Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Conversations with Kishani Alanki | M.A Sumanthiran

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Conversations with Kishani Alanki | M.A Sumanthiran

 

 

அண்மையில் கிஷானி அலங்கி அவர்களின் யு டியூப் தளத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A சுமந்திரன் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் சுருக்கம் தமிழில் :

ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் ஒப்புறவு போன்ற பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனாலும் இலங்கை அரசாங்கம் தமது இறைமையில் வெளி சக்திகள் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்துகிறது. இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்
இப்பிரச்சினையானது மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதாக 26ம் திகதி மே மாதம் 2009 இல் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது கண்டியில் கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக ஆரம்பமானது.
இலங்கை தாம் செய்வோம் என்று ஒப்புக்கொண்ட பொறுப்புக்கூறலின் விடயத்தினை செய்ய தவறியமையே இன்று ஐக்கிய நாடுகள் இவ்விடயம் தொடர்பாக கண்காணிக்க வேண்டிய சூழலினை ஏற்படுத்தியுள்ளது. பிற நாடுகளுக்கு தாமே வாக்குறுதியினை வழங்கிவிட்டு, அது தொடர்பாக எதனையுமே செய்யாது இன்று அந்நாடுகளையே குறை கூற முடியாது. என்று தெரிவித்தார்.

எவ்வாறு அரசாங்கம் இவ்விடயத்தினை அணுகியிருக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இதில் இறுதி யுத்தத்தின்போது சில ஆயிரம் பேர் இராணுவத்திடம் சரணடைந்ததாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளபடி, சரணடைந்தும் அவர்கள் தொடர்பான எந்த தகவல்களும் இன்றளவும் இல்லாதுள்ளது. இவை அரசாங்கம் உருவாக்கிய சில அமைப்புக்களின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். இது ஒரு உதாரணமாகும், இதற்கு யாரவது பொறுப்புக்கூற வேண்டும், வெறுமனே எமது இராணுவ வீரர்களை நாம் குற்றப்படுத்த இயலாது என்று தெரிவிப்பது இதற்கு பதிலாகாது.
தொடர்ந்தும், ஏன் முன்னைய அரசாங்கத்திடம் போலல்லாது இந்த அரசாங்கத்திடம் இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றது, என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், முந்தைய அரசாங்கம் தீர்மானங்களுக்கு அனுசரை வழங்கியது, அத்தோடு கால தாமதங்கள் ஏற்பட்டாலும் யாதாயினும் ஒரு முன்னேற்றம் இருந்ததெனவும், அவ்வரசின் காலத்தில் காணாமல்போனோருக்கான அலுவலகங்களை உருவாக்கியது, வலிந்து காணாமலாக்கப்படுதல் ஒரு குற்றமாக கருதப்பட்டது, போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு அரசாங்கம் செயற்படுகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகம் அரசுடன் இணைந்து பணியாற்றியது. மாறாக இந்த அரசாங்கம் தாம் இவ்விடயங்களில் ஒத்துழைக்க மாட்டோம் என்று கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இவாறான நிலையில் வேறு பொறிமுறைகளையே நாடவேண்டியுள்ளது என தெரிவித்தார்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வேண்டுமாயின் அவர்கள் எவ்வாறான விடயங்களை இலங்கை அரசிடமும் மக்களிடமும் எதிர்பார்க்கின்றனர் என்று வினவியபோது, தமிழ் தரப்பில் ஆயுதக் குழுக்கள் உருவாகுமுன்னரே கிரமமாக தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையினாலேயே அதிகமான தமிழர் புலம்பெயர்ந்தனரெனவும் அவர்கள் கடந்த அரசின் காலத்திலே மீண்டும் நாடு திரும்ப இருந்த போதும் யாப்பு தொடர்பான நகர்வுகள் கைகூடாது போகவே அவர்கள் மீள திரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்திய அரசுடனான 3 கூட்டு ஒப்பந்தங்களில் 13ம் திருத்த சட்டத்தினை அமுல் படுத்துவதோடு மேலதிக அதிகாரப்பகிர்வு தொடர்பாகவும் ஆராய்வோம் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தபோதும், யுத்தம் நிறைவுற்றதன் பின்னணியில் அவ்வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.