Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல தடை!

spacer.png

இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 20ஆம் தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முழு ஊரடங்கின்போது அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், தேவையில்லாமல் யாராவது வெளியில் சுற்றினால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு (ஏப்ரல் 24 - சனிக்கிழமை) 10 மணியில் இருந்து இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் நாளை (ஏப்ரல் 25 - ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கின்போது இரவு 10 மணியில் இருந்து நாளை மறுநாள் (ஏப்ரல் 26 - திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 30 மணி நேரம் தொடர்ச்சியாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், பால் வண்டிகள் ஆகியவை அனுமதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதை மீறி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி இரவு நேர ஊரடங்கின்போது வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸார் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாளை (ஏப்ரல் 25 - ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போதும், ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சென்னையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஷிப்டு முறையில் போலீஸாருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கின்போது 200 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 500 ரோந்து வாகனங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


https://minnambalam.com/politics/2021/04/24/7/30-hours-lock-down-from-10pm-tonight

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.