Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி

ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் பெண். (சித்திரிப்புப் படம்)

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

'குழந்தைகள் பண்ணை' முறையால், 1980களில் இலங்கையில் தத்து எடுப்பது தற்காலிக தடைக்கு உள்ளானது. (சித்திரிப்புப் படம்)

சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த சட்டவிரோத வர்த்தகம் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளத்தில் காணொளி விளம்பரம் ஊடாக பிரசாரம் செய்து, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை, குறித்த நபர் முதலில் தமது இடத்திற்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களுடன், இந்த சந்தேகநபர் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தமது குழந்தைகளை குறித்த நபர் தன்வசப்படுத்திக்கொண்டு, அந்த குழந்தைகளை மூன்றாவது தரப்பிற்கு விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 12 பெண்களை, சிறுவர் மற்றும் மகளிர் போலீஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேரின் குழந்தைகளை, குறித்த நபர் மூன்றாவது தரப்புக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக வெளியாகியுள்ளது. 

அதுமாத்திரமன்றி, சந்தேகநபரின் பாதுகாப்பில் மேலும் 12 கர்ப்பணி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார். 

கொழும்பு புறநகர் பகுதியான மொறட்டுவை நகரில் இரண்டு இடங்களில் இந்த சட்டவிரோத குழந்தை வணிகம் முன்னெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றும் திருமணத்திற்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் ஆள் கடத்தல் வர்த்தக குற்றச்சாட்டின் கீழ் இது தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

குழந்தையொன்று பிறப்பதற்கு முன்பதாகவே விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்படுவதானது, ஆள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றம் எனவும் அவர் குறிப்பிடுகிறார். 

இலங்கை சட்டத்தின் படி, குழந்தையொன்று மூன்றாவது தரப்புக்கு வழங்கப்படுவதாயின், அது மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை என அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை - உக்குவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

1980களில் நடத்ப்பட்ட குழந்தைகள் பண்ணை 

இலங்கையில் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் பண்ணையொன்று நடத்தப்பட்டதை இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் ஏற்றுக்கொண்டிருந்தனர். 

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அந்த காலப் பகுதியில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

1980ம் ஆண்டு காலப் பகுதியில் மாத்திரம், சுமார் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள குடும்பங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், மீண்டும் குழந்தைகள் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-55416347

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் மீண்டும் குழந்தைகள் விற்பனை

1-136-696x387.jpg
 38 Views

இலங்கையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று,  சட்டவிரோத குழந்தைகள் விற்பனை நடப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் பண்ணையொன்று நடத்தப்பட்டது, அதில் இருந்து  சுமார் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள குடும்பங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில், மீண்டும் குழந்தைகள் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த சட்டவிரோத வர்த்தகம் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார்.

அவர் இந்த குழந்தைகள் விற்பனை குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“இணையத்தளத்தில் காணொளி விளம்பரம் ஊடாக பிரசாரம் செய்து, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை, குறித்த நபர் முதலில் தமது இடத்திற்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களுடன், இந்த சந்தேகநபர் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தமது குழந்தைகளை குறித்த நபர் தன்வசப்படுத்திக்கொண்டு, அந்த குழந்தைகளை மூன்றாவது தரப்பிற்கு விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 12 பெண்களை, சிறுவர் மற்றும் மகளிர் போலீஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேரின் குழந்தைகளை, குறித்த நபர் மூன்றாவது தரப்புக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக வெளியாகியுள்ளது.

அதுமாத்திரமன்றி, சந்தேகநபரின் பாதுகாப்பில் மேலும் 12 கர்ப்பணி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொழும்பு புறநகர் பகுதியான மொறட்டுவை நகரில் இரண்டு இடங்களில் இந்த சட்டவிரோத குழந்தை வணிகம் முன்னெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் ஆள் கடத்தல் வர்த்தக குற்றச்சாட்டின் கீழ் இது தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம்.

குழந்தையொன்று பிறப்பதற்கு முன்பதாகவே விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்படுவதானது, ஆள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றம்.

இலங்கை சட்டத்தின் படி, குழந்தையொன்று மூன்றாவது தரப்புக்கு வழங்கப்படுவதாயின், அது மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை – உக்குவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்

 

https://www.ilakku.org/?p=37771

30 குழந்தைகளை விற்ற சந்தேக நபருக்குப் பிணை

 

புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளை விற்றதாகக் கூறப் படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபருக்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப் பட்டுள்ளது.

download-2-21.jpg

புதிதாகப் பிறந்த 30 குழந்தைகளைப் பணத்திற்காக விற் றார் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டகுறித்த நபர் சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணை களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீண்டும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/100276

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குழந்தைகள் விற்பனை – சமூக ஊடகங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பெரும் குற்றச்செயல்

சிஎஸ்சி என்ற அமைப்பின் தலைவர் மஞ்சுள உக்வத்த என்பவர் 21ம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸின் மகளிர் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.
புதிதாக பிறந்த குழந்தைகளை வாங்கி அவற்றை தத்தெடுப்பவர்களிற்கு விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டார்.

mother-selling-newborn-baby-to-300x169.j
கர்ப்பிணிப்பெண்களிற்கு இடமளித்து அவர்களை பராமரித்து அவர்கள் பிள்ளை பெற்ற பின்னர் அந்த பிள்ளைகளை பணத்திற்காகவும் ஏனைய நன்மைகளுக்காகவும் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அந்த நபர் கைதுசெய்யப்பட்டார் என கிராண்ட்பாசில் உள்ள பெண்கள் சிறுவர்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர் 30 குழந்தைகளை விற்றுள்ளார் என்பதை பொலிஸ்பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.
மொரட்டுவையில் உக்வத்த இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறித்து தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைததுள்ளதாக ஒக்டோபர் 31ம் திகதியே தெரிவித்திருந்ததாக சிலோன் டுடே சுட்டிக்காட்டியுள்ளது
சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கை ஊடாகவே உக்வத்த இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
கர்ப்பிணிப்பெண்கள் பிள்ளைகளை பிரசவிக்கும் வரையில் அவர்களிற்கு தனது அமைப்பு உதவி செய்வதாகவும் பின்னர் தத்துக்குடுப்பதற்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாக முகநூலில் தெரிவித்து வந்தார்.
அவரது முகநூல் பிரச்சாரத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.
குழந்தைகளை தத்துக்கொடுப்பதற்கு அவரது அமைப்பிற்கு அதிகாரிகள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்பதை நாங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.இலங்கையின் சட்டங்களின் படி தத்துக்கொடுப்பதற்கான அனுமதியை மாவட்ட நீதிமன்றங்கள் மாத்திரம் வழங்க முடியும் அதனை பல அரச அமைப்புகளின் விசாரiணையின் பின்னரே செய்ய முடியும்.
மேலும் குழந்தைகளை தத்துக்கொடுப்பதற்காக பணத்தையும் ஏனைய ஆதாயங்களையும் பெறுவது தடை செய்யப்ட்டுள்ளது.

baby-selling-racket-071519-300x169.jpg
உக்வத்தயின் நடவடிக்கைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவர் குழந்தைகளை தத்தெடுத்தவர்களிடமிருந்து இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணம் பெற்றார் என்ற முறைப்பாடுகள் காணப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு பணம் வழங்கி அந்த பெண்களின் குழந்தைகளை இவர் வாங்கி விற்றார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் உள்ள சிபிடிசில்வா மாவத்தையிலும் தகமமாவத்தையிலும் இவர்கள் கர்ப்பிணிப்பெண்களை சந்தித்துள்ளார்.
12 பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

rohana.jpg
இவர்களில் ஐந்து பெண்கள் ஏற்கனவே தங்கள் புதிதாக பிறந்த குழந்தைகளை பணத்திற்காக இவரிடம் விற்றிருந்தனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் மேலும் மூன்றுபெணகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்போது இந்த குற்றச்செயலில் மேலும் 12 பெண்களிற்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களை அடிப்படையாகவைத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்போது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பலர் குறித்த விபரங்கள் தெரியவரலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குழந்தைகள் விற்பனை – சமூக ஊடகங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பெரும் குற்றச்செயல் – Thinakkural

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.