Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்!

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்

 

கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

சுமார் 50 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,250 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றியுள்ளனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்
 
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்

இதுபற்றி  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்குப் பகுதியிலிருந்து நிலவறைக் கால்வாய் வழியாக மழைக் காலங்களில் சேரும் உபரிநீரினைக் கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தைச் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை என்கிறார்கள்.

 

கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த சிறந்த நீர் மேலாண்மை, குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்குத் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். ‘பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும்' என்ற பழமொழி இதற்குப் பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்
 
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்

ஸ்ரீ நடராஜர் கோயில் நிலவறைக் கால்வாய் 1,250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவை 24 X 15 X 5 செ.மீ நீள, அகலங்களைக் கொண்டதாகும். 1:3:5 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்களை இந்தக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளைக் கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும்போது பிற்காலச் சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/government-and-politics/archaeology/excess-rainwater-exhaust-dungeon-canal-in-nadarajar-temple-built-by-the-cholas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.