Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள்

England

England ( Danny Lawson/PA via AP )

இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் வகைதான் (டெல்டா வேரியன்ட்) தற்போது பிரிட்டனில் வேகமாகப் பரவிவருகிறது. மூன்றாம் அலையின் தாக்கம் பிரிட்டனில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அங்கு வசிக்கும் தமிழரும் செவிலியருமான அருள் நீதிதேவன் தமிழ்குமரனிடம் பேசினோம்.

பிரிட்டன் தற்போது மூன்றாம் அலையின் தொடக்க நிலையில் உள்ளது. இரண்டாம் அலையைத் திருப்திகரமாக சமாளித்ததால் அங்கு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் அங்கு நடைபெறவுள்ளன. இந்நிலையில் 3-ம் அலை தொடங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

COVID-19
 
COVID-19 AP Illustration/Peter Hamlin

இந்த அலையில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் வகைதான் தற்போது பிரிட்டனில் வேகமாகப் பரவிவருகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பிரிட்டன் அரசின் சுவாச மண்டல வைரஸ் நோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ரவி குப்தா, ``பிரிட்டனில் மூன்றாம் அலையின் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தொற்றில் நான்கில் மூன்று மடங்கு பேருக்கு இந்தியாவில் உருவான வைரஸ் வகை தொற்றியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாம் அலையின் தாக்கம் பிரிட்டனில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அங்கு வசிக்கும் தமிழரும் செவிலியருமான அருள் நீதிதேவன் தமிழ்குமரனிடம் பேசினோம். அவர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

Britain
 
Britain AP Photo / Kirsty Wigglesworth

``பிரிட்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் கூட்டத்தில் மூன்றாம் அலைக்கான சாத்தியம் மிக அருகில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஜனவரியில் இங்கு B.1.1.7 என்ற வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியது. ஆனால், தற்போது டெல்டா வேரியன்ட் B.1.617.2 என்ற வகை வைரஸ் பரவி வருகிறது. இது ஜனவரி மாதம் பரவிய வைரஸைவிட மிக வேகமாகப் பரவும் திறனுடையது. டெல்டா வைரஸ் வகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான காலத்தில் சிகிச்சையளிக்கவில்லை என்றால் வயது வித்தியாசமின்றி உயிரிழப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி மகிழ்ச்சி!

இங்குள்ள தற்போதைய நல்ல செய்தி என்னவென்றால் நாட்டில் 59% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டார்கள். 38.2% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதன் காரணமாக, டெல்டா வைரஸ் பரவினாலும் உயிரிழப்புக்கான பயம் மிகமிகக் குறைவு. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாட்டில் ஒருவர் மட்டுமே கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். மூன்றாவது பூஸ்டர் டோஸை அக்டோபரில் வழங்கவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

வயதானவர்கள் கொரோனாவால் இறப்பது மிகவும் குறைந்து விட்டது. குழந்தைகளுக்கு இப்போது ஆபத்தான பிரச்னை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. மூன்றாம் அலை தீவிரமடைந்தால் குழந்தைகளை பாதிக்கலாம் என்று கணித்துள்ளனர்.

3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள்
 

இதில் பாதகமான விஷயமும் உள்ளது. என்னவென்றால் இங்கு 18 - 30 வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு அதிகளவில் பாதிக்கலாம். மேலும் தற்போது நோய்ப் பரவல் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு மே இரண்டாம் வாரம் லாக்டௌன் தளர்வு செய்யப்பட்டதும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் பிரிட்டனில் ஜூன் 21-ம் தேதி லாக்டௌன் மொத்தமாக விலக்கிக்கொள்ளப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மூன்றாம் அலை தொடங்கியுள்ளதால் லாக்டௌனை முழுவதுமாகத் தளர்த்தும்போது மூன்றாம் அலையின் தாக்கம் நினைத்ததைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு 2,000 பேர் புதிதாகத் தொற்றுக்கு உள்ளானார்கள் (பிரிட்டனின் மக்கள்தொகை சராசரியாக 6.76 கோடி).

இறப்பு எண்ணிக்கை சராசரியாக 15 ஆக இருந்தது. மே மூன்றாம் வாரத்திலிருந்து தொற்று அதிகரிக்க ஆரம்பித்து நான்காயிரத்தைத் தொட்டது. ஆனால், இறப்பு எண்ணிக்கை 5, 7 என்றுதான் இருந்தது.

இதுபற்றிப் பேசிய பிரிட்டனின் தடுப்பூசி துறை அமைச்சர் நதீம் ஜஹாவி, `ஜூன் 21-ல் லாக்டௌனை முழுவதுமாக விலக்குவது குறித்து முற்றிலும் உறுதியாகச் சொல்ல இயலாது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் ஏற்படும் பாதிப்பை வைத்து ஜூன் 14-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அதுபற்றி முடிவு செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.

COVID-19 vaccine
 
COVID-19 vaccine AP Photo/Matt Slocum

களநிலவரம் என்ன?

இங்கு தற்போதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி கார்டு என்று ஒன்று தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே போட்டிகளைக் காண அனுமதி உண்டு. ஒருதவணை செலுத்திக்கொண்டவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டியைக் காண அனுமதி இல்லை. பார்கள், ரெஸ்டாரன்ட் போன்றவை செயல்படுகின்றன. ஒரு மேஜைக்கு 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை. பூங்கா போன்ற பொது இடங்களில் இரு வேறு குழுக்களுக்கு இடையில் தனிமனித இடைவெளி அவசியம். வாக்சின் கார்டு உள்ளவர்களுக்கு உறவினர் இறுதிச்சடங்கு போன்ற முக்கியமான காரியங்களுக்கு அனுமதி உண்டு.

இந்தியாவுக்கு விமான போக்குவரத்தில் கட்டுப்பாடு அதிகம். சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மிகவும் குறைவான அளவில் கனெக்டிங் விமானங்கள் மூலம் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் ஏர்போர்ட் அதாரிட்டி மருத்துவமனைகளில் க்வாரன்டீன் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவுகிறது என்று அச்சத்திலிருந்தோம். தற்போது இந்தியாவிலிருந்து உருமாறிய வைரஸ் பிரிட்டனை அச்சுறுத்தி வருகிறது.

 

 

https://www.vikatan.com/health/healthy/uk-facing-threat-of-third-wave-of-covid-19-pandemic-what-happens-there

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.