Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகம் மகிந்த அரசினை வழிக்கு கொண்டுவருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம் மகிந்த அரசினை வழிக்கு கொண்டுவருமா?

-புரட்சி (தாயகம்)

தென்னிலங்கையிலே மகிந்த அரசானது பதவி ஏற்ற காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மனித அவலங்களையும் மேற்கொண்டு வந்த போதிலும் அண்மையில் கொழும்பு நகரத்திலே விடுதியில் தங்கியிருந்த தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவமானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சர்வதேச ரீதியாக பலத்த கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்திவிட்டது.

வெளிநாட்டு தூதுவராலயங்கள், ஐ.நா செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மகிந்த அரசின் இந்த மனிதநேயமற்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கையினை கடுமையான தொனியில் கண்டித்துள்ளனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு செய்தி ஊடகங்களும் இச்செயற்பாட்டினை ஜேர்மன் நாசிகளின் ய+த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தென்னாபிரிக்க நிறவெறி அரசின் கறுப்பின மக்களுக்கெதிரான நிற ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கும் ஒப்பிட்டு எழுதியதோடு இந்நடவடிக்கையினை இனச்சுத்திகரிப்பு என்று வர்ணித்ததன் மூலம் இவ் ஊடகங்கள் இலங்கைத்தீவிலே தமிழ்மக்கள் எவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதனை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

இதன்பின்னரே மகிந்த அரசானது தமிழ்மக்களை பலவந்தமாக வெளியேற்றிய முட்டாள்தனமான நடவடிக்கையின்; எதிர்விளைவுகளைப் புரிந்து கொள்ளத்தலைப்பட்டது. உடனடியாகவே சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தமிழ் மக்களிடம் நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சிறிலங்காவின் பாதுகாப்புப் பேச்சாளர் கேகலிய ரம்புக்கவெலவின் பிரசன்னத்தில், சிறிலங்கா பிரதமர் செய்தி ஊடகங்கள் முன்னிலையில் உரையாற்றும்போது மன்னிப்புக்கோரினார். தமிழ்மக்களின் விருப்பத்தின் பேரிலேயே கொழும்பில் இருந்து அவர்களது தாயகப்பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக செய்தி நிறுவனங்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்த ரம்புக்கவெல இச்செய்தியாளர்கள் மகாநாட்டில் சங்கடத்தில் நெளிந்திருப்பார் என்பது மட்டும் நிச்சியம்.

இதன்பின் மேலும் பல வேடிக்கையான கோமாளித்தனமான சம்பவங்கள் நடந்தேறின. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் மகிந்தவின் தம்பியுமான கோத்தபாய, ரொய்ட்டர் மற்றும் பி.பி.சி செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வினை நியாயப்படுத்த முற்பட்டதோடு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை காரணம் காட்டி சிறிலங்காவினை அடக்கியாள முற்படுவதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன் மேற்குலகம் சிறிலங்காவிற்கு தேவையில்லை என்றும் சார்க் மற்றும் ஆசிய நாடுகள் என்பனவற்றின் ஆதரவே போதுமானது என்ற தொனிப்பட கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று சிறிலங்கா அமைச்சரான ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட செயற்பாடானது தேவையற்ற ஒன்றெனவும் இது சிறிலங்கா படையினரின் மனநிலையைப் பாதித்துவிட்டதாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக சிறிலங்காவின் அரச தரப்பினரால் வெளியிடப்பட்ட வேளையில்தான் மகிந்த ராஜபக்ச சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் வருடாந்த மகாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜெனிவாவிற்கு சென்று தங்கியிருந்தார். ஏற்கனவே தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்களை மகிந்த அரசும் அதன் படைகளும் ஏற்படுத்தியுள்ளன என்று பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் மகிந்த அரசானது தமிழ் மக்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்ற செய்தியானது உலகம் முழுவதும் மிகவேகமாக பரவியமையானது மகிந்த ராஜபக்சவிற்கு மேலும் அவமானத்தினையும் சங்கடத்தினையும் ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமை அமைப்பின் உயர்ஸ்தானிகரையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவரையும் சந்திப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையிலே இவ் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை சம்பந்தமான விடயங்கள் வெளிவரத்தொடங்கியிருந்தன.

இனச்சுத்திகரிப்பு

1990களில் சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல மாற்றங்கள் நிகழத்தொடங்கின. அத்துடன் பல நாடுகள் சோவியத் யூனியன் பிடியில் இருந்து விலகி மேற்குலக சார்பு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கின. ய+கோசிலாவியா இவ்வாறான மேற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்க மறுத்தது. இச்சமயத்தில்தான் ய+கோசிலாவியா மாகாணங்கள் சேர்பியர், குரோசியர் மற்றும் முஸ்லிம் என்ற இன மற்றும் மத அடிப்படைகளில் தனி நாடுகளாகப் பிரிந்து செல்வதற்கு போராட்டங்களை நடாத்தின.

இக்காலப்பகுதியில் பொஸ்னியா- கெர்சகோவினா, குரோசியா மற்றும் கொசோவா ஆகிய மாகாணங்களில் சேர்பியர், குரோசியர் மற்றும் முஸ்லிம்கள் தங்களுக்கிடையிலே மோதல்களில் ஈடுபட்டார்கள். அவ்வேளைகளில் சேர்பியர்கள் ஏனைய இன மக்களை முற்று முழுதாக அழிக்கும் அல்லது அவர்களது சொந்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கும் நடவடிக்கைகளில் அதாவது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டிக் கண்டனங்களை வெளியிட்டன. இக்காலப்பகுதியிலேயே இனச்சுத்திகரிப்பு என்ற சொல் பிரபல்யம் அடைந்திருந்ததோடு பலராலும் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டது.

1930 ய+ன் 30 ஆம் நாள் சேர்பிய தேசியவாத அமைப்பின் பிரதான ஆலோசகர் ஸ்ரீவன் மொல்ஜேவிக் எழுதிய ~எமது நாடும் அதன் எல்லைகளும்| என்ற நூலில் ~எமது பிரதேசங்களில் இருக்கின்ற சேர்பியர்கள் அல்லாத எல்லோரையும் நாம் வெளியேற்றவேண்டும். எமது நிலப்பரப்பினை நாம் சுத்தப்படுத்தவேண்டும். எமது பகுதியில் வாழுகின்ற குரேசியர்கள் குரேசியாவிற்கும் முஸ்லிம்கள் துருக்கி மற்றும் அல்பேனியாவிற்கும் அனுப்பப்படவேண்டும்.| என்று தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சேர்பியத் தலைவராக விளங்கிய சுலோபதான் மிலோசவிச் சேர்பிய தேசியவாதியான ஸ்ரீவனின் ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கினார். இதன் விளைவு பொஸ்னியா, குரேசியா மற்றும் கொசோவா ஆகிய மாகாணங்கள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து சென்றன அல்லது தனி நாடாக பிரிந்து செல்லும் வரைக்கும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் சுயாட்சி வழங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் இரண்டாம் உலகப் போரானாது மிகவும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜேர்மனியர்களின் நாசி படைகள் ஹிட்லரின் தலைமையில் ய+த இன அழிப்பு நடவடிக்கையினைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார்கள். நாசிகள் கைப்பற்றும் நாடுகள் அனைத்திலும் இருந்து ய+த மக்கள் வேறாக்கப்பட்டு படுகொலை செய்வதற்காக வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இவ்வாறாக அறுபது இலட்சத்திற்கும் அதிகமான ய+த மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு பிரதேசத்தில் இருந்து ய+த மக்களை முற்றாக அகற்றுவது அல்லது அழிப்பது ய+தச் சுத்திகரிப்பு என்றழைக்கப்பட்டது. பின்னர் இதிலிருந்து இனச்சுத்திகரிப்பு என்ற பதம் கூடுதலான பாவனையைப் பெற்றதாகவும் ஒரு கருத்துள்ளது.

எது எவ்வாறு இருந்தபோதிலும் ராஜபக்ச அரசின் தமிழ் மக்களை கொழும்பு நகரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற எடுத்த நடவடிக்கையானது உலகத்தின் கண்களில் சேர்பியாவின் மிலோசவிச் போல, ஜேர்மனியின் கிட்லர் போல, சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவினை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவைத்துவிட்டது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜெனிவா சென்றிருந்த மகிந்த ராஜபக்சவினை நோர்வேயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சமாதான முன்னெடுப்புகளுக்கு தலைமை தாங்குபவருமான எரிக் சொல்கெய்ம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜெனீவாவில் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி நோர்வே அனுசரணையாளர்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ராஜபக்ச குழுவினர் தட்டிக்கழித்து விட்டதாகத் தெரியவருகின்றது. அதாவது கிளிநொச்சிக்கு அனுசரணையாளர்கள் சென்று விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் பாதுகாப்புக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது எந்தவிதமான போர் ஓய்வினையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என்பதனையும் மகிந்த ராஜபக்ச நோர்வே குழுவினரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது நோர்வே அனுசரணையாளர்களுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் போன்ற நன்கொடை நாடுகளுக்கும் உள்ள பாரிய நெருக்கடியும் தலைவலியும் என்னவென்றால் சண்டித்தனம் செய்து முரண்டுபிடிக்கும் மகிந்த ராஜபக்ச அரசினை எவ்வாறு பணியவைப்பது என்பதுதான். எதிர்வரும் 26 ஆம் நாள் ஒஸ்லோவில் இடம்பெறும் நன்கொடையாளர்கள் மகாநாட்டிற்கு கொழும்பிலே இருக்கின்ற நன்கொடை நாடுகளின் தூதுவர்களும் இம்முறை அழைக்கப்பட்டுள்ளார்கள். இக்கூட்டத்தில் சிறிலங்கா அரசிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்படலாம் என்ற கருத்து இராஜதந்திர வட்டாரங்களில் பரவலாகக் காணப்படுகின்றது.

தற்போது சிறிலங்கா அரசானாது சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தனது உறவுகளைப் பலப்படுத்தி வருவதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் சற்று எச்சரிக்கையுடனேயே அவதானித்து வருகின்றன. சிறிலங்காவிற்குத் தேவையான ஆயுத தளபாடங்களை வழங்க இந்தியா விரும்புகின்றது என்று அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தெரிவித்த கருத்துக்களை உதாசீனப்படுத்துவது போன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரின் அண்மைய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களானது சிறிலங்கா சீனாவினை நோக்கி வேகமாகச் செல்வதையே சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சீனாவின் பாரிய பொருளாதார வளர்ச்சிக்கும் வல்லரசாக உருவாகவேண்டும் என்ற அதன் எதிர்பார்ப்பிற்கும் உயிர் நாடியாக விளங்கும் எரிபொருட்களை கடல்வழி மூலமாக தங்குதடையின்றி பெற்றுக்கொள்வதற்கு சீனாவானது ~முத்துமாலைத் தொடர்| என்ற மூலோபாயத்தினை பயன்படுத்தி தென் சீனா கடலில் இருந்து மலாக்கா நீரிணை ஊடாக இந்து சமுத்திரத்திற்கும் அதிலிருந்து அரேபியக் கடலினூடாக பாரசீக வளைகுடாவிற்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும் செல்வதற்கு தேவையான பல்வேறு தளங்களை இப்பிரதேசங்களிலே பரவலாக அமைத்துவருகின்றது.

இப்பொழுது மேற்குலகம் மற்றும் இந்தியா, யப்பான் ஆகிய நாடுகளிடம் எழுகின்ற கேள்வி என்னவென்றால் சிறிலங்கா சீனாவின் இந்த ~முத்துமாலைத் தொடர்| மூலோபாயத்தில் ஒரு முத்தாக மாறவிரும்புகின்றதா என்பதுதான். அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவானால் அது எவ்வாறான தாக்கங்களை பிராந்திய ரீதியாகவும், பாதுகாப்பான கடற்போக்குவரத்து தொடர்பாகவும் ஏற்படுத்தப்போகின்றது என்பதே தற்போது இந்நாடுகளின் கொள்கைவகுப்பாளர்களின் பிரதான கரிசனையாகக் காணப்படுகின்றது.

தமிழ்நாதம்

நாய்வாலை யாராலையும் நிமித்த முடியாதுங்க. ஒட்ட நறுக்கினால்தான் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.