Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தி விரட்டியடித்த பொலிஸார்!: மட்டக்களப்பில் பதற்றம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தி விரட்டியடித்த பொலிஸார்!: மட்டக்களப்பில் பதற்றம்!!

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர்.

spacer.png

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று  மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை பொலிஸார் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

spacer.png

இன்று காலை 8.30 மணியளவில் மாவட்டம் முழுவதும் இருந்து மட்டக்களப்பு நகருக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தடுத்து நிறுத்தி களைந்து செல்லுமாறு பொலிஸாரும் பொதுச் சுகாதார பரிசோதகரும் எச்சரிக்கை செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

spacer.png

அனுமதி எடுக்காது ஆர்ப்பாட்டம் நடத்தினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அச்சுறுத்திய போது அதில் இருந்த ஒரு பெண்மணி  "நீங்கள் கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா நீங்கள் என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள்" எனகூறியதால் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

spacer.png

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அனுமதி பெற்றே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் 14 நாட்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்திய நிலையில் காணாமல் போன உறவினர்களுக்கும், பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த இடத்திலிருந்து களைந்து சென்று தந்தை செல்வா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

https://www.virakesari.lk/article/96290

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

 
IMG_7400-1-696x392.jpg
 51 Views

சர்வதேச மனித உரிமைகள்  நாளை முன்னிட்டு வடகிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

IMG_7363.jpg

மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_7400.jpg

இன்று காலை மட்டக்களப்பில் போராட்டம் நடாத்துவதற்கு மட்டக்களப்பு பிரதானபேருந்து நிலையத்திற்கு வருகைதந்த தாய்மாரை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்த நிலையிலும் அதனையும் கடந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_7511.jpg

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்கா முன்பாக ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

IMG_7641.jpg

காணாமல்போன தங்களின் உறவுகளின் புகைப்படங்களையும் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் உறவினர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

IMG_7451.jpg

‘எமது உறவுகளை மலினப்படுத்தாதே,எம் கண்முன்னே இழுத்துச்செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே,சர்வதேசமே மனித உரிமைகள் பேச்சளவில்தானா,நீதி கேட்கும் நாங்கள் அப்பாவிகள் எங்களை ஏன் தீவிரவாதிகளாக பார்க்கின்றீர்கள்,எமது உறவுகளை தேடுவது தேசவிரோதமா,மனித உரிமைகள் எமக்கு இல்லையா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_7586.jpg

தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவும் காலம் என்ற காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் கலந்துகொண்டு சுகாதார நெறிமுறைகளை பின்பற்றியவாறு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

IMG_7667.jpg

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,காணாமல்போனவர்களின் உறவினர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_7609.jpg

இதன்போது சர்வதேச மனித உரிமைகள் நாளைில் காணாமல்போன தமது உறவுகளை கண்டறிவதற்கான நிலையினை இழந்து நிற்பதாக, என்னும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு  மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளாரிடம்   கையளிக்கப்பட்டது.

IMG_7400-1.jpg

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நீண்டகாலமாக தாங்கள் தமது உறவுகளை தேடி பல போராட்டங்களை நடாத்திவருகின்றபோதிலும் தமது குரல்வளைகளை நசுக்கும் செயற்பாடுகளே இந்த நாட்டில் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும்  கவலை தெரிவித்துள்னர்.

IMG_7598.jpg

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் சொத்து சுகம் கோரவில்லை,உங்களினால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்ட எங்கள் உறவுகளையே கேட்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

IMG_7618.jpg

எங்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை.இந்த நாட்டில் எங்களது உறவுகளை தேடி எங்களுக்கான நியாயத்தினைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் தலையிடவேண்டும்,ஐநா மனித உரிமைகள் ஆணையம் எமக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

https://www.ilakku.org/மட்டக்களப்பில்-காணாமல்ஆ/

 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மனித உரிமைகள் தினம்- முல்லைத்தீவு,யாழில் போராட்டம்

 
1-2-696x392.jpeg
 42 Views

சர்வதேச மனித உரிமைகள்  நாளை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இந்தநிலையில் இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்திருந்ததுடன், போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு குறித்த அலுவலகத்தினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/சர்வதேச-மனித-உரிமைகள்-தி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.