Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது

April 27, 2021

paris-4.jpg (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை)

பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை. அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரை விசாரணையாளர்கள் கைது செய்ததைஅடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பாரிஸ் ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதியில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.

பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன்தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது தொலை பேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன.

தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.பாரிஸ் Versailles குற்றத் தடுப்புப் பிரிவினர் இக் கொலை தொடர்பான வழக்குவிசாரணைகளை நடத்தி வந்தனர்
 

https://globaltamilnews.net/2021/160034/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கொல்லப்பட்டால் கொலைக்குக் காரணமானவரை ஒரு மாதத்தில் கண்டுபிடித்து நிரூபிக்கும்  திறன்கொண்ட உலகம், ஒன்றரை இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டால்... வருடங்கள் பல சென்றாலும் கொலைக்குக் காரணமானவரைக் கண்டுபித்து நீரூபிக்கத் திணறுகிறதே.!! 🤔 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஒருவர் கொல்லப்பட்டால் கொலைக்குக் காரணமானவரை ஒரு மாதத்தில் கண்டுபிடித்து நிரூபிக்கும்  திறன்கொண்ட உலகம், ஒன்றரை இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டால்... வருடங்கள் பல சென்றாலும் கொலைக்குக் காரணமானவரைக் கண்டுபித்து நீரூபிக்கத் திணறுகிறதே.!! 🤔 

தூங்குபவனை எழுப்பலாம், தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.