Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ

 
1-195-696x352.jpg
 39 Views

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்  இவ்விடயத்தில்  பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ,கலையரசன், சாணக்கியன் ஆகியோர் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியதுடன் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் தொடர்பான வரலாற்றையும் விரிவாக சபையில் முன் வைத்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினரின் பணியில் ஏன் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்? நாம் சமாதானத்தை விரும்புகின்றோம். அதேபோன்றே எமது ஆலயங்களும் சமாதானத்தையே வலியுறுத்துகின்றது. ஆனால் அரசும் தொல்லியல் திணைக்களத்தினரும் எம் மீதும் எமது ஆலயங்கள் மீதும் அராஜகத்தையே புரிகின்றனர் .இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.

அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் உரையாற்றுகையில்,

“3500 ஆண்டுகள் பழைமையான உருத்திரபுரம் சிவன் கோவிலில் அகழ்வாராய்ச்சி செய்து சிங்களவர் பகுதியாக்க முற்படுகின்றனர். இது வடபகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கிலுள்ள இது தொடர்பிலான அதிகாரிகளுடன் எந்த வித கலந்துரையாடல்களையும் செய்யாது பிக்குகளின்,இராணுவத்தினரின் தலையீடுகளுடன் தமிழர்களின் வரலாறுகளை திரிபுபடுத்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகினறன. இதன் கருவியாக தொல்லியல் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

“இவ்வாறான நடவடிக்கைகளினால் இதுவரை நாம் எத்தனை உயிர்களை இழந்துள்ளோம் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து இன்னொரு மதத்தினர் ஆக்கிரமிக்கும் போதுதான் இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. இன்னொரு யுத்தத்தை உருவாக்க அரசு இடமளிக்க வேண்டாம்.

புரிந்துணர்வு இல்லாததே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம். மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற பிரச்சினைகளை முன்வைக்கும்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பொறுப்பான பதிலை வழங்க வேண்டும். இந்தப் பிரச்சினை பூதாகரமாக இடமளிக்க வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தி  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேன் ராகவனும் தொல்லியல் என்பது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புபட்டதென்பதனால் இவ்விடயங்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டுமெனவும் இல்லாதுவிடின் மக்கள் கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்து விடுமெனவும் கூறினார்.

 

https://www.ilakku.org/?p=45429

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்த விடயங்களை.... வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கூறுவதை விட்டுட்டு....

உள்ளூர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு என்ன பிரயோசனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் ஆய்வுகள் நிறுத்தப்படாது – கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

 
1-200.jpg
 12 Views

“தொல்லியல் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் எந்த ஆய்வு நடவடிக்கைகளும்  நிறுத்தப்படாது“ என  தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களால்  முன்வைக்கப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவிலில் இடம்பெறும் தொல்பொருள் திணைக்களத்தினரின் அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

மேலும் அவர் கூறுகையில்,

“தொல்பொருள் விடயம் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ குழுவுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல.கௌதாரிமுனை சிவன் கோவில் உட்பட இரு சிவன் கோவில்களை நாம் இனம் கண்டுள்ளோம் .இவை இரண்டும் புராதன தன்மைகளைக் கொண்டவை. பழைய கட்டிட மரபுகளைக் கொண்டவை. இவை பௌத்த சிங்கள கட்டிடக் கலைகள் என்று கூற மாட்டோம். ஆனால் இவற்றை உறுதி செய்ய தொல்லியல் ஆய்வே உதவும். இவ்வாறான புராதனங்கள் இந்து மதத்துக்கோ பௌத்த மதத்துக்கோ மட்டும் உரித்தானதல்ல. முழு நாட்டுக்கும் முழு உலகத்துக்கும் உரித்தானது. எனவே நாம் தொல்லியல் ஆய்வுகளை செய்யத்தான் வேண்டும் .

இவ்வாறான தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வர வேண்டும். தென்பகுதியிலுள்ள இந்து ஆலயங்களில் ஆய்வுகளைச் செய்யாமல் வடக்கு,கிழக்கில் மட்டும் ஏன் ஆய்வுகளைச் செய்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்   கேட்கின்றார். தரவுகள், தகவல்கள் கிடைக்குமிடங்களில் நாம் ஆய்வுகளைச் செய்கின்றோம். நிலங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது ஆய்வு செய்தால் தானே தெரியும். தென்பகுதியில் அழிவடைந்துள்ள இந்துக் கோவில்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

தொல்லியல் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் எந்த ஆய்வு நடவடிக்கைகளும் ஒருபோதும் நிறுத்தப்படாது. அவை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=45443

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.