Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

 

சென்னை,

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். 

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.   மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா.  அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

 டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/19082007/Chennai-Adyar-Cancer-Hospital-President-Santa-has.vpf

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தாவுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
 

சென்னை,

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 93. இவர் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர் ஆவார்.

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் சாந்தா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் டாக்டர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக 60 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார். 

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உயர்தர புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளுக்காக டாக்டர் வி.சாந்தா நினைவுகூரப்படுவார். சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு நான் அங்கு சென்றதை நினைவுகூர்கிறேன். மருத்துவர் வி.சாந்தாவின் மறைவை எண்ணி வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மருத்துவர் சாந்தாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, இனி எவராலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர் சாந்தாவின் தன்னமலற்ற சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/19104116/Government-Respect-To-the-late-oncologist-Santha.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

 

சென்னை:

சென்னை, அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.சாந்தா இருந்து வந்தார். 93 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இதயநோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு டாக்டர் வி.சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 
 
டாக்டர் வி.சாந்தா
 

இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் டாக்டர் வி.சாந்தா. அவர், தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் தமிழக அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

 
டாக்டர் சாந்தா உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்திய போது எடுத்தபடம்
 

டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று காலை வைக்கப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ம.சுப்பிரமணியன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அரசு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாஷேசைய்யன். சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ்,

பா.ஜ.க. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரித்தா ரெட்டி, நடிகர்கள் விவேக், சித்தார்த், முன்னாள் எம்.பி.க்கள் மைத்ரேயன், டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன், முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், துரை வைகோ, டாக்டர் கமலா செல்வராஜ், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் மலர்வளையம், மலர்மாலைகளை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 4 மணி அளவில் டாக்டர் வி.சாந்தாவின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயான சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு டாக்டர் வி.சாந்தாவின் தம்பி மகன் சுரேஷ் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதின் படி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

டாக்டர் வி.சாந்தா 1927-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் அவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயமாகும். 1949-ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 1952-ம் ஆண்டு டி.ஜி.ஓ. என்ற குழந்தைகள் சிகிச்சைக்கான மருத்துவ கல்வி, 1955-ம் ஆண்டு எம்.டி. படித்த உடன் சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார். பின்னர் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். குறிப்பாக 67 ஆண்டுகள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக சேவையாற்றி உள்ளார்.

இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மருத்துவர் சாந்தாவின் குடும்ப உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் வி.சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார் என அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறினார்கள்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/20033119/2277408/Tamil-News--Dr-Shanta-of-Adyar-Cancer-Institute-dies.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.