Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளை அழ வைத்த 'ராமேஸ்வரம்'

Featured Replies

"உலக பிரசித்த பெற்று... காலம் கடந்து நிற்கும் மறக்க முடியாத எல்லா திரைப்படங்களுமே.. காதலை மையமாகக் கொண்டு மனித வாழ்வினை பதிவு செய்யப்பட்டதே...

ராமேஸ்வரமும் இந்த வகையைச் சார்ந்தவையே... சிவாநந்த ராசா என்ற ஜீவனுக்கும் (ஜீவா) வசந்தி என்ற (பாவனா) பெண்ணுக்கும் ஏற்படும் காதலே கரு." 'ராமேஸ்வரம்' கதைப்பற்றி அழகாக விவரிக்கிறார் இயக்குனர் செல்வன். பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள இவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ITA Films சார்பில் S.N. ராஜா தயாரிக்கிறார்.

ஜீவாவிற்கு கெட்டப் மாற்றம் இருக்கிறதா?

வேகமும், வேதனையும் கொண்ட முகம், வரண்ட உதடுகள்... அனல் கக்கும்பார்வை... இதுதான் ஜீவா...! ஒரு அகதி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். பேச்சும், நடையும் மிரட்சியடைய வைக்கும். மனது முழுவதும் நெருப்பை அடைகாக்கும் இளைஞன் தாத்தாவின் அன்பை தவிர்க்க இயலாது அகதியாக ராமேஸ்வரம் வருகிறான். எல்லோராலும் அன்பு செய்யப்பட்டு சந்தோசம் மட்டுமே கிடைக்கப் பெற்ற வசந்தியின் இரக்கம் ஜீவன் மீது காதலை ஏற்படுத்துகிறது.

ஆயிரம் உண்மையான அகதிகளை பத்து நாட்கள் நடிக்க வைத்திருக்கிறோம். எல்லாத்தையும் இழந்து அகதிகளாக இந்தியா வரும் ஒரு காட்சியில் உண்மையான அகதிகள் கதறி அழுதுவிட்டார்கள்.

ராமேஸ்வரத்திற்கு பிறகு... ஜீவா உலகத் தமிழர்களின் வீட்டுப் பிள்ளையாகி விடுவார் என்பதில் சந்தேமே இல்லை. வலியையும், ஆதங்கத்தையும் சமூக கோபத்தையும் இத்தனை அழகாக ஜீவா தனது முகபாவத்தில் காட்டுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க இயலாது.

சுட்டித்தனமும், அன்பும் கொண்ட பெண்ணாக பாவனா பிரமாதப்படுத்தியிருக்கிறார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சும், நடையும் மிரட்சியடைய வைக்கும்.

தெனாலி மாதிரி தமிழை நக்கல் பண்ணாமல்படம் வந்தால் சரி.

தெனாலி மாதிரி தமிழை நக்கல் பண்ணாமல்படம் வந்தால் சரி.

என்ன நக்கல் என்று ஒருக்கா சொல்லுங்கோ ஐயா. இலங்கையில் தயாரான பைலட் பிரேம்நாத்தில் மனோரமா யாழ்ப்பாணத்தமிழை நாத்தியபோது எங்கே போயிருந்தீர்கள். இத்தனைக்கும் அதன் துணை இயக்குனர் ஜோ தேவ் ஆனந்த் யாழ்ப்பாணத்தவர். அவர் மனோரமாவை திருத்தவில்லை. கமல் தெனாலியில் ரிவி பேட்டிக்காட்சியில் தன் கதை சொல்ல கண்ணீர் விட்டவர்கள் தான் அதிகம்.. ஏதோ அப்படியாவது முயற்சி செய்ததையிட்டு சந்தோசப்படுங்கள்.. அவர் பேசியது ஒரு வட்டார வழக்கு. வடமராட்சியில் ஒரு வழக்கு. அச்சுவேலியில் ஒருவழக்கு. தீவுப்பகுதியில் ஒரு வழக்கு. எதை யாழ்ப்பாணத்தமிழ் என்று சொல்லப்போகிறிர்கள் ? நான் யாழ்ப்பாணத்தமிழ் பேசுகிறேன் என்று அவர் சொல்லவில்லை இந்தியாவில் ஒருகிழமை இருந்துவிட்டு வந்து வாங்க போங்க என்று சிலர் பண்ணும் அட்டகாசம்.. போதாக்குறைக்கு அசிங்கமாக நகைச்சுவை செய்யும் நடிகர்களின் கக்கக்க பிக்கக்க போன்ற சொற்களை பொறுக்கி வைத்து கெட்டித்தனம் காட்டும் சிலரைவிட கமல் பேசியது பரவாயில்லை.

:angry:

Edited by Ponniyinselvan

ஒரு அகதியின் காதல் கதை

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த வாலிபனின் காதல் கதையை ராமேஸ்வரம் என்ற பெயரில் நேர்த்தியாக செதுக்கி வருகிறார் புதுமுக இயக்குநர் செல்வம்.

ஜீவா, பாவனாவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் ராமேஸ்வரம். புதுமுக இயக்குநர் செல்வம் படத்தை இயக்கி வருகிறார்.

ராமேஸ்வரம் என்று பெயர் வைத்துள்ளீர்களே, புலிப் பாய்ச்சலாக எதுவும் இருக்குமா என்று கேட்டோம். அதற்கு செல்வம், இதில் அரசியல் சுத்தமாக கிடையாது. அருமையான பொழுது போக்குச் சித்திரமாக இருக்கும். அப்பழுக்கற்ற காதல் கதையாக இருக்கும்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் காதல் கதை இது. இலங்கை கதைப் பின்னணி என்பதால் இதில் இலங்கைத் தமிழர்களின் போராட்டங்கள் குறித்த எதுவும் படத்தில் இடம் பெறாது. காதல்தான் படத்தின் ஆணிவேர்.

டைட்டானிக் படத்தில் வரும் காதலை போல, ஆழமான காதலை இப்படத்தில் நான் காட்டியுள்ளேன். ராமேஸ்வரத்தில் கதை நடப்பது போல கதையை வடித்துள்ளேன்.

சிவானந்த ராசா என்ற கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார். மண்டபம் முகாமில் தங்கியிருக்கிறார் ஜீவா. அதே முகாமில் பாவனாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே காதல் முகிழ்க்கிறது.

படத்தின் பாடல் காட்சிகளுக்காக நாங்கள் கம்போடியா போய் வந்தோம். ரொம்ப வித்தியாசான லொகேஷன்களில் படம் பிடித்துள்ளோம்.

மண்டபம் அகதிகள் முகாமிலேயே படப்பிடிப்பை நடத்த நினைத்தோம். ஆனால் அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்கவி்ல்லை. இதையடுத்து அகதிகள் முகாம் போல பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினோம் என்றார் செல்வம்.

உடன் இரு்நத ஜீவா பேசுகையில், இப்படிப்பட்ட நல்ல படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். இந்தப் படம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே எனக்கு நல்ல அங்கீகாரத்தை வாங்கித் தரும் என்று நம்புகிறேன் என்றார்.

இயற்கை, ஈ படங்களில் கேமராமேனாக பணியாற்றிய ஏகாம்பரம்தான் இப்படத்துக்கும் கேமராவை முடு்கியுள்ளார்.

அகதிகளின் கதையாக இருந்தாலும் சோகம் அதிகம் இல்லாத அழகிய கதையாக இருக்கும் என நம்புவோம்.

-thatstamil-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.