Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுத்து வைக்கப்பட்டுள்ள.. டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள.. டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது.

டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார்.

2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை.

அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

சிறையாக மாற்றப்பட்டுள்ள மாளிகையில் தாம் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கைதொலைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட காணொளியில் லதீஃபா குறிப்பிட்டார்.

அந்தக் காணொளிகள் தங்களுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய Sky News, கடந்த 9 மாதங்களாக லதீஃபாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் காணொளிகள் சர்வதேச கவனம் பெற்றுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேசவுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

http://athavannews.com/தடுத்து-வைக்கப்பட்டுள்ள/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

“பணயக் கைதியாக இருக்கிறேன்!” – அமீரக இளவரசி 

 
1-163-696x392.jpg
 23 Views

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் ஷேக்  லத்தீஃபா. இவர் அந்தநாட்டு இளவரசிகளுள் ஒருவர்.

இளவரசி லத்தீஃபா கடந்த 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற முயன்று பிடிபட்டார். இதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேற முயன்ற அவரை, இந்திய-ஐக்கிய அரபு படைகள் கண்டுபிடித்து மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கே கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

 இந்த நிலையில் அவர் பகிர்ந்த காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசி லத்தீஃபா அந்த காணொளியில்,, “நான் பணயக் கைதியாக இருக்கிறேன். நான் இருக்கும் வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்  காவல்துறையினர் காவல்காக்கின்றனர்.   நாளும் நான், எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறேன். இந்தச் சிறையில்  நான் பணயக் கைதியாக இருக்க விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தந்தை பிரதமராக இருக்கும் நாட்டில், பணயக் கைதியாக இருப்பதாக மகள் கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி பிபிசி தமிழ்

 

https://www.ilakku.org/?p=42525

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.