Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை

Digital News Team

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

vaiko9455-1610352950-300x169.jpg
வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

pjimage-2021-01-11T124743.529-1024x576-1

இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பாக வைகோ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, விசிகவின் வன்னி அரசு உள்ளிடட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Thinakkural.lk 

 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வை.கோ உள்ளிட்ட 300 பேர் கைது! - Today  Jaffna News - Jaffna Breaking News 24x7

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது !

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதைக்கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு வைகோ தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றனர். அதைத் தொடர்ந்து வைகோ, முத்தரசன் உள்ளிட்ட அனைவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், மாலை வேளையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இலங்கை தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மேற்படி போராட்டத்தில்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன்,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட 13 கட்சிகள்,  அமைப்புகளின் தலைவர்கள்,  பிரதிநிதிகள் என 300 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போராட்டத்தின்போது கருத்து தெரிவித்த வைகோ,  “இலங்கைத் தமிழரின் வரலாறு சொல்லும் எச்சங்களை அழித் தொழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகிறது.  இன்று இந்த போராட்டம் முடக்கப்படலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்காலத்தில் இளைஞர் படை எழுச்சியுடன் போராடும். அந்த நாள் நிச்சயம் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கை-துணைத்-தூதரகத்தை/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.