Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..

https://tamil.oneindia.com/img/2021/02/bjp5-1613968233.jpg

சென்னை: நடப்பதெல்லாம் நல்லதுக்குதான்.. இப்போ புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறதே ஒரு அரசியல், அது எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.. இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..!

புதுச்சேரியில் ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தது போக, திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்து விட்டார்.. இதனால் காங்கிரஸ் அரசின் கவிழ்ப்பு அப்போதே உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்கு சென்று ராஜினாமா லெட்டரை தந்தார்.. அவர் கிளம்பி சென்ற அடுத்த 10 நிமிஷத்துலயே திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சென்று அவரது ராஜினாமா லெட்டரை தந்தார்.. இவருக்கு பின்னால், சமீபத்தில் பாஜகவுக்கு சென்ற நமசிவாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது..
அரசு ராஜினாமா

இப்போதைக்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக குறைந்துவிட்டது.. அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது? சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு முதல்வர் அழுத்தம் கொடுக்கலாம் என்ற யூகமும் உள்ளது.. ஆனாலும், புதுச்சேரி காங்கிரஸ் அரசு கிட்டத்தட்ட வீட்டுக்கு போகும் நிலைமைக்கே வந்துவிட்டது. பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயமும் ஏற்பட்டுள்ளது..


தவறு கவர்னர்

இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? தவறு எங்கே நடந்துள்ளது? புதுச்சேரி அரசாங்க நிர்வாகத்தை கவர்னரைக்கொண்டு எவ்வளவுக்கு எவ்வளவு குடைச்சல் தர முடியுமோ அவ்வளவும் தந்து, சீரழித்து ஆட்சியாளர்களையும், மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது முதல் தவறு என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது..


கவர்னர் பாஜக

செய்வதையும் செய்துவிட்டு, கடைசியில் கவர்னரை நீக்கியது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு கதைதான். இப்படியே எல்லா மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.
பாடம் - ராஜினாமா

அடுத்ததாக, மக்களுக்கு தான் இது ஒரு பெரிய பாடம்.. இப்படி டக்குடக்கென ராஜினாமா செய்தவர்களுக்கு எத்தனையோ அழுத்தங்கள் இருந்திருக்கலாம்.. ஆசைகள் இருந்திருக்கலாம்.. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்படி எதுவுமே இல்லை.. ஆனால், மறுபடியும் இதுபோன்றவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முடியும்.. புதுச்சேரியை யார் வேண்டுமானாலும் கபளீகரம் செய்துவிட முடியாது என்ற பாடத்தை வரும் தேர்தலில் புகட்ட வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது.

கிரண்பேடி- போராட்டம்

இந்த இடத்தில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டி உள்ளது.. கிரண்பேடியை எதிர்த்து நாராயணசாமி என்னென்னவோ போராட்டங்களை செய்தார்.. நடுத்தெருவில் பெட்ஷீட் விரித்துகொண்டு படுத்தும், தன் எதிர்ப்புகளை பதிவு செய்தார்.. ஆனாலும் அவருடன் இருந்தவர்களே இன்று விலகிப் போய்க் கொண்டுள்ளனர். கிரண் பேடி போய் விட்டார் என்று சந்தோஷப்பட்டார் நாராயணசாமி.. ஆனால் இன்று அவரது ஆட்சிக்கே அபாயம் ஏற்பட்டு விட்டது.

தமிழ்நாடு
 

எனினும், இது தமிழ்நாட்டுக்கும் உணர்த்தும் பாடம்.. இங்கேயும் தேர்தல் நடக்க போகிறது.. இன்னும் ஒரு கட்சியிலும் கூட்டணி முடிவாகவில்லை.. ஏன்? அந்த கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது? யார் யாருடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை வைத்து கொண்டிருக்கிறார்கள்? யார் யார் நாளை சொந்த கட்சிக்கு எதிராக துரோகிகளாக கடைசி நேரத்தில் மாற போகிறார்கள்? என்பதெல்லாம் எதுவுமே தெரியவில்லை..


அரசியல் மாண்புகள்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற பொத்தாம் பொதுவான விதி ஒன்று இருக்கும்வரை, ஜனநாயக மாண்புகள் இங்கு தழைத்தோங்க வாய்ப்பே இல்லை.. மக்கள்தான் உணர வேண்டி உள்ளது.. நேர்மையான, சுத்தமான எம்பிக்கள், எம்எல்ஏக்களை தேர்வு செய்யாவிட்டால் ஆகப்பெரும் பலம்வாய்ந்த கட்சிகள் உடைவதை கூட ஆண்டவனே நினைத்தாலும் கூட தடுக்க முடியாது... இப்படி ஒரு சிக்னல்தான் புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/politics-in-pondicherry-and-tamil-nadu-412716.html

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி அரசு கவிழ்ந்தது: சபாநாயகர் அறிவிப்பு!

 

spacer.png

புதுச்சேரி அரசியலில் பரபரப்பான நிகழ்வாக இன்று (பிப்ரவரி 22) காலை சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்ததால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியதும் சபாநாயகர் சிவக்கொழுந்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.

தனது அரசுக்கு நம்பிக்கைத் தீர்மானத்தைக்கொண்டு வந்து உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி,

“இன்னும் இருப்பது ஐந்து நாளோ,பத்து நாளோ. ஆனாலும் எதிர்க்கட்சிகள் சில ஆண்டுகளாகவே இந்த ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயன்றார்கள்.

கடந்த ஆட்சிக்காலத்திலே விட்டுவிட்டுச் சென்ற நிறைவேற்றாமல் சென்ற திட்டங்களை எல்லாம் இந்த ஆட்சியில் நிறைவேற்றினோம். நாங்களாகவே பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம். பல கோயில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம்.

மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்த சதியை எல்லாம் கடந்து இந்த ஆட்சி இத்தனை ஆண்டு காலம் நடந்திருக்கிறது. கொரோனா காலத்தில் அரசுப் பணிகள், அமைச்சர்களின் பணிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கி பாடுபட்டனர். ஆனால் சிலர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் யார் என்று புதுச்சேரி மக்களுக்குத் தெரியும்.

 

எவ்வளவு இக்கட்டு வந்தாலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறோம். எங்களது பல்வேறு நலத் திட்டக் கோப்புகள் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தூங்குகின்றன.

பாஜகவின் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்களில் எப்படியெல்லாம் மக்களாட்சியை கலைத்திருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். புதுச்சேரியிலும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்து வந்திருக்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த அரசைக் கவிழ்க்க நடக்கும் சதிக்குத் துணை செய்கிறார்கள்” என்று சுமார் ஒரு மணி நேரம் முதல்வர் நாரயணசாமி பேசினார்.

மேலும் இந்த வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவர் கலந்துகொள்ளக் கூடாது என்று ஆளுந்தரப்பில் கூற இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த அமளியைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, அவருடன் அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் 12 பேர் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின் சபாநாயகர் சிவக்கொழுந்து, “புதுச்சேரி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது. இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது” என்று அறிவித்தார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார் என்று புதுச்சேரியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

https://minnambalam.com/politics/2021/02/22/18/puducherry-congress-govt-loss-majority

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.