Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 15 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவையை இரத்து செய்தது ஆஸி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 15 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவையை இரத்து செய்தது ஆஸி.

எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 15 வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று மோரிசன் கூறியுள்ளார்.

Untitled-1.jpg

இந்த அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் - உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த முடிவு மே 15 க்கு முன் பரிசீலிக்கப்படும் என்றும் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. இரண்டாவது கொவிட்-19 அலை மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது.

இந்த எழுச்சி பல நாடுகளை இந்தியா மீதான பயண கட்டுப்பாடுகளை குறைக்க தூண்டியுள்ளது. 

இங்கிலாந்து, ஹாங்கொங், கனடா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்தியாவில் இருந்து பயணிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளன, அதே நேரத்தில் அமெரிக்காவும் ஜேர்மனியும் இது தொடர்பான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

 

https://www.virakesari.lk/article/104455

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO

இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது- WHO

இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் குறைந்தது 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தரவு தளத்தில் 120இற்கும் மேற்பட்ட வைரஸ் வரிசைகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாகவும் பெரும்பாலான வைரஸ் வகைகள் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பதிவேற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் ஏனைய மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது என்றும் இது வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1213293

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.