Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்

 

 

http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-696x387-1.jpg

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் நினைவுநாளை நடத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் நீதிமன்றில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யபட்டது.

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

அத்துடன் கொவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது வழக்கின் பிரதிவாதிகளான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், கே.சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, ஏனைய பிரதிவாதிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருற்தமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம்: சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன்

 

(மன்னார் நிருபர்)

தமிழர்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வுபூர்வமான நினைவேந்தலை நினைவு கூருவதற்கு சட்ட ரீதியாக எந்தவிதத் தடையும் இல்லை என மன்னார் சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் தெரிவித்தார்.

DSC_0744-300x177.jpg
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடகச் சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை(25) காலை மன்னாரில் இடம்பெற்றது.இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவீரர் நினைவு தொடர்பாக எல்லா இடங்களிலும் நீதிமன்றமானது அதை நினைவு கூர்வதற்கு தடை விதித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.

இது சம்பந்தமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைவாக இந்த நீதி மன்றத்தினால் நினைவு கூர தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் எமது சார்பாக ஒரு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து தடைக்கு எதிராக எமது ஆட்சேபனையை நாங்கள் தெளிவாகக் கூறியிருந்தோம்.

ஆனாலும் அதனைத் தொடர்ந்தும் இந்த நீதிமன்றமானது இந்தத் தடை உத்தரவை நீடித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்த நீதிமன்றத்தின் கட்டளையை நாங்கள் மதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதே நேரத்தில் எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களையும் நாங்க மதிக்க வேண்டிய தேவை உள்ளது.

எனவே சட்ட ரீதியாக இந்த நீதிமன்றத் தடையானது எமது உறவுகளின் நினைவு நிகழ்வை பொது இடத்தில் மக்களை ஒன்றுகூட்டி செய்வதற்குத்தான் தடை விதித்துள்ளனர்.

ஆகவே உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வுபூர்வமான நினைவேந்தலை நினைவு கூர சட்ட ரீதியாக எந்தவிதத் தடையும் இல்லை.

எனவே எதிர் வரும் 27 ஆம் திகதி நாங்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக எமது இடங்களிலே இருந்தவாறு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் ஒன்றுகூடாமல் நீதிமன்றத்தின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம் என்றார்.

நீதிமன்றின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம்: சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் – Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.