Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை அரசியலின் பாதை - இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை அரசியலின் பாதை  - இதயச்சந்திரன்

tamiul-party.jpg

இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.

ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?.

இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித்திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது.

எமது தமிழ்த்தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?.

வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?.

ஒடுக்குமுறையாளர் எம்மீது திணிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள நாடாளுமன்ற மேடை மட்டும் போதுமா?என்கிற கேள்வியும் எழுகிறது.

தூபி தகர்ப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டம் ஏன் மக்கள் போராட்டமாக விரிவடையவில்லை?.

தாயகத்தில் ஆங்காங்கே நிகழும் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்கள் ஏன் ஒருங்கிணைக்கப்படவில்லை?.

தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் கட்சி மோதல்கள் குறித்து பேசப்படும் அளவிற்கு, பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் திரள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் விவாதிக்கப்படுவதில்லை?.

விடுதலை அரசியலிற்குரிய உள்ளார்ந்த பண்புகளை கட்சிகள் புரிந்து கொள்ளவில்லையா?. அல்லது இலக்கினை அடையும் பாதையில் தெளிவில்லையா?.

‘எதிரியே நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத் தீர்மானிக்கிறான்’ என்பது விடுதலை அரசியலின் நடைமுறைத் தத்துவம்.

நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் யாப்பினைத் தூக்கிப் பிடிக்கும் நீதிமன்றத்திலோ, அரச அடக்குமுறையை எம்மால் எதிர்கொள்ள முடியாவிட்டால் நாம் என்ன செய்வது?.

தீர்வினை எங்கே தேடுவது?.

கட்சிகளுக்கு அப்பாலுள்ள மக்கள் திரள் கட்டமைப்புகளே அதனைச் சாத்தியமாக்கும் என்பதே வரலாற்று உண்மை.

இக்கட்டமைப்புகளை தேசவிடுதலைக் கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் கட்சிகளும் உருவாக்கலாம். ஆனால் அவை வெகுசன அமைப்புகளோடு இணைந்து பொதுத்தளத்தில் செயலாற்ற வேண்டும்.

ஏனெனில் எதிரி பலமானவன்.
சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் தன்னகத்தே கொண்டவன்.
நாட்டின் இறைமை, தனது அரச உயர்பீடத்திடமே உள்ளதென உலகமகா சபையிலும் சொல்பவன். அச்சபையின் தீர்மானங்களுக்கு அடங்காதவன்.
தேசிய இனங்களை சிறுபான்மை மக்களென ‘ஜனநாயக’ அரசியல் பேசுபவன்.

இத்தகைய அரச அதிகார வல்லானை எதிர்த்து நிற்க நாடாளுமன்றக் கட்சிகள் மட்டும்போதாது. அதற்குள் எமது விடுதலைக்கான அரசியலை மட்டுப்படுத்தவும் கூடாது.

எமது அரசியல் போராட்ட வெளி விரிவடைய வேண்டும். சகல முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
2009 இற்குப் பின்னான அரசியல் பாதை இதுதான்.

-இதயச்சந்திரன்.

https://vanakkamlondon.com/stories/2021/01/99690/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.