Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைதீவை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யத் தயாராகிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள்
சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யத் தயாராகிறார்கள்

கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு

கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு இலங்கையிலுள்ள முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.  இவ் விடயம் தொடர்பாக அது உலக முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு  மற்றும்  உலக முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றைத் தலையிட்டு பொருத்தமான நிலமொன்றைப்  பெற்றுத்தரும்படி வேண்டுகோள்  விடுத்துள்ளது.

இரணைதீவை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் 1

சிறிலங்கா இஸ்லாமிய நடுவமே உலக அமைப்புக்களுக்கு இம் முறைப்பாட்டைச் செய்துள்ளது. உலக முஸ்லிம் காங்கிரஸில் அங்கத்துவ அமைப்பான இஸ்லாமிய நடுவம், இதன் மூலம் இலங்கை பற்றிய முறைப்பாட்டை உலக இஸ்லாமிய நாடுகளுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது. இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வற்புறுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஜெனிவாவிலுள்ள உலக முஸ்லிம் காங்கிரஸிடம் அது கேட்டுள்ளது.

கொழும்பிலுள்ள குப்பியவத்த இடுகை நிலம் மற்றும் மன்னாரில் மசூதி ஒன்றிற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் ஆகியவற்றைத் தமது தேவைக்காகப் பரிசீலிக்கும்படி முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. இந் நிலங்களில் நிலக்கடி நீர் மற்றிய ஆய்வறிக்கைகளை ஏற்கெனவே பேராதனைப் பல்கலைக்கழக நிலவியல் நிபுணர்கள் தயாரித்துவைத்துள்ளனர். இவற்றில் மன்னார் நிலம் தாழ்ந்த மண்ணீர மட்டத்ஹைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மன்னாரிலுள்ள இக் குறிப்பிட்ட நிலத்துக்குரியவர்கள் அடக்கங்கங்களைச் செய்வதற்குத் தயாராகவிருந்தனரெனவும் அதை ஏன் சுகாதார அதிகாரிகள் நிராகரித்தனர் எனத் தமக்குத் தெரியாது எனவும் முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ளது.

இதே வேளை, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்துப்படி இரணைதீவு நிலத்தில் அடக்கம் செய்வதற்கான நிலவியல் ஆய்வு செய்யப்பட்டதாகத் தனக்குத் தெரியாது எனக் கூறியதாகத் தெரியவருகிறது. அத்தோடு, வடக்கிலொன்றும் கிழக்கிலொன்றுமாக, ஆழ் மண்ணீர் மட்டங்களைக் கொண்ட  இரண்டு நிலங்களைத் தான் நிபுணர் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

வரலாறு

இரணைதீவு, பெரும் தீவு, சிறும் தீவு என இரண்டு தீவுகளைக் கொண்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரிவில் அடங்கும் இத் தீவுகள் பல நூறு வருட மக்கள் குடியிருப்பு வரலாற்றைக் கொண்டவை. 1888 இல் கட்டப்பட்ட டச்சுத் தேவாலயம் இப்போதும் இருக்கிறது. 1982 நில அளவையின்போது பெருந்தீவில் 143 காணிகளும், சிறு தீவில் 35 காணிகளுமாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இடப்பெயர்வுக்கு முன்னர் சுமார்

400 குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. ங்கு 125 கல் வீடுகள், 6 கிணறுகள், 2 தேவாலயங்கள், 2 பாடசாலைகள், 1 மருத்துவமனை இருந்தன.

போரின் காரணமாக 1992 இல் முதலாவது பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டது. இங்கிருந்த மக்கள் மன்னார்ப் பெருநிலத்தில் உள்ள முழங்காவிலில் இரணைமாதா நகர் என்ற ஒன்றை உருவாக்கி அங்கு வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் கடற்தொழிலாளர்கள். தமது தொழில் தேவைகளுக்காக அவர்கள் இத் தீவுக்ளையே நாடுகின்றனர். தற்போது இத்தீவுகள் இலங்கைக் கடற்படை வசம் இருக்கின்றன.

இரணைதீவை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் 2

2015 இல் நல்லாட்சி அரசு குடி பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்த முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் பாதுகாப்பு படைகள் அதற்கு இணங்கவில்லை. சில தொழிலாளர்களைத் தற்காலிகமாகத் தொழில்செய்ய அனுமதித்தது. தேவாலயப் பெருநாட்களில் மட்டும் மக்கள் இத்தீவுகளுக்குச் சென்று தமது இழந்த உடமைகளைப் பரமாரிப்பார்கள்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எதுவும் பேணப்படாமையால் மே 1, 2017 முதல் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள். வடபகுதி அரசியல்வாதிகளில், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், முன்னாள் பா.உ. விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மீள்குடியேற்ற முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை.

400 குடும்பங்கள், இரண தீவுகளுக்குத் திரும்புவதற்காக இன்னும் இரணைமாதா நகரில் காத்துக்கொண்டிருக்கின்றன. போராட்டம், அனைத்து தமிழர் போராட்டங்களைப் போலவே முடிவற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

https://marumoli.com/இரணைதீவை-ஏற்க-மறுக்கும்/?fbclid=IwAR1cDOrD9dOtGgXu4QXA5zllo_2sgrn2CNmdvKiWhZQQ6wb44E0ikNPHLBE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.