Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்! |  Athavan News

ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!

அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தலைவர் நான்சி பெலோசி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க 25ஆவது சட்டத்திருத்தத்தின் அதிகாரங்களை செயற்படுத்தும்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸை வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்தை நான்சி பெலோசி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

எனினும் இந்த கண்டனத் தீர்மானம் தொடர்பாக செனட் சபையில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ட்ரம்ப்பை-பதவியிலிருந்த/

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா?

Digital News Team 2021-01-14T20:50:32

பிபிசி

images.jpg
டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார்

அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன?

https___d1e00ek4ebabms.cloudfront.net_pr
விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை என அழைக்கப்படுகின்றது.
இது குற்றவியல் நடவடிக்கையில்லை அரசியல் நடவடிக்கை என்பதுமுக்கியமானது.
தேசத்துரோகம்,இலஞ்சஊழல் அல்லது வேறு ஏதாவது பாரிய குற்றச்செயல்கள் தவறான செயல்களிற்காக அரசியல் குற்றச்சாட்டு மற்றும் தண்டனைகளின் அடிப்படையில் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யலாம் என அமெரிக்க அரசமைப்பு தெரிவிக்கின்றது.
புதன்கிழமை வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசுக்கட்சியின் பத்து உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
டிரம்பிற்கு எதிராக ஏற்கனவே ஒரு முறை அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனது தேர்தல் வெற்றிக்காக உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல்குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார்.
தற்போது சனப்பிரதிநிதிகள் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது செனெட்டிற்கு செல்கின்றது. ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளித்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு செனட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம்.
ஜனநாயக கட்சியினருக்கு இந்த பலம் உள்ளதா என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.
செனெட் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தால் அவர் மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு வாக்கெடுப்பை நடத்தக்கூடும்.

trump-imp-1-300x180.jpg
2024இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக டிரம்ப் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு வாக்கெடுப்பை நடத்தி அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினால் டிரம்பிற்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பு அதுவாகயிருக்கும்.
டிரம்பிற்கு எதிராக செனெட் வாக்களித்தால் அவர் அமெரிக்காவில் கௌரவப்பதவியை வகிப்பதையும் நம்பிக்கை நிதியம் இலாபம் மீட்டும் அமைப்பின் தலைவராக பதவி வகிப்பதையும் தடைசெய்வதற்கு செனெட்டின் சாதாரண பெரும்பான்மை போதுமானதாகயிருக்கும்.
எனினும் இவற்றில் எதுவும் டிரம்பின் எஞ்சியிருக்கின்ற பதவிக்காலத்தில் நடைபெறப்போவதில்லை
பைடன் பதவியேற்பதற்கு முன்னர் நியாயமான தீவிரமான விசாரணைகளிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள குடியரசுக்கட்சியின் செனெட் தலைவர் மிட் மக்கொனல் அதிகாரத்தை சுமூகமாக பைடனிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/104815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.