Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை வெளியேற்றியது யாழ்.பல்கலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை வெளியேற்றியது யாழ்.பல்கலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது.

முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் அகிலன் கதிர்காமர்.

துறை தொடர்பில் எந்தவித பரிச்சயமும் இல்லாத போதும் நல்லாட்சி மைத்திரி சிபார்சில் எவ்வாறேனும் யாழ்.பல்கலையினுள் நுழைந்துவிட வேண்டுமென முனைப்பாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே.

புலி நீக்க அரசியல் அரசசார்பற்ற அமைப்புக்களை களமிறக்கி கல்லா  கட்டுவதென்ற தொழிலில் ஈடுபட்டவர்களுள் முக்கியமாவரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.thaarakam.com/news/02d790a6-d646-4e9a-a3ab-72e38db1306e

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது செய்தி இப்படி உள்ளது..

 

மாணவனுக்கு இரங்கியதால் பணியை இழந்தார் யாழ் பல்கலை விரிவுரையாளர்

  • Published: February 1, 20211:20 am

ஒற்றை கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காண்பித்ததால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியை இழந்துள்ளார்.

யாழ் பல்கலைகழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தனை பதவிநீக்குவதென யாழ்ப்பாண பல்கலைகழக பேரவை முடிவு செய்துள்ளது.

பரீட்சை வினாத்தாளை மாணவர்களுடன் பகிர்ந்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மிகச்சில பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான மு.சர்வானந்தன் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நியமனம் பெற கூடாதென, குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சியையும் மீறியே சில வருடங்களின் முன்பாக அவர் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நியமனம் பெற்றிருந்தார்.

அவரை பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்ற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில், நேற்று முன்தினம் கூடிய யாழ்ப்பாண பல்கலைகழக பேரவையின் கூட்டத்தில், அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களின் முன்னர் பரீட்சை வினாத்தாளின் ஒரு பகுதியை மாணவர்கள் அனைவருடனும் அவர் பகிர்ந்திருந்தமை குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த மாணவன் ஒருவன், பரீட்சைக்கு 36 மணித்தியாலங்களின் முன்னதாக சர்வானந்தனை தொடர்பு கொண்டு தன் மீது இரக்கம் காட்டும்படி கோரியுள்ளார். கையொன்றை இழந்தவரான அந்த மாணவன், தான் பரீட்சையில் தோல்வியடைந்தால் தனது குடும்பத்தின் எதிர்காலமே பாழாகி விடும் என்பதால் சில வினாக்களை கூறுமாறு இறைஞ்சியுள்ளார்.

ஒரு மாணவனிற்கு மட்டும் அந்த கேள்விகளை வழங்காமல், வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களிற்கும் அந்த கேள்விகளை விரிவுரையாளர் சர்வானந்தன் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் பல மாதங்களாக கிடப்பிலிருந்த நிலையில் தற்போது தூசு தட்டப்பட்டு, விரிவுரையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்டமாணவன் சர்வானந்தனை பல்கலைகழகத்தை விட்டு நீக்க வேண்டுமென முயற்சித்த தரப்பின் ஒற்றனாக செயற்பட்டார், பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ஒற்றர் படையை வைத்து செயற்படுவது பொருத்தமானதா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

கேள்விப்பத்திரத்தை பகிர்வது தவறென்ற போதும், இதைவிட பாரிய தவறு புரிந்தவர்கள் பல்கலைகத்தில் தொடரும் போது, சர்வானந்தன் போன்ற ஆளுமைகளை பல்கலைகழகத்தை விட்டே நீக்குவது பொருத்தமான நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெறாதவர்கள், பல்கலைகழகத்தில் விரிவரையாளர்களாக பணிக்கு வருவது மிகச்சவாலானது என்ற விமர்சனம் பல தரப்பினராலும் நீண்டகாலமாக சுமத்தப்பட்டு வருகிறது.

புதியவர்கள்- வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும்போது, அவர்களை தவிர்ப்பதற்கான உத்திகளில் ஒன்றாக பல விடயங்களை கையிலெடுப்பார்கள். அதிலொன்று- இவர் போருக்குள் வாழாதவர் என்ற வியாக்கியானத்தை வைப்பார்கள். தம்மை விட அதிக தகுதியுடையோரை தவிர்ப்பதற்கான உத்தியாக இதை பாவிக்கிறார்கள். இந்த விடயத்தில் பல்கலைகழகத்திற்குள் அனைத்து துறைகளிற்குள்ளும் ஒத்திசைவாக போக்கு உள்ளது.

பேரவை உறுப்பினர்களும் அரசியல் நியமனங்கள் என்பதால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாமலுள்ளது“ என கூறினார்.

அந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைகழக பேரவைக்கு இரண்டு தெரிவுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகள் தகுதிகாண் காலம் வழங்குதல், பணிநீக்கம் செய்தல் என்ற தெரிவுகளில், பொருளியல்துறை தலைவரின் கடிதத்தின் அடிப்படையிலும்- அவரை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

https://www.meenagam.com/மாணவனுக்கு-இரங்கியதால்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வித்தாளை.... முன் கூட்டியே மாணவர்களுடன் பகிர்வது, பாரதூரமான விடயம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கேள்வித்தாளை.... முன் கூட்டியே மாணவர்களுடன் பகிர்வது, பாரதூரமான விடயம் அல்லவா?

அது பாரமாகியதால்தான் தூரவைப்பதற்கு முடிவெடுத்துள்ளார்கள்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.