Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: தனியாக நடந்துச் சென்ற மூதாட்டி! - இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பத்து மணிக்கு மேல் தனியாக நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பேசிய இளைஞர், வலுகட்டாயமாக அவரை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்திருக்கிறார்.

சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர், இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு தனியாக வெளியில் சென்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் பேச்ச கொடுத்தார். பின்னர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மூதாட்டியை இளைஞர் வலுகட்டாயமாக இழுத்து சென்றார். அங்கு வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு இளைஞர் தப்பிச்சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதிக்கு சிலர் வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பிறகு சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மூதாட்டி கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதைக்கேட்டு போலீஸாரும் மூதாட்டியின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்காக சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் சிசிடிவியில் இளைஞரின் உருவம் சரியாக தொரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் சமூகவிரோத செயல்கள் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டடுகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: தனியாக நடந்துச் சென்ற மூதாட்டி! - இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் |old lady raped by unknown person in chennai (vikatan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.