Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – சம்பந்தன் பகிரங்க அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – சம்பந்தன் பகிரங்க அழைப்பு

 
SAMPANTHAN025.png
 4 Views

 

“தமிழ்பேசும் மக்களை இலக்கு வைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கோரியும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளும் ஓரணியில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டும்.”

இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகம். இது இலங்கை அரசாலும், அதன் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாலேயே அதைத் தடுக்கும் வகையிலும், எமது பூர்வீக தாயகத்தை நாமே ஆளும் வகையிலும் சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் அறவழியிலும், அதன்பின்னர் ஆயுத வழியிலும், மீண் டும் ஜனநாயக வழியிலும் நாம் போராடி வருகின்றோம்.

ஆனால், தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை மதிக்காத இலங்கை அரசு, தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும், இன அழிப்பு நடவடிக்கைகளையும் பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றது. தற்போதைய அரசின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. விசேடமாக அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிய அரசு, வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கி வருகின்றது. பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுகளை வழங்கும் அரசு, அவர்களை முக்கிய பொறுப்புக்களில் நியமித்தும் வருகின்றது. சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் கையே தற்போது ஓங்கி வருகின்றது.

பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து – சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக் கூறி வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த அரசு, நீதியான வகையில் நீதிமன்றங்கள் செயற்படுவதற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகின்றது.

தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை இந்த அரசு திட்டமிட்டு அழித்து வருகின்றது. தமது கட்டுப்பாட்டில் இருக்கும் திணைக்களங்கள் ஊடாக வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கல் திட்டங்களை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் பல இந்து ஆலயங்களைத் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் அரசு, அங்கு பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் அரசு, சட்ட விரோத சிங்களக் குடியேற்றங்களையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம் மக்களின் மத உரிமையில் கைவைத்துள்ள இந்த அரசு, கொரோனாவால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அம்மக்களின் விருப்பத்துக்கு மாறாக எரியூட்டி வருகின்றது. மத உரிமைக்காகப் போராடும் முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கும் அரசு, அவர்களை அடக்கி ஆள முனைகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலரைக் கைதுசெய்த அரசு, அவர்களைத் தடுத்துவைத்துள்ளது. பல வருடங்களாக சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை.

தமக்கு விசுவாசமான குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்புத் தெரிவித்து வருகின்றது. வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கேட்டு பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான நீதியை வழங்காது அரசு ஏமாற்றி வருகின்றது. ஆயிரம் ரூபா நாள் சம்பள உயர்வு கேட்டுப் போராடி வரும் மலையகத் தமிழர்களின் கோரிக்கையை நிறை வேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. அரசின் இவ்விதமான நட வடிக்கை கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு உகந்த வையல்ல.

அரசின் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்பேசும்உறவுகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.”

 

https://www.ilakku.org/?p=41105

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வீட்டை திருப்பி கொடுத்து விட்டு இந்த அறிக்கை விட்டால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களில் திரண்டு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு கோரிக்கை

பெப்ரவரி 4 கரி நாளில் நடக்கும் போராட்டங்களில் திரண்டு வருமாறு மக்களிடம், ஒழுங்குகள் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமக்கே உரித்தான தனித்துவமான மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என்பற்றுடன் தம்மைத் தாமே தனியரசாக ஆண்ட தமிழினம் 1505ஆம் ஆண்டில் இத்தீவில் காலடி வைத்த
போர்த்துக்கேயர்களிடமும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களிடமும் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்ததுடன் 1796 இல் இலங்கைத் தீவில் காலடி வைத்த ஆங்கிலேயர்களிடம் கடைசித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடு ஒட்டுமொத்த தமிழ் இராட்சியங்களும் வீழ்ச்சியடைந்தது.

 

அதே போன்று தீவின் தென்பகுதியை ஆண்ட சிங்கள மன்னர்களும் தோற்கடிக்கப்பட்டு தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1833ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கைத் தனி நிர்வாகமாகவும், தென்பகுதியை வேறு நிர்வாகமாகவும் நிர்வகித்து வந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதி கருதி இலங்கைத்தீவு முழுவதையும் 1833ஆம் ஆண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர்.

தமது நிர்வாக வசதிக்காக நாடு முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1948ஆம் ஆண்டு இத் தீவை விட்டு வெளியேறும் போது வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஆட்சியதிகாரத்தினை தமிழர்களிடம் கையளிக்காமல் தீவு முழுவதைனையும் ஆளும் அதிகாரத்தைப் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களிடம் ஒப்படைத்துச் சென்று விட்டனர்.

அதனால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் இறைமையை பெரும்பான்மையின சிங்களவர்களிடம் இழந்து அடிமைப்பட்டுக்கிடக்கின்றார்கள்.

தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியாளும் அதிகாரம் பிரித்தானியர்களது கைகளிலிருந்து பெரும்பான்மையினச் சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு உத்தியோகப்பூர்வமாக மாற்றப்பட்ட தினமே பெப்ரவரி 04 ஆகும்.

பிரித்தானியர்களுக்குப் பதிலாக அயல் இராட்சியத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களை அடக்கியாளும் காலணித்துவ ஆட்சி ஆரம்பமானது.

இதனாலேயே இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரி நாளாகத் தமிழ் தலைவர்கள் பிரகடனப்படுத்தியதுடன், கடந்த ஏழு தசாப்தங்களாக சுதந்திர தினத்தைத் தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.

அதனை ஓர் போராட்டமாகவே தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் திருமலை நடராஜன் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை மதிக்காது தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கல், மொழியையும் கலாச்சாரத்தையும் அழித்தல், வரலாற்றை திரிவுபடுத்தி அழித்தல், பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தல், கல்வியை அழித்தல் போன்ற செயற்பாடுகளே தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிங்கள தேசத்தின் அடையாளங்களுக்குள் தமிழ்த்தேசத்தின் அடையாளங்களைக் கரைத்து தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து எமது தாயகத்தில் எமது மக்களைச் சிறுபான்மையினமாக மாற்றி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கையேந்தி வாழும் நிலைக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளே கடந்த 72 வருடங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

இச் செயற்பாடுகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.

அந்த ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டம் தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை தடுத்துப் பாதுகாக்கும் கவசமாக விளங்கியது.

அந்த பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசத்தின் இருப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பிய வகையில் அழிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளானது சுதந்திரதினத்தை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது மட்டுமல்ல அன்றைய தினம் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எதிர்ப்பு போராட்டம் நடாத்த வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது.

மேற்படி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராட வேண்டிய நிலையில்,இந்த அழிப்புச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி எமது மக்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தமிழ் மக்கள் நம்பியவர்களால் முன்னெடுக்கப்படுவதென்பது மிகவும் ஆபத்தானது.

இந்நிலையில் எமது நிலங்களையும், மொழி கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டும.என்ற அடிப்படையில் 04-02-2021 அன்று வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி காக்காகடை சந்தியில் இருந்து காலை 8-30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பழைய பஸ்தரிப்பிடத்தை சென்றடையும்.

கிழக்கு மாகாணத்தில் சம நேரத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும் எனவே இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், வர்த்தக சங்கங்கள் தமிழ்த்தேசிய கட்சிகள், பல்கலைக்கழக மாணவ சமூகங்கள் ஒன்றுணைந்து பூரண ஆதரவு வழங்கி வடக்கு, கிழக்கு தழுவிய அறவழிப் போராட்டத்திற்கு அணி திரளுமாறு அன்பு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

 

 

https://www.meenagam.com/போராட்டங்களில்-திரண்டு-வ/

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!-ரிஷாட் பதியுதீன்

 

625.500.560.350.160.300.053.800.900.160.90%2B%25281%2529.jpg

(ஊடகப்பிரிவு)
பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், நாளை (03) தொடங்கி, ஆறாம் திகதி வரை நடைபெற உள்ளது. நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Image%2B2021-02-02%2Bat%2B5.56.12%2BPM.jpeg

 

http://www.battinews.com/2021/02/blog-post_40.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு யாழ், கிழக்குப் பல்கலை மாணவ சமூகம் ஆதரவு

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று(03.02.2021)தொடக்கம் வரும் 6ஆம் திகதிவரை இடம்பெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சமூகம் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றது.

இதுதொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகள், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி இடம்பெறுகின்ற நில-வள ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகள், நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையிலான மத அடையாளங்கள் மற்றும் வரலாற்று இடங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடனான மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை உள்ளிட்ட பிரச்சினைகள், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகள், மலையக மக்களுக்கான நாளாந்த வாழ்வாதாரத்திற்கான 1000/= சம்பள உயர்வு எனப் பலதரப்பட்ட பிரச்சனைகளை நாம் நாளாந்தம் எதிர்கொண்டு வாழ்கின்றோம்.

spacer.png

நீண்ட காலமாக உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் பல்தரப்பட்ட பிரச்சனைகளையும் எமக்கெதிரான அடக்குமுறைகளையும் இந்நாட்டில் வாழ்கின்ற சகல சமூகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்லும் முகமாக அகிம்சை வழியிலான இப்போராட்டத்திற்கு இன மத பேதங்களற்று அனைத்துத் தரப்புகளும்கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இப்போராட்டத்திற்கான ஆதரவை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய நாம் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று 03.02.2021தொடக்கம் 06.02.2021 வரை இடம்பெறவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தொடர் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தமது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றனர்.

நாம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். தமிழராகிய நாம் இலங்கை தீவின் வடகிழக்கை ஒருங்கிணைந்த நிலப்பரப்பை தாயகமாக கொண்ட ஓர் தேசிய இனம். எங்கள் தலைவிதியை தீர்மனிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாகவும், எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக அரசின் தொடர் அடக்குமுறைக்கும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராகவும் நாம் கிளர்ந்தெழ வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு எல்லோருக்கும் உண்டு.  

எமது அரசியல் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தொடர்ச்சியாக மறுதலித்து வரும் இலங்கை அரசானது இப்போராட்டத்தினை தடை செய்யும் நோக்குடன் நீதிமன்றங்களினுடாக தடை உத்தரவினை வழங்கி எமது அடிப்படை உரிமையினை நசுக்க முயல்கின்றது. இதனை தகர்த்தெறியும் விதமாக அனைவரும் அணியணியாக திரண்டு வந்து இப்போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

குறிப்பு: தற்போதைய கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது
 

https://www.virakesari.lk/article/99701

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.