Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சித்தரால் வந்த அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போகர் அளித்த பெருஞ்செல்வம்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அல்லது விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு உள்ள முருகனின் திருவுருவம் போகர் எனும் சித்தரால் உருவானதாகும். தமிழிலக்கியங்களில் பழநி தலம் 'சித்தன் வாழ்வு' எனவும் கூறப்பட்டுள்ளது.

சித்தரான போகர் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன், ஆன்மிக உணர்வையும் வளர்த்து வந்தார். திருமலையின் மீது போகரின் கருணைப் பார்வை விழுந்ததால் முருகன் எனும் ஞான தண்டாயுதபாணியின் திருமேனி உருவானது என்கின்றனர். மருத்துவ உதவி செய்த போகரால் உருவான தண்டாயுதபாணியைத் தரிசிப்பவர்களுக்கு நோய் நொடிகள் தீரும் என்பது நம்பிக்கை.

அகத்தியருக்கு அளிக்கப்பட்ட மலைகள்

பழநி 12, 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்க மன்னர்கள், சோழர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழிருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கீழிருந்தது. நான்காவது மைசூர் போருக்குப் பிறகு ஆங்கில அரசின் கீழ் பழநி வந்தது.

சிவனும், பார்வதியும் முருகனை 'ஞானப்பழம் நீ' என அன்புடன் அழைத்ததால் 'பழம் நீ' என அழைக்கப்பட்டுப் பிறகு அச்சொல் மருவி பழநி என வழங்கப்பட்டது. பழநி மலையும், இடும்பன் மலையும் முன்பு சிவகிரி, சத்திகிரி என்ற பெயரில் கயிலாயத்தில் இருந்துள்ளது. சிவன் இந்த மலைகளை அகத்திய முனிவருக்குக் கொடுத்தார் என்பது ஐதீகம்.

அகத்திய முனிவர் இந்த மலைகளைக் கொண்டு வரும்படி இடும்பாசுரனுக்கு ஆணையிட்டார். மலைகளைக் கொண்டு வரும் வழியில் ஓய்வெடுப்பதற்காக இடும்பன் மலைகளை இறக்கி வைத்தார். சிவகிரி மலையின் மீது முருகன் தோன்றியதால் பழநி மலையானது. இன்னொரு மலையான சத்திகிரி இடும்பன் பெயரில் இடும்பன் மலை என வழங்கப்பட்டது என தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பழநியின் கிரி வீதி

பழநி மலை நில மட்டத்திலிருந்து 450 அடி உயரமுடையதாகும். மலை மீது ஏறிச் செல்ல 697 படிகள் உள்ளன. பக்தர்கள் மலையின் மேல் உள்ள முருகனைத் தரிசிக்கும் முன் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயிலை வலம் வந்து தரிசிக்கின்றனர்.

அதன் பின்னரே பக்தர்கள் கிரி வீதி சுற்றுகின்றனர். பழநி மலையைச் சுற்றி அழகிய கிரிப் பிரகாரம் உள்ளது. இந்தக் கிரிப் பிரகாரம் ஒன்றேகால் மைல் சுற்றளவுடன் உள்ளது. கிரி வீதி முழுவதும் அழகிய மரங்கள் உள்ளன.

கிரி வீதியின் சுற்றுப் பிரகாரத்தில் ஐந்து மயில் மண்டபங்கள், பல மடாலயங்கள், மதுரை வீரசாமி, ஐந்து முக விநாயகர் உட்பட பல சிறிய கோயில்கள் உள்ளன. திருக்கோயிலுக்குச் சொந்தமான நாதசுரத் தவில் பள்ளிகள், கருணை இல்லம் எனும் சிறுவர்கள் பராமரிப்பு இல்லம் ஆகியவையும் உள்ளன.

நவ பாஷாண மூர்த்தி

பழநி மலைக்கோயில் மேற்குத் திசையை நோக்கி உள்ளது. திருவாயில் முன்பு கட்டைக் கோபுர வாயிலும், அதன் அருகில் சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது. இதன் இரு புறமும் நாயக்கர் மண்டபம் உள்ளது.

அடுத்ததாக வைசியர் மண்டபம் தாண்டியவுடன் ஐந்து நிலை மாடங்களுடன் ராஜகோபுரம். ராஜகோபுரத்தைக் கடந்தால் இரண்டாம் பிரகாரம் வருகிறது. இரண்டாம் பிரகாரத்தில் 12 கல்தூண்களுடன் கூடிய பாரவேல் மண்டபம் பளிச்சிடுகிறது. இந்தக் கல் தூண்கள் அழகிய வேலைப்பாடுகள் உடையவையாகும். இவற்றில் பீமசேனன் புருடா எனும் மிருகத்துடன் போராடும் காட்சி, நாயக்கர், பாளையக்காரர் ஆகியோரது உருவச் சிலைகள் உள்ளன.

பாரவேல் மண்டபத்தை ஒட்டி வாத்திய மண்டபம் காணப்படுகிறது. வாத்திய மண்டபத்திற்கு எதிரே தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மன் ஆகியோருடைய திருத்தலங்கள் உள்ளன. இதற்கடுத்த திருவாயில் துவாரபாலகர்கள் காப்புடையது. இங்கு நுழைந்ததும் மகாமண்டபம் காணப்படுகிறது. பக்தர்கள் இருபுறமும் நின்று இறைவனைத் தரிசிப்பதற்காக இந்த மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தின் உள் நுழைந்ததும் இடப்பக்கத்தில் கல் மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்கள் உள்ளன. அதற்கடுத்து ஆண்டவன் பள்ளியறையும், சண்முகநாதர் திருக் கோயிலும் காணப்படுகிறது. இவற்றைக் கடந்து சென்றால் முருகப் பெருமான் கோயிலை அடையலாம்.

மேற்கு நோக்கிய நிலையில் இறைவன் காட்சியளிக்கிறார். இணையற்ற திருமுகம், அருள் கனிந்த திருநோக்கமும், புன்னகை தவழும் திருவாயும், மருதாணி துலங்கும் திருமார்பும், ஞானதண்ட ஏந்திய வலத்திருக்கரத்து எழிலும், திருத்தாள்களின் பொலிவும், திருத்தண்டைகளின் அழகும் காண்போரைப் பரவசமடையச் செய்கிறது.

முருகனின் திருமேனி போக முனிவரால் செய்யப்பட்ட நவபாஷாணம் எனப்படும் ரச(லிங்க) மூர்த்தியாகும். ஆண்டவன் மேற்கு நோக்கி இருக்கும் காரணத்தால் கேரள மாநிலம் அளவற்ற செழிப்பும், எழிலும் கொண்டுள்ளது என்கின்றனர்.

தங்க ரதமும் தைப்பூசமும்

சித்திரை மாதத்தில் பெளர்ணமிக்கு மறு நாள் மலை மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அக்கினி நட்சத்திர விழா சித்திரை மாதத்தின் பிற்பகுதியிலும், வைகாசி மாதத்தின் முற்பகுதியிலும் நடைபெறும். அக்கினி நட்சத்திரத்தின் 14 நாள்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி மலையைக் கிரி வலம் சுற்றி வருகின்றனர். வைகாசி விசாகம் தைப்பூச விழா ஆகியவற்றின்போது பத்து நாள்களுக்குச் சுவாமி புறப்பாடுடன் சிறப்பான உற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். இப்படி வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து பாத யாத்திரையாக நடந்தே பழநியை அடைகின்றனர். பாத யாத்திரை வரும் பக்தர்களில் பலர் காவடி எடுத்தல், முதுகில் கம்பியைக் கோர்த்து அதனுடன் சிறிய தேர் இழுத்து வருதல், பால் குடம் எடுத்து வருதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

தைப்பூசத் திருவிழாவைப் போல பங்குனி உத்திர விழாவும் பழநியில் சிறப்பாக நடைபெறுகிறது. ஏழு நாள்களும் சுவாமி உலா நடைபெறுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பத்து நாள்கள் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழர்களில் பெரும்பாலானோர் முருகனைத் தங்களின் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் பழநிக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் தபால் மூலம் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்கான ஏற்பாடுகளையும், கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அர்ச்சனை, அபிஷேகம் செய்வதற்கான கட்டணங்கள் மணியார்டர்கள், செக்குகள், டிராப்ட்கள் மூலம் பெறப்பட்டு அர்ச்சனைப் பிரசாதங்கள் தபால் மூலம் உரியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பழநி மலையின் இழுவை ரயில்

பக்தர்கள் பழநி மலை மீது ஏற இழுவை ரயில் விடப்பட்டுள்ளது. மலை மீது ஏற இழுவை ரயில் முதன்முதலில் பழநியில் மட்டுமே விடப்பட்டுள்ளது. வேறு எந்த மலைக் கோயிலிலும் இந்த வசதியில்லை. மின்சாரத்தின் உதவியால் இந்த இழுவை ரயில் இயங்குகிறது.

முதியவர்களுக்கும், நடக்க முடியாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இழுவை ரயில் மிக உதவியாக உள்ளது. அடிவாரத்திலிருந்து புறப்பட்டு எட்டு நிமிடங்களில் ரயில் மலை உச்சியை அடைகிறது. மீண்டும் எட்டு நிமிடங்களில் மலை அடிவாரத்தை அடையும். மூன்று இழுவை ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 9 வரை இயங்குகின்றன. இதில் பயணம் செய்ய சிறுவர், பெரியவர் எனத் தனித்தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் வசதிக்காகக் கோயில் நிர்வாகம், தகவல் நிலையங்களை அமைத்துள்ளது. இந்தத் தகவல் நிலையங்கள் மலைக் கோயில், இழுவை ரயில் நிலையம், கிரி வீதி, மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்தத் தகவல் நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றது.

பஞ்சாமிர்தத்தின் சிறப்பு

திருப்பதிக்கு லட்டு என்பது போலப் பழநி என்றவுடன் பஞ்சாமிர்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பஞ்சாமிர்தம் மா, பலா, வாழை என்ற முக்கனிகள் தேன், கற்கண்டு, பேரீச்சம்பழம் ஆகியவை சேர்ந்து தயாரிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பழனி பற்றி நல்ல தகவல்கள் அன்புத்தம்பி.......நன்றி.....!   🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பழனி பற்றி நல்ல தகவல்கள் அன்புத்தம்பி.......நன்றி.....!   🙏

மிக்க நன்றிகள் சுவி,,.......suvy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.