Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது?

[26 - June - 2007]

* "அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண

தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) வெளிக் கொணரக்கூடிய திட்டம் மிக முக்கியமானதாகும். அதுதான் மிதவாத தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை காண்பதற்குரிய பேச்சுவார்த்தைக்கு அடிப்படையானதாய் அமையும். சிறுபான்மையினரின் பல மனக்குறைகள் நீங்குவதற்கு வழி பிறக்கும். அதையடுத்து, பயங்கரவாதத்தினை நசுக்குவதற்கு இந்தியா முதன்மையாக சர்வதேச சமூகம் கூடுதலான பங்களிப்பினை வழங்கக்கூடியதாயிருக்கும். ஆக தேசிய இனப்பிரச்சினைக்கு தெரிவானதொரு அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்வைத்து, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று, பயங்கரவாத அமைப்புகளை முறியடிக்கும் முயற்சியில் அதனை ஈடுபடுத்தலாம்" இவ்வாறு அரசாங்க சமாதான செயலகத்தின் (SCOPP) முன்னாள் செயலாளர் ஜயந்த தனபால அண்மையில் ஆளணி முகாமைத்துவ நிறுவனம் (IPM) நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரையில் கூறிவைத்தார்.

மறுபுறத்தில் தனபால எதிர்பார்ப்பதற்கு மாறாக, APRCயானது எந்தவிதமான பிரயோசனமான யோசனைகளையாவது முன்வைக்கும் நிலையில் இல்லை. அது ஏறத்தாழ, மரணித்து விட்டதென்றே கருதப்படுகிறது. ஏனென்றால், குறிப்பாக சென்றவாரம், அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற APRC உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் வித்தாரணவுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ, கடுமையான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதாவது, "ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் மாவட்ட சபைகள் மட்டுமே வழங்கப்படும். ஒற்றையாட்சி திட்டத்தின் அடிப்படையிலேயே நான் தெற்கிலிருந்து ஆணை பெற்றேன். அதற்கப்பால் செல்வதை தென்னிலங்கை ஏற்றுக்கொள்ளாது. இதற்கு மாறாக ஊடகங்கட்கு ஒன்றுமே சொல்லக்கூடாது. "ஐலண்ட்" பத்திரிகைக்கு பேராசிரியர் வித்தாரண வழங்கிய செவ்வியில் ஒற்றையாட்சி முறைமை என்பது உள்ளடக்கப்படாது எனக் கூறியது பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அப்படியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுக்க வேண்டாம். ஏதாவது, கருத்து தெரிவிக்க வேண்டுமானால், அதனைப் பகிரங்கப்படுத்தாமல் என்னிடம் அந்தரங்கமாகக் கூறலாம். அடுத்த 2 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்" எனவே ஜனாதிபதி அமைச்சர் வித்தாரணவுக்கு கடுமையாக உத்தரவிட்டார்.

தான் மேற்கு நாடுகளையும் அண்டை நாடாகிய இந்தியாவையும் சமாளிப்பதற்கே முயற்சிப்பதாகவும் அவ்வாறாகவே அவை தன் மீது அழுத்தம் பிரயோகிப்பதைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ ஒளிவு மறைவின்றி எடுத்தியம்பினார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வென்பதை விட யுத்தத்தையே தொடர்ந்து தீவிரமாக நடத்தி வருகிறது. இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்களைப் பார்ப்போம்.

1. இராணுவ விடயங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஜனாதிபதிக்கு இராணுவ யுத்தி தெரியாத படியால் அவருடைய தலையீடும் இருக்கக்கூடாது.

2. படையினருக்கு சகல சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. படைத்தளபதிகள் திறமையாக செயலாற்றி வருகின்றனர். ஆயுதக் கொள்வனவுகள், ஆட்சேர்ப்புகள் முதலிய நடவடிக்கைகள் முற்றாக அவர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும்.

3. விடுதலைப்புலிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அழிப்பதற்கு கண்டிப்பான கால வரையறையை விதிக்க முடியாது.

4. வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. நிலங்களைக் கைப்பற்றுவதற்கும் நாம் விரும்பவில்லை.

5. வன்னியைக் கைப்பற்றவும் நாம் விரும்பவில்லை. அது நடைமுறைச் சாத்தியமுமில்லை.

6. எமக்கு இராணுவத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. ஒவ்வொரு நாளும் அவர்களின் கை மேலோங்கி வருகிறது.

7. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர வேண்டும்.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்னும் போது வடக்கிலும் வன்னியிலும் போர் நடத்தவோ நிலங்களை கைப்பற்றவோ விரும்பவில்லையெனக் கூறுவதன் அர்த்தம் தான் என்ன? அடுத்து முன்பு கூறியதற்கு மாறாக புலிகளை அழிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வருட காலவரையறை விதிக்க முடியாதென்று பாதுகாப்பு செயலாளர் கூறும் நிலையில்;

நாடு எங்கே போய் முடியப்போகிறது என்பதுதான் "மில்லியன் டொலர்" கேள்வியாகும்.

"விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை (2002 - 2005)" எனும் தலைப்பில் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளராகிய ஜோன் குணரட்ன எழுதிய நூல் 14.06.07 வெளியிடப்பட்டது. அதன் ஆய்வுரையினை நிகழ்த்தியவராகிய முன்னாள் வெளிநாட்டுச் செயலாளர் எச்.எம்.ஜி.எஸ். பலிகக்கார கூறியவற்றில் சில கருத்துகளைப் பார்ப்போம்.

"இன்று இரத்ததான தினம். ஆனால், இலங்கையில் தொடர்ந்து இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அது மிக வேதனையானதாகும். விடுதலைப்புலிகள் தமது செயற்பாடுகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கையில், அரசியல் தீர்வு சம்பந்தமாக கருத்தொருமித்த திட்டமொன்றை முன்வைக்காது பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பினர் அவசரப்பட்டுவிட்டனர். ஏன் அதிகளவு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சமாதான முயற்சியும் மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடும் தேவைப்பட்டது? இச் சிறிய தீவில் நல்லதோர் ஆட்சி முறையினை நாமாகவே ஏற்படுத்த தவறியதன் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் எமக்கு சமாதானத்தை பெற்றுத் தரும்படி கேட்கக்கூடாது. நாங்கள் சமாதானமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.... பல நாடுகள் விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு சமாந்தரமாக தமிழ் மக்களுக்கு பிரிவினை தவிர்ந்ததொரு அதிகாரப் பகிர்வுத்திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, சிறுபான்மை மக்களின் நியாயமான அபிலாஷைகள் தொடர்பாக அதிகாரப் பகிர்வு முறைமையை வழங்குவதன் மூலமே விடுதலைப்புலிகளின் பிரிவினைத் திட்டத்தை இல்லாதொழிக்க முடியும். இலங்கையில் எல்லா சமூகங்களும் வெவ்வேறு பிராந்தியங்களில் சிறுபான்மை இனங்களாகவே விளங்குகின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. எமது எல்லா அர சாங்கங்களும் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு வக்கில்லாமல் அல்லது விரும்பாமல் இருந்து வந்துள்ளமை ஒரு இமாலயத் தவறாகும்.

"இரு பிரதான சிங்கள கட்சிகளும் விடுதலைப்புலிகளை எதிரியாக கருதுவதிலும் பார்க்க நமக்கிடையே தான் கீரியும் பாம்பும் போல் ஒன்றுக்கொன்று பிரதான எதிரியாக செயற்படுகின்றன" என ஜோன் குணரத்ன இறுதியில் கூறிவந்தமை கவனத்திற்குரியதாகும் என பலிகக்கார தனது ஆய்வுரையினை முடித்து வைத்தார்.

சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டதை எக்காரணம் கொண்டும் இரத்து செய்ய முடியாது என பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கூறினார். அதன் மூலம் தமிழரின் உரிமைகள் மீறப்படுவதாக கூறப்படுவதை அவர் முற்றாக நிராகரிப்பதாக கூறியது அபத்தமாகும். கொழும்பு "லொட்ஜ்"களில் இருந்து 302 தமிழர் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய தவறு என வருத்தம் தெரிவித்த பிரதமர் விக்கிரநாயக்க, பல்லாயிரக் கணக்கான மக்கள் இராணுவ நடவடிக்கை மூலம் சம்பூர் மற்றும் மூதூரில் இருந்து விரட்டப்பட்டதும் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த மறுக்கப்படுவதும் தவறில்லையென கூறுவது மிக அடாத்தானதாகும். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடனேயே பேசியிருக்க வேண்டுமென ஐ.தே.கட்சியினர் கூறி நழுவுகின்றனரே தவிர இந்த அப்பட்டமான அநியாயத்தை நிபந்தனையின்றி எதிர்ப்பதற்கு தலைப்படவில்லை.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு போராடுவதற்கு புறப்பட்டிருப்பது மிக வரவேற்கத்தக்கதாகும். "நாங்கள் மீளக் குடியமரும் திகதியைக் கொடு", "பொறுத்தது போதும் இனிமேலும் பொறுக்க மாட்டோம்", போன்ற சுலோகங்கள் தாங்கிய வண்ணம் மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான போராட்டங்கள் விடாப்பிடியாக நடத்தி வெற்றி எட்டப்பட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக, திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்கள் பேரினவாத சக்திகளின் கைவரிசை காரணமாக சூறையாடப்பட்டு சிங்கள மயமாக்கும் கைங்கரியம் கனகச்சிதமாக நடத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் தலைமைகள் தமது கடும் விசனத்தையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றன. சிங்கள பௌத்த பேரினவாதம் மென்மேலும் மூர்க்கத்தனமாக காய்கள் நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் காலம் தாழ்த்தாமல் இணைந்து பேரினவாதிகளின் சிங்கள மயமாக்கல் திட்டத்தை முறியடிக்க முன்வர வேண்டும்.

நன்றி - தினக்குரல்

காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது?

* "அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண

இரண்டு நாடுகளாகி முடியும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு நாடுகளாகி முடியும் :D

அலைவந்து தாலாட்டும் சிறு தீவு.. நாளை அதில் இரண்டு நாடுகள் இது தீர்வு...

இவர்களின் கேள்விக்கு பதில் எப்பவோ கூறியாச்சு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.