Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்விக்கு இதுதான் காரணம்: மநீம பொதுச்செயலாளர் விலகல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்கு இதுதான் காரணம்: மநீம பொதுச்செயலாளர் விலகல்!

spacer.png

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

முதலில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். அவர்களைத் தொடர்ந்து வேளச்சேரி மநீம வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியா ஆகியோர் விலகினர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மொத்தம் 194558 வாக்குகளில் முருகானந்தம் 14547 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

 

இந்நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் கமலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் “கட்சியின் அடிப்படை உறுப்பினர், மநீம கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளர் என அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதில், “கட்சியில் தற்பொழுது நிலவக்கூடிய ஜனநாயகமற்ற சூழ்நிலையில், நான் இனியும் கட்சியில் தொடர்ந்து நீடிப்பது சரியில்லை என முடிவு செய்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் நான் திறம்பட செய்து தென்மண்டலம் முழுவதும், குறிப்பாக டெல்டா பகுதிகளிலும், திருச்சி மண்டலத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த சூழ்நிலையில், நான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தையும் வேதனையையும், பொது மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளவனாக உள்ளேன். கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் முழுவதும் திறம்பட உழைக்க முடிந்தது.

சர்வாதிகாரம் தலை தூக்கிவிட்டது

ஆனால் கடந்த சில மாதங்களாகக் கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப் போய் விட்டதாகக் கருதுகிறேன். இது 'நமது கட்சி' (Our Party) என்று என்னைப் போன்ற நிர்வாகிகள் கூறி உழைத்துக் கொண்டிருந்த நிலையில், இல்லை இது 'என் கட்சி' (MY Party) என்ற தோரணையில் நீங்கள் சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கூறியதிலும் மற்றும் சில நிகழ்வுகளிலும், பல முடிவுகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டதன் மூலம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலை தூக்கி ஜனநாயகம் காணாமல் போய்விட்டதாகக் கருதுகிறேன்.

தோல்விக்கான காரணம்

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் செயல்பாடும் மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த நன்மதிப்பும் சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்திலேயே மிகவும் பலவீனமான கட்சிகளுடன் வைத்துக் கொண்ட மோசமான கூட்டணியால் சுக்கு நூறாகி விட்டது. இதற்கு முழுக்க முழுக்க தலைமை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் சட்டமன்ற வேட்பாளருக்கான விருப்ப மனு பெறப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் குழு, இரவு பகல் பாராமல் சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது, எந்தவித முன்னறிவிப்புமின்றி, யாரையும் கலந்தாலோசிக்காமல், 100க்கும் மேற்பட்ட சீட்டுகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. இந்த ஒரு சம்பவம் தேர்தல் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது

“உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இது குறித்து நான் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்ட போது, "அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நமது கட்சியில் ஆள் இல்லை" எனக் கூறிய உங்களது வார்த்தை இன்னும் ரணமாக என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களும், பல மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலரும் இருந்தும் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது இன்னும் மன வேதனைக்கு உள்ளாக்கியது” ” என்று குறிப்பிட்டுள்ளார் முருகானந்தம்.

 

மேலும் அவர், “சமத்துவமும், சகோதரத்துவமும் கொள்கைகளாகப் போதித்து வந்த நம் கட்சி, ஒரு நபர் துதி பாடும் கட்சியாகத் தேர்தல் பிரச்சார மேடைகளிலிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆலோசகர்களாக இருக்கக்கூடியவர்கள் உங்களைக் கட்சியின் இணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி, தவறு செய்து விட்டனர். நாம் எல்லோரும் தலைவர்கள் என்ற உங்கள் பேச்சு வெறும் பேச்சாகவே போய்விட்டது பிரச்சார மேடைகளில் ஆம் வெறுமனே கைகட்டி உங்கள் ஒற்றை நாற்காலிக்குப் பின்னால் என்னைப் போன்ற நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தது. நம் கட்சியில் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது என்பதைக் காட்டியது.

நமது கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் குறிப்பாகச் சாதாரண பொதுமக்கள் கூட இந்த நிகழ்வைக் கேலி செய்யக் கூடிய சூழல் உருவானது மிகவும் வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய நிகழ்வாகும். மேலும் என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் நமது கட்சியில் தன்னிச்சையாகச் செயல்படுகிறீர்கள் என்பதும் எந்தத் திறமையும் இல்லாத சாங்கியா சொல்யூஷன்ஸ் சுரேஷ் ஐயர் மற்றும் முன்னாள் டிவி ஊடகத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரால் ஆட்டுவிக்கப் படுகிறீர்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

சாங்கியா சொல்யூஷன்ஸ் என்பது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் அந்த வேலையை அவர்கள் திறம்படச் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டு, கட்சியினுடைய உள் விவகாரங்களில் தலையிட்டதும் உங்களது ஆலோசகர் உங்களைத் தவறாக வழிநடத்தியதும் உயர்மட்ட நிர்வாகிகள் எங்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கட்சிக்காக உண்மையாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சித் தொண்டர்களின் மத்தியில் எதிர்மறை எண்ணங்களையும் பிளவையும் ஏற்படுத்தி கட்சியின் தோல்விக்கு வித்திட்டனர்.

 

இதுபோன்ற அவர்களுடைய திறமையின்மை மற்றும் தவறான அறிவுரைகளால் பல வேதனையான நிகழ்வுகள் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் இந்த ராஜினாமா கடிதத்தில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இது குறித்து பலமுறை உங்களிடம் நேரிலேயே கூறியிருக்கிறேன். கட்சிக்குள் எனக்கு ஏற்பட்ட பல கசப்பான நிகழ்வுகளை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதும் அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இன்றுவரை அவை பதில் இல்லா கேள்விகளாகவே உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது கடந்த கால சிறப்பான செயல்பாடுகள் எவற்றையுமே நினைத்துப் பார்க்காமல் உயர் மட்ட நிர்வாக குழுக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன, இனிவரும் நாட்களில் கட்சியை எப்படி வளர்ப்பது என்பதை ஆராய்ந்து தேர்தல் தோல்விக்குத் தார்மீக பொறுப்பைக் கூட நீங்கள் ஏற்காமல் எங்களைப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்ன அந்த கணமே சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாகவே கருதுகிறேன்.

அதனால் இனியும் இந்த கட்சியில் தொடர்வதை விட வெளியேறுவது மேல் எனக் கருதி எனது பொறுப்பிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். நீங்கள் எதிர்பார்த்தது போலவே தற்பொழுது கட்சியில் நேர்மையானவர்களும், திறமையானவர்களும் வெளியேறிவிட்டனர். ஏற்கனவே நான் செய்து வந்த மக்கள் சேவையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலமாகச் சிறிது காலம் செய்ய வாய்ப்பளித்ததற்கு நன்றி. எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையானவனாகவே எனது சமூகப் பணியைத் தொடர்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://minnambalam.com/politics/2021/05/19/31/Makkal-needhi-maiam-general-secretary-muruganandam-letter-to-kamal-hassan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.