Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் நினைவேந்தல் தடை தொடர்பான வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் நினைவேந்தல் தடை தொடர்பான வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பொலிஸ் நிலையங்களினால்  கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று, இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர்.

spacer.png

இந்த நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக 23.11.2020 நேற்றைய தினம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

அதில் குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் நிர்வாக உறுப்பினர் சுப்பிரமணியம் பரமானந்தம், தமிழ் ஆர்வலர்களான தம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலாஆகியோர் அடங்கிய பதின்நான்கு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதற்கமைய 23.11.2020 நேற்று குறித்த வழக்கு விசாரணைகள் நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகளில் தடைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக மன்றில் ஆஜரான பிரதான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மன்றில் முன்வைத்த கடுமையான வாதத்தினையடுத்து, குறித்த வழக்கின் கட்டளையினை வழங்குவதற்காக நீதவான் எதிர்வரும் 25 ஆம் திகதி புதன் கிழமைக்கு வழக்கினைத் திகதியிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பொலிஸார் மாவீரர் தின நினைவேந்தலை நடாத்துவதனை தடுக்கும்படியான கட்டளைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே எடுத்திருந்தார்கள்.

இந்த உத்தரவுகளானது 106(1) என்கின்ற பிரிவின் கீழே எடுக்கப்பட்ட உத்தரவுகள் அதனை 106(4)இன் கீழே நீதிமன்றம் நீக்கலாம். அல்லது மாற்றலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் 23.11.2020 நேற்று நகர்த்தல் பத்திரங்கள் இந்த ஆறு வழக்குகளிலேயும் பதிவு செய்து திறந்த மன்றிலே இந்தச் சபைக்கட்டளைகள் நீக்கப்படவேண்டும் என்று சமர்ப்பணங்கள் செய்திருக்கின்றேன்.

spacer.png

குறித்த நீதவானுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நியாயதிக்கமானது அத்தியாயம் 09இன் கீழே புதுத் தொல்லைகளைத் தடுப்பதற்கான நியாயாதிக்கமாகும். அப்படியான நியாயாதிக்கத்தின் கீழே இங்கே கொடுக்கப்பட்ட கட்டளைகள் கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் கொடுக்கப்படவில்லை என்ற பிரதானமான வாதத்துடன், குற்றச்சம்பவங்களுடன் யாராவது ஈடுபட்டால் அதற்கு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிமையுண்டு.

ஆனால் ஒரு குற்றச்செயலைச் செய்யக்கூடாது, செய்யவேண்டாம் என்று தடுப்பதற்கான உத்தரவுகளை இந்த அத்தியாயத்தின் கீழ் பெறமுடியாது என்ற வாதத்தினையும் நீதிமன்றத்தின் முன்பாக சமர்ப்பணமாகச் செய்திருக்கின்றோம்.

இதனைச் செவிமடுத்த நீதவான் இது தொடர்பாக தன்னுடைய கட்டளையினை எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை வழங்குவதாகக் கூறி வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு திகதியிட்டிருக்கின்றார்.
 

 

https://www.virakesari.lk/article/95100

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாவீரர் நாள் தடை உத்தரவு வழக்கு ஒத்தி வைப்பு

 
1-160-696x397.jpg
 56 Views

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை  வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியானத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் வாரம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்’ என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.

அத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழில்-மாவீரர்-நாள்-தடை-உ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.