Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள்

கூகுள் - சுந்தர் பிச்சை

கூகுள் - சுந்தர் பிச்சை

ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களை இப்படி தான் நடத்த வேண்டும் என்று மற்ற நிறுவனங்களுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் வேதனை அளிப்பதாக, கூகுள் ஊழியர்கள் சமீப காலமாக மனம் குமுறி வருகின்றனர். பணியிடத்தில் பாலின சமத்துவம், சுதந்திரம், பெண்களுக்குப் பாதுகாப்பு என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் மீது கடந்த சில வருடங்களாகப் புகார்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

டிம்னிட் கெப்ரு  - சுந்தர் பிச்சை
 
டிம்னிட் கெப்ரு - சுந்தர் பிச்சை

முன்னதாக கடந்தாண்டு கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்த கறுப்பின பெண் டிம்னிட் கெப்ரு (Timnit Gebru) என்பவர் கூகுளில் நிற மற்றும் இன பாகுபாடு மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து, கூகுள் நிறுவனம் நிர்வாகத்தின் மீது குற்றம் சாற்றிய டிம்னிட்'டை பணியிலிருந்து நீக்கி ஒழுங்கை நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அப்போது அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 2000-க்கும் மேற்பட்டோர் கெப்ருவின் நீக்கம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்குக் கூட்டாகக் கடிதம் எழுதி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஊழியர்களின் கடிதத்திற்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை, ``நடந்தவற்றுக்குத் தான் மன்னிப்பு கோருவதாகவும், ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும்" ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

 

அந்த நேரத்தில் கூகுள் நிறுவன ஊழியர்களின் கடிதம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள். தற்போது மீண்டும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களுக்கு பணியிட பாதுகாப்பு துளியும் இல்லை என்று குற்றம்சாட்டி இருக்கின்றனர். ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குப் பல நேரங்களில் ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சுந்தர் பிச்சைக்குத் திறந்த மடல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர்.

கூகுள் நிறுவனம்
 
கூகுள் நிறுவனம்

தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் ஊழியர்கள் 1,378 பேர் எழுதி அனுப்பியுள்ள அந்த திறந்த மடலில், "ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை. அலுவலகத்தில் பாலியல் ரீதியிலான வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இது குறித்து நிர்வாக உயரதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அலுவலகத்தில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை ஒரு குழுவினை நிர்வகிக்கும் உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது என்று நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். அதே போல், பணியிடங்களில் பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இது நிறுவனத்தில் பெண்கள் பணிபுரிவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கிறது. எனவே, தலைமை பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதற்கிடையில, சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிய முன்னாள் ஊழியர் நீட்ஃபெல்ட் (nietfeld) என்ற பெண் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், கூகுள் நிறுவனத்தில் தான் பாலியல் வன்முறைகளைச் சந்தித்ததாகவும், அது குறித்து தலைமை நிர்வாகிகளிடம் புகார் அளித்த போது உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடைய பணியிடத்தை மாற்றுமாறு கேட்டபோது நிறுவனம் மறுத்ததாகவும் தனக்குத் தொல்லை கொடுத்த நபருடன் தான் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாகவும் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

Emi nietfeld
 
Emi nietfeld credits - New york Times

ஊழியர்களின் தொடர் புகார்கள் கூகுள் நிறுவனத்திற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கூகுள் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களின் புகார்களை முறையாக விசாரித்து அவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிறுவனம் முயற்சித்து வருவதாகவும், பணியிடத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பூதாகரமாக வெடித்துள்ள கூகுள் ஊழியர்கள் புகார் குறித்து சுந்தர் பிச்சை இதுவரையிலும் விளக்கமளிக்காத நிலையில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

 

 

https://www.vikatan.com/news/crime/google-company-workers-send-a-letter-to-sundar-pichai-regarding-harassment-in-google

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.