Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

 
1-27.jpg
 44 Views

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும்.” என்று தெரிவித்துள்ளர்.

இந்த சூழலில் சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்கிறது. இதனால் சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/சென்னையில்-தொடரும்-கனமழை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்- 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்- 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

 

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் சின்னங்களால் இந்த பகுதி பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் அப்பகுதி விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதில் 3 லட்சம் ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் கரு சிதைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 758 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் கடலை, சோளம், பருத்தி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்ட கரும்புகள் 25 ஏக்கரில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. திருவாரூரில் உள்ள கூடூர் காற்றாற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சம்பா, தாளடி பயிர்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க எவ்வித வசதியும் இல்லாததால் சுமார் 500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

நாகை அருகே ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது.

சீர்காழி பகுதியில் தொடர் மழை காரணமாக 700 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று பெய்த 21 செ.மீ. மழையால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி கிடக்கும் சம்பா, தாளடி, நெற்பயிர்கள், நிலக்கடை, சோளம், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள வயல்களை அந்தந்த பகுதியின் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து வயல்வெளிகளை சூழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், புள்ளம்பாடி ஆலம்பாடி, லால்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. திருவெறும்பூர் பகுதியில் 400 ஏக்கர், ஆலம்பாடியில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் பெரியகருப்பன் இன்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, திருச்சியில் நேற்று 11.70 மி.மீட்டர் மழை பதிவானது. ஆனால் இன்று(சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் 13.9 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் நெற்பயிர்களில் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.

வாய்க்கால்களிலும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மழை நீர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் மழை பெய்யாவிட்டால் முழுமையாக நீர் வடிந்து விடும் என்றார்.

மொத்தத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள் விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு காலதாமதமின்றி உயர்மட்டக்குழு மூலம் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/05120820/2136465/Tamil-News-Burevi-Cyclone-10-lakh-acres-crops-Damage.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு இன்று நேரில் ஆய்வு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு இன்று நேரில் ஆய்வு

சென்னை, 

தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர். அவர்களிடம், புயல் ஏற்படுத்திய சேதங்கள் பற்றி படக்காட்சியுடன் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ‘நிவர்’ புயல் வீசியது. இது கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன.

புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மனோகரன், ரணன்ஜெய் சிங், பர்தெண்டு குமார் சிங், ஓ.பி.சுமன், தர்மவீர் ஜா, பால்பாண்டியன், ஹர்ஷா ஆகிய 7 அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.

மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர்கள் தலைமைச்செயலகத்திற்கு பிற்பகலில் வந்தனர்.

அங்கு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச்செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மத்திய குழுவினருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, புயல், மழை சேதங்கள் தொடர்பான விளக்கங்களை அளித்தார். அப்போது வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் அவர்களுக்கு காட்டப்பட்டன.

இன்று (6-ந் தேதி) மத்திய குழுவினர் 2 குழுக்களாகப் பிரிந்து, தமிழகத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடச் செல்கிறார்கள். இந்த குழுவினர் தென்சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் ஏற்படுத்திய சேதங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்வார்கள். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் செல்வார்கள்.

மகாபலிபுரத்தில் மதிய உணவு சாப்பிடும் அவர்கள், இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு செல்கின்றனர். இரவு அங்கு தங்குகின்றனர்.

நாளை (7-ந் தேதி) புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து சேதம் குறித்து விசாரிப்பார்கள். பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். பின்னர் சென்னைக்கு வருகின்றனர்.

இரண்டாவது குழுவின் தொடர்பு அதிகாரியாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 6-ந் தேதி (இன்று) இந்த குழுவினர் வடசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, புயல் ஏற்படுத்திய சேதங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்வார்கள். பிற்பகலில் வேலூர் புறப்படும் அவர்கள், இரவில் அங்கு தங்குகின்றனர்.

7-ந் தேதி (நாளை) காலையில் இருந்து மாலை வரை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து சேதம் குறித்து விசாரிப்பார்கள். பின்னர் அங்கிருந்து மாலையில் சென்னைக்கு புறப்படுகின்றனர். இரவில் சென்னையில் தங்குகின்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு சேதங்களின் விவரங்களை குறிப்பெடுத்துக்கொள்ளும் மத்திய குழுவினர், 8-ந் தேதி காலை தலைமைச்செயலகத்துக்கு வருகின்றனர். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/06050535/The-Central-Committee-today-personally-inspected-the.vpf

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.