Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்றார். இருவருக்குமிடையே அன்று தொடங்கிய அதிகார மோதல் நான்கரை வருடங்கள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை.

தரையில் அமர்ந்திருக்கும் முதல்வர் நாராயணசாமி
 
தரையில் அமர்ந்திருக்கும் முதல்வர் நாராயணசாமி

`மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஜனவரி 8-ம் தேதி மறைமலை அடிகள் சாலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் 4 நாள்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கிய முதல்வர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்தார்.

மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்தார். ஆனால் அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும்வரை, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அமர்ந்தார் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி. அதற்கடுத்து `புதுச்சேரி பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளையும் சேர்த்து 36 கோரிக்கைகள் குறித்தும் நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டுமென்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அனுமதி கேட்டார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
 
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

அந்த கடிதத்துக்கு பதிலளித்த கிரண் பேடி,``அமைச்சர் குறிப்பிட்ட விஷயங்கள் விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயலர்கள் அலுவலகங்களில் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து உங்களிடம் விளக்கிக் கூற தலைமைச் செயலரை கேட்டுக்கொண்டுள்ளேன். அமைச்சருக்கும், அவரின் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருந்தார்.

 

சட்டப்பேரவை வளாகத்தில் தனது அறையிலேயே குளித்து, உணவருந்தி வராந்தாவில் சேரில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்துவந்தார் அமைச்சர் கந்தசாமி. தொடர்ந்து போராட்டத்தில் இருக்கும் அவருக்கு ஆதரவாக அனைத்து தலித், பழங்குடி அமைப்புகள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. நேற்று கூடிய சிறப்பு சட்டப்பேரவையில் கலந்துகொண்ட அமைச்சர் கந்தசாமி, பேரவை முடிந்ததும் அங்கேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அமைச்சருக்கு ஆதரவாக சாலை மறியல்
 
அமைச்சருக்கு ஆதரவாக சாலை மறியல்

இன்று காலை சட்டப்பேரவையில் இருந்து கிளம்பி கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து அமைச்சர் கந்தசாமி, ``கோப்புகள் குறித்து கவர்னர் அழைக்கும் வரை நான் திரும்பப் போவதில்லை. இங்கேயே போராட்டத்தைத் தொடர்வேன்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் நகரின் பல பகுதிகளில் அவருக்கு ஆதரவாளர்களும், தலித் அமைப்புகளும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி வராதது தொடர்பாக ஆளுநரை சந்திக்கச் சென்ற அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரான எம்.எல்.ஏ அன்பழகனை பேரிகார்டுகள் போட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் இருக்கும் அமைச்சர் கந்தசாமியை சந்திப்பதற்காக சென்ற முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ-க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி போன்றவர்களையும் மத்தியப் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் அனுமதிக்காத நிலையில் அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் 10 நாள்களாக அமைச்சர் கந்தசாமியை சந்திக்க மறுத்துவரும் கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-minister-kandasamy-continuous-his-protest-against-governor-kiran-bedi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.