Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம்.

Featured Replies

இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம்.

ஒஸ்லோவில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு மனித உரிமை விடயங்கள் குறித்த நிபந்தனைகளை விதித்து நிதியுதவிகளை ஒத்திவைக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேநேரம் சமாதானப்பாதைக்கு விடுதலைப்புலிகள் திரும்பவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அந்நாட்டின் விசேட தூதுவரான யசூசி அகாஷியும் அமெரிக்காவின் சார்பில் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ரிச்சர்ட் பௌச்சரும் நோர்வேயின் சார்பில் அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெமும் சிறி லங்காவுக்கான விசேட தூதுவர் ஹன்சன் போவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் இந்தக் கூட்டத்தில் இலங்கையின் அத்துடன் ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷியும் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் இந்தக்கூட்டத்தில் இலங்கையின் இன்றையநிலை குறித்து தனித்தனியாக இரண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

கூட்டத்தின் ஆரம்ப நாளான 25 ஆம் திகதி இடம்பெறும் கூட்டத்தில் இலங்கையில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் சம்பவங்களான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கப்பம் பெறும் சம்பவங்கள், தமிழர் மீதான கெடுபிடிகள் போன்ற விடயங்கள் ஆராயப்படும் என்று தெரியவருகிறது.

மறுநாள் இடம்பெறும் கூட்டத்தில் போர்நிறுத்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் சமாதானப்பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் வழி முறைகள் குறித்தும் ஆராயப்படவிருப்பதாக தெரியவருகிறது. எனினும் இந்தகூட்டத்திற்கான நிகழ்ச்சிநிரல் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இணைத்தலைமைநாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் குறித்தே ஜெனிவா சென்ற மகிந்த ராஜபக்ஸவுடன் நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ஆராய்ந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல் நிலை குறித்து இவர்கள் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கையில் மனிதஉரிமை நிலமைகள் மோசமடைந்துவரும் நிலையில் அதற்கெதிரான நடவடிக்கைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் குறிப்பாக இலங்கைக்கான நிதியுதவிகள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அந்த உதவிகளை மீளவழங்க வேண்டுமாயின் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு தெரிவிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.

-Sankathi-

எவர் எதை ஆராய்ந்தாலும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலைக்கு மீண்டும் சூழ்நிலைகள் திரும்பும் போதுதான் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமுடையதாகவிருக்கும். விடுதலைப்புலிகளும் அதைத்தான் சொல்வார்கள். மற்றம் இந்த உதவிகளை நிறுத்துதல் போன்ற உப்புச் சப்பற்ற பேச்சுக்களினால் புலிகள் ஏமாறப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தை இணைத்தலைமைகள் ஐ.நா. கொண்டு செல்லும் சாத்தியம்?

சர்வதேச சமூகம் யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்ததையடுத்து ஒஸ்லோவில் அடுத்த வாரம் கூடவுள்ள நான்கு இணைத் தலைமை நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளன.யுத்தத்தை நிறுத்துவதுடன் மனிதஉரிமைகள் மீறப்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு இணைத்தலைமை நாடுகள் கோரும் என்றும் அவ்வாறில்லாதபட்சத்தில் இலங்கைக்கான மேற்குநாட்டு உதவிகளை ஒடுக்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இருநாள் கூட்டத்துக்கு ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஏனைய இணைத் தலைமை நாடுகளுக்கு நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இது ஒரு வழமையான சந்திப்பாக இருந்த போதிலும் முக்கிய தீர்மானங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை இணைத் தலைமை நாடுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை நிலைவரம் மோசமடைந்து செல்லுமானால் ஒரு கட்டத்தில் இணைத் தலைமை நாடுகள் இலங்கை நிலைவரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகிறது.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.