Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று!

http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது.

வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை கடந்த திங்கட்கிழமை தவிசாளர் தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்தார்.

குறித்த விண்ணப்பத்தினை பரிசீலனைக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் (புதன்கிழமை) குறித்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது அச்சுவேலி பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

விசாரணைக்காக நீதிமன்றமோ அல்லது அச்சுவேலி பொலிஸாரோ தம் முன்னிலையில் தோன்றுமாறு கோரினால் அங்கு முன்னிலையாக வேண்டும் எனும் நிபந்தனையுடன், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையுடன் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கவுள்ளதாக அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.

இவ் வீதியை சீரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை நடப்பட்டது.

குறித்த பெயர்ப்பலகையை நட அனுமதி பெறப்படாததால் அதனை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

ஒருகடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் பெயர்ப்பலகையை அகற்றாத நிலையில், பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை எக்காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் சீரமைக்க முடியாது என கூறி அதனை தவிசாளர் அகற்றியிருந்தார்.

குறித்த பெயர் பலகையை அகற்றியது மூலம் அரச சொத்துக்கு சேதம் விளைவித்தார் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை தவிசாளரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பொலிஸார் தவிசாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தவேளை, தவிசாளர் பொலிஸார் தன்னை கைது செய்வதனை தவிர்க்கும் முகமாக முன் பிணை விண்ணப்பத்தினை மல்லாகம் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று! | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பழிவாங்கல் கைதிலிருந்து விடுதலை பெற்றேன்; சகலருக்கும் நன்றி – தவிசாளர் நிரோஷ்

அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இந்த இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

NIROSH-300x197.jpg
தன்னை பொலிஸார் கைது செய்வதில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்ட காலமாக அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டே இருக்கின்றனர். அப்படியிருக்க எமது சபையினால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி வளம் போதாது என்பது சகலரும் அறிந்த விடயம்.

இந் நிலையில் எமது பகுதிகளுக்கு அற்பசொற்பமான அபிவிருத்திகளே தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்றன.

வழங்குகின்ற அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின்ற உள்ளூராட்சி மன்றகளின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக் கூடாது.

இதனை நான் வலியுறுத்துகையில் ஜனநாயக ரீதியிலான அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில் என் மீது அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எமக்கு எதிராக அரச திணைக்களங்களை அழுத்தங்களைப் பிரயோகித்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன.

பொலிஸார் என்னைக் கைது செய்ய அலுவலகம், நான் செல்லும் இடங்களுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றால் அது உயர்மட்ட அரசியல் அழுத்தத்தின் விளைவே ஆகும். நான் பொலிஸார் பெற்ற வாக்குமூலங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினேன். கைது முயற்சி அரசியல் பழிவாங்கல் என்றபோதே நான் நீதிமன்றை நாடினேன். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் தொலைபேசிவாயிலாக அறிவித்தேன். அரசியல் பழிவாங்கல் இடம்பெறும் என்றால் பாதுகாப்புப் பெறுவது எனது உரிமை.

இந்நிலையில் நான் நீதிமன்றின் உதவியை நாடி எனக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டுள்ளேன். நீதிமன்றம் எமது முன்பிணை மனுவை ஆராய்ந்து முன்பிணை அளித்துள்ளது. நாட்டின் பிரஜை எனற வகையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கும் நீதிமன்றின் கட்டளைகளை மதிக்கின்றேன். நான் பழிவாங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்ற நிலையில் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.

இதேவேளை எனது கைதுக்கு எதிராக திரண்ட மற்றும் ஒத்துழைத்த தமிழ் அரசியல் தலைவர்கள், வழக்கை முன்கொண்டு சென்ற சட்டத்தரணிகள், தகவல்களை வெளிப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

 

அரசியல் பழிவாங்கல் கைதிலிருந்து விடுதலை பெற்றேன்; சகலருக்கும் நன்றி – தவிசாளர் நிரோஷ் – Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.