைகளை இப்படி அணுகக்கூடாது. சட்ட ரீதியாக அணுக வாய்ப்புக்கள் உண்டு.

கொழும்பிலிருந்து தமிழர்கள் விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் காலையில் அப்படிக் கூறியிருக்கிறார். நான் பிற்பகலில் கூறுவதுதான் அரசாங்கத்தின் நிலை. இதுவே இறுதி. தவறு நடந்துள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தின் சார்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் கோருகிறோம்.

வீதித் தடைகள், சோதனைகளால் தலைநகர் கொழும்பில் மக்கள் பாரிய அவதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க அந்நடவடிக்கைகள் அவசியமாகும்.

ஒரு ட்றக் வாகனத்தில் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கடந்த வாரம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஒரு ட்றக்கில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து இருந்தால் கொழும்பின் அரைப்பகுதி நாசமாகியிருக்கும். அதே அளவிலான இரண்டாவது ட்றக்கும் இருப்பதாக கூறப்படுகிறது என்றார் அவர்.

மேலும் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த அரசாங்கத்தில் உள்ள நபரின் பெயரை தான் வெளியிட விரும்பவில்லை என்றும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

புதினம்

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு.

அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன்.

பட்டினி போட்டும் பயணத்தைடைகளை விதித்தும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கியும், சட்டவிரோதமாய் கடத்திச் சென்று கொலை செய்தும், கல்வி தொழில் வாய்ப்பு மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள் என பலவற்றிற்கு தடை விதித்தும் இன்னும் பல்வேறு சித்திரவதைகளை செய்யும் இந்த அரசிடம் தமிழர்கள் பல சந்தர்ப்பங்களில் மகஜர் கொடுத்தும், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடத்தியும் பலவாறு மண்றாடிம் செவிசாய்க்காத அரசு சர்வதேசத்தின் கண்டனத்திற்கே செவி சாய்த்துள்ளது.

இப்போது சர்வதேசத்திற்கு சிரிலங்கா அரசை வழிக்கு கொண்டு வர நல்ல மார்க்கம் எதுவென அறிந்திருந்தும், இன்னமும் வெறுமனே வேண்டுகோள்களும் நம்பிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருப்பதேனோ?

கண்டனத்திற்கு மன்னிப்பு கேட்ட சிரிலங்கா அரசு, ஆயுத மற்றும் பொருளாதார தடைவிதித்தால் விரைந்து சமாதானத்தை கொண்டுவராதா?

வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று சிறிலங்கா காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

கொழும்பில் வைத்து மக்கள் பொலிசாருக்கு என்ன சொல்லி அழுதார்களோ அதையே அங்கும் அவர்கள் சொல்லியிருப்பார்கள்! அப்பாவிகளை கொலை செய்த பின்னர் குற்றம் சாட்டும் அரச படைகளிடம் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்?

தமிழ் மக்கள் எங்கும் வசிக்க உரிமை உண்டு என்பதை தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

நன்றி, இதை நீங்கள் கூறித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய கேவல நிலை எங்களது!!

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 376 பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

நன்றி, அது எமக்கு தேவையில்லை. விடுதிகளின் ஒரு நாள் வாடகையும், வவுனியா சென்று வந்த பஸ் கட்டணமும் மிச்சம் தானே, அது போதும். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் தான் ஈடு செய்ய முடியாதது!

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இத்தகைய நடவடிக்கைகளை இப்படி அணுகக்கூடாது. சட்ட ரீதியாக அணுக வாய்ப்புக்கள் உண்டு.

இதே கொள்கையை கடத்தி கொலை செய்யப்படும் அப்பாவிகள் விடையத்திலும் தயவு செய்து பரிசீலியுங்கள்!

கொழும்பிலிருந்து தமிழர்கள் விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் காலையில் அப்படிக் கூறியிருக்கிறார். நான் பிற்பகலில் கூறுவதுதான் அரசாங்கத்தின் நிலை. இதுவே இறுதி. தவறு நடந்துள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதனால்தான் அரசாங்கத்தின் சார்பாக வருத்தத்தையும் மன்னிப்பையும் கோருகிறோம்.

ஆகவே இந்த அரசாங்கம் பகலில் ஒன்றையும் பிற்பகலில் இன்னொன்றையுமே தெரிவித்து வருகின்றதென்பதை மாதனமுத்தா அழகாக ஒப்புக்கொண்டுள்ளார். சிரிலங்காவில் பெரும்பாலானோர் பிற்பகலில் மதுவில் மிதப்பதே வழமை, இருந்த போதும் மகிந்தவின் அரசு பிற்பகலிலேயே தனது உறுதியான இறுதி முடிவை தள்ளாடாமல் அறிவிக்கின்றது!

மேலும் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த அரசாங்கத்தில் உள்ள நபரின் பெயரை தான் வெளியிட விரும்பவில்லை என்றும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

அந்த நபர் வேறுயாருமல்ல, பாதுகாப்பு விவகாரங்களில் உயர் மட்ட முடிவை எடுக்கும் நபர் யாரோ, அல்லது யாரின் பெயர் குறிப்பிடப்படுவதை மகிந்த விரும்பவில்லையோ அவரே இவர். குற்றவாளியை பாதுகாக்க முயலும் அரசு இதேவகையினதான மேலும் பல குற்றங்களை தொடர்ந்தும் பிடிபடாமல் செய்யவே விரும்புகின்றது!

விக்ரர் பெரேரோவை உடனடியாக அரசு குற்றம் சாட்டியதற்கு அவர் மீதான பழைய பகையும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவர் முன்னர் "நாட்டில் சர்வசாதாரணமாக இடம் பெறும் கொலைகளுக்கு தனது திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருக்கின்றனர்" என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகோதரனால் தனது முகத்தில் சேற்றை வாரிக் கொண்ட மகிந்த, தனக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என குழந்தைத்தனமாக அறிவித்து, ஈற்றில் சந்திரிகா காலம் முதல் பலியாடாக பயன் படுத்தப்படும் இரத்தினசிரி அக்கிறமநாயக்கவை தன் சார்பில் மன்னிப்புக் கேட்கச்செய்துள்ளார்.

அத்துடன் மகிந்து தனது சகோதரரை பாதுகாத்துக் கொள்ள பலியாடாக கோமாளி ரம்புக்வெல்லையை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக்கி இனி வரும்காலங்களில் இடம் பெறப்போகும் அக்கிரமங்களுக்கு பலியிடத் தீர்மாணித்துள்ளார்.

இந்த வாரம் மன்னார் தாக்குதலில் ஆரம்பித்து, நாடுகடத்தல் நாடகம் வரை மகிந்த அரசு பாரிய தோல்விகளை சந்தித்து நிற்கின்றது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

செய்கிறதையும் செய்து போட்டு மன்னிப்பு வேறை.இவர்கட்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களாகப் போய் விட்டார்கள்.உலக நாடுகளின் அழுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது.மேலும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் உலக நாடுகட்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம்,உலக நாடுகள் (சிரி) லங்காவுக்கு பாரிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறிதிப்படுத்த வேண்டும்.

...

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 376 பேருக்கு நட்ட ஈட்டுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

...

நட்ட ஈடு கொடுப்பதை மிக அவதானமாகப் பரிசீலிக்க வேண்டும்.

376 பேருக்கான நட்ட ஈட்டுத் தொகை மகிந்த குடும்பத்தின் கால் தூசுக்குச் சமன்.

ஆனால் அரசாங்கத்தினால் ஊர்கடத்தப்பட்டவர்களுக்கே நட்ட ஈடு கொடுத்தால், வீடு கடத்தப்பட்டவர்களும் காணி கடத்தப்பட்டவர்களும் வந்து வரிசையில் நின்றால், மகிந்தா ஜப்பானிடம் இராப்பிச்சை எடுத்தாலும் போதாது.

சர்வதேச கண்டனங்களுக்கு இலங்கை அரசு பணிந்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இலங்கை அரசு செய்த, செய்து கொண்டிருக்கும் படு கொலைகள் மற்றும் யாழ் பாதை மூடிய செயல் அத்தோடு கிழக்கில் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட லட்சம் மக்கள், விமான குண்டு வீச்சில் கொல்லப்படும் மக்கள், கடத்தல,; காணமல் போதல் போன்ற படு பாதக செயல்களுக்கு சர்வதேசம் கொடுக்காத அழுத்தம் இந்த பிரச்சனைக்கு கொடுத்திருக்கின்றது. இதற்கு தமிழர்கள் வெளியேற்றப்பட்டதானது அவர்களின் தனிநாட்டு கோரிக்கையை வலுப்படுத்தி விடும் என்ற அக்கறையும் ஓரு காரணம் ஆகும். தமிழர்கள் வெளியேற்றப்பட்டது சிங்களத்தின் பேரின வதத்தை இயல்பாக காட்டியது. அதற்காக மன்னிப்பு கோருவது சிங்களத்தின் இயல்பும் இல்லை. இன முரண்பாடு இயல்பாக இருப்பதை தமிழர்களை வெளியேற்றிய செயல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன முரண்பாடு இல்லை என்று சர்வதேச கண்டனங்கள் சிங்களத்தை நடிக்கச் செய்திருக்கின்றது. எது எப்படி இருப்பினும் சர்வதேசத்துக்கு சிங்களம் பற்றிய ஒரு புரிதலை அவர்களாகவே ஏற்படுத்தியிருப்பது தமிழர்களுக்கு சாதகமான விடயமே ஏனெனில் சர்வதேசத்தின் சிங்களம் சார்பான எண்ணத்தில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. சிங்களம் தமிழருக்கு என்ன எப்ப செய்யும் என்று சர்வதேசம் ஒரு நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது. சர்வதேசம் தனது எண்ணங்களுக்கேற்ப சிங்களத்தை கையாள முடியாது என்ற தோற்றத்தையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

Edited by sukan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.