Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது.

geneva-hall-0-1024x576-1-300x169.jpg
மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் மற்றும் 2009 இல் முடிவடைந்த போரின் போது ஏற்பட்ட மனிதகுலத்துக்கு விரோதமான குற்றங்களுக்குத் தீர்வு காண இலங்கை அரசு ஆற்றிய கடமைகள் ஆகியவற்றுடன் இவை தொடர்புடையவையாகும்.
சர்வதேச குற்றங்களுக்கான நீதியை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கைக்கான வழக்கை இந்த அறிக்கை சக்தி வாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றின் உயர் ஆணையாளர் “மைக்கேல் பேச்லெட்டின்” கூற்றுப்படி, ஐ.நா. உறுப்பு நாடுகள் ‘தங்கள் தேசிய நீதிமன்றங்களில் சர்வதேச குற்றங்களின் உலகளாவிய அதிகார வரம்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் கீழ்’ விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தொடர வேண்டும். கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிரான பயணத் தடை, சொத்து முடக்கம் மற்றும் சாத்தியமான பொருளாதாரத் தடைகளை ஆராய வேண்டும். கூடுதலாக, நீதி மற்றும் இழப்பீடுகளை உறுதி செய்வதற்கான சர்வதேச விருப்பங்களைத் தொடரவும், இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்புத் திறனை ஆதரிக்கவும் உறுப்பு நாடுகளை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேசமும், கனடாவும் எடுக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்து உழைத்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் மீது ‘மாக்னிட்ஸ்கி’ சட்டத்தின் அடிப்படையில் தடைகளை ஏற்படுத்த வேண்டுமெனக் கனடிய அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக கோரியும் வருகிறது.

canada-PM-25-300x169.jpg
பெப்ரவரி 14, 2020 அன்று, அமெரிக்க அரசு தற்போதைய இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை வெளியுறவுத்துறை, வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031 (சி) இன் கீழ் அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஏனெனில் வகைதொகையற்ற மனித உரிமை மீறல்களில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்.
கனடியத் தமிழர் பேரவை, இரண்டு முறை (பிப்ரவரி 17, 2020 மற்றும் நவம்பர் 10, 2020) அப்போதைய கனடிய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு பிரான்சுவா பிலிப் ஷாம்பெயினுக்கு இதேபோன்ற நடவடிக்கையை வலியுறுத்திக் கடிதங்களை எழுதியிருக்கிறது. ஏமாற்றமளிக்கும் விதமாக, கனடிய அரசு இந்த வழிகளில் இன்னும் அர்த்தமுள்ள எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
உண்மையில், கனடாவின் செயலற்ற தன்மை இலங்கையைத் துணிச்சலாகவும் பொறுப்பற்றதாகவும் தைரியப்படுத்துகிறது. போர்க்குற்றங்களில் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் நியமனத்தை பரிசீலிக்க கோருமளவுக்கு அளவிற்கு இலங்கை அரசு சென்றுள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையின் பரிந்துரையின் பேரில், கனடிய அரசு விரைவாகவும் விரிவாகவும் இலங்கை அரசின் மீது நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

Thinakkural.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை

இவை எதுவோ திறம் மாதிரி....செய்வது முழுக்க தழனுக்கு எதிர்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.