Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது!

April 17, 2021

Ranitha1-1024x683.jpg

துணிச்சல் மிக்க பெண்ணிற்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு.

2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்ணிற்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17.04.21) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

Ranitha2-1024x683.jpg

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில், மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செய்யல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றது. பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பெண்கள் அமைப்பு என பலர் கலந்து கொண்டனர்.

Ranitha3-1024x682.jpg

Ranitha4-1024x682.jpg

 

 

 

https://globaltamilnews.net/2021/159509/

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ரனித்தா ஞானராஜா அவர்களுக்கு, எமது வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவை – மன்னார் மறைமாவட்ட ஆயர்

பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்களையே அதிகளவு சமூகத்தில் காண்கின்றோம். ஆகவே மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களே தற்போது எமக்கு தேவைப்படுகின்றனர் என மன்னார் நகர மண்டபத்தில் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்கும் நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா, தனது இளம் வயதில் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால்தான், துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.அவர் மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் உரிமைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-5/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.